கிளிநொச்சியில் சிங்கள இராணுவம் பெரும் மரணப்பொறியில் சிக்கியுள்ளது

கிளிநொச்சியில் சிறிலங்கா இராணுவம் பெரும் மரணப்பொறி ஒன்றுக்குள் அகப்பட்டுக்கொண்டுள்ளது. அங்கு முன்னேறிவருகின்ற இராணுவத்திற்கு என்ன நடக்கிறது என்பது உங்களுக்குத்தெரியும். இவ்வாறு வருகின்ற படைகள் முற்றாக அழிக்கப்படும்பொழுதான் முழுத்தேசமும் விடுவிக்கப்படும். இவ்வாறு நேற்றுக் காலை தருமபுரத்தில் முன்னாள் மாணவர் அமைப்புப் பொறுப்பாளர் மேஜர் முரளி அவர்களின் 21 ஆம் ஆண்டு நினைவு நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றுகையில் தமிழீழ அரசியல்துறைப்பொறுப்பாளர் பா.நடேசன் அவர்கள் தெரிவித்துள்ளார்.

அவர்மேலும் தெரிவிக்கையில், எங்களுடைய விடுதலைப்போராட்ட வரலாற்றில் மேஜர் முரளி ஆற்றிய பங்கு என்ன என்பது எல்லோரும் அறிந்தவிடயமாகும். அவர் லண்டனுக்குச் சென்று பின்பு அங்கிருந்து எமது இயக்கத்திற்கு வந்து இணைந்து மாணவர் அமைப்புப் பொறுப்பாளராக மட்டுமல்ல இயக்கத்திலுள்ள முக்கியமான செயற்பாடுகளிலும அவர் தன்னை அர்ப்பணிப்புடன் ஈடுபடுத்திவந்துள்ளார்.

அந்தக்காலத்தில் மேஜர் முரளி தேசியத்தலைவரிடமும் அரசியல் ஆலோசகர் பாலா அண்ணா அவர்களுடனும் மிக நெருக்கமாகப் பழகியவர். அதுமட்டுமல்ல அவர்களுடன் அரசியல் தொடர்பான விடயங்களை கலந்துரையாடுவதுடன் அதனை மக்கள் மத்தியில் கொண்டு சென்று மக்கள் எல்லோரையும் கவக்கூடிய வகையில் அரசியல் பணிகளையும் மேற்கொண்டார்.

முரளி உந்தப் பிரதேசத்திற்குச் சென்றாலும் மக்கள் எல்லோர் மனங்களையும் கவரக்கூடிய ஒருபோராளியாகச் செயற்பட்டார். அவருடைய தனித்துவமான பண்புதான் மாணவர் அமைப்பினைக் கட்டியெழுப்பி தற்பொழுத அவ்வமைப்பு மாணவர்கள் மத்தியிலான கல்வி, அரசியல் வேலைத்திட்டம், மாணவர்களை அரசியல்ரீதியாக அணிதிரட்டுதல் போன்ற செயற்பாடுகளைச் செய்கிறது என்றால் மேஜர் முரளியின் செயற்பாடுகளைச் செய்கிறது என்றால் மேஜர்முரளியின் ஆரம்பகால திட்டமிட்ட செயற்பாடுளே அதற்குக் காரணமாகும்.

அவருடைய தனிச்சிறப்பும் ஆற்றலும் எங்களுடைய தேசத்திற்கு பெரும் செல்வாக்கைப் பெற்றுத்தந்தது. தேசியத்தலைவரின் சிந்தனை, செயற்திறன், ஆளுமை என்பவற்றை முரளியின் ஊடாக மக்கள் கண்டறிந்து கொண்டனர். இவ்வாறான அவரது செயற்பாடுகளால்தான் மக்கள் தம்மை போராட்டத்துடன் அர்ப்பணித்து நிற்கிறார்கள். இதற்கு ஆரம்பகாலப் பொராளிகள், பொறுப்பாளர்கள் சிறப்பாகச் செயற்பட்டதுதான் முக்கிய காரணம். மாணவர் அமைப்பு என்பது ஒரு முக்கியமான கட்டமைப்பு.

மாணவர் சமூகத்தின் பங்களிப்பு இல்லாமல் சமூகமேம்பாடோ, சமூகப்புரட்சியோ அல்லது தேசிய விடுதலை இயக்கத்தையோ வளர்த்தெடுப்பது என்பது முடியாதது. தமிழீழ விடுதலைப்போராட்டத்தை உலகம் ஒருதேசிய விடுதலைப்Nபுhராட்டமாகப் பார்த்துக்கொண்டிருக்கின்றது. இதற்கு உண்மையில் தமிழீழத்தில் இருக்கின் றமாணவர் சமூகத்தின் பங்கு என்பதும் அளப்பரியது. ஏனென்றால் போராளிகளாக இணைகின்றவர்கள் இளம் வயதை உடையவர்களர்தான் ஆரம்பகாலத்தில் சிங்கள அரச பயங்கரவாதச் செயற்பாடுகள் தமிழ் இனத்தின் மாணவர் சமூகத்தை நோக்கியவையாகத்தான் இருந்தது.

எங்களுடைய மாணவர்களுடைய கல்வியைச் சீரழிப்பதும், பொருளாதார வாழ்வைச் சீர்குலைப்பதும் சமூகபொருளாதார அரசியல் வாழ்விலிருந்து மாணவர்களை அப்புறப்படுத்துவதும் கல்வி அறிவற்ற மாணவர்களை அப்புறப்படுவத்துவதும் கல்வி அறிவற்ற மாணவர் சமூகமாக அவர்களை உருவாக்குவதன்மூலமாகவும் சிறிலங்கா அரசு தனது பயங்கரவாதத்தை அரங்கேற்றிவந்துள்ளது. இதற்கெதிராகத்தான் எங்களுடைய விடுதலைப்போராட்டம் தோற்றம் கொண்டது. அந்தக் காலத்தில் பெரியளவு பாதிக்கப்பட்டது எங்களுடைய இளம் சமூகமே. எந்தவொரு இனமும் கல்வி அறிவு இல்லையென்றால் அந்த இனத்தின் மேம்பாடு தொடர்பாகவோ விடுதலை தொடர்பாகவோ சிந்திக்கமுடியாத நிலை தோன்றும்.

சிந்திக்கமுடியாத நிலையை உருவாக்குவதற்குத்தான் மாணவர்களின் வளர்ச்சிக்கு அத்திவாரமாக இருக்கின்ற கல்வி மீதும் சிங்கள அரச பயங்கரவாதம் கைவைத்தது. எங்களுடைய கல்விமீது பலவிதமான நெருக்குவாரங்களைக் கொண்டுவந்து எங்களது மாணவர் சமூகத்தைக் கல்வி அறிவற்ற சமூகமாகக் கொண்டுவரவேண்டும் என்பதில் சிங்களப் பேரினவாத அரசு திட்டமிட்டு செயற்பட்டுவந்தது. இவ்வாறு தமிழ் சமூகத்தின் இளம் சந்ததிக்கு எவ்வளவுதான் நெருக்கடிகள் ஏற்பட்டாலும நாங்கள் மாணவர் அமைப்பு, கல்வியில் மட்டுமல்ல சமூகம் சார்ந்த பொது அறிவுகொண்ட அரசியல் மயப்படுத்தப்பட்ட மாணவர் சமூகமாக வளர்த்தெடுப்பதன் ஊடாகத்தான் தேசப்பற்றையம் வளர்த்தெடுக்கலாம். அந்தப்பணியைத்தான் இன்று மாணவர் அமைப்பு செய்கின்றது.

சமூக நலன்சார்ந்த, அரசியல் மயப்படுத்தப்பட், பரந்த கல்வி அறிவுள்ள மாணவர் சமூகத்தைக் கட்டியெழுப்பவேண்டும் என்பதற்காகத்தான் மாணவர் அமைப்பு தொடர்ந்தும் செயற்பட்டுவருகின்றது. இன்றைக்கு சிங்கள இராணுவம் எல்லாப்பக்கத்திலும் வந்து முற்றுகையிட்டு நிற்கின்றது. சிங்கள இராணுவம் மிகவும் பலவீனமடைந்து இயலாதநிலையில் தான் இருக்கின்றது.

கிளிநொச்சியில் அண்மைக்காலத்தில் நடக்கின்ற சண்டைகளை எடுத்துப்பார்த்தால் தெரியும். பெரிய இழப்புக்களை சிங்கள இராணுவம் எதிர்நோக்கிக் கொண்டிருக்கின்றது. உண்மையில் நாங்கள் நூறு அல்லது நூற்றைம்பது இராணுவம் கொல்லப்பட்டுள்ளது என்று சொன்னாலும், சிங்கள ஊடகங்கள் அண்மையில் நடந்த சண்டையில் 400 இராணுவம் கொல்லப்பட்டும் 900 க்கும்மேற்பட்டோர் காயப்பட்டு களமுனைகளில் இருந்து அப்புறப்படுத்தப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கின்றன.

கடந்தகலாத்தில் சிங்கள இராணுவம் என்ன செய்தது. எங்களுடைய இளம் மாணவர்களைக் கொன்று குவிப்பதும் இளம் மாணவர்களின் சமூகப்பொருளாதார வாழ்வைச் சிதைப்பதிலுமாகத்தான் அதன் செயற்பாடு தொடர்ச்சியாக இடம்பெற்றுவந்தது. அதன் உச்சக்கட்டமாக அமைந்ததுதான் தற்போதைய பாரிய இராணுவ நடவடிக்கைகள். இந்த நடவடிக்கைகளும் பாரிய தோல்விகளை நோக்கிச் சென்றுகொண்டிருக்கின்றது.

தற்பொழுது கிளிநொச்சியில் இராணுவம் பெரிய மரணப்பொறி ஒன்றுக்குள் அகப்பட்டுக்கொண்டுள்ளது. அங்கு முன்னேறி வருகின்ற இராணுவத்திற்கு என்ன நடக்கிறது என்று உங்களுக்கு தெரியும். இவ்வாறு வருகின்ற படைகள் முற்றாக அழிக்கப்படும் பொழுதுதான் முழுத்தேசமும் விடுவிக்கப்படும். இன்றைக்கு சிங்கள இராணுவத்தின் சண்டையிடுகின்ற படையணிகளான 53,55,57,58 போன்ற முன்னணிப்படையணிகள் அழிக்கப்பட்டுவருகின்றன.

இவற்றை இங்கே அழிப்பதுதான் இலகுவானது. இவர்களை நீண்ட தூரம் யாத்திரை சென்று அழிப்பதைவிட இந்த மண்ணிலே வைத்து முடிவுகட்டவேண்டும். இதில் நீங்கள் தெளிவா இருக்கவேண்டும். இந்தநேரத்தில் மாணவர் சமூகமான நீங்கள் அரசியல் ரீதியாக சிந்தித்துப் பார்க்கவேண்டும். எங்களைவிட் நீண்ட காலம்போராடிய தேசிய இனங்களிலும் மாணவர்களின் பங்கு என்ன என்பதை நீங்கள் அறிந்திருக்கவேண்டும்.

சமகாலத்திலே கல்வியோடு போராட்டக்கல்வியையும் கற்றுககொண்டு புரட்சிகரமான மாணவர் சமூகம் புரட்சிகரமான சமூகமாக வளர்ந்தால் இந்தத்தேசம் விடுதலைக்காகக் கொடுத்த விலையின் பயன்பாட்டை எல்லா மக்களுக்கும் தேசத்தின் விடுதலையை சமமாக அனுபவிக்கக்கூடிய சமூகக் கட்டமைப்பை உருவாக்கக்கூடிய ஒரு பணி உங்களால்தான் முடியும்.

மேஜர் முரளியின் இந்நிகழ்வில் நாங்கள் எல்லோரும் விடுதலைப்போராட்டம் தொடர்பான களநிலமைகளை வைத்துக்கொண்டு எல்லோரும் முற்றுமுழுதாகப் பங்களிப்போமானால் வெகுவிரைவில் விடுதலையை வென்றெடுக்கலாம். ஏனென்றால் களநிலமை எங்களுக்கு இன்று சாதகமாக மாறிக்கொண்டிருக்கின்றது.

சிங்கள அரசிற்கு எதிராக மனிதஉரிமைகள் தொடர்பாக ஏராளமான நாடுகள் குரல் கொடுக்க ஆரம்பிததுவிட்டன. எங்களுடைய குரலைக்கேட்பதற்கு உலகம் வந்துவிட்டது. தமிழகமக்கள்மட்டுமல்ல ஏனைய மக்கள்கூட எங்கள் நிலமையை விளங்கி குரல்கொடுக்கின்றார்கள். குறிப்பாக தமிழ் நாட்டில் மட்டுமல்ல வடஇந்தியாவில் உள்ள அரசியல் தலைவர்கள்கூட எங்களின் சுயநிர்ணய உரிமையை ஆதரிக்கின்றார்கள்.

இந்த நேரத்தில் குறிப்பாக இங்கே இருக்கின்ற மாணவர் சமூகம் முழுப்பலத்தோடு ஒரே சக்தியாக இயக்கத்தைப் பலப்படுத்தவேண்டும். நீங்கள் பல வழிகளில் பங்களிக்கலாம். களமுனைகளில் மட்டுமல்ல ஏனைய விடயங்களில் கூட பங்களிக்கலாம் மேஜர் முரளியின் ஞாபகார்த்த தினத்தில் மாணவர் சமூக நலன்சார்ந்த சமூக விடுதலை சார்ந்த பட்டறிவோடு இந்த விடுதலைப்போராட்டத்தின் பங்களிகளாக எல்லோரும் பங்களித்து விரைவாகத் தமிழீழத்தை வென்றெடுப்போம் இவ்வாறு அரசியல்துறைப் பொறுப்பாளர் பா.நடேசன் அவர்கள் தனதுரையில் குறிப்பிட்டுள்ளார்.



Comments