தமிழின உணர்வாளர்கள் கொளத்தூர்மணி, இயக்குனர் சீமான் கைது;தமிழகம் முழுவதும் போராட்டம்!



தமிழின உணர்வாளர்கள் கொளத்தூர்மணி, இயக்குனர் சீமான் கைது;தமிழகம் முழுவதும் போராட்டம்!




இயக்குனர் சீமான் அவர்களின் மகிழுந்து எரிக்கப்பட்டதைக் கண்டித்தும்,பெரியார் திராவிடர் கழக தலைவர் கொளத்தூர்மணி,இயக்குனர் சீமான் ஆகியோர் கைது செய்யப்பட்டதைக் கண்டித்தும் பெரியார் திராவிடர் கழகத்தின் சார்பில் திருப்பூர் மாநகராட்சி அலுவலகம் முன்பு கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது .

மாவட்டத்தலைவர் துரைசாமி தலைமையில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்ட த்திற்கு காவல்துறை அனுமதி மறுத்திருந்தது. தடையை மீறி ஆர்ப்பாட்டம் நடத்திய 50க்கும் மேற்பட்ட தோழர்கள் கைது செய்யப்பட்டனர்.




பெரியார் திராவிடர் கழகத்தின் சார்பில் பல்லடம் நகரில் கண்டன ஆர்ப்பாட்டம்!

இயக்குனர் சீமான் அவர்களின் மகிழுந்து எரிக்கப்பட்டதைக் கண்டித்தும்,பெரியார் திராவிடர் கழக தலைவர் கொளத்தூர்மணி,இயக்குனர் சீமான் ஆகியோர் கைது செய்யப்பட்டதைக் கண்டித்தும் பெரியார் திராவிடர் கழகத்தின் சார்பில் பல்லடம் நகரில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. விஜயன் தலைமையில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்ட த்திற்கு காவல் துறை அனுமதி மறுத்திருந்தது.. தடையை மீறிஆர்ப்பாட்டம் நடத்திய 40க்கும் மேற்பட்ட தோழர்கள் கைது செய்யப்பட்டனர்.




பெரியார் திராவிடர் கழகத்தின் சார்பில் கோவை மாநகரில் கண்டன ஆர்ப்பாட்டம்!

இயக்குனர் சீமான் அவர்களின் மகிழுந்து எரிக்கப்பட்டதைக் கண்டித்தும்,பெரியார் திராவிடர் கழக தலைவர் கொளத்தூர்மணி,இயக்குனர் சீமான் ஆகியோர் கைது செய்யப்பட்டதைக் கண்டித்தும் பெரியார் திராவிடர் கழகத்தின் சார்பில் கோவை மாநகரில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. பொதுச்செயலாளர் கு.இராமகிருட்டிணன் தலைமையில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்ட த்திற்கு காவல் துறை அனுமதிமறுத்திருந்தது. தடையை மீறி ஆர்ப்பாட்டம் நடத்திய 50க்கும் மேற்பட்ட தோழர்கள் கைது செய்யப்பட்டனர்.



தமிழின உணர்வாளர்கள் கொளத்தூர்மணி, இயக்குனர் சீமான் ஆகியோர் இன்று இரவு கோவை சிறையில்...

கைது செய்யப்பட்ட தமிழின உணர்வாளர்கள் கொளத்தூர்மணி, இயக்குனர் சீமான் ஆகியோர் இன்று இரவு கோவை மத்திய சிறைக்கு கொண்டு வரப்பட்டபோது பல நூற்றுக்கணக்கான பெரிய்யார் திராவிடர் கழக தொண்டர்களும்,தமிழுணர்வாளர்களும் பெரியார் திராவிடர் கழக பொதுச்செயலாளர் கு.இராமகிருட்டிணன் தலைமையில் கூடி தாரை தப்பட்டை முழங்க மலர் தூவி வரவேற்று சிறைக்கு வழியனுப்பினர்.இந்தநிகழ்ச்சியில் திரைப்பட இயக்குனர் மணிவண்ணன் ,வெ.ஆறுச்சாமி உட்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.



Comments