இலங்கை இனப்படுகொலைக்கு எதிராய் ஒப்பாரி இயக்கம்

இலங்கை இனப்படுகொலைக்கு எதிராய் ஒப்பாரி இயக்கம்

தொடர்ந்து வன்கொடுமைகளுக்கு இலக்காகிவரும் இலங்கைத் தமிழர்களுக்கு எதிரான இன அநீதிகளைக் கண்டித்து ,
தமிழ்க் கவிஞர்கள் ஒருங்கிணைந்து நடத்தும்

கண்டனக் கவிதைப் போராட்டம்.

இடம் :சென்னை மெரீனா கடற்கரையில்,
காந்தி சிலையருகே

நாள் : டிசம்பர் - 7, 2008ம்,ஞாயிற்றுக்கிழமை

நேரம் : காலை 9 மணி முதல், மாலை 5 மணி வரை


நூற்றுக்கும் மேற்பட்ட கவிஞர்கள் ஒன்றுகூடி,
இலங்கையில் நடந்துகொண்டிருக்கும் மனிதப் படுகொலைகளை எதிர்த்து
தங்கள் கவிதைகளைப் பதிவு செய்யவிருக்கின்றனர்.

அனைவரும் கலந்துகொண்டு உணர்வுகளைப் பகிர்ந்துகொள்ள வாருங்கள்.

சேர்ந்து குரல் கொடுப்போம்.இன அழிவுப்படுகொலைகளை தடுத்து நிறுத்தக் கோருவோம் !

தொடர்புக்கு

மின்னஞ்சல் : tamilpoets@gmail.com


செல்பேசி : 9841043438, 9884120284, 9952089604

http://tamilpoets.blogspot.com/2008/11/blog-post.html



இலங்கை இன படுகொலைக்கு எதிராய் சில சொற்கள் - லக்ஷ்மி மணிவண்ணன்
ஈழ தமிழர்கள் மீதான போரை நிறுத்தக்கோரி தமிழ் கவிஞர்களின் கண்டனம் - சில சொற்களோடு

ஒவ்வொரு இனத்திற்கும், அதன் உள்புறத்தில் இயங்கும் இனக்குழுக்களுக்கும், நீண்ட மரபுடனும் சடங்குகளுடனும் வழிபாடுகளுடனும் கூடிய அகவுடல் ரசசியங்களால் அமைந்திருப்பது. உரிமைகளை, எதிப்பை, பாதுகாப்பை, உறவை அவை உரிய வழிகளில் ரகசியங்களை பேணிய வண்ணம் எதிர்கொள்ள இயலாமல் போகும் போது வெடிப்புறத் தொடங்குகிறது.

மானுடவியல், இனவரையியல் போன்ற அறிவுக் கருவிகள், ஊடகத் தகவல்கள் ஆகியவை இனங்களை, சமூகங்களை, குழுக்களை அறிய உதவுவது போன்ற பாவனைகள் மட்டுமே, அறிவுக் கருவிகள் மூலம் சமூகத்தின் ஒரு பண்பை அறிய முயலும்போது அறிய இயலாத பகுதிகளை, ஊடக வழிகள் கொண்டும் பொதுப் புத்தி சார்ந்தும் இட்டு நிரப்பும் முயற்சி முடிவில் அடிப்படை உள்ளுணர்வின் எதிர்ப்புணச்சிக்கு இலக்காவது தவிர்க்க இயலாதது.

பொதுப் புத்தி என்பது மக்களின் பார்வை என்பதல்ல. மாறாக அது முன்னேற்றம், வளர்ச்சி, வெற்றி, பயங்கரவாத எதிர்ப்பு என்கிற பதங்களின் ஊடாக வறண்ட கற்பனையை களியூட்டுகிற அரசின் செயல் ஆகும், மனித உயர் உணர்வின் உயர்ந்த பட்ச சாத்தியங்களை, தன்னிச்சையான கற்பனையின் விகாரத்தை இது தடை செய்யும் செயலும் ஆகும். இச் செயல்பாட்டின் ஒரு பகுதியான பொதுப்புத்தி என்பது படைப்புச் செயல்பாட்டுக்கு நேர் எதிர் திசையில் கதி நிலை பெற்றிருந்தலின் அபாயத்தை பல திசைகளில் எதிர் கொள்ளும் திசையில் இன்றைய மனித இருப்பின் ஆதாரம் குழப்பமடைந்திருக்கிறது. உயர் மனசாட்சியின் எதிர்ப்பாக ரகசியங்களின் அறச்செயல்பாடாக துப்பாக்கிச் சத்தத்தை பெருகச் செய்தது. எதிர்ப்பிற்கு மௌனத்தையும் அலட்சியத்தையும் முகம் காட்டும், தனிமனித பாதுகாப்பை உறுதிப் படுத்துவதாகக் கூறும் உலக முழுதும் விரிந்துள்ள ஒற்றைபடை நாகரீக ஜனநாயக அரசு ஆகும்.

தனி மனிதப் பாதுகாப்பை முன்னிறுத்தி, சமூகங்களை அலட்சியம் செய்யும் இவ்வரசு எதையும் பாதுகாக்க இயலாத நிலைக்கு பின் தள்ளப்பட்டு விட்டது.

இந்நிலையில் இவ்வரசுக்கு அப்பாற்பட்டு, பொதுப்புத்தி, அரசியல், ஊடகம், ஆகிய குணங்களுக்கு அப்பாற்பட்டு கவிஞர்கள், படைப்பாளிகள், கலைஞர்கள் ஆகியோர்களின் தற்கால சமூகப் பொறுப்புகள் என்னென்னவாக அமைய வேண்டும். இவை நமது பொது சுயத்தின் விசாரனைக்கு உட்பட்டவை, இவ்விசாரணையே வருங்காலங்களில் ஜனநாயக அரசுக்கும் எதிர் தரப்பினருக்கும் இடையே நிகழவிருக்கும், மோதல்களின் போது சகல விதமான வாழ்தலின் சுதந்திரத்தை மீட்கவும் வலியுறுத்தவும் நமக்கு உதவும்.

இந்த அடிப்படையிலேயே ஈழத் தமிழர்கள் மீதான இலங்கை ராணுவத்தின் போருக்குத் தமிழ் கவிஞர்கள் தங்கள் உணர்வின் பொது வெளிப்பாடாக கண்டனத்தைத் தெரிவிக்கிறோம்.

மாறுபட்ட வாழ்க்கைப் பின்புலனும் வரலாறும் கொண்ட ஈழத் தமிழர்களின் படைப்புகள் சுயதன்மையும் சுய வரலாறும் கொண்டவை. தமிழ் இலக்கிய, மக்கள் வரலாறும் ஈழத் தமிழ் இலக்கிய, மக்கள் வரலாறும் தனித்து அறியப் படவேண்டியவை. தமிழினம் என்று ஒற்றை இனப் பார்வையை முன்னிறுத்தும் ஊடகமறதி அரசியல் குரல்களிலிருந்து படைப்புக் குரல்கள் மாறுபட்டவை என்பதை நினைவில் கொள்ள வேண்டும். உலகில் எந்தவொரு இனமும் எந்தவொரு காரணத்தின் பெயராலும் ராணுவத்தின் தலைமையோடு ஒழிக்கப்படுவதை தமிழ் கவிஞர்கள் எதிர்க்கிறோம். அவ்வகையில் ஈழத் தமிழர்கள் மீதான இலங்கை ராணுவப் போரை தமிழ் கவிஞர்கள் வன்மையாகக் கண்டிக்கிறோம்.

தமிழ்க் கவிஞர்கள் இக்கண்டனத்தைத் தெரிவிக்கும் இச் சந்தர்ப்பத்தில் தமிழக அரசுக்கும் இந்திய அரசுக்கும் தெரிவிக்கும் கோரிக்கைகள் இவை.

1. உலக அளவில் ஈழத் தமிழ் அகதிகள் – தமிழகத்தில்தான் வேறெங்கு நடப்பதைக் காட்டிலும் மலிவான முறையில் நடத்தப்படுகிறார்கள். அவமானத்திற்குள்ளாகிறார்கள் மனிதவுரிமைகளுக்கு அப்பாற்பட்ட வகையில் கண்காணிப்பிற்கிலக்காகிறார்��
�ள். அகதிகள் முகாம்கள் சிறைக் கூடங்களுக்கு ஒப்ப அமைந்துள்ளன. சமூக அவமானங்களும் சமூக அநீதிகளுக்கும் ஈழத் தமிழர்கள் தமிழகத்தில் இலக்காகிறார்கள். மனிதவுரிமைகளின் அடிப்படையில் இவற்றை களைய தமிழக அரசு நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.

2. ஈழத் தமிழ் படைப்பாளிகளின் நூற் பதிப்புகளுக்கு தமிழகம் முக்கியத்துவமளிக்க வேண்டும். ஈழத் தமிழ் படைப்புகளும், வரலாறும் மாணவர்களின் பாடத் திட்டங்களில் இடம் பெறவேண்டும். செம்மொழி திட்டங்களில் ஆய்வுகளில் ஈழத் தமிழுக்கு உரிய இடம் தரப்பட வேண்டும்.

3. ஈழத்தில் வட இந்திய பன்னாட்டுமுதலாளிகள், முதலாளிகள் நில ஆக்ரமிப்பு செய்வதையும், இந்திய அரசு அதற்கு ஊக்கமாகத் திகழ்வதையும் தமிழக அரசு கண்டித்து ஈழ தமிழ் நில ஆக்ரமிப்புகளை தடுக்க வகை செய்ய வேண்டும். அம்மக்களுடனான நேர்மையான உறவு வலுப்பட இது உதவும்.

4. தமிழக மீனவர்கள் இலங்கை ராணுவத்தினரால் தொடர் தாக்குதலுக்கு இலக்காவது இந்திய அரசின் தமிழ் மக்களுக்கு எதிரான செயலின்மையை காட்டுகிறது. இதற்கு முற்றுப்புள்ளி வைத்து இந்திய அரசு தமிழ் மக்களின் நம்பிக்கையைப் பெறவேண்டும்.

5. இலங்கை ராணுவத்திற்கான ராணுவ ஒத்துழைப்பை இந்திய அரசு கைவிடுவதோடு ஈழத்தமிழர்கள் மீதான இலங்கை ராணுவத்தின் போரை நிபந்தனைகளற்று உடனடியாக முடிவுக்கு கொண்டுவந்து பின்னர் பேச்சுவார்த்தையைத் துவங்கவேண்டும்.


December 5, 2008
இலங்கை இன படுகொலைக்கு எதிரான கண்டன கவிதை பேரணி - பங்கேற்கும் கவிஞர்கள்
1. விக்ரமாதித்தியன்

2. ஞானக்கூத்தன்

3. கலாப்ரியா

4. கோணங்கி

5. கல்யாண்ஜி

6. சுகுமாரன்

7. பிரபஞ்சன்

8. இந்திரன்

9. இன்குலாப்

10. சா. தமிழ்ச் செல்வன்

11. ரசூல்

12. காமராசு

13. யவனிகா ஸ்ரீராம்

14. மனுஷ்ய புத்திரன்

15. ரமேஷ் பிரேம்

16. திலகவதி

17. வெளி ரங்கராஜன்

18. லஷ்மி மணிவண்ணன்

19. பாலை நிலவன்

20. பெருமாள் முருகன்

21. பாமா

22. மாலதி மைத்ரி

23. அ.மங்கை

24. வா. கீதா

25. பூமா ஈஸ்வர முர்த்தி

26. குட்டி ரேவதி

27. க்ருஷாங்கினி

28. லதா ராமகிருஷ்ணன்

29. வெண்ணிலா

30. இளம்பிறை

31. யாழன் ஆதி

32. லீனா மணிமேகலை

33. சுகிர்தராணி

34. உமா மகேஸ்வரி

35. தமிழச்சி தங்கபாண்டியன்

36. இன்பா சுப்பிரமணியன்

37. வியாகுலன்

38. நட சிவக்குமார்

39. ரவீந்திர பாரதி

40. ஐய்யப்ப மாதவன்

41. அஜயன் பாலா

42. என். டி. ராஜகுமார்

43. சமயவேள்

44. பவா செல்லதுரை

45. குமார் அம்பாயிரம்

46. கண்ட ராதித்தன்

47. ஸ்ரீநேசன்

48. ரவி சுப்பிரமணியன்

49. நா. முத்துக்குமார்

50. யுகபாரதி

51. தாமரை

52. ஆ. வேங்கடாசலபதி

53. அழகிய சிங்கர்

54. யூமா வாசுகி

55. ராஜ மார்த்தாண்டன்

56. நஞ்சுண்டன்

57. நெய்தல் கிருஷ்ணன்

58. ஸ்ரீகுமார்

59. குவளை கண்ணன்

60. சூரிய நிலா

61. அனுசியா

62. நந்தமிழ் நங்கை

63. கவிப்பித்தன்

64. சுந்தரபுத்தன்

65. அருள் எழிலன்

66. ஸ்டாலின் ராஜாங்கம்

67. கீதாஞ்சலி பிரியதர்சன்

68. முத்துக் கிருஷ்ணன்

69. சூரியச் சந்திரன்

70. பாரி கபிலன்

71. அரச முருகுபாண்டியன்

72. அழகுநிலா

73. தென்றல்

74. நீலகண்டன்

75. இந்திரா

76. பெரியசாமி ராஜா

77. தமிழ் நதி

78. ராஜா சந்திர சேகர்

79. தேவி பாரதி

80. வெளி ரங்கராஜன்

81. பால் நிலவன்

82. அமிர்தம் சூர்யா

83. முனியப்ப ராஜ

84. செல்வா புவியரசன்

85. தக்கை சாகிப் கிரன்

86. இசை

87. இளங்கோ கிருஷ்ணன்

88. விருத்தாசலம் ஹரி

89. ஆண்டாள் பிரியதர்சினி

90. அரங்க மல்லிகா

91. சந்திரா

92. கவிதா

93. பிரேமா ரேவதி

94. ஜெயராணி

95. அனிச்சம்

96. பழனிவேள்

97. பிரான்சிஸ் கிருபா

98. திலகபாமா

99. அழகிய பெரியவன்

100. பாக்கியம் சங்கர்

101. ஹரன் பிரசன்னா

102. விஸ்வா மித்திரன்

103. பா. முருகன்

104. தேவேந்திர பூபதி

105. சல்மா

106. வளர்மதி

107. ராணி திலக்

108. செல்மா பிரியதர்சன்

109. எஸ். தேன்மொழி

110. இளவேனில்

111. இராஜேந்திரன்

112. கூத்த லிங்கம்

113. மனோன்மணி

114. அபிலாஷ்

115. குலசேகரன்

116. பிரியம்வதா

117. பெனித்தா

118. செந்தமிழ் மாரி

119. உமா சக்தி

120. விஜய லெட்சுமி

121. பிராபாகரன்

122. விவேகானந்தர்

123. மெய்யருள்

124. தாரா கணேசன்

125. உமா தேவி

126. சி. ராஜதுரை

127. தபசி

128. செல்வகுமார்

129. கவிமனோ

130. யூசுப்

131. ஜ.எஸ். தயாளன்

132. கமலம் அசோக்

133. கிருஷ்ண கோபால்

134. ராஜ நாச்சியப்பன்

135. பாலு

136. சங்கர்

137. சிவ பாஸ்கரன்

138. கம்பீரன்

139. நரன்

140. கென்

141. மரகதமணி

142. ஐய்யனார்

143. நிஷாந்தினி

144. ரா. சின்னசாமி

145. லெட்சுமி சரவணகுமார்

146. மருதா பாண்டியன்

147. சிவ குருநாதன்

148. உமா பார்வதி

149. பரமேஸ்வரி

150. கறிச்சோறு முத்து

151. கா. வை. பழனிச்சாமி

152. கு. சின்னசாமி

153. கி. சரவணகுமார்

154. பழ. புகழேந்தி

155. செந்தூரம் ஜெகதீசன்

156. வைகை செல்வி

157. நிலாப்பிரியன்

158. சக்தி அருளாநந்தம்

159. முருகேஷ்

160. கி. சரவணக்குமார்

161. பா. தமிழ்ச் செல்வன்

162. ராஜேஸ்வரி

163. சங்கவை

164. ஸ்ரீபதி பத்பநாபா

165. எழிலரசி

166. சு.மு. அகமது

167. தென்பத்தி நாதன்

168. ரங்கசாமி

169. டாக்டர். சோம சேகர்

170. டாக்டர். சி. லெட்சுமணன்

171. மணி

172. கவின் மலர்

173. ஆரிசன்

174. ஜஷா

175. முஜபுர் ரகுமான்

176. சிவா

177. ஆனந்த்

178. அ. ரோஸ்லின்

179. அம்சப்பிரியா

180. இளங்கவி அருள்

November 30, 2008
எறிகணைகளுக்கு எதிராக வார்த்தைகளை எறிதல் - செல்மா பிரியதர்ஸன்
எறிகணைகளுக்கு எதிராக வார்த்தைகளை எறிதல்.

இது இறுதிப் போர் என்று அறிவித்து சிங்கள ராஜபக்சே அரசு ஏவுகணைகளையும் எறிகுண்டுகளையும் ஈழத் தமிழர்களின் குடியிருப்பின் மேல் உடமைகள் மேல் வாழ்வாதாரங்களின் மேல் எறிந்து வருகிறது. இலங்கையின வரைபடத்திலிருந்து தமிழர்களை துடைத்து எறியும் இறுதி நடவடிக்கையாக சிங்கள அரசின் செயல்பாடுகள் அமைந்துள்ளன. உயிர் பிழைத்திருக்க முப்பது ஆண்டுகளாக அத்தீவைவிட்டு வெளியேறி உலகம் முழுவதும் அகதிகளாக வாழ்ந்து வருகிறது ஈழத் தமிழனம.; கொல்லப்பட்டவர்கள் போக எஞ்சியவர்கள் குடியிருப்புகளைவிட்டு வெளியேறி வனாத்திரங்களில் முகாம்கள் அமைத்து பசியிலும் நோயிலும் பிழைத்து வருகிறார்கள். உணவுப் பொட்டலங்களுக்குப் பதிலாக அணுகுண்டுகளை விட மோசமான உயிர்க்காற்றை ( ஆக்ஸிஜனை) உறிஞ்சுகிற உக்கிர குண்டுகளை அவர்களுக்கு உணவாக வழங்குகிறது ராஜ பக்சே அரசு. எப்போதும் போல் தமிழ்ப் பெண்களின் உடல்கள் மேலும் நீட்டிக்கப்படும் போரின் செயல்பாடுகள். சிங்கள அரசிற்கு பொருளாதார இராணுவ உதவிகளைச் செய்துவரும் நம் இந்திய அரசோ இந்தியாவிற்கு (தமிழகத்திற்குள்) வரும் போர் அகதிகளின் எண்ணிக்கையை மட்டுப்படுத்தி தனது சொந்தப் பொறுப்பில் பராமரிக்க வேண்டும் என்று இலங்கை அரசை வலியுறுத்துகிறது.

மத்திய அரசில் அதிகாரத்தினை பங்கு போட்டிருக்கும் தமிழ் மாநில அரசியல் கட்சிகளோ அனைத்தையும் வேடிக்கை பார்த்துக் கொண்டு இந்திய தேசிய ஒருமைப்பாட்டின் மீது விறைத்த பற்றுடன் செயலாற்றி வருகிறது.

தமிழ் மொழியில் கவிதைகள் எழுதிவரும் நாங்கள் நிலவிவரும் சூழல்களையும் நிலவரங்களையும் அறிந்திருக்கிறோம். ஒரு சமூகத்தில் மொழியில் இயங்கும் கவிஞர் என்பவரின் வரம்புகளையும் சாத்தியங்களையும் உணர்ந்தே இருக்கிறோம். அழிந்து வரும் அரிய உயிரினத்தின் மாதிரிகள் போல நாம் வாழும் காலத்தில் ஈழத் தமிழினம் கண்களின் முன்னால் அழிந்து வருவதைக் காணச் சகியோம் எங்களிடம் அதிகாரம் இல்லை ஆயுதங்கள் இல்லை ஆட்சி இல்லை. வார்த்தைகள் மட்டுமே உள்ளது சிங்கள அரசின் தமிழ் ரத்தம் பருகும் இராணுவ வெறிமீது ஏவுகணைகள் போல் வார்த்தைகளை வீசுவோம். தமிழனத்தின் விடுதலைமீது வாழ்வுமீது பாரா முகமாய் இருக்கும் தமிழக அரசியல் மௌனத்தின் மீது தற்கொலைபோல் வார்த்தைகளாய் விழுவோம். தேசம் என்று நம்பி வாழும் இந்தியப் பாராளுமன்றத்தின் மனசாட்சியை நோக்கி மரணம் போல வார்த்தைகளை எறிவோம், கண்ணீர் சிந்துவோம், ஒப்பாரி வைப்போம், தூற்றுவோம் சாபமிடுவோம்.

தமிழகத்தில் கவிஞர்கள் பல்வேறு குழுக்களாக, வேறுபாடுகள் உடையவர்களாக இருந்து வந்த போதிலும் எல்லா வித்தியாசங்களையும் கடந்து சென்னை மெரினா கடற்கரையில் டிசம்பர் 7-ல் ஒன்று சேர்கிறோம். தமிழகம் முழுவதுமிருந்து கவிஞர்கள் தங்களது சொந்தப் பொறுப்பில் சொந்த தார்மீகத்தில் கடற்கரை நோக்கிப் பயணிக்கிறோம்.

தமிழ்க் கவிஞர்களின் கண்டனக் கவிதைப் போராட்டத்திற்கு தமிழகத்திலுள்ள அனைத்து எழுத்தாளர்களையும், கலைஞர்களையும், மாணவர்களையும், பொதுமக்களையும் அழைக்கிறோம்.

செல்மா பிரியதர்ஸன்

November 30, 2008
கண்டன கவிதைப் போராட்டத்திற்கான வெளிச்சத்தின் ஆதரவு
தமிழக கவிஞர்களுக்கு வெளிச்சம் நன்றி தெரிவிக்கின்றது. எங்கிருந்தாலும் நீங்கள் ஈழத்தமிழர்களின் தொப்பூள்கொடி


தமிழக கவிஞர்கள் எழுகிறார்கள்! ஈழத்தமிழர்களுக்காக கண்டன கவிதைப்போராட்டம்!
ஈழத்தமிழ் மக்களை காப்பாற்றுமாறு கோரி தமிழகத்தின் கவிஞர்கள் ஒன்று திரண்டு கண்டனக்கவிதைப்போராட்டம் ஒன்றை நடத்துவதற்கு தயாராகி வருகின்றார்கள்.

எதிர்வரும் டிசம்பர் 7 காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை சென்னை மெரீனா கடற்கரையில் அமைந்துள்ள காந்தி சிலையருகே இந்த போராட்டம் நடைபெறவுள்ளதாக அறியப்படுகின்றது.

சுமார் 150 க்கும் அதிகமான கவிஞர்கள் ஒன்று கூடி ஈழத்தமிழர்கள் இன்று பட்டு வரும் அவலங்களை தங்களது கவிதைகளாக பதிவு செய்யவுள்ளனர்.

இந்த கண்டனக்கவிதைப்போராட்டத்தில��
� கவிஞர்கள் தவிர்ந்த ஆயிரக்கணக்கான
பொது மக்களும் கலந்து கொண்டு தங்களது உணர்வுகளை வெளிப்படுத்துவார்கள்
என எதிர்பார்க்கப்படுகின்றது.

ஈழத்தமிழ்களுக்கு ஏதிரான வன்கொடுமைகளையும், அநீதிகளையும் கண்டிப்பதே இந்த போராட்டத்தின் பிரதான நோக்கமாகும் எனவும் தெரிவிக்கப்படுகின்றது.

இச்செய்தியை அனைத்து தமிழ் ஊடகங்களும் வெளியிட்டு ஈழத்தமிழர்களுக்காக தமிழக கவிஞர்கள் நடத்தும் உணர்வுப்போராட்டத்தை உலகறியச்செய்யுங்கள்!

தொடர்புகளுக்கு

9841043438, 9884120284, 9952089604
tamilpoets@gmail.com
www. tamilpoets.blogspot.com


உறவுகள் அல்லவா?.உங்களது போராட்டம் வித்தியாசமானது. வரவேற்கின்றோம். தொடரட்டும் உங்கள் போராட்ட உணர்வு.

உங்கள் போராட்டத்தை ஈழத்தமிழர்கள் மத்தியில்

பரப்புரை செய்யும் வகையில் வெளிச்சம் செய்திகளை வெளியிட காத்திருக்கிறது. தாயகத்திலும் புலம்பெயர் நாடுகளிலும் வாழும் ஈழத்தமிழர்கள் மத்தியில் உங்களது வித்தியாசமான கண்டனக்விதைப்போராட்டம் குறித்த செய்திகளை வெளிச்சம் வெளியிட்டிருக்கின்றது.

உங்கள் போராட்டம் வெற்றி பெற வெளிச்சம் வாழ்த்துகின்றது.

நிர்வாகக்குழு
வெளிச்சம்.
velichcham com
நன்றி சகாறா

Comments