விசுவமடு மீது எறிகணை வீச்சு - 4 பேர் பலி, 18 பேர் காயம்

விசுவமடு மகாவித்தியாலயத்தை அண்மித்த பொதுமக்கள் செறிந்துவாழும் பகுதி மீது இன்று காலை சிறிலங்காப் படையினர் நடத்திய தொடர் எறிகணை வீச்சினால் குறைந்தது நால்வர் கொல்லப்பட்டும் 18 பேர் காயமடைந்தும் உள்ளதாக முதற்கட்டத்தகவல்கள் தெரிவிக்கின்றன.

காயமடைந்தவர்கள் விசுவமடு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். நிரந்தரமாகவும் இடம்பெயர்ந்தும் மிகச் செறிவாக வாழும் பகுதிமீது இத்தாக்குதல் நடத்தப்பட்டதால் மக்கள் பேரவலத்திற்குள்ளானதோடு வீடுகளும் பயன்தரு மரங்களும் அழிவடைந்துள்ளன.

இத் தாக்குதலில் காயமடைந்தவர்களின் பெயர்விபரம் வருமாறு.

நிசாந்தன் (13), நாகேஸ்வரி (83), சுகிர்தா (18), மனோகரன் (49), சுதாகரன் (40), குணறஜனி (37), றுக்மணி (89), கஜந்தன் (16), பிரதீபன் (18), கனகரட்ணம் (60), உதயமலர் (57), மார்க்கண்டு (64), சுகுமார் உதயகுமார் (16), இராமசாமி மணியம் (50), சுலக்சன் (12), வீரபத்திரன் பரமேஸ்வரன் (62), கணேசன் சந்திரமலர் (57), செல்லப்பா சேதுப்பிள்ளை (100)

இறந்தவர்கள்

மயூரி (19), சுஜீதா (14), சுஜீவனா (16), ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூன்று பிள்ளைகள் இறந்தும் தாயார் படுகாயமடைந்துள்ளார்.

முதியவர் ஒருவரும் எறிகணை வீச்சில் பலியாகியுள்ளனர். காயமடைந்தவர்களில் ஏழு பேரின் நிலைமை கவலைக்கிடமாகவுள்ளதாக வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.


Comments