வன்னியில் சிறிலங்கா அரங்கேற்றும் மெதுவான தமிழினப் படுகொலை: ஓரே வாரத்தில் 66 பேர் படுகொலை; 223 பேர் படுகாயம்

வன்னியில் சிறிலங்கா அரசாங்கம் நடத்தி வரும் மாபெரும் இன அழிப்பு படையெடுப்பில் கடந்த ஒரு வாரத்தில் மட்டும் சிறிலங்கா முப்படைகளும் பொதுமக்களை இலக்கு வைத்து நடத்திய அகோரமான குண்டுத் தாக்குதல்களில் 66 பேர் படுகொலை செய்யப்பட்டுள்ளதுடன் 223 பேர் காயமடைந்துள்ளனர். இவர்களில் 14 பேர் நேற்று நடைபெற்ற பீரங்கித் தாக்குதல்களில் மட்டும் படுகொலை செய்யப்பட்டுள்ளதுடன் 73 பேர் படுகாயமடைந்துள்ளனர்.

கடந்த இரண்டு வருடங்களாக வன்னிப் பகுதி மீது சிறிலங்கா படைகள் மாபெரும் படையெடுப்பு ஒன்றை நிகழ்த்தி வருகின்றன.

மன்னார், வவுனியா, கிளிநொச்சி, முல்லைத்தீவு ஆகிய நான்கு மாவட்டங்கள் மீது நடாத்தப்படும் இந்த இன அழிப்புப் படையெடுப்பினால் -

தமது வாழ்விடங்களை விட்டுத் துரத்தப்பட்ட நான்கு இலட்சம் மக்கள் இப்போது நான்கு கிராமங்களுக்குள் குவிந்து போயுள்ளனர்.

தற்போது, இந்த மக்கள் மீது தரை, கடல், வான் வழிகளில் தாக்குதலை நடத்தும் சிறிலங்கா படைகள் ஒரு இனப் படுகொலையை மெல்ல மெல்ல அரங்கேற்றி வருகின்றன.

கடந்த ஒரு வாரத்தில் மட்டும் சிறிலங்கா முப்படைகளும் நடத்திய அகோரமான குண்டுத் தாக்குதல்களில் 66 பேர் படுகொலை செய்யப்பட்டுள்ளதுடன் 223 பேர் படுகாயமடைந்துள்ளனர்.

இவர்களில் 14 பேர் நேற்று நடந்த பீரங்கித் தாக்குதல்களில் மட்டும் படுகொலை செய்யப்பட்டுள்ளதுடன் 73 பேர் இதில் படுகாயமடைந்துள்ளனர்.

விசுவமடு தேராவில் மக்கள் குடியிருப்புக்கள் மீது நேற்று புதன்கிழமை சிறிலங்கா படையினர் நடத்திய எறிகணைத் தாக்குதலில் 4 பொதுமக்கள் படுகொலை செய்யப்பட்டுள்ளனர். இருவர் படுகாயமடைந்துள்ளனர்.

வீட்டில் ஆழ்ந்த உறக்கத்தில் இருந்த போது நேற்று அதிகாலை 1:30 நிமிடமளவில் சிறிலங்கா படையினர் நடத்திய எறிகணைத் தாக்குதலில் இவர்கள் கொல்லப்பட்டனர்.

த.தயாகரன் (வயது 13)

த.தவநேசன் (வயது 43)

ஆகியோர் படுகாயமடைந்துள்ளனர்.

படுகாயமடைந்த இவர்கள் மூங்கிலாறில் இயங்கும் மல்லாவி மருத்துவமணையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

உடையார்கட்டு குரவில் பகுதியில் நேற்று அதிகாலை 2:00 மணியளவில் சிறிலங்கா படையினர் நடத்திய எறிகணைத் தாக்குதலில் 5 பொதுமக்கள் படுகாயமடைந்துள்ளனர்.

சிவராஐா (வயது 42)

பிரபாகரன் (வயது 27)

மதியரசன் (வயது 18)

ரவீந்திரன் (வயது 18)

கி.தங்கம்மா (வயது 47)

ஆகியோர் படுகாயமடைந்துள்ளனர்.

விசுவமடு பகுதியில் உள்ள இளங்கோபுரத்தில் நேற்று காலை 6:00 சிறிலங்கா படையினர் மணியளவில் நடத்திய எறிகணைத் தாக்குதலில் இளம் பெண் ஒருவர் படுகாயமடைந்துள்ளார்.

இதில் கோமதி (வயது 16) என்பவர் படுகாயமடைந்துள்ளார்.

முல்லைத்தீவு தேவிபுரம், சுதந்திரபுரம் பொதுமக்கள் குடியிருப்புக்கள் மீது நேற்று பிற்பகல் 2:00 மணி வரை சிறிலங்கா படையினர் தொடர்ச்சியாக நடத்திய எறிகணைத் தாக்குதல்களில் ஒருவர் கொல்லப்பட்டுள்ளதுடன் 8 பேர் படுகாயமடைந்துள்ளனர்.

படுகாயமடைந்தவர்கள் வள்ளிபுனத்தில் இயங்கும் முல்லைத்தீவு பொது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

சுதந்திரபுரம் பொதுமக்கள் குடியிருப்புக்கள் மீது நேற்று பிற்பகல் 12:30 நிமிடமளவில் சிறிலங்கா படையினர் நடத்திய எறிகணைத் தாக்குதலில் ஒருவர் கொல்லப்பட்டுள்ளதுடன் ஒருவர் படுகாயமடைந்துள்ளார்.

கனகரத்தினம் பாலசுந்தரம் (வயது 53) என்பவர் கொல்லப்பட்டுள்ளதுடன் அவரின் மனைவியான பாலசுந்தரம் மகாலட்சுமி (வயது 53) என்பவர் படுகாயமடைந்துள்ளார்.

தேவிபுரம் பகுதியில் உள்ள இடம்பெயர்ந்த பொதுமக்களின் குடியிருப்புக்களை இலக்கு வைத்து நேற்று காலை 10:00 மணியளவில் சிறிலங்கா படையினர் நடத்திய பல்குழல் வெடிகளைத் தாக்குதலில் ஒருவர் காயமடைந்துள்ளார்.

தேவிபுரம் பொதுமக்கள் குடியிருப்புக்கள் மீது நேற்று பிற்பகல் 1:30 நிமிடமளவில் சிறிலங்கா படையினர் நடத்திய எறிகணைத் தாக்குதல்களில் 7 பேர் படுகாயமடைந்துள்ளனர்.

ந.பிரபாகரன் (வயது 29)

ராஐீவ்குமார் துஸ்யந்தினி (வயது 27)

மரியாம்பிள்ளை விஐிதா (வயது 19)

சபாரட்ணம் சிவமாலினி (வயது 16)

மரியாம்பிள்ளை ஐீவிதா (வயது 17)

கறுப்பையா சுப்பிரமணியம் (வயது 48)

ஜே.அருள்மதி (வயது 18)

ஆகியோர் படுகாயமடைந்துள்ளனர்.

தேவிபுரம்-புதுக்குடியிருப்பு-மூங்கிலாறு-உடையார்கட்டு குரவில் பகுதியில் இடம்பெயர்ந்தோர் பொதுமக்கள் குடியிருப்புக்கள் மீது நேற்று நண்பகல் மற்றும் பிற்பகல் வேளையில் சிறிலங்கா படையினர் செறிவான பல்குழல் வெடிகணைத் தாக்குதலை நடத்தினர்.

இதில் சந்திரசேகரம் சிவமணி (வயது 60) என்பவர் படுகாயமடைந்துள்ளார். இவர், கேப்பாபுலவில் இருந்து இடம்பெயர்ந்து தேவிபுரத்தில் தங்கியிருந்தவர் ஆவார்.

தேராவில்-குரவில்-சுதந்திரபுரம் பகுதிகளில் நேற்று பிற்பகல் சிறிலங்கா படையினர் நடத்திய எறிகணைத் தாக்குதலில் 31 பேர் காயமடைந்துள்ளனர்.

செல்வரூபி (வயது 24)

சத்தியவதனி (வயது 28)

மே.இராகவன் (வயது 24)

செல்லம்மா (வயது 30)

முத்துலட்சுமி (வயது 30)

லீன் றெஜினா (வயது 27)

அனுசாந்தினி (வயது 29)

சிவராசா (வயது 42)

இந்திராணி (வயது 48)

மயூரன் (வயது 26)

லோ.அஜந்தா (வயது 29)

சுஜிகரன் (வயது 28)

ரவீந்திரன் (வயது 47)

தமிழ்த்தேவி (வயது 30)

நந்தா (வயது 21)

இளமதி (வயது 20)

ரோகினிமலர் (வயது 23)

ஜெகன் (வயது 28)

லக்ஸ்ராஜா (வயது 22)

குகநாதன் (வயது 19)

கேசவன் (வயது 17)

இளநாதன் (வயது 23)

சத்தியன் (வயது 29)

ராஜ்குமார் (வயது 23)

காண்டீபன் (வயது 17)

தி.கிருஸ்ணா (வயது 19)

மைந்தகன் (வயது 09)

விமலநாதன் (வயது 38)

தேன்மதி (வயது 25)

சந்தனக்குயில் (வயது 27)

ஆகியோர் உடப்ட 31 படுகாயமடைந்தனர். மேலும் ஒருவரின் பெயர் விவரம் இதுவரை கிடைக்கப்பெறவில்லை.

விசுவமடு வள்ளுவர்புரம் பகுதியில் நேற்று பிற்பகல் 3:00 மணியளவில் சிறிலங்கா படையினர் நடத்திய எறிகணைத் தாக்குதலில் 2 அப்பாவி பொதுமக்கள் கொல்லப்பட்டுள்ளதுடன் 2 பேர் படுகாயமடைந்துள்ளனர்.

காரைநகரைச் சேர்ந்த செல்வரத்தினம் (வயது 45)

சற்குணராஐா (வயது 35)

ஆகியோர் கொல்லப்பட்டுள்ளனர்.

செல்வரத்தினம் ரதிமலர்

செல்வி ஆகியோர் படுகாயமடைந்துள்ளனர்.

உடையார்கட்டு குரவில் பகுதியில் நேற்று பிற்பகல் 1:00 மணியளவில் சிறிலங்கா படையினர் நடத்திய எறிகணைத் தாக்குதலில் 2 அப்பாவி பொதுமக்கள் கொல்லப்பட்டுள்ளதுடன் 6 பேர் படுகாயமடைந்துள்ளனர்.

வி.கஜந்தன் (வயது 15)

அ.வரதராசா (வயது 18)

ஆகியோர் கொல்லப்பட்டுள்ளனர்.

அருட்செல்வன் (வயது 25)

தவராசா (வயது 22)

உதயகுமார் (வயது 42)

கருணா (வயது 36)

சுப்ரமணியம் (வயது 43)

சிவதாஸ் (வயது 36)

ஆகியோர் படுகாயமடைந்துள்ளனர்.

விசுவமடு மயில்வாகனபுரம் பகுதியில் நேற்று பிற்பகல் 1:00 மணியளவில் சிறிலங்கா படையினர் நடத்திய எறிகணைத் தாக்குதலில் சிறுமி உட்பட 4 பொதுமக்கள் கொல்லப்பட்டுள்ளதுடன் 4 பேர் படுகாயமடைந்துள்ளனர்.

இதில் கொல்லப்பட்ட 4 பேரும் பெண்கள் ஆவர்.

கொல்லப்பட்டவர் விஜிதா (வயது 15) என அடையாளம் காணப்ப்பட்டுள்ளார். ஏனையோர் இச்செய்தி பதியும் வரை அடையாளம் காணப்படவில்லை.

முனியம்மா (வயது 72)

சுப்பிரமணியம் (வயது 41)

சசிகரன் (வயது 14)

ரவிச்சந்திரன் (வயது 36)

ஆகியோர் படுகாயமடைந்துள்ளனர்.

கைவேலிப்பகுதியில் நேற்று பிற்பகல் 4:45 நிமிடத்துக்கு சிறிலங்கா படையினர் நடத்திய எறிகணைத் தாக்குதலில் 2 பொதுமக்கள் படுகாயமடைந்துள்ளனர்.

கேதீஸ்வரன் (வயது 35)

ப.விஜேந்திரன் (வயது 33)

ஆகியோர் படுகாயமடைந்துள்ளனர்.

சிறிலங்கா படையினரின் தொடர்ச்சியான எறிகணைத் தாக்குதல்களால் பொதுமக்களின் தற்காலிக குடியிருப்புக்கள் முற்றாக அழிந்தும் சேதமடைந்துள்ளதுடன் கால்நடைகள் கொல்லப்பட்டுள்ளதுடன் வாகனங்களும் சேதமடைந்துள்ளன.



Comments