ஈழத்தில் போர் நிறுத்தம் செய்யக் கோரி தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகம் தீர்மானம்

தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்ற கழகம் சார்பில் தொடங்கப்பட்டுள்ள மனித நேய மக்கள் கட்சி இலங்கையில் உடனடி போர் நிறுத்தம் செய்யக் கோரி தீர்மானம் நிறைவேற்றியுள்ளது.

தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகம் நிறைவேற்றியுள்ள தீர்மானத்தில் கூறப்பட்டுள்ளதாவது:

தமிழ்நாட்டில் முஸ்லிம்களுக்கு கல்வி, வேலை வாய்ப்புக்களில் 3.5 சதவீத இடஒதுக்கீடு வழங்கி இருப்பதை 6 சதவீதமாக உயர்த்தவேண்டும், முஸ்லிம்களுக்கு அவர்களது மக்கள் தொகைக்கு ஏற்ப நாடாளுமன்றம், சட்டமன்றம், உள்ளாட்சி அமைப்புக்களில் உரிய பிரதிநிதித்துவம் அளிக்கவேண்டும், பயங்கரவாதத்தை கட்டுப்படுத்த மத்திய அரசு கொண்டு வந்துள்ள சட்டவிரோத செயல்கள், தடுப்புச் சட்டங்களை திரும்பப் பெறவேண்டும், இலங்கையில் உடனடியாக போரை நிறுத்த இந்தியா முயற்சிக்க வேண்டும் என்பன உள்ளிட்ட 20 தீர்மானங்கள் மாநாட்டில் நிறைவேற்றப்பட்டன.


Comments