புதுக்குடியிருப்புக்கான இறிதிச்சமரும் கையாளப்படும் புதிய தந்திரோபாயங்களும்

புதுக்குடியிருப்பைக் கைப்பற்றுவதற்கான இறுதிச் சமரை படைத்தரப்பு கடந்தவாரம் ஆரம்பித்து விட்டது.

ஆனால் இந்தச் சண்டைகள் பற்றி செய்தி களோ, சண்டைகளில் ஏற்படுகின்ற இழப்புகள் பற்றிய தகவல்களோ அரச தரப்பில் இருந்தும் சரி, புலிகள் தரப்பில் இருந்தும் சரி வெளி வரவில்லை.

புதுக்குடியிருப்பைக் கைப்பற்றுவதற்கான சமரின் புதியதொரு பரிமாணமாக வடக்கில் இருந்து

படைகளை நகர்த்தும் முயற்சிகளில் கடந்தவாரம் கூடிய அக்கறை செலுத்தப்பட் டிருந்தது.

பி?கேடியர் சவீந்திர சில்வாவின் தலைமை யிலான 58ஆவது டிவிசனே புதுக்குடியிருப்புக் கான இறுதிச் சமரில் முதன்மைப் பாத்திரத்தை வகித்து வருகிறது. இந்த டிவிசனைக் கொண்டே தொடர்ந்தும் படைநகர்வுகளைச் செய்வதற்கும் முடிவு செய்யப்பட்டிருக்கிறது.

பரந்தன் மற்றும் ஆனையிறவில் இருந்து சமாந்தரமாக கிழக்கு நோக்கி நகர்ந்த இந்த டிவிசன் இப்போது புதுக்குடியிருப்புக்கு மேற்கு, வடமேற்கு, வடக்கு என்று பல திசைக ளில் பரவி நிற்கிறது.

கடந்தவாரம் இரண்டு முக்கியமான இலக்குகளை முன்வைத்து 58 ஆவது டிவிசன் தனது நடவடிக்கைகளை மேற்கொண்டிருந்தது.

புதுக்குடியிருப்பு முற்றுகையை மேலும் இறுக்குவதற்கான 58ஆவது டிவிசனின் இறுதி முயற்சியாகவும் இதனைக் கருதலாம்.

பரந்தன் முல்லைத்தீவு வீதிக்கு வடக்கே சுதந்திரபுரம் பகுதியில் இருந்து முன்னேறி வந்த 58 ஆவது டிவிசன் படையினர் இந்த வீதிக் குத் தெற்கே நடவடிக்கையை மேற்கொண்டிருந்த அதிரடிப்படை2 மற்றும் அதிரடிப் படை4 ஆகியவற்றுடன் இணைப்பை ஏற் படுத்துவது முதலாவது நோக்கமாக இருந்தது.

கடந்தவாரம் உடையார்கட்டுச் சந்திப் பகுதி யில் 58வது டிவிசனும் அதிரடிப்படை 2உம் இணைந்து கொண்ட அதேவேளை இந்த வீதி யில் மற்றொரு இடத்தில் 58ஆவது டிவிசனும் அதிரடிப்படை4உம் இணைப்பை ஏற்படுத் திக் கொண்டன.

இந்த மூன்று டிவிசன்களும் இணைப்பை ஏற்படுத்திக் கொண்டதை அடுத்து 58ஆவது டிவிசன் இப்போது புதுக்குடியிருப்பு மேற்கு களமுனையில் இருந்த தனது கவனத்தை பெரும்பாலும் வடக்கு, வடமேற்கு நோக்கித் திருப்பத் தொடங்கியது.

புதுக்குடியிருப்பை சுற்றியிருக்கின்ற இராணுவ முற்றுகையை இன்னமும் இறுக்குவது 58 ஆவது டிவிசனின் இரண்டாவது நோக்கமாக இருந்தது.

இதன் ஒரு கட்டமாக கடந்த வியாழக்கிழமை மாலை அம்பலவன்பொக்கணைப் பிரதேசத்துக்குள் தாம் பிரவேசித்திருப்பதாகப் படைத்தரப்பு கூறியிருக்கிறது. புலிகளின் பலமான எதிர்ப்பு மற்றும் குறைந்தது 6 மணிநேரமாக நீடித்த கடும் சண்டைகளின் பின்னரே இது சாத்தியமானதாகக் கூறப்படுகிறது.

பலத்த பாதுகாப்புடன் கூடிய புலிகளின் தடுப்பரண்களை உடைத்துக் கொண்டே படையினர் முன்னேறியதாகப் படைத்தரப்பு தகவல்கள் வெளியாகியிருக்கின்றன.

படையினர் எதற்காக அம்பலவன்பொக் கணையைக் குறி வைக்கிறார்கள் என்பது முக்கியமான கேள்வி.

புதுக்குடியிருப்புக்கு வடகிழக்காக 8கி.மீ தொலைவில், சாளை கடனீரேரியின் மேற்குப் புறத்தில் அம்பலவன்பொக்கணை என்ற கிரா மம் அமைந்திருக்கிறது. இந்தப் பகுதியைக் கைப்பற்றிய படையினருக்கு சாளையில் நிலை கொண்டிருக்கின்ற 55ஆவது டிவிசன் சூட்டா தரவுகளை வழங்கியது.

581 பி?கேட்டைச் சேர்ந்த 6ஆவது கெ?னு வோச் மற்றும் 10ஆவது இலகு காலாற்படை ஆகியனவே அம்பலவன்பொக்கணைக்குள் பிரவேசித்திருக்கின்றன.

புலிகளைப் பொறுத்தவரையில் அம்பல வன்பொக்கணை நோக்கிய அதாவது புதுக் குடியிருப்புக்கு வடக்கு மற்றும் வடமேற்கு திசைகளில் இப்போது நடந்து வருகின்ற சண் டைகள் ஆபத்தானவையாகக் கருதப்படத்தக் கவை.

சாலையை அடுத்து புதுமாத்தளனுக்கும், வட்டுளவாகலுக்கு வடக்காக உள்ள வெள்ளா முள்ளிவாய்க்காலுக்கும் இடைப்பட்ட 12கி.மீ நீளமானதும் சுமார் 2கி.மீ அகலமானதுமான கரையோரப் பிரதேசத்தை இராணுவத்தினர் பாதுகாப்பு வலயமாக அறிவித்திருந்தனர்.

இந்தப் பகுதிக்குள் பெருமளவு மக்கள் ஒதுங்கிப் போயிருக்கின்ற நிலையிலேயே அந்தப் பகுதிகளை அண்டியதாக அதாவது பாதுகாப்பு வலயத்துக்கு மேற்காக உள்ள கடனீரே?க்கு அப்பால் தான் இப்போதைய சண்டைகள் இடம்பெற்று வருகின்றன.

ஏற்கனவே இருட்டுமடுப் பாதுகாப்பு வல யம் அறிவிக்கப்பட்ட பின்னர் உடையார்கட்டு, சுதந்திரபுரம் பகுதிகளை இராணுவத்தினர் கைப்பற்றியிருந்தனர். அதுபோன்றே இப் போது புதுமாத்தளன் பாதுகாப்பு வலயப் பகு தியை அடுத்த அம்பலவன்பொக்கணைப் பகு திக்குள் நடக்கின்ற சண்டைகளானது, இரண்டு முக்கிய நோக்கங்களைக் கருத்தில் கொண்ட தாக இருக்கும் என்று கருதப்படுகிறது.

முதலாவது கரையோரப் பாதுகாப்பு வலயத் துக்குள் ஒதுங்கிப் போயிருக்கின்ற மக்களை இராணுவக் கட்டுப்பாட்டுப் பிரதேசத்துக்குள் கொண்டு வருவது.

அடுத்தது புலிகளுக்கான கடல்வழி விநி யோகங்கள் அனைத்தையும் முற்றாகத் துண்டிப்பது.

தற்போது அம்பலவன்பொக்கணைப் பகு தியை அடைந்திருக்கின்ற 58ஆவது டிவிசன் படையினரை தொடர்ந்து தெற்கே முன்னேறச் செய்வதன் மூலம் புதுக்குடியிருப்புக்கும், அர சினால் அறிவிக்கப்பட்ட பாதுகாப்பு வலயப் பகுதிக்கும் இடையிலான தொடர்பைத் துண் டிக்க முடியும்.

இதன்மூலம் கரையோரப் பாதுகாப்பு வலயப் பகுதி படையினரின் கைகளில் அதிக சண் டையின்றி விழுந்து விடும்.

அந்தப் பகுதி படையினரிடம் வீழ்ந்து விட்டால் புலிகளுக்கு இருந்து வந்த கடைசி கடல் வழிப் பாதையும் அடைபட்டுப் போய் விடும்.

இதன் பின்னர் புலிகளால் புதுக்குடியிருப் பில் நீண்டகாலம் நிலைத்து நின்று சண்டையிட முடியாத நிலைமை ஏற்படும்.

அதைவிட முக்கியமானதொரு விடயம் இராணுவ முற்றுகை இறுதிக் கட்டத்தை அடை கின்ற போது புலிகளின் முக்கிய தலைவர்கள், தளபதிகள் பாதுகாப்பான இடங்களுக்குத் தப்பிச் செல்லும் மார்க்கங்களும் அடைபட்டுப் போகும்.

இந்த நோக்கங்களை அடிப்படையாக வைத்தே 58ஆவது டிவிசன் இப்போது வடக்கு, வடமேற்குப் பகுதிகளின் வழியாக புதுக்குடியிருப்பை நோக்கி புதிய நகர்வுகளைச் செய்கிறது.

அதேவேளை சாலையில் நிலை கொண்டி ருக்கின்ற 55ஆவது டிவிசனை தாக்குதல் நகர்வுகளில் இறக்குகின்ற திட்டம் படைத்தலைமைக்கு இருப்பதாகத் தெ?யவில்லை. காரணம் அதன் வசம் நீண்ட கரையோரப் பகுதிகள் இருப்பதால் தற்காப்புக்கு அதிக படைவளங்களைச் செலவிட வேண்டிய நிலை ஏற்பட்டிருக்கிறது.

அதைவிட புலிகள் சாலைக்கு வடக்கே ஒரு தரையிறக்க தாக்குதலை மேற்கொள்ளலாம் என்ற அச்சமும் படைத்தரப்புக்கு இருப்பதாகத் தெரிகிறது.

இதனால் இப்போது 55 ஆவது டிவிசன் வெறு மனே தேடியழிப்பு, தற்காப்பு நடவடிக்கைளில் மாத்திரம் பங்குகொண்டு வருகிறது.

அதேவேளை நந்திக் கடலுக்குக் கிழக்காக நிலைகொண்டிருக்கின்ற 59ஆவது டிவிசன் தனது 593 பிரிகேட்டை நந்திக் கடலுக்கு மேற்காக நிறுத்தியிருந்தது.

இப்போது புதுக்குடியிருப்புக்குத் தெற்காக 53ஆவது டிவிசன், அதிரடிப்படை8, அதிரடிப் படை4, ஆகியனவும் அதற்கு அப்பால் புதுக் குடியிருப்புக்கு மேற்கே அதிரடிப்படை2, அதிரடிப்படை3, ஆகியனவும் செயற்பட்டு வருகின்றன.

அதேவேளை 57ஆவது டிவிசன் ஒதுக்குப் படையாக விசுவமடுப் பகுதியில் நிற்கிறது.

புதுக்குடியிருப்புக்கு தெற்கே 53 ஆவது டிவிசன் 800 மீற்றர் தொலைவில நிற்பதாகவும், அதிரடிப்படை4.4 கி.மீ மேற்கே நிலைகொண்டிருப்பதாகவும் படைத்தரப்பு தகவல்கள் கூறுகின்றன.

ஆனால் புதுக்குடியிருப்பு சந்திக்கு அண்மை யாக மக்கள் இன்னமும் வசிப்பதாக அறியப் படுகின்றது. இந்தளவுக்கு நெருக்கமாகப் படை யினர் முன்னேறி நிலைகொண்டிருந்தால் அந் தப்பகுதியில் மக்கள் வாழ்வது நிச்சயம் சாத்தியமற்றதாகவே இருந்திருக்கும்.

இராணுவத்தினர் அதிகளவிலான படைக ளைக் களமிறக்கியிருக்கின்ற இந்தப் போர்க் களம் இலங்கை இராணுவத்துக்கும் சரி புலிக ளுக்கும் சரி இதுவரை சந்தித்திராத அனுபவங் களைக் கொடுத்திருக்கிறது.

காரணம், இதற்கு முன்னர் படைத்தரப்பு இந்தளவு படைப்பிரிவுகளை, படையினரை, ஆயுதங்களைப் பயன் படுத்தி எந்தவொரு தாக்குதலையும் நடத்தியதில்லை.

அதுபோன்றே புலிகளும் இப்படியான தொரு சமரை எதிர் கொண்டதில்லை.

நாளுக்கு நாள் இந்தப் போர்களம் சுருக்கமடைந்து வருகிறது.

இப்போது புலிகளிடம் 100 சதுர கி.மீ பரப்பள வான பிரதேசம் கூட இல்லை என்று படைத் தரப்பு கூறுகின்றது.

ஆனாலும் சண்டைக ளின் தீவிரம் குறைந்த தாகத் தெரியவில்லை.

கடந்த வார நடுப்பகுதி யில் இரண்டு நாட்கள் நடந்த சண்டைகளில் மட்டும் 25 படையினர் கொல்லப்பட்டதாக வும், 175 பேர் வரை காயமுற்றதாகவும் பாதுகாப்பு வட்டாரங்க ளுடன் தொடர்புடைய ஊடகங்கள் செய்தி வெளியிட்டிருந்தன.

இதை உறுதிப்படடுத்தும் வகையில் கடந்த வாரம் பாதுகாப்பு செயலாளர் கோத்தபாய ராஜபக்ஷ மற்றொரு தகவலை வெளியிட்டிருந்தார்.

கடந்த ஒரு மாதத்தில் மாத்திரம் 1000 படை யினர் காயமடைந்திருப்பதாக அவர் கூறியிருந் தார். இது புலிகளின் எதிர்ப்பு சற்றும் குறைய வில்லை என்பதற்கு எடுத்துக் காட்டாக அமைந்திருக்கிறது.

அரசாங்கம் சண்டைகளில் கொல்லப்படும் காயமடையும் படையினரின் விபரங்களை வெளியிடாமல் இருக்கின்ற நிலையில் சண் டைகளில் ஏற்படும் இழப்புகளை நீண்டகாலத் துக்கு மறைக்க முடியாது.

இராணுவத்தின் அதிகளவிலான படைப்பிரிவுகள் குவிக்கப்பட்டு சிறப்புப் பயிற்சி பெற்ற படையினரைக் களம் இறக்கிய போதும் புலிக ளின் எதிர்ப்பு குறையாதிருக்கிறது.

அவர்களின் போரிடும் திறனில் பெரும் வீழ்ச்சி இருப்பதாகத் தெரியவில்லை.

அத்துடன் அண்மையில் நிகழ்ந்த சண்டை களில் புலிகள் தாராளமாகப் பயன்படுத்திய ஆயுதங்களைக் கொண்டு அவர்களிடம் போதியளவுக்கு ஆயுத தளபாடங்கள் இருப் பதை தெளிவாகவே உணர்ந்து கொள்ள முடிந் திருக்கிறது.

அத்துடன் புலிகளிடம் இருந்து பெருமள விலான ஆயுதங்களைக் கைப்பற்றியதாகப் படைதரப்பு வெளியிடும் தகவல்கள் அவர்கள் ஆயுத தளபாடப் பற்றாக்குறையைச் சந்திக்க வில்லை என்பதை உணர்த்துகிறது.

அதேவேளை அவர்கள் போரிடுவதற்குப் போதிய ஆளணியின்றி இருப்பதை வெளிப் படையாகவே ஒப்புக் கொண்டிருப்பதும் குறிப் பிடத்தக்கது.

இதற்கிடையே கடந்த வாரம் ஒட்டுசுட்டா னுக்கு தெற்கே 533 பி?கேட் துருப்புகளுக் கும் புலிகளின் குழுவொன்றுக்கும் இடையில் சண்டை நடந்திருக்கிறது. இது இராணுவக் கட்டுப்பாட்டுப் பகுதியாகும்.

இந்தச் சண்டையில் புலிகள் 3 பேர் கொல் லப்பட்டதுடன் படையினர் சிலர் காய?ற்ற தாக பாதுகாப்பு வட்டாரங்கள் தகவல் வெளி யிட்டன.

கொல்லப்பட்டவர்கள் கரும்புலிகள் அணி யைச் சேர்ந்தவர்கள் என்று கருதப்படுகிறது.

அவர்களிடம் இருந்த தற்கொலைக் குண்டு அங்கிகள் மற்றும் ஆயுதங்கள் கரும்புலித் தாக்குதலுக்காக இவர்கள் சென்றிருக்கலாம் என்ற சந்தேகத்தை எழுப்பியிருக்கிறது.

இராணுவக் கட்டுப்பாட்டுப் பிரதேசங்களில் இப்போது அடிக்கடி இவ்வாறான மோதல்கள் நடைபெறுவது வழக்கமாகியிருக்கிறது.

அதைவிடப் புலிகள் இப்போது கரும்புலி களை சண்டைக் களங்களில் பயன்படுத்தி வரு வதால் படையினருக்கு சிக்கல்கள் ஏற் படுவதாகவும் கூறப்படுகிறது. கடந்தவாரம் உடையார்கட்டுக்கு வடக்கே நடந்த சண்டை யின் போது புலிகளின் உறுப்பினர் ஒருவர் முன்னேறிச் சென்ற 581 பிரிகேட்டைச் சேர்ந்த 11வது இலகு காலாற்படையினர் மத்தியில் குண்டை வெடிக்க வைத்ததாக பாதுகாப்பு வட்டாரங்கள் கூறியுள்ளன.

இந்தச் சம்பவத்தில் படையினர் உயி?ழந் தது பற்றிய தகவல்களை உறுதிப்படுத்த முடியாவிட்டாலும் பலர் காயமுற்றதாகக் கூறப்பட் டிருக்கிறது.

படைத்தரப்புக்கு இப்போதே கைப்பற்றிய பிரதேசங்களின் பாதுகாப்பு பற் றிய சிக்கல்கள் எழத் தொடங்கி விட்டன.

இந்தநிலையில் ஆளணி வளச் சிக்கலைச் சமாளிக்க ஓமந்தைப் பகுதி, மணலாறு மற்றும் பூந்தோட்டம் பகுதிகளில் விசேட அதிரடிப் படையினர் மேலதிகமாக நிறுத்தப்பட்டிருக் கின்றனர்.

இங்கு 24 முகாம்களை விசேட அதிரடிப்படை புதிதாக அமைத்திருக்கிறது.

ஒரு புறத்தில் தாக்குதல் சண்டைகள் புதுக் குடியிருப்புக் களமுனையில் தீவிரம் பெற்றி ருக்கின்ற நிலையில் படையினர் பின்புலத்தில் புலிகளின் சவால்களையும் சிக்கல்களையும் இப்போதே எதிர்கொள்ளத் தொடங்கி விட்டனர். புதுக்குடியிருப்பைக் கைப்பற்றினாலும் புலிகளின் இந்த ஊடுருவல் அணிகளின் நட வடிக்கைகள் அரசபடைகளுக்கு ஒரு நீண்ட கா லச் சிக்கலாகவே இருக்கும்

-சுபத்ரா-

Comments