சிறிலங்கா படையினர் இன்றும் நடத்திய தாக்குதலில் 14 சிறுவர்கள் உட்பட 51 தமிழர்கள் படுகொலை: நோயாளர்களை ஏற்ற வந்த கப்பல் மீதும் துப்பாக்கிச் சூடு

முல்லைத்தீவு மாவட்டத்தில் உள்ள மாத்தளன் மருத்துவமனையில் உள்ள நோயாளர்களை ஏற்றிச்செல்ல வந்த அனைத்துலக செஞ்சிலுவைச் சங்கத்தின் கப்பல் மீது சிறிலங்கா படையினரின் துப்பாக்கி ரவைகள் தாக்கியதில் கப்பலுக்கு சேதங்கள் ஏற்பட்டுள்ளன.

மாத்தளன் கடற்கரைக்கு இன்று சனிக்கிழமை வந்த 'கிறீன் ஒசன்' கப்பல் மீதே சிறிலங்கா படையினரின் துப்பாக்கி ரவைகள் தாக்கியுள்ளன. இதில் அனைத்துலக செஞ்சிலுவைச் சங்கத்தின் வன்னிக்கான வதிவிடப் பிரதிநிதி கிறிஸ்ரீன் உட்பட பணியாளர்கள் இருவர் நூலிழையில் உயிர் தப்பியுள்ளனர்.

இதேவேளையில் 'மக்கள் பாதுகாப்பு வலய' பகுதிகளான மாத்தளன், அம்பலவன்பொக்கணை, முள்ளிவாய்க்கால் மற்றும் வலைஞர்மடம் ஆகிய பகுதிகளை நோக்கி இன்றும் சிறிலங்கா படையினர் ஆட்லெறி எறிகணை, பல்குழல் வெடிகணை, மோட்டார், பீரங்கி மற்றும் துப்பாக்கிச் சூட்டுத் தாக்குதல்களை நடத்தினர்.


[படம்: புதினத்துக்காக சதாசிவம் சகிலா]


[படம்: புதினத்துக்காக சதாசிவம் சகிலா]


[படம்: புதினத்துக்காக சதாசிவம் சகிலா]

இதில் 14 சிறுவர்களும் 5 மாத கர்ப்பிணிப் பெண்ணும் மற்றும் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த ஐந்து பேரும் உட்பட 51 தமிழர்கள் படுகொலை செய்யப்பட்டுள்ளதுடன் 50 பேர் படுகாயமடைந்துள்ளனர்.

ஒரே குடும்பத்தைச் சேர்ந்தவர்களான

கமலநாதன் உதயராணி (வயது 35)

கமலநாதன் கபில்ராஜ் (வயது 14)

கமலநாதன் பிரியங்கா (வயது 10)

கமலநாதன் பிரியதர்சினி (வயது 07)

கமலநாதன் புகழவன் (வயது 07)

மேற்குறிப்பிட்ட ஐந்து பேரும் மாத்தளன் கப்பல் வீதியில் இன்று அதிகாலை 3:00 மணியளவில் சிறிலங்கா படையினர் நடத்திய எறிகணைத் தாக்குதலின் போது தூக்கத்திலேயே படுகொலை செய்யப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.


[படம்: புதினத்துக்காக சதாசிவம் சகிலா]



5 மாத கர்ப்பிணிப் பெண்ணான துஸ்யந்தன் அருள்மலர் (வயது 35)

கமலச்சந்திரன் ரதன் (வயது 17)

கமலச்சந்திரன் சரோஜினிதேவி (வயது 40)

அன்ரன் (வயது 40)

பரமு (வயது 45)

நவரத்தினம் சுரேஸ் (வயது 26)

ஆறுமுகம் உமாமகேஸ்வரன் (வயது 22)

மயில்வாகனம் தங்கரத்தினம் (வயது 65)

கனகரத்தினம் சுரேஸ்குமார் (வயது 30)

மாடாசாமி முருகேசு (வயது 68)

பெரியசாமி தமிழ்ச்செல்வன் (வயது 13)

குமாரவேலு நாகலிங்கம் (வயது 38)

சுரேந்திரன் கார்த்திகா (வயது 02)

அழகன் சண்முகம் (வயது 58)

கனகரத்தினம் சுரேஸ்குமார் (வயது 33)

கமலநாதன் கபில்ராஜ்(வயது 13)

பிரியங்கா (வயது 10)

பிரியதர்சினி (வயது 07)

புகழவன் (வயது 06 மாதங்கள்)

துஸ்யந்தன் (வயது 28)

தர்மலிங்கம் குமுதினி (வயது 27)

தர்மலிங்கம் தர்சன் (வயது 17)

கணேசலிங்கம் ராஜ்குமார் (வயது 23)

கணேசலிங்கம் யமுனாராணி (வயது 48)

தர்மலிங்கம் தருமராசா (வயது 38)

தர்மலிங்கம் தயாளினி (வயது 26)

கேசவன் மகேஸ்வரி (வயது 58)

குமாரவேல் நாகலிங்கம் (வயது 48)

விசுவலிங்கம் சசிகலா (வயது 38)

துஸ்யந்தன் அருள்மலர் (வயது 28)

தர்மலிங்கம் தருமராசா (வயது 32)

கமலநாதன் கதிராய் (வயது 58)

செல்வலிங்கம் கிருசிகா (வயது 09)

சுப்பிரமணியம் திருநாவுக்கரசு (வயது 08)

வேலாயுதம் மகேஸ்வரி (வயது 04)

செல்வரட்ணம் தியானேஸ்வரன் (வயது 43)

வேலாயுதம் தாரணி (வயது 21)

ம.கார்மேகன் (வயது 42)

மாரி பன்னீர்ச்செல்வம் (வயது 26)

சவரிமுத்து பிரதீபன் (வயது 26)

கார்மேகம் கமலேஸ்வரன் (வயது 32)

ஆகியோர் படுகொலை செய்யப்பட்டவர்களில் அடையாளம் காணப்பட்டுள்ளனர். ஏனையோரின் பெயர் விபரம் இதுவரை கிடைக்கப்பெறவில்லை.












Comments