வன்னியில் இன்றும் சிறிலங்கா படையினர் கொலைவெறித் தாக்குதல்: 17 சிறுவர்கள் உட்பட 46 தமிழர்கள் படுகொலை

வன்னியில் சிறிலங்கா படையினர் இன்றும் நடத்திய எறிகணை மற்றும் வான் தாக்குதல்களில் 17 சிறுவர்கள் உட்பட 46 தமிழர்கள் படுகொலை செய்யப்பட்டுள்ளதுடன் இரண்டு கர்ப்பிணிப் பெண்கள், 27 சிறுவர்கள் உட்பட 118 பேர் படுகாயமடைந்துள்ளனர்.

'மக்கள் பாதுகாப்பு வலய' பகுதிகளான மாத்தளன், வலைஞர்மடம் மற்றும் அம்பலவன்பொக்கணைப் பகுதிகளில் இன்று செவ்வாய்க்கிழமை சிறிலங்கா படையினர் அகோர எறிகணை, கொத்துக்குண்டு மற்றும் வான் குண்டுத்தாக்குதல்களையும் நடத்தியுள்ளனர்.

இதில் 17 சிறுவர்கள் உட்பட 46 தமிழர்கள் படுகொலை செய்யப்பட்டுள்ளதுடன் இரண்டு கர்ப்பிணிப் பெண்கள், 27 சிறுவர்கள் உட்பட 118 பேர் படுகாயமடைந்துள்ளனர்.

அதிகளவிலான மக்கள் வலைஞர்மடத்திலும் அம்பலவன்பொக்கணையிலும் படுகொலை செய்யப்பட்டுள்ளனர்.

கொல்லப்பட்டவர்களில் அடையாளம் காணப்பட்டோர் விபரம் வருமாறு:

லிங்கேஸ்வரன் தனுசிகா (வயது 02)

தங்கா (வயது 03)

கணபதிப்பிள்ளை மணிவண்ணன் (வயது 25)

ரஜிதரன் தமிழ்ச்செல்வி (வயது 32)

குழந்தைவேல் ரவி (வயது 43)

பாலச்சந்திரன் சந்திரா (வயது 44)

சந்திரஸ்ரீ கமலவேணி (வயது 07)

ஜெயராசா ஜெருசலின் (வயது 14)

குமரதாஸ் சந்திரா (வயது 33)

தேவன் புஸ்பராணி (வயது 54)

தர்மன் சேதுமதி (வயது 28)

கருணாகரன் தேவி (வயது 38)

இராமகிருஸ்ணன் கார்த்திகா (வயது 08)

சேதுமாதவன் செந்தூரன் (வயது 12)

காசிப்பிள்ளை மதுசா (வயது 14)

சேவியர் கண்மனி (வயது 30)

மதுரநாயகம் கருவேந்தன் (வயது 15)

இலங்கைநாதன் சாருஜன் (வயது 11)

தருமராசா மயூரன் (வயது 10)

சேந்தன் ஜெகன் (வயது 17)

மதுபாலன் விதுசன் (வயது 18)

கருணாகரன் பாலேஸ்வரன் (வயது 38)

முத்தையா மதுபாலன் (வயது 23)

காந்திதாசன் ஈஸ்வரன் (வயது 52)

காந்தி தீபன் (வயது 13)

ரவிராஜ் சேதுமாதவன் (வயது 63)

கந்தையா மதுமிதன் (வயது 14)

தேவன் மருதன் (வயது 16)

ஸ்ரீசீலன் காந்தி (வயது 28)

சிவயோகம் பற்றிக்ஞானராஜா (வயது 45)

ஜெயதேவன் தேன்மொழி (வயது 30)

சுபாஸ்கரன் சுமித்திரா (வயது 03)

வேலுசாமி சன்னியாசி (வயது 54)

செபமாலை நிர்மதி (வயது 46)

அன்ரன் மரியதாஸ் ஜெயபால் (வயது 15)

சார்வே சிம்போரா (வயது 14)

திருஞானமூர்த்தி யோகராசா (வயது 28)

தமிழ்ச்செல்வன் றஜிதா (வயது 10)

அன்ரன் மரியதாஸ் மேரிநிரோஜினி (வயது 13)

இராசையா பாமினி (வயது 24)

அந்தோனிமுத்து கீதபொன்கலன் (வயது 69)

தம்பிப்பிள்ளை தர்மினி (வயது 03)

ரஜனிகாந்த் செல்வி (வயது 32)

ஆகியோர் அடையாளம் காணப்பட்டுள்ளனர். ஏனையோரின் பெயர் விபரம் கிடைக்கப்பெறவில்லை.

Comments