வியாழன், வெள்ளி மோதல்களில் 600 வரையான படையினர் பலி!

புதுக்குடியிருப்பு பகுதியில் சிறீலங்காப் படையினரின் நான்கு முனை முன்னகர்வுகள் தமிழீழ விடுதலைப் புலிகளால் முறியடிக்கப்பட்டுள்ளனர். இதன்போது 600 வரையான படையினர் கொல்லப்பட்டுள்ளனர். மேலும் நூற்றுக்கணக்கான படையினர் காயமடைந்துள்ளனர்.

புதுக்குடியிருப்பு பிரதேசத்தில் கடந்த வியாழக்கிழமையும், வெள்ளிக்கிழமையும் நான்கு முனைகளில் கனரக ஆயுதங்களின் பின்புல சூட்டாதரவுடன் சிறீலங்காப் படையினர் பெருமெடுப்பில் முன்னகர்வுகளை மேற்கொண்டுள்ளனர்.

இதற்கு எதிராக தமிழீழ விடுதலைப் புலிகள் நடத்திய எதிர்த் தாக்குதல்களிலேயே 600 வரையான படையினர் கொல்லப்பட்டுள்ளனர். மேலும் நூற்றுக்கணக்கான படையினர் காயமடைந்துள்ளனர்.

Comments