ஈழ விடுதலை விழாவிற்கு தயாராகவும்

இதோ புலிகளின் கதை முடிந்தது என்று சிங்களமும் உடன் சேர்ந்து உலாவும் உலகமும் கொக்கரிக்க வேண்டும். இதுதான் புலிகளின் எதிர்பார்ப்பும். என்னுடைய எண்ணுதலில் கிடைத்தநற்செய்தி இதுவரை இன்றுவரை புலிகளின் புதிரான திட்டம் வெற்றிப்பாதையில் சென்றுகொண்டு இருப்பதுதான். உணர்வுள்ளதமிழனின் ஆய்வு இதை உனர்த்தும்,

அப்பாவி மக்களின் இழப்பு அது சிங்களனின் கொழுப்பும் கொலைத்தனமும் கோலைதனமும்தான்.பலமுறை மண்ணை விட்டதும் மீட்டதும் சிங்கள படையினை விரட்டிஅடித்ததையும் சுற்றி அழித்ததையும் கண்டோம். தாய்மண்ணின் நாற்புறமும் நம்மோடு இருந்தபோதும் தமிழ் ஈழம் தனி நாடு ஆகவில்லை காரணம் உலகம் நம்மை அங்கிகரிக்கவில்லை காரணம்அங்கே எழுச்சி இன்றி நம்படை வெல்லும் என்ற நம்பிக்கையுடன் நாட்களை நகர்த்தினர் புலம்பெயர்வாழ் மக்கள். உலக நாடுகள் நம்மைவேடிக்கைகூட பார்க்கவில்லை.

புலிகளின் தெளிவு போர் மட்டும் போதாது மக்களின் புரட்சியும் தேவை என்பதுதான். எழுச்சி பிறக்க வேண்டுமானால் அது புலிகளின் பின்னடைவு என்னும் செய்தி வரும்பொழுதுதான் எழுச்சி உயிர் பெரும் என்பது புலிகளினால் புரிந்துகொள்ளப்பட்ட விடயம். புலிகள் வாலை பிடிக்கும் பொழுது விட்டு விடுவர் காலை பிடிக்கும் பொழுது குதறி விடுவர் என்பது உலகறிந்த உண்மை, சிங்களனுக்கு அனுபவ உண்மையும் கூட.

கிளிநொச்சியை விடுதல்தான் சிங்களனை மூடனாக்கும் முறையான வழிஎன்பது திட்டத்தின் முதல்வரி. அவனும் இறுதிப்போர் என இன்பவார்த்தைகளை கேட்டுக்கொண்டு கையிருக்கும் படையினையும் ஆயுதங்களையும் முல்லைதீவுக்குள் கொட்டிமுடித்துவிட்டன். புதருக்குள் சிக்குண்ட பூனையாய் திகைக்கிறான் புலிகளோ திட்டத்தின் பாதையை தெளிவாக தீட்டிவிட்டனர் இந்நிலையில் ஈழம் பிறக்க உலகத் தமிழரின்கைகள் இணைய வேண்டிய நேரம் இது.

ஆம் தற்பொழுது உலக எழுச்ச உச்சியில் நிற்கிறது அதை ஏற்ப்படுத்தியது எம் தலைவனின் திட்டம். கிளிநொச்சியை விட்டுப்போனது திட்டத்தில் ஒருவரிதான். உதாரணம் கிளிநொச்சியை பிடித்தபொழுது இராணுவம் புலிகளை பிடித்தார்கள் ஆயுதங்களை பிடித்தார்கள் என்று நான் இதுவரை செய்தி படிக்கவில்லை கேட்டதுமில்லை இராணுவம்அங்கு வரும்பொழுது கிளிக்குஞ்சுகூட கூட்டில் இல்லை. சிங்களன் கிளிநொச்சியை பிடிக்கவில்லை மாறாக புலிகள் அழைத்த இடத்திற்குசென்று திசைதெரியாது நிற்கிறான். புலிகளின் வாயிற்குள் சென்றுவிட்டார்கள் பாவம் அவர்களின் கதி என்னவோ. சிங்களனின் இராணுவமும் பலவீனம் அடைந்துவிட்டது அழைத்த இடத்திற்கும் வந்துவிட்டான் உலக எழுச்சியும் உச்சம் அடைந்துவிட்டது

பதுங்கிய புலிகள் பாயவும் தொடங்கிவிட்டனர் . மண்ணை மீட்பதற்கு ஒரு மாதமே போதும். இந்நேரத்தில் எம் புலம்பெயர்வாழ் மக்களின் புரட்சி ஓயாத அலைகளாய் இருக்க வேண்டும் அதுவே தமிழ் ஈழத்திற்கு உருவம் தரும். நெருங்கிவிட்டோம் நிருத்திவிடாதீர்.


எம் தலைவனின் இராணுவம் அதற்கு உயிர் கொடுக்கும்.

ஈழ விடுதலை விழாவிற்குசெல்ல தயாராகவும் இருங்கள்.

எம் தலைவனின் இராணுவ அறிவு ஒரு ஈழமல்ல நூறு ஈழம் வேண்டுமானாலும் உருவாக்கும்.

சு.பிரசாத் (தமிழ்நாடு)

Comments