படையினரிடம் சரணடையப் போவதில்லை புலிகள் அசோசியேடட் பிரஸ் ஊடகத்திற்கு செவ்வி

நேற்றைய தினம் புலிகளின் அரசியல் துறைப் பொறுப்பாளர் ப.நடேசன் அவர்கள் அசோசியேடட் பிரஸ் ஊடகத்திற்கு மின்னஞ்சல் செவ்வி ஒன்றை வழங்கியிருந்தார். அதில் அவர் புலிகள் தமிழ்ச் சிவிலியன்களை மனிதய கேடயமாக பயன்படுத்தி வருவதாக தெரிவிக்கப்படும் கருத்தை ஏற்றுக்கொள்ள முடியாதென தெரிவித்ததுடன் இராணுவமே அவ்வாறு செயல்படுவதாக தெரிவித்தார்.

அத்துடன் எச் சந்தர்ப்பத்திலும் விடுதலைப் புலிகள் இராணுவத்திடம் சரணடையப் போவது இல்லை என திட்டவட்டமாக கூறியுள்ளார். தமிழ் மக்களின் தமிழீழ பேராட்டம் எந்தக் காரணத்திற்காகவும் கைவிடப்பட மாட்டாதென அவர் குறிப்பிட்டுள்ளார்.

யுத்த களத்தில் எவ்வாறான நிலைமைகளை எதிர்நோக்கினாலும் தமிழீழப் போராட்டம் தொடரும் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார். தமிழ் மக்களின் தமிழீழ பேராட்டம் எந்தக் காரணத்திற்காகவும் கைவிடப்பட மாட்டாதென அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

சிவிலியன் பாதுகாப்பை கருத்திற் கொண்டு இலங்கை அரசாங்கத்தை யுத்தம் நிறுத்தமொன்றுக்கு செல்லுமாறு சர்வதேச நாடுகள் அழுத்தம் கொடுக்க வேண்டுமென நடேசன் தனது செவ்வியில் கோரிக்கை விடுத்துள்ளார்.

To view the news in English click here:AP NEWS

Comments