யேர்மனி, பிரான்ஸ், சுவிஸ், நோர்வே, கனடா, சுவீடன், இத்தாலி, பிரித்தானியாவில் ஆரம்பிக்கப்பட்டுள்ள போராட்டத்திற்கு ஆதரவு வழங்குமாறு மக்களுக்கு அழைப்பு

யேர்மனி, பிரான்ஸ், சுவிசிஸ், நோர்வே, பாரிஸ், பிரித்தானியாவில் ஆரம்பிக்கப்பட்டுள்ள போராட்டத்திற்கு அனைத்து தமிழ் மக்களின் ஆதரவையும் போராட்டத்தில் பங்கேற்றுள்ள மக்கள் கோரி நிற்கின்றார்கள்.

இத்தாலி வாழ் எம் தேசத்தின் உறவுகளே!சுவிசிஸ் ஐ.நா முன்பாக இன்று மாபெரும் ஆர்ப்பாட்டம் தமிழீழ மக்களின் வாழ்வுரிமையை வலியுறுத்தி சுவிற்சர்லாந்து ஜெனீவாவில் ஐக்கிய நாடுகள் சபை முன்பாக இன்று (செவ்வாய்) மாபெரும் கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டம் நடைபெறவுள்ளது.

வன்னியில் தமிழ் மக்கள் மீதான சிறீலங்கா அரசின் தாக்குதல்கள் தடுத்து நிறுத்தப்பட்டு நிரந்தர போர் நிறுத்தம் செய்யப்பட வேண்டும் என வலியுறுத்தி இந்தப் போராட்டம் நடைபெறவுள்ளது.

பிற்பகல் 2:00 மணிக்கு ஆரம்பிக்கவுள்ள ஆர்ப்பாட்டம் காலத்தின் தேவை கருதி சில வேளைகளில் காலவரையறையற்ற போராட்டமாக மாறும் என்பதால் தமிழ் உறவுகள் அதற்கான முன்னேற்பாடுகளுடன் போராட்டத்தில் கலந்து கொள்ளுமாறு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

புலம்பெயர் நாடுகளில் மக்கள் தமிழினப் படுகொலைக்கு எதிராக ஆரம்பித்துள்ள தன்னெழுச்சிப் போராட்டங்கள் வலுப்பெற்றுவரும் நிலையில், அதிகளவிலான தமிழ் மக்கள் இவற்றில் கலந்துகொள்ள வேண்டும் என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

யேர்மனியில் இன்று முதல் காலவரையறையற்ற போராட்டம் யேர்னியில் டுசுல்டோர்ப் பிரதான தொடரூந்து நிலையத்திற்கு முன்பாக இன்று (செவ்வாய்க்கிழமை) காலை 11:00 மணி முதல் காலவரையறையற்ற ஆர்ப்பாட்டம் நடைபெறவுள்ளது.

வன்னியில் பாரிய மனித அவலத்தின் மத்தியில் தமிழின அழிப்பை மேற்கொண்டுவரும் சிறீலங்கா அரசுக்கு யேர்மனி அரசாங்கம் அழுத்தம் கொடுத்து போரை தடுத்து நிறுத்த வேண்டும் எனக் கோரிக்கை விடுத்து இந்தப் போராட்டம் நடைபெறவுள்ளது.

ஈழத்தமிழ் மக்களைக் காப்பாற்றுமாறு புலம்பெயர் நாடுகளில் ஆரம்பிக்கப்பட்டுள்ள காலவரையறையற்ற போராட்டங்களின் வரைசையில் யேர்மனியிலும் நடைபெறவுள்ள இந்த ஆர்ப்பாட்டத்தில் மக்கள் பெருமளவில் கலந்துகொள்ள வேண்டும் என அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

ஜேர்மனி டுசல்டோவ் நாடாளுமன்றத்திற்கு (düsseldorf landtag) முன்பாக (தொடர்புகளுக்கு: (49) 1633125311)

நோர்வேயில் பிரதமர் அலுவலகம் முன்பாக ஆர்ப்பாட்டம் வன்னி மக்களின் அவலத்தைத் தடுத்து உடனடி போர் நிறுத்தம் செய்யுமாறு வலியுறுத்தி நோர்வே பிரதமர் அலுவலகத்திற்கு முன்பாக இன்று (செவ்வாய்க்கிழமை) கண்டன ஆர்ப்பாட்டம் இடம்பெறவுள்ளது.

பிரதமர் தனது அலுவலகத்திற்கு முன்பாக காலை 10:00 மணியளவில் மக்கள் ஒன்றுகூடுமாறு நோர்வே தமிழ் அமைப்புக்களின் ஒன்றியம் அழைப்பு விடுத்துள்ளது.

வன்னியிலுள்ள பாதுகாப்பு வலயம் மீது சிறீலங்கா படையினர் தாக்குதல் நடத்த முற்படுவதாக தகவல் வெளியாகி இருப்பதுடன், அவ்வாறு தாக்குதல் நடத்தினால் பல இலட்சக்கணக்கில் மக்கள் உயிரிழக்க நேரிடும் என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

சிறீலங்கா அரசு மீதான அனைத்துலக அழுத்தம் உடனடியாகப் பிரயோகிக்கப்பட்டு போர் நிறுத்தம் செய்யப்பட வேண்டும் எனவும், இதற்காக புலம்பெயர் தமிழ் மக்கள் கிழர்ந்தெழ வேண்டும் எனவும், தமிழீழ விடுதலை ஆதரவாளர் ஒருங்கிணைப்புக் குழுவின் அமைப்பாளர் பழ.நெடுமாறன் நேற்று முன்னாள் (ஞாயிற்றுக்கிழமை) அழைப்பு விடுத்திருந்தமை நினைவூட்டத்தக்கது.

இது தொடர்பாக நோர்வே தமிழ் அமைப்புக்களின் ஒன்றியம் வெளியிட்ட செய்திக்குறிப்பு:-

எமது இனத்தை கொடிய அழிவில் இருந்து காத்திட, உடனடிப் போர் நிறுத்தத்தினை ஏற்படுத்துவதற்கு நோர்வே அரசாங்கம் உரிய உடனடி நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்பதை வலியுறுத்த அணி திரள்வோம்.

எமது சொந்த அலுவல்களை நாளை ஒதுக்கி வைத்து எங்கள் உறவுகளுக்காக குரல் கொடுப்போம். அனைவரும் வீதிக்கு இறங்குவோம் என்று அச்செய்திக்குறிப்பில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

(தலைமை அமைச்சர் அலுவலகமானது, VG நாளிதழ் அலுவலகம் மற்றும் Deichmanske bibliotek (தலைமை நூலகம்) ஆகியன அமைந்துள்ள இடத்திற்கு அருகாமையில் Akersgata 42, 0030 OSLO முகவரியில் அமைந்துள்ளது)

பாரிஸ் நகரின் இன்வலிட் என்னும் இடத்தில் அமைந்துள்ள வெளிவிவகார அமைச்சின் முன்றலில் நேற்று பிற்பகல் 3:00 மணியில் இருந்து ஒன்றுதிரண்ட தமிழர்கள் அதனை தொடர் போராட்டமாக மாற்றி வருவதாக அங்கிருந்து கிடைக்கும் செய்திகள் தெரிவிக்கின்றன.

பிரெஞ்சு அரசாங்கம் முடிவு ஒன்றினை தெரியப்படுத்தும் வரை ஆர்ப்பாட்டம் நடக்கும் இடத்தை விட்டு நகர்வதில்லை என்ற உறுதிப்பாட்டுடன் மக்கள் முழக்கங்களை எழுப்பியபடி எழுச்சியுடன் காணப்படுவதாக எமது செய்தியாளர் அங்கிருந்து தெரிவித்துள்ளார்.

லண்டனில் தொடர்கிறது போராட்டம் இதேவேளையில் பிரித்தானியாவின் பல பகுதிகளிலும் இருந்து நேற்று திங்கட்கிழமை கிளர்ந்தெழுந்த தமிழ் மக்கள், வெஸ்ட் மினிஸ்டர் நாடாளுமன்ற முன்றலில் தொடர்ச்சியாக மகிந்த அரசாங்கத்தின் தமிழின இனப் படுகொலைக்கு எதிராக முழக்கம் எழுப்பி வருகின்றனர்.

கனடாவில். கனடிய தமிழ் மாணவர் சமூகம், கனடிய தமிழர் சமூகம் ஆகியன இணைந்து ஏற்பாடு செய்துள்ள இந்த போராட்டம் ஒட்டாவாவில் அமைந்திருக்கும் கனடிய நாடாளுமன்றம் முன்பாக நடைபெறவுள்ளது.

இந்த ஆர்ப்பாட்டம் குறித்து ஏற்பாட்டாளர்கள் தெரிவித்துள்ளதாவது:

சிறிலங்கா அரசாங்கத்தின் கொடூர இனப்படுகொலையை உடன் நிறுத்தக் கோரியும்

உடனடிப் போர் நிறுத்தம் வேண்டியும்

சிறிலங்கா அரசாங்கத்துக்கு அழுத்தம் கொடுக்குமாறும் கனடிய அரசையும் கனடிய பிரதமர் ஸ்டீபன் காப்பரையும் வலியுறுத்தும் வகையில் இந்த ஆர்ப்பாட்டம் ஒழுங்கு செய்யப்பட்டுள்ளது.

இன்று செவ்வாய்க்கிழமை பிற்பகல் 12:00 மணி தொடக்கம் நாள்தோறும் தொடர் போராட்டத்தில் அனைத்துத் தமிழ் மக்களும் இணைந்து கொள்ளுமாறு வேண்டப்படுகின்றனர்.

நாள்தோறும் காலை 7:00 மணிக்கு 1199 கென்னடி வீதியில் அமைந்திருக்கும் எவரெஸ்ட் Banquet மண்டபத்தில் இருந்து ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொள்ளும் மக்களுக்கு உரிய பேருந்துகள் புறப்படவுள்ளன.

பேருந்துகளில் பயணிக்க விரும்புகின்றவர்கள் கீழ்க்காணும் தொடர் எண் வாயிலாக பதிவு செய்யுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றனர்.

சுயமாக வாகன வசதி கொண்டவர்கள் அதனைப் பயன்படுத்துமாறும் வேண்டப்படுகின்றனர்.

பேருந்துகள் புறப்படும் ஏனைய இடங்கள் பின்னர் அறியத் தரப்படும்.

பேருந்துப் பதிவுகளுக்கு: 416 825 6020

ஏனைய தொடர்புகளுக்கு: 647 838 6925

சுவீடனில் சுவீடன் வெளிவிவகார அமைச்சு அலுவலகத்துக்கு முன்பாக தொடர் கவனயீர்ப்புப் போராட்டம் நடைபெறவுள்ளது.

இந்த கவனயீர்ப்பு போராட்டம் தொடர்பாக ஏற்பாட்டாளர்கள் தெரிவித்துள்ளதாவது:

எமது தாயக உறவுகளை சிறிலங்கா அரசாங்கம் நடத்தும் இன அழிப்பு போரில் இருந்து இருந்து காக்க, சுவீடன் வெளிவிவகார அமைச்சுக்கு முன்பாக தொடர் கவனயீர்ப்பு போராட்டம் நடைபெறவுள்ளது.

இத்தாலி வாழ் எம் தேசத்தின் உறவுகளே! இனவாத அரசின் எறிகணை வீச்சிலும் எரிகுண்டு வீச்சிலும் எம்தேசமும் தேசத்தின் உறவுகளும் எரிந்து கொண்டிருக்கிறார்கள். அழிவுகளைக் கண்டு அழுது கொண்டிருக்கும் நேரமல்ல இது. வீதியில் இறங்கி குரல் கொடுத்து எம் மக்களை பாதுகாக்க சர்வதேசத்தின் முன் இறுதியாக ஒங்கி குரல் கொடுக்கும் இறுதிக்கணம் இது.

எம் தாயகத்தையும் தேசியத்தையும் சுதந்திரத்தையும் தாயகத்து உறவுகளையும் இழந்து நாம் தமிழர்களாக வாழ முடியுமா? தமிழர்கள் வாழும் புலம்பெயர் தேசம் எங்கும் மக்கள் வீதியில் இறங்கி போராடும் இவ்வேளையில் இத்தாலி வாழ் தமிழீழ மக்களாகிய நாமும் இன்றே வீதிகளில் இறங்கி தொடர்ந்து குரல் கொடுப்போம். தேசத்தை அழிவில் இருந்து காப்போம்.

இடம் : பியாட்சா இன்டிபென்டென்சா
நேரம் : 15:00 மாலை
காலம் : 07-04-2009
அனைவரும் அணிதிரண்டு வாருங்கள்.
சாவுக்குள் வாழும் எம் சந்ததிகளை காக்க.
பலெர்மோ வாழ் தமிழீழமக்கள

இன்று பிற்பகல் 2:00 மணியில் இருந்து தொடர்ச்சியாக இப்போராட்டம் நடைபெறவிருக்கின்றது.

இதில் சுவீடன் வாழ் அனைத்து தமிழ் மக்களையும் குடும்பம் குடும்பமாக வந்து கலந்துகொள்ளுமாறு அழைக்கின்றோம்.

Comments