வவுனியா இராணுவ முகாம்களில் தங்கியிருந்த வயோதிபர்களில் 50 பேர் ஒரு வார காலத்துக்குள் மரணம்

வவுனியா செட்டிகுளம் அகதி முகாம்களில் தங்கியுள்ள மக்களில் பல வயோதிபர் போதிய உணவு மற்றும் கவனிப்பாரின்றி உள்ளனர் என்றும் இவர்களில் 50 வயோதிபர்வரை கடந்த ஒருவார காலப்பகுதியில் உணவின்றி, பலவீனமடைந்து இறந்துள்ளதாகவும், மரணவிசாரணை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பல முதியோர்கள் கூடாரங்களின்கீழ் கவனிப்பாரின்றியும், நேரத்துக்கு உணவு கிடைக்காமலும் பலவீனமாகக் காணப்படுவதாக நிவாரணப் பணியாளர்கள் தெரிவிக்கிறார்கள்.

Comments