பிரான்ஸ் தமிழச் சங்கங்களின் கூட்டமைப்பு செல்வி. ஜெயலலிதாவுக்கு வாழ்த்து.

தமிழீழத்திற்கான அங்கீகாரத்தை பெற்றுத்தர தான் முழுமைமயாக போராடப்போவதாக தமிழக முன்னாள் முதல்வரும் அ.தி.மு.க பொதுச் செயலருமான செல்வி ஜெயலலிதா அறிவித்துள்ள நிலையில் அவருக்கு ஆதரவாக புலம்பெயர்ந்த தமிழ் மக்கள் தமது வாழ்த்துக்களையும் பாராட்டுக்களையும் அறிவித்த வண்ணமுள்ளனர்.

அந்த வகையில் பிரான்சின் முக்கிய அமைப்புக்களில் ஒன்றான 63 தமிழ்ச் சங்கங்களைப் பிரதிநிதித்துவப்படுத்தும் பிரான்ஸ் தமிழ் சங்கங்களின் கூட்டமைப்பும் தனது வாழ்த்துச் செய்தியை அறிவித்துள்ளது.

Comments