தமிழ் ஈழ தேசிய தலைவர் பிரபாகரன் தொடர்பான செய்திகளை நம்ப வேண்டாம்: வைகோ

பிரபாகரன் தொடர்பாக வெளிவரும் செய்திகளை நம்ப வேண்டாம் என்று மதிமுக., பொதுச் செயலாளர் வைகோ தெரிவித்துள்ளார்.

தற்போது பிரபாகரன் குறித்து வெளிவரும் செய்திகளை யாரும் நம்ப வேண்டாம். இந்திய அரசும், இலங்கை அரசும் சேர்ந்து இலங்கையில் போரை நிறுத்த முயற்சிக்கவில்லை, இதனால் ஏராளமான பேர் கொல்லப்பட்டனர், மீதமுள்ள 60,000 பேரயும் கொல்ல முயற்சிக்கின்றனர். அவர்களை காப்பாற்ற அமெரிக்கா போன்ற நாடுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கொண்டார். இவ்வாறு அவர் கூறினார்

பிரபாகரன் கொல்லப்பட்டதாக வதந்தி கிளப்பும் தி.மு.க போலீசு

ஈழ உணர்வாளர்களின் எதிர்ப்பையும் மீறி தேர்தலில் வென்ற மமதையில் திரியும் தி.மு.க தன்னுடைய உளவுத்துறை மூலம் விடுதலைப்புலிகளின் தலைவர் பிரபாகரன் சிங்களப்படையினரால்
சுட்டுக்கொல்லப்பட்டதாகவும்,உறுதிப்படுத்தப்பட்ட செய்தி நாளை காலை வெளியாகும் என்றும் வதந்தியை கிளப்பி விட்டிருக்கிறது

Comments