சாம்பல் மேடுகளிலிருந்தே தமிழீழ விடுதலைப் புலிகள் 1970ம் ஆண்டுகளில் உதயமானர்கள்: தமிழர் மனித உரிமைகள் மையம்

இன்று பிரான்ஸை தளமாக கொண்டு இயங்கும் தமிழர் மனிதர் உரிமைகள் மையத்தினரினால் வெளியிடப்பட்ட அறிக்கையில், புலம் பெயர் வாழ் தமிழ் மக்கள் தாம் வாழும் நாடுகளில் - தமிழீழ மக்களுக்கு எதிராக போர்க் குற்றம் புரிந்த சிறிலங்கா அரச பிரதிநிதிகளும் பாதுகாப்பு அதிகரிகளும் இந் நாடுகளுக்கு விஜயம் செய்யும் வேளைகளில், இவர்கள் மீது, அந்த நாட்டின் உள்நாட்டுச் சட்டங்களுக்கு அமைய, நீதிமன்றங்களில் வழக்கு தாக்கல் செய்ய தாயாராக வேண்டுமென அறைகூவல் விட்டுள்ளது.

தமிழர் மனிதர் உரிமைகள் மையத்தினரினால் வெளியிடப்பட்ட அறிக்கையின் பிரகாரம்; தற்பொழுது சிறிலங்காவை காப்பாற்ற முன்வந்த நாடுகள், தமது வெளிநாட்டு கொள்கைகளை மற்றும் வேளைகளில், காலம் கடந்தாலும் இனச் சுத்திகரிப்பை மேற்கொண்ட சிறிலங்கா மீது, நிச்யம் நடவடிக்கை எடுக்க முன்வருவார்களென கூறுகிறது.

அவ்வறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது:

யாரும் சிறிலங்கா அரசினதோ அல்லது அவர்களது தூதுவரலாயங்களின் மிரட்டல்களுக்கு அஞ்சாது, சிறிலங்காவின் போர் குற்றவாளிகள் மீது ஜனநாயாக நாடுகளில் அந் நாடுகளின் சட்டதிட்டத்திற்கு ஏற்ற வகையில் நீதிமன்றங்களில் வழக்கு தாக்கல் செய்ய தாயாராக வேண்டுமெனவும், இது பொருட்டு அந் நாடுகளின் வழங்கறிஞர்களுடன் முன்கூட்டியே ஆலோசனை செய்து, தேவையான சாட்சியங்கள் ஆவணங்களை தயார் செய்ய வேண்டுமென கூறுகிறது.

கடந்த ஆறுபது வருடங்களாக தமது அரசியல் அபிலாசைகளுக்கும், உரிமைக்களுக்காக போரடிய தமிழ் மக்களில் பெரும்பான்மையானோர், தற்பொழுது வதை முகாம்களில் கூறமுடியாத கஷ்ட நஷ்டங்களுக்கு ஆளாக்கப்பட்டுள்ளதாகவும், வதை முகாம்களில் கைது, காணமல் போதல், பலியல் வன்முறை, கொலை ஆகியவை தினமும் ஓர் சாதரண சம்பவமாக நடைபெறுவதாகவும் கூறுகிறது.

இறக்கும் நிலையில் காயப்பட்டோரும் முதியோரும் உள்ளதாகவும், முகாம்களில் இருப்பிட வசதிகள்; உணவு, மருந்து, போன்றவை போதியளவு கிடையது மக்கள் பெரும் அவலத்திற்கு உள்ளாக்கப்பட்டுள்ளதாகவும்; பாடசாலை மாணவ மாணவிகள், சிறுவரின் கல்வி பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் கூறுகிறது.

இவ் முகாம்களுக்கு சர்வதேச நிறுவனங்களோ, பத்திரிகையாளரோ அரசினால் அனுமதிக்கப்படவில்லையென்றும்; இடம் பெயர்ந்தோரின் மீள் குடியேற்றம்; கண்ணிவெடி அகற்றும் சாட்டில் பின்போடப்படுவதாகவும், சிங்கள மயப்படுத்தல் வெற்றிகரமாக நடைபெற்ற பின்னரே இடம் பெயர்ந்தோரின் மீள் குடியேற்றம் அங்கு இடம்பெறுமென தின்மமாக கூறுகிறது.

கடந்த காலங்களில் வேறுபட்ட சிங்கள அரசுகள், தமிழ் மக்களின் அபிலாசைகளுக்கும் அரசியல் தீர்வு தேடாது, அதை தவிர்த்து கொள்வதற்கு கூறும் சாட்டுப் போக்குகளே அதிகமெனவும், சிறிலங்கா அரசிற்கு சமானாக திகழ்ந்து, தமிழ் மக்களின் அபிலாசைகளுக்கும் அரசியல் தீர்வுக்கு கடந்த மூன்று சாகப்தங்களாக பேரம் பேசிய தமிழீழ விடுதலைப் புலிகள் தற்பொழுது தமிழ் மக்களின் தாயாக பூமியில் இல்லாத நிலையில், சிறிலங்கா அரசு, எப்படி ஓர் அரசியல் தீர்வை முன்வைப்பார்களென தமிழீழ மக்கள் எதிர்பார்க்க முடியுமென, தமிழர் மனிதர் உரிமைகள் மையத்தினர் கேள்வி எழுப்பியுள்ளனர்.

தமிழ் மக்கள் மீது சிங்கள அடக்கு முறையாளரினால் மேற்கொள்ளப்பட்ட பல நாசகாரச் சம்பவங்களின் சாம்பல் மேடுகளிலிருந்தே தமிழீழ விடுதலைப் புலிகள் 1970ம் ஆண்டுகளில் உதயமானர்கள் எனவும், இவர்களை இராணுவ ரீதியா ஒடுக்கி ஓர் இராணுவ வெற்றியை பெற்ற சிறிலங்கா அரசு, உள்நாட்டிலும் வெளிநாட்டிலும் கொண்டாட்டங்கள் நடத்தினாலும், பொதுவாக பெரும்பான்மை தமிழ் மக்களின் பகைமையை சம்பாதித்துள்ளதாகவும், தற்போது தெற்கில் முடிசூடா மன்னனாக திகழும் ஜனதிபதியும் குடும்பத்தினரும், அவரது நண்பர்களும் அடுத்துவரும் அரசினால் நிட்சயம் நாட்டின் ஒருமைப்பாட்டை குலைத்து, தமிழ் மக்களின் பகைமையை தேடிய பிரசைகளாக நிச்சயம் கணிக்கப்படுவார்களென தமிழர் மனிதர் உரிமைகள் மையத்தினரின் அறிக்கை மேலம் தெரிவித்தள்ளது.

Comments