தமிழர்களின் போராட்ட வடிவமாக திகழும் புலம்பெயர் உறவுகளே!

சிறீலங்கா அரசாங்கமானது நம் உறவுகளை நாள்தோரும் கொன்றுபுதைத்து வருகின்றது. நம் விடுதலைப்போராட்டத்தின் வரலாற்றுச் சின்னங்களைக் கூட அடியோடு அழித்து, நம் கண்மணிகள் உறங்கிக்கொண்டுள்ள துயிலும் இல்லங்களையும் உழுவி நாசகாரச் செயல்புரிகிறது.

தற்பொழுது நம் தேசிய சின்னங்களை புலம்பெயர் நாடுகளிலும் வேரோடு பிடுங்கும் முழுமுயற்சியிலும் ஈடுபட்டு வருகிறது.

ஆகையால் நம் தேசியத்தையும், தமிழர்களின் வீரத்தையும் உலகுக்கு எடுத்துரைக்கும் நம் தமிழீழ தேசிய கொடியினையும் தேசிய அடியாளங்களையும் உங்ளுடைய நாடுகளில் நடக்கின்ற கவனயீர்ப்பு மற்றும் ஆர்ப்பாட்டங்களுக்கு, தவறாது - மறவாது எடுத்துச்செல்லுங்கள்.

நம் நாடு தமிழீழம்

நம் தேசிய கொடி புலிக்கொடி

நம் தலைவர் மான்புமிகு வே. பிரபாகரன்

மாவீரர் கனவு நனவாகும் வரை போராடுவோம்.

என்ற தாரக மந்திரத்துடன் பயணிப்போம்.

தமிழரின் தாகம் தமிழீழ தாயகம்.

Comments