துவாரகாவின் புகைப்படத்தில் உண்மை இல்லை: சீமான் பேட்டி-காணொளி


நேற்று முன் தினம் வெளியான தேசிய தலைவரின் மகள் இறந்து இருப்பது போன்ற படம், துவாரகாவினது அல்ல என நாம் தமிழர் இயக்கத்தின் தலைவரும் தமிழின உணர்வாளருமான சீமான் அவர்கள் திட்டவட்டமாக மறுத்துள்ளார்.

சிங்களவர்கள் நடத்தும் ஒரு உளவியல் போர் இது எனக் குறிப்பிட்டுள்ள சீமான் அவர்கள், அப் புகைப்படத்தில் காணப்படுவது ஒரு பெண்போராளி எனவும் குறிப்பிட்டுள்ளார். வன்னி வதைமுகாமில் இருந்து தற்போது திருகோணமலையில் வசித்துவரும் ஒருவரின் தகவலில் அடிப்படையில் இந்தப் பெண்போராளி, இசைப்பிரியா என அடையாளம் காணப்பட்டுள்ளார்.

இவர் இறுதியாக நடித்த வேலி குறும்படம் இங்கே

http://www.tamilkathir.com/news/1784/57//d,video.aspx

இவர் விடுதலைப்புலிகளின் நிதர்சனம் பிரிவின் மகளிர் பிரிவு போராளியும், போராளி கலைஞரும் செய்தி வாசிப்பாளரும் விடுதலை புலிகளின் கடற்படையின் தளபதியுமாக இருந்த சிறீராம் என்பவரின் துணைவியான இசைப்பிரியா வாக இருக்கலாம் என சில தவல்கள் தெரிவிக்கின்றன. சீமானின் காணொளி இணைக்கப்பட்டுள்ளது.

வீரச்சாவடைந்த பெண்போராளியின் உடலை நிர்வாணப்படுத்தி தனது சிங்கள இராணுவமும் அதன் கூலிகளும் தமது இனவெறியை வக்கிரத்தை கண்டிப்பார் யாரும் இல்லை இந்த உலகில்

Comments