உரிமைக்காக போராடிய பழங்குடிமக்களும் நவீன இந்திய காட்டுமிராண்டிகளும்

உரிமை கேட்டு ஊர்வலம் வந்த பழங்குடி இனமக்களை கொடூரமாக துடிக்க துடிக்க அடித்துக்கொன்றனர் நவீன இந்திய காட்டுமிராண்டிகள். இந்திய காவல்துறை, சட்டம் ஒழுங்கு போன்றவைகள் எல்லாம் இந்திய தேசத்தின் ஆதிவாசிகளை காக்க இல்லை என்பதை மற்றும் ஒருமுறை வீடியோ ஆதரத்துடன் இந்திய அரசானது நிரூபித்துள்ளது.

ஆடு, மாடுகளை கூட இப்படிக் கொல்வார்களா எனத் தெரியாது.

ஒடுக்கப்பட்ட மக்கள், ஆதிவாசிகள், பழங்குடியினர் ஏன் ஆயுதப் போராளிக்குழுக்களின் பின் செல்கின்றனர் என அப்பாவியாக வினவும் “காமன் மேன்” கள் தவறாமல் காண வேண்டிய காணொளி.

இது போன்ற ஏராளமான கொடூரங்(ன்)களை கேள்விப் பட்டிருப்பினும் வீடியோ இணைப்புடன் காணும் பொழுது நெஞ்சம் பதறுகின்றது. இன்னமும், காந்தி தேசம், அகிம்சை, மக்களாட்சி என புழுகித் திரிபவர்கள் திரும்பவும் ஒருமுறை காணொளி இணைப்பினை காணவும்…

2007ல் நடைபெற்ற இந்த சம்பவத்தின் மேல் இது வரை என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என (அப்படி ஏதேனும் நடந்திருந்தால்) யாரேனும் தகவல் தெரிந்தால் தெரிவிக்கவும்.

இப்படிப்பட்ட நவீன காட்டுமிராண்டிகளால் ஒடுக்கப்பட்ட அப்பாவி மக்கள் தான் இந்தியாவில் நக்சலைட்களாகவும், மாவோயிஸ்ட்களாகவும் ஆயுதம் தாங்கிப்போராடுகின்றனர்.

Comments