ஆர்ப்பாட்டத்தை கண்டு மிரண்ட கமலஹாசனின் உளறல் அறிக்கை

சென்னையில் நடிகர் கமலஹாசன் வீட்டிற்க்கு முன்னால் ஆர்ப்பாட்டம்


சென்னையில் இன்று எப்.ஐ.சி.சி.ஐ.யின் ஊடகப் பிரிவின் தலைவர் பதவியில் இருந்து கமலஹாசனை விலகக்கோரி ஆர்ப்பாட்டம் ஒன்று இடம்பெற்றுள்ளது. அவர் அலுவலகம் முன்னால் நடைபெற்ற ஆர்ப்பாட்டம் காரணமாக கமல் ஆடிப்போயுள்ளதாக அறியப்படுகிறது.



கமலஹாசனின் அலுவலகம் முன்னால் இன்று நடந்த அமைதியான ஆர்ப்பாட்டத்தை கண்டு மிரண்ட கமல், உளறல் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.

அதில் எப்.ஐ.சி.சி.ஐ யில் மீடியா தலைவர் பதவியில் இருந்து விலக கோரியதை புரிந்துகொள்ளாமல், பத்மஸ்ரீ பதவியில் இருந்து விலக முடியாது என பதில் எழுதி உள்ளார்.

நாங்கள் கொழும்பு விழாவிற்கு செல்லப்போவதில்லை என எல்லோருக்கும் தெரிந்த பழைய கதையை எழுதியுள்ளார். இப்போது கேட்பது எப்.ஐ.சி.சி.ஐ.யின் ஊடக பிரிவின் தலைவர் பதவில்யில் இருந்து விலகச்சொன்னது மட்டும்தான். தமிழில் கேட்டிருக்கும் இந்த வேண்டுகோளுக்கு கமல் பதில் சொல்லவேண்டும் என ஆர்ப்பாட்டக்காரர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Comments