கனடாவில் ஈழத் தமிழர் துயர நாள் நினைவு பிரார்த்தனை

மரணத்தை வென்ற மாவீரர் மண்டியிடாது மரணித்த மக்கள் ஈழ விடுதலைக்காய் இன்னுயிர் தந்தோரின்ஆன்ம சாந்திக்காய் கனடாவில் இதயப் பிரார்த்தனை.

இடம்:- காலம்:-.

J&J Swagat Banquet Hall
415 Hood Road, Markham (Denison & Warden)

மே மாதம் 19 ம் திகதி2010.

காலை 8.30 மணி தொடக்கம் மாலை 8.30 மணி வரை.

( மாலை 7 மணி தொடக்கம் 8.30 மணி வரை கூட்டமும் சுடர் ஏற்றி பிரார்த்தனையும் )
ஈழத் தமிழர் குமுறிய நாட்கள் கடந்த வருடம் கதறிய நாட்கள்
ஈழத் தாயார் இரத்த வெள்ளத்தில் கண்ணீர் வடித்த காலப் பகுதி
ஈழத் தமிழர் சரித்திர மாதம் என்றுமே நாங்கள் இதயத்தில் கொள்வோம்.
ஆண்டாண்டு தோறும் மே மாதம் வந்தால் இனத்தின் விடிவுக்காய் இறைவனை இறைஞ்சுவோம்

என்றும் எங்கள் இதய பீடத்தில் நீங்கா நினைவாய் நிறைந்தே உளது.
ஈழ விடுதலைக்காய் இன்னுயிர் தந்தோரின் ஆன்ம சாந்திக்காய் இதயப் பிராத்தனை.
இதயமுள்ளவர் இரங்கி வாருங்கள் திரண்டு வாரீர் விரதமிருப்போம்
மாலை நேரம் பக்தி பூர்வமாய் தீபமேற்ருவோம் சுடராய் ஒளிர்வோம்

மக்களை நினைப்போம் மனத்தால் துதிப்போம்.
வீர சுதந்திரம் வேண்டியே நிற்போம்

தொடர்புகளுக்கு :- கனடாத் தமிழர் இணையம் 416-273-8305

குறிப்பு:- காலை 9 மணியில் இருந்து மாலை 7 மணி வரை தத்தம் வசதிக்கேற்ப விரும்புவோர் மண்டபத்தில் விரதம் இருக்கலாம்

Comments