பெர்லினில் கலை கலாச்சார நிகழ்வில் தமிழ் மக்களின் அவலநிலை எடுத்துக்காட்டல்

4.06.201அன்று பெர்லினில் "பல்லின கலாச்சாரத்தின் இசை" எனும் தலைப்பில் நடைபெற்ற பல்லின மக்களுக்கான கலை கலாச்சார நிகழ்வில் தமிழ் மக்களின் அவலநிலை எடுத்துக் காட்டப்பட்டது.




இவ் நிகழ்வில் பெர்லின் இளையோர்கள் நாட்டிய நாடகத்தால் தமிழ் மக்கள் தமது நிலத்தில் எப்படி சந்தோசமாக வாழ்ந்தார்கள் அதட்கு பிறகு தமிழ் மக்களுக்கு எதிரான கொடிய போரால் எப்படி மக்கள் அவலபட்டார்கள், அத்தோடு அவர்களின் தற்போதைய நிலைமை என்ன என்பதையும் எடுத்துக்காட்டினார்கள்.




மக்களின் முட்கம்பி வாழ்க்கை காட்சிகளும் திரையில் காண்பிக்கப்பட்டது. அங்கு வருகை தந்திருந்த பல்லின மக்களுக்கு துண்டுபிரசுரம்களும் வழங்கப்பட்டது இவ் நிகழ்வு ஈழத்தமிழர் நலன்புரி கழகம் பெர்லினால் ஒழுங்கு செய்யப்பட்டது.

Comments