எந்த அரசியல் இலட்சியத்திற்காக கரும்புலிகள் முன்நோக்கி நகர்ந்தார்களோ அந்த இலட்சியப்பாதையில் நாம் தொடர்ந்து செல்வோம்

கரும்புலி மாவீரர் நாளையொட்டி தமிழீழ விடுதலைப்புலிகளின் தலைமைச்செயல இணைப்பாளர் இராமு.சுபன் வெளியிட்ட அறிக்கையில் “எந்த அரசியல் இலட்சியத்திற்காக கரும்புலிகள் முன்நோக்கி நகர்ந்தார்களோ அந்த இலட்சியப்பாதையில் நாம் தொடர்ந்து செல்வோம்” என்று தெரிவித்துள்ளனர்.


தலைமைச் செயலகம்
தமிழீழ விடுதலைப் புலிகள்
தமிழீழம்.
05-07-2010

இன்று கரும்புலிகள் நாள். எமது உரிமை போராட்டத்தினை நசுக்கவும் அடக்கி ஒடுக்கவும் பெரும் எடுப்பில் வந்த பகைவர்களை எல்லாம் தனித்து நின்று தம்மையே அர்ப்பணித்துஇ தகர்த்து சின்னாபின்னமாக்கிய எம் தேசப்புதல்வர்களின் திருநாள்.

கரும்புலிகள் எம் மண்ணின் மீட்பிற்காக தம்மை அர்ப்பணித்த தற்கொடையாளர்கள். எமது போராட்ட இலட்சியத்தின் உறுதியினை எடுத்துக்காட்டும் குறியீடுகள். எமது மக்களின் நியாயபூர்வமான அரசியல் வேட்கையினை அடைவதற்கான தடைகளை அகற்றி முன்னே சென்ற அதிசயப் பிறவிகள்.

எமது அரசியல் இலக்கினை வென்றெடுப்பதற்கான போராட்டத்தின் நம்பிக்கை நட்சத்திரங்களாகவும் பலவீனமான இனத்தின் பலங்களாகவும் எம் மக்களின் உறுதிக்கு உரமாகவும் விளங்கியவர்களே எம் தற்கொடைப் போராளிகள்.

1987 ஜூலை 5 ஆம் நாள் கப்டன் மில்லரினால் தொடக்கி வைக்கப்பட்ட தற்கொடைத் தாக்குதல் 23 வருடங்களாக நூற்றுக்கணக்கான தற்கொடைப் போராளிகளை உருவாக்கியும் அர்ப்பணித்தும் எமது போராட்டத்தினை நகர்த்திச் சென்றுள்ளது.

அன்பார்ந்த மக்களே

எமது இனமும் மொழியும் நிலமும் என்றுமில்லாதவாறு ஆக்கிரமிக்கப்பட்டு அழிக்கப்படும்போது எந்தச் சக்திகளும் அதனைத் தடுத்து நிறுத்த முன்வரவில்லை. எமது இனத்தின் பலவீனங்களையும்இ வளப்பற்றாக்குறையினையும் பயன்படுத்தி முற்றுமுழுதாக எம்மை அழிக்க சிங்கள ஆக்கிரமிப்பாளர்கள் முயன்ற வேளைகளிலெல்லாம் அதை எதிர்கொள்ளும் பலமான ஆயுதமாகவே கரும்புலிகள் செயற்பட்டார்கள்.

ஓர் இனத்தின் அழிவில் தமது நலன்களை நிறைவேற்ற நினைத்த சக்திகளுக்கு எதிராகவும் அந்தச் சக்திகளைப் பயன்படுத்தி எம் மக்களை முற்றாக அழித்து நில ஆக்கிரமிப்பைச் செய்யும் சிங்களப் பேரினவாதத்தைஇ எதிர்கொள்ளும் ஒரு தடுப்பரணாகவே எம் தற்கொடைப் போராளிகள் செயற்பட்டார்கள்.

எம் தற்கொடை போராளிகள் மனித குலத்திற்கு எதிராகவோஇ இன்னோர் இனத்தினை அச்சுறுத்தவோ தம்மை அர்ப்பணிக்கவில்லை. எதிரியின் இராணுவஇ பொருளாதார இலக்குகளைத் தாக்கியழிப்பதே எமது தற்கொடைப் போராளிகளின் நோக்கமாக இருந்தது.

எமது தற்கொடைப் போராளிகள் எம் இனத்தின் மீதான படையெடுப்புக்களைத் தடுத்தார்கள். எம் மண் ஆக்கிரமிக்கப்பட்டபோது அதனைத் தடுத்து நிறுத்தினார்கள். எமது போராட்டம் பேரிடர்களை எதிர்கொண்ட நேரங்களிலெல்லாம் முன்கூட்டியே எதிரியின் இதயப்பகுதியில் இடியாக இறங்கி வரவிருந்த பேரழிவுகளைத் தடுத்தார்கள்.

எம் பலம் சிதைக்கப்படும் போது எம் மக்களும் எம் மண்ணும் எப்படி அழிக்கப்படுவார்கள் என்பதற்கு முள்ளிவாய்க்கால் பேரவலமும் அதன் பின்னரான சிங்களத்தின் திமிர்த்தனமும் மிகப்பெரிய எடுத்துக்காட்டாகும்.

கடந்த 23 ஆண்டுகளாக எம் போராட்டத்தின் பாதுகாப்பரணாக விளங்கிய எம் தற்கொடைப்போராளிகளை இன்று நாம் எம் மனதில் நிறுத்திப் பூசிக்கின்றோம். எம் மாவீர்களினதும் மக்களினதும் தியாகங்கள் இலட்சியத்தை அடையும்வரை எம்மைத் தொடர்ந்து வழிநடத்தும். எந்த அரசியல் இலட்சியத்திற்காக அவர்கள் முன்நோக்கி நகர்ந்தார்களோ அந்த இலட்சியப்பாதையில் நாம் தொடர்ந்து செல்வோம். எம் அரசியல் உரிமைப் போராட்டத்தில் வரும் தடைகளை காலச் சூழலிற்கேற்பஇ உலக ஓட்டத்திற்கு அமைவாக ஒற்றுமையுடன் எதிர்கொண்டு பயணிப்போம்.

நன்றி.

“புலிகளின் தாகம் தமிழீழத் தாயகம்”

இராமு.சுபன்
இணைப்பாளர்
தலைமைச் செயலகம்
தமிழீழ விடுதலைப் புலிகள்
தமிழீழம்.

media@viduthalaipulikal.net
--------------------------------

பிழையான கரும்புலிகள் நாள் அறிக்கை தொடர்பானது

அன்புள்ள ஊடகத்தினருக்கு,

தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைமைச் செயலகம் சார்பில் கரும்புலிகள் நாளுக்குரிய அறிக்கையொன்று ஊடகங்களுக்கு அனுப்பப்பட்டுள்ளதாக அறிகிறோம். சில வலைத்தளங்கள் அவ்வறிக்கையை வெளியிட்டுமுள்ளன. அவ்வறிக்கை விடுதலைப் புலிகளின் தலைமைச் செயகலத்தால் அனுப்பப்படவில்லை என்பதை அறியத் தருகிறோம். வழமையாக எமது அறிக்கைகள் அனுப்பப்படும் மின்னஞ்சல் முகவரியின்றி புதிய மின்னஞ்சல் முகவரியூடாக (viduthalipulikalmediagroup@gmail.com) வந்த இவ்வறிக்கையை வெளியிட வேண்டாமென்று அன்புடன் கேட்டுக் கொள்கிறோம்.

இன்னும் சிறிது நேரத்தில் எமது தலைமைச் செயகலத்தின் கரும்புலிகள் நாளுக்குரிய அறிக்கை தலைமைச் செயலக இணைப்பாளரின் கையொப்பத்துடன் ஊடகங்களுக்கு வெளியிடப்படும். எமது அதிகாரபூர்வ வானொலியான புலிகளின் குரலில் அவ்வறிக்கை ஒலிபரப்பப்படுவதுடன் விடுதலைப்புலிகள் வலைத்தளத்திலும் அது வெளியிடப்படும்.

மக்களிடையே குழப்பங்களைத் தவிர்க்கும் பாரிய பொறுப்பு ஊடகங்களுக்கு உண்டு. எனவே பொறுப்புணர்வோடு ஊடகங்கள் செயற்பட வேண்டுமென அன்புடன் கேட்டுக் கொள்கிறோம்.

நன்றி.

ஊடகப்பிரிவு சார்பாக,

ஆ.அன்பரசன்.

media@viduthalaipulikal.net

------------------------------------------------------

Comments