தேசிய பாதுகாப்பு தடை சட்டம் வெறும் வாய் பேச்சுக்காக போட முடியாது – தியாகு

சீமானை தேசிய பாதுகாப்பு தடை சட்டத்தில் கைது செய்தது தவறு என்று கூறி நமது தரப்பு நியாயங்களை இந்த அறிவுரை கழகத்திற்கு எடுத்து வைத்திருக்கிறோம். அறிவுரை கழகம் என்பது நீதி மன்றம் அல்ல.

நமது தரப்பு நியாயங்களை விசாரித்து அரசுக்கு தேசிய பாதுகாப்பு தடை சட்டத்தில் கைது செய்தது சட்ட திட்டங்களுக்கு உட்பட்டதா இல்லையா என்று பரிந்துரை செய்வார்கள். தவறு என்று கூறி விடுதலை செய்ய சொல்லலாம், அல்லது உத்திரவை செயல் படுத்த சொல்லியும் சொல்லலாம். இதுவே இந்த அறிவுரை கழகத்தின் பொறுப்பு.



2009 ல் சீமானை கைது செய்யும் பொழுதும் இப்பொழுது இருக்கும் இதே மூன்று நீதியரசர்கள் தான் அன்றும் இருந்தார்கள். கடந்த ஆண்டும் இதே போல் தான் நாங்கள் அவர்களிடம் எங்கள் தரப்பு நியாயங்களை எடுத்து கூறினோம் அதற்கு பிறகு உயர் நீதி மன்றம் அவரை விடுதலை செய்தது. அன்று உயர் நீதி மன்றம் என்ன காரணத்திற்காக விடுதலை செய்ததோ அந்த காரணத்தை சரியாக ஆராயாமல் அரசாங்கம் அதே காரணத்தின் அடிப்படையில் இந்த உத்திரவை பிறபித்து கைது செய்திருக்கிறது.

அன்று என்னென்ன குறைகளுக்காக விடுதலை செய்யப்பட்டாரோ, அதே காரணங்கள் இந்த வழக்கிலும் அப்படியே உள்ளன. மேலும் கூடுதல் மாநகர காவல் ஆய்வாளர் தேசிய பாதுகாப்பு சட்டத்தில் சீமானை கைது செய்ய சொல்லி உத்திரவு பிறபித்திருக்கிறார். அவருக்கு தேசிய பாதுகாப்பு சட்டத்தின்படி கைது செய்ய சொல்லும் அதிகாரம் இல்லை. மாநகர காவல் ஆய்வாளர் அல்லது மாவட்ட நீதியரசர் மட்டுமே இந்த உத்திரவை பிறப்பிக்க முடியும். அதற்க்கு ஆதரவாக 1965 ல் பிறபிக்கப்பட்ட உச்ச நீதி மன்ற உத்திரவின் படிவத்தை கொடுத்துள்ளோம்.

தேசிய பாதுகாப்பு தடை சட்டம் வெறும் வாய் பேச்சுக்காக போட முடியாது. ஒருவேளை அவ்வாறு பேசுவதால் ஏதாவது வன்முறை நிகழ்திருந்தால் வேண்டுமானால் பாதுகாப்பு தடை சட்டம் போடலாம். ஆனால் சீமான் பேசியதால் இதுவரை எந்த வன்முறையும் நிகழவில்லை என்ற அடிப்படையிலேயே கடந்த முறையும் விடுதலை செய்தார்கள் அதன் அடிபடையிலேயே இந்த முறையும் விடுதலை செய்ய வேண்டும் என்று வாதிட்டோம் அதற்கு நீதியரசர்கள் சீமான் பேசியதால் கடையை மூடிவிட்டு மக்கள் அச்சமடைந்து ஓடிவிட்டார்கள் என்று அரசாங்கத்தின் தரப்பில் தெரிவித்து இருக்கிறார்களே என்று கேட்டனர். அதற்கு நாங்கள் சீமான் சிங்களவனை பற்றி மட்டும் தானே பேசினார். இதுவரை எந்த சிங்களவனும் பயந்து கடையை மூடிவிட்டு ஓடவில்லையே. எந்த சிங்கள மாணவனும் இதுவரை தாக்கப்படவில்லையே. அருகில் இருந்த நகலகம் கடை வைத்திருப்பவர் கடையை மூடி விட்டு சென்றதை ஒரு காரணமாக சொல்லமுடியாது என்ற வாதத்தை அவர்களும் ஏற்று கொண்டனர். பிறகு இந்திய அமைதி படையை பற்றி பேசியதை பற்றி கேட்டனர். அதற்க்கு சீமான் நாம் பேசியது உண்மைதானே இந்திய அமைதிப்படை ஈழ தமிழர்களை கொன்று குவித்தது உண்மை என்று முதல்வர் கருணாநிதி அவர்களே பேசியிருக்கிறார்களே என்று கூறினார். நானும் ராசீவ் காந்தி கொலை வழக்கை விசாரித்த உச்ச நீதி மன்ற நீதியரசர்கள் இந்திய அமைதி படை தமிழர்களுக்கு இழைத்த கொடுமைகளுக்க்காகதான் அந்த பழி வாங்கும் நடவடிக்கை அமைந்தது என்று உச்ச நீதி மன்ற தீர்ப்பிலேயே கூறியிருக்கிறார்கள் . இதற்காக தேசிய பாதுகாப்பு தடை சட்டம் போட முடியாது என்று வாதிட்டோம். இதை உயர் வழக்காடு மன்றத்தில் தெரிவித்தீர்களா என்று கேட்டனர் தெரிவித்து இருக்கிறோம் என்று சொன்னோம். பிறகு அவர்களிடம் உயர் நீதி மன்ற விசாரணை வரை நீங்கள் தாமதிக்க வேண்டாம் உங்கள் விசாரணையிலேயே நீங்கள் இவரை விடுவிக்க அரசுக்கு பரிந்துரைக்கலாமே என்று கூறினோம்.

அதற்க்கு அவர்களாலும் ஆவன செய்வதாக கூறியிருக்கிறார்கள் என்றார்.

Comments