நாடு கடந்த அரசை களங்கப்படுத்துபவர்கள் யார் ?

கம்பீரமிக்க நாடுகடந்த தமிழீழ அரசை களங்கப்படுத்துபவர்கள் யார்?: கலாநிதி ராம் சிவலிங்கம்[ செவ்வாய்க்கிழமை, 24 ஓகஸ்ட் 2010]
நாடுகடந்த தமிழீழ அரசு, கனடா என்று ஒரு அறிக்கையை சில காலங்களுக்கு முதல் சிவலிங்கம் வெளியிட்டிருந்தார்.


ஆனால் அவரே ஒரு வகையில் அதைச் செய்திருந்தார் நா.க.அ தேர்தலுக்கும் முதல் வாரம்

துரோகி இளையபாரதியின் வானொலியில் அதுவும் ஒரு தமிழ்த்தேசியத்திற்கு எதிரான நிகழ்ச்சியான "எதிர்வினை " யில் பங்கு பற்றியது மட்டுமல்லாமல் 45 நிமிடங்கள் தன்னையும், நாடு கடந்த அரசையும் நாறடித்திருந்தார்.

இதை அவரால் மறுக்கமுடியுமா ?

இவற்றை ஏன் நாம் குறிப்பிடுகின்றோம் என்றால் நாடு கடந்த அரசையும் உருத்திரகுமாரையும் களங்கப்படுத்துவது கறுப்பும் , சேரமான்களும் மட்டும் அல்ல !

உள்ளிருந்து ஆதரவாகப் பிரச்சாரம் செய்கின்றோம் என்று சொல்லிக் கொள்ளும் தனிநபர்களும் , இன்போதமிழ் போன்ற ஊடகங்களும் தான் !

இதில் சிலவற்றை எடுத்துக்கொண்டால்

1]
பரதேசிக்கழகம் நக்கீரன் ஊர் இரண்டு பட்டால் கூத்தாட்டிக்கு கொண்டாட்டம் என்பது போல் தனக்கு எங்காவது மேடை கிடைத்தால் காணும் என்று பழைய சங்கதியில்வன்னி மக்களின் மறுவாழ்வுக்கு கை கொடுங்கள்!-கனடா ஈழமுரசிற்காக நக்கீரன் - மாரடிக்கத் தொடங்கிவிட்டார்.

ஆனால் முன்பு கனடாவில் மேல் மாகாணத்தில் நா.க.அ க்கு 5 உறுப்பினர்கள் பின்கதவால் உள் நுழைந்ததை கடுமையாக விமர்சித்து உருத்திரகுமாருக்கு கடிதம் எழுதியவர் இம்முறை நாடுகடந்த தமிழீழ அரசு பற்றி மக்கள் பெரிய எதிர்பார்ப்போடு இருக்கிறார்கள்-வே.தங்கவேலு(தமிழ்படைப்பாளிகள் கழகம்-கனடா) புகழ் பாடியிருக்கின்றார். எந்த அசம்பாவிதங்களும் நடந்ததாகக் காட்டிக் கொள்ளவில்லை

இது எட்டாப் பழம் புளிக்கும் என்பது போல் TamilNet நடந்து கொள்கிறது என நாம் நினைக்கிறோம்.

என்று ஒரு படி மேல் மாரடித்திருக்கின்றார் நக்கீரன் தங்கவேலு .

நெற்றிக்கண்ணைக் காட்னாலும் குற்றம் குற்றமே... அது திரு. ருத்திரகுமாரனுக்கும் பொருந்தும்!

இந்தப் பச்சோந்தி நக்கீரனுக்கு தகுந்த பதிலடி கொடுத்திருக்கின்றார்கள் மக்கள் பிரதிநிதிகள்

இருக்கும் இடத்திற்கு ஏற்றவாறு கொள்கைகளை மாற்றிக்கொள்ளும் பச்சோந்திகள் தமிழர்களை வழி நடாத்த முற்படுவது தான் அவர்களைச் சார்ந்த அமைப்புக்களை மேலும் சந்தேகிக்க வைக்கின்றது.
2]

இன்போதமிழ் நா.க.அரசுக்கு , உருத்திரகுமாருக்கு ஆதரவாகப் பிரச்சாரம் செய்கின்றோம் என்று சொல்லி அதிகளவில் களங்கப்படுத்துவது இவர்கள் தான்

படங்கள் சொல்லும் செய்தி என்ன ? பகுதியில் நாம் கண்டித்திருந்தோம் அதற்கு ஆதாரம் கீழே


[puthinapalakai.jpg]

இப்படிப் பட்ட பிரச்சாரம் ஒரு போதும் தேவையில்லை அதை செய்தது ஏன் ? அதன் மூலம் களங்கப்படுத்தப்படுவது உருத்திரகுமார், நா.க.அரசு தான் !

மேலும் என் இதயம் மிகவும் வலிக்கின்றது….. ஜெயானந்தமூர்த்தி நா.க.த.அ.-ஜெயசங்கர் முருகையா எழுதிய தாழ்மையான ஒரு அறிக்கையை

இன்போதமிழ் எப்படி மாற்றி விரோதத்தை வளர்க்கின்றது பாருங்கள் !

வெற்றறிக்கை வீரவசனம் பேசும்:"அரசியல்வாதி ஜெயானந்தமூர்த்தி" முதலில் தன் பிள்ளைகளை கரும்புலிகளாக போர்க்களத்திற்கு அனுப்பி வைக்க தயாரா?
[ 12 ஒக்ரோபர் 2010, 08:05.38 பி.ப | இன்போ தமிழ் ]

இந்தக் கேள்வியை திருப்பி உங்களையே கேட்டுப் பாருங்கள்



அதுவும் இந்தப்பெண்களின் படங்களை வேறு தவறாக பாவித்திருக்கின்றது

அது மட்டுமா இது எப்படி இருக்கின்றது ?

சேரமான் கும்பலின் அடாவடித்தனத்தை தோற்கடித்து வெற்றிநடைபோடும் நாடுகடந்த தமிழீழ அரசு [ சனிக்கிழமை, 02 ஒக்ரோபர் 2010, 05:00.07 பி.ப | இன்போ தமிழ் ]




இங்கு
எது சேரமான் ?
எது நாடுகடந்த அரசு ?
எது தமிழ் மக்கள் ?
எது உருத்திரகுமார் ?
எது வெற்றி நடை ?
யார் வழி நடாத்துகின்றார்கள் ?
எங்கு போய்க்கொண்டிருக்கின்றது ?

கழுதை நடை என்பது வெற்றி நடையா ?

இதன் மூலம் நாடு கடந்த அரசைக் கழுதையாக வர்ணித்து பெருமைப் படுகின்றார்களா ?

இனி கழுதை தேய்ந்து கட்டெறும்பாகுமா ? புலியாகுமா ?

அல்லது மறைமுகமாக ஏதோ ஒன்றை தெரிந்தோ தெரியாமலோ விட்டுச்செல்கின்றார்களோ ?

நா.க.அரசியின் பின்னணியில் அமெரிக்காவின் பங்கு என்ன என்பதா ?


சிறிலங்காவின் சிறைகளுக்குள் இருக்கும் எவராலும் தமிழ்த் தேசியத்துக்குப் பங்காற்ற முடியாது என்று உருத்திரகுமார் சொல்லியிருக்கின்றார்

அது போல் சிறையிருப்பவர் புகழ் பாடிக் கொண்டிருக்கும் இன்போதமிழ் தமிழ்த்தேசியம் பேசுவதும் சந்தேகத்தையே ஏற்படுத்தும்

உண்மையிலே அக்கறையிருந்தால் !!

இன்போதமிழ் இதை கவனத்தில் எடுப்பது நல்லது !!

3]
" தொண்டர்கள் " என்னும் போர்வையில் உள்ளவர்கள் குண்டர்களாவும் அடியாட்களாகவும் உருத்திரகுமாருக்கு உறுதுணையாக வலம் வந்து கொண்டிருக்கின்றார்கள்

அவர்களே இரண்டாவது அமர்வில் கொலை மிரட்டலை செய்துமிருக்கின்றார்கள்

அது மட்டும் அல்ல அவர்கள் எல்லோரும் உருத்திரகுமாரின் பிரதமர் என்னும் அதிகாரத்தினால் தெரிவு செய்யப்படும் 20 ஆசனங்களின் மூலம் மீண்டும் உள்வாங்கப்படப் போவதாக சூளுரைத்திருக்கின்றார்கள் !!!

அது மட்டுமல்ல சபாநாயகர் பொன்.பாலா அவர்கள் தமது கட்டுப்பாடில் இருப்பதாகவும், தாமே அவரை விமானத்தில் கொண்டு வந்தோம் என்றும் சொல்கின்றார்களாம்!!!

அந்தக் குண்டர்கள் !!!!
இப்படிப்பட்ட தொண்டர்கள் என்னும் போர்வையில் ஊடுருவியுள்ள புல்லுருவிகளை இனம் கண்டு உருத்திரகுமார் அகற்ற வேண்டும் !

அல்லது அவர்களின் செயற்பாடுகளுக்கு உருத்திரகுமார் பொறுப்பாளியாகி அன்னியப் படுத்தப்படும் நிலை வரும் !

இவற்றின் பின்ணனிகளைப் பார்க்கும் போது இவர்கள் தமிழர்களின் இன்னல்களுக்கு தீர்வு பெற்றுக் கொடுப்பதற்கு முட்டி மோதுவதாகத் தெரியவில்லை

யார் யாரோவின் நிகழ்ச்சி நிரலின் கீழ் இயங்குகின்றார்கள் என்பது போல் தெரிகின்றது

இரண்டாவது நாடு கடந்த அரசு அமர்வு தொடர்பாக இது வரை வந்த அறிக்கைகள் எல்லாம் பக்கச் சார்பை விளக்கியே வந்துள்ளது.

யாரும் மக்களுக்கு உண்மைகளை விளக்கி அடுத்த பக்கத்தினரின் விமர்சனங்களுக்கு பதிலளித்து ஆரோக்கியமான விவாதத்திற்கு கொண்டு செல்ல யாரும் முற்படவில்லை !

ஒருவரை ஒருவர் குறை சொல்லிக் கொண்டிருப்பதிலேயே இருக்கின்றார்கள் !

ஆக்கபூர்வமாக விவாதிக்கவோ ,விளக்கவோ முன்வரவில்லை !

இதன் மூலம் எதைச் சாதிக்க முயலுகின்றார்கள் ?

மீண்டும் விரோதம், பகைமையை தீவிரமாக்குகின்றார்கள் ?

முகமில்லாத கறுப்புக்கும், சேரமானுக்கும் உடனுக்குடன் பதிலளித்து வந்த உருத்திரகுமார் மக்களால் தெரிவு செய்யப்பட்ட நாடு கடந்த அரசின் பிரதிநிதிகளின் எதிரும் புதிருமான அறிக்கைகளுக்கு எந்தப் பதிலும் நேரடியாகவோ அறிக்கையாகவோ அளிக்கவில்லை , முன்வரவும் இல்லை !!!

இந்தப் பிரசாரப் பீரங்கிகளை நிறுத்த வேண்டும் அதற்கு உருத்திரகுமார் பகிரங்க அறிக்கை விடவேண்டும் !

இரு சாராருக்கும் இல்லாமல் பொதுவான தனித்து ப்போட்டியிட்டு சபாநாயகராக இருக்கும் பொன்.பாலா போன்றவர்கள் மூலமாகவாது ஒரு அறிக்கை வெளியிடப்பட வேண்டும்

அல்லது

நாடு கடந்த அரசு தனக்கென உத்தியோக பூர்வமாக ஒரு இணையத்தை ,ஊடகத்தை ஆரம்பித்து அதன் மூலமே மக்களுக்கு அறிவுறுத்த வேண்டும் !

அல்லாது போனால் இது போன்ற தனிமனித பக்கச்சார்பான ஊடகங்களினால் நாடு கடந்த அரசு நாறடிக்கப் பட்டு மக்களிடமிருந்து அன்னியப்பட்டுப் போகும் நாள் வெகு தொலைவில் இல்லை

தவிரவும்

நாடு கடந்த அரசு ஒரு சூழ்ச்சி என்று பார்த்தால்

மக்களவை , பேரவை, உலகத்தமிழர் பேரவை என்று பல அமைப்புக்கள் பல ஆயிரம் இருந்தும் என்ன பயன் அவை என்ன செய்து கொண்டிருக்கின்றன ?

என்ன நடக்கின்றது ? என்று நையாண்டி செய்தது சரியாகி விட்டது

எல்லாம் உறைநிலையில் இருக்கின்றன ஏட்டிக்கு போட்டியாக உருவானவை போல் தான் தோன்றுகின்றது அப்படி ஒன்று இருக்கின்றதா என்று கேட்டும் நிலைக்கு அவை சென்று விட்டன.

ஆகவே செய்பவர்களை செய்ய விடுவோம் !

மக்கள் விழிப்பாக இருக்கும் வரை யாராலும் விடுதலைத் தணலை அணைக்க முடியாது !

தேசியத் தலைவர் நீண்ட ஒரு மெளனத்தை விட்டுச் சென்றிருக்கின்றார் அதற்கு ஆயிரம் அர்த்தங்கள் இருக்கும்


அந்த சுட்டு விரல் காட்டும் திசையில் பயணிப்பதற்கு காத்திருப்போம் !

புலிகள் கொஞ்சம் பதுங்கும் போது நரிகள் கூட்டம் போடும் ஆட்டமே ரிகள் வேசம் கலையும் போது புலிகள் வென்று காட்டுமே

புலிகள்
மீண்டும் வரும் போது நரிகள் எல்லாம் ஓடி ஒழியும் காணொளி பாடல்



நாடு கடந்த அரசு தமிழீழத் தணலை அணைக்கப்போகின்றதா ? இல்லையா என்பதை காலம் பதில் சொல்லட்டும் !!


அது வரை பொறுத்திருப்போம் ! உதவி செய்யாவிட்டாலும் உபத்திரமாவது செய்யாமல் இருப்போம் !



எதையும் உறுதிப்படுத்தவோ உறுதியாகவோ கூற முடியவில்லை !

இப்படிப்பட்ட வெறுமையைத் தொடர நாம் விரும்பவில்லை !

அதனால் தற்காலிகமாக ஒதுங்கிக் கொள்ளுகின்றோம் !


மீண்டும் சுட்டு விரல் காட்டும் திசையிலிருந்து தொடருவோம்.

தமிழ்த்தேசியம் , சுத்துமாத்துக்கள் இனிவரும் காலங்களில் புதுப்பிக்க படமாட்டாது என்பதை அறியத்தருகின்றோம். ஈழமறவர் இணையங்கள் வழமை போல் இயங்கும்.

இது வரை ஆதரவு நல்கிய அனைத்து நெஞ்சங்களுக்கும் நன்றிகள்


அன்புடன்,

எல்லாளன்

Comments