விஜய் நம்பியாரும் போர்குற்ற வழக்கில் சிக்கினார் ?



இரட்டைப் பிரஜா உரிமை கொண்ட பாலித கோஹனவுக்கு எதிராக சர்வதேச குற்றவியல் நீதிமன்றில் வழக்குத் தொடுக்கப்பட்டுள்ள நிலையில், புலிகளின் அரசியல் தலைவர்களோடு பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு அவர்கள் கொலைக்கு காரணமாக இருந்த மற்றும் ஒரு நபர் விஜய் நம்பியார் ஆவார். இந்தியரான இவர் பான் கீ மூனின் பிரத்தியேகச் செயலாளரும் ஆவார். இவர் மீதும் தற்போது சர்வதேச குற்றவியல் நீதி மன்றில் வழக்குத் தொடுக்கப்பட்டுள்ளதாக இன்ரர் சிட்டிப் பிரஸ் தெரிவித்துள்ளது. இவ்வழக்கைத் தொடுத்துள்ள வாதிகளோடு அதிர்வு இணையம் தொடர்புகொண்டபோது, அவர்கள் அதனை உறுதிசெய்தும் உள்ளனர்.

இறுதிக்கட்டப் போர் நடந்தவேளை, புலிகளின் அரசியல் தலைவர்கள் 300 காயப்பட்ட போராளிகள், குழந்தைகள், மற்றும் பெண்களோடு சரணடைந்திருந்தனர். அதில் நடேசன் உட்பட, புலித்தேவன் ரமேஷ் போன்றோர் இராணுவத்தால் சுட்டுக்கொல்லப்பட்டனர். அத்தோடு காயம் அடைந்த 300 போராளிகளுக்கும் என்ன ஆனது என்று தெரியவில்லை. அவர்களும் கொல்லப்பட்டே இருக்கவேண்டும் என பலர் தெரிவித்துவருகின்றனர். இந் நிலையில் புலிகள் இயக்கத்தோடு பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு, சரணடையும் அரசியல் தலைவர்களின் உயிருக்கு உத்தரவாதம் கொடுத்தவர் விஜய் நம்பியார். ஆனால் அது காப்பாற்றப்படவில்லை. மாறாக அனைவரும் இறந்துள்ளனர் என்பதும் இங்கே குறிப்பிடத்தக்கது.

Comments