பான் கீ மூன்...! ஒரு காலி பெருங்காய டப்பா..?! சர்வதேச மன்னிப்புச் சபை குற்றச்சாட்டு...? என்னத்த தீவிரமா செயல்படுறது....

இலங்கை விவகாரத்தில் ஐ.நா. உரிய கவனம் செலுத்தவில்லை.சர்வதேச மன்னிப்புச் சபை குற்றச்சாட்டு.தீவிரமாக செயலாற்றவும் கோரிக்கை..! இலங்கையில் இடம் பெற்றுள்ளதாகக் கூறப்படும் ( ஓகோ...! போர்க்குற்றம் இடம் பெற்றதாக கூற்று..? ) யுத்தக் குற்றச்சாட்டுக்கள் மற்றும் அண்மைக் காலங்களில் இடம்பெற்றுள்ள பல்வேறு மனித உரிமை மீறல்கள் தொடர்பில் உரிய கவனத்தை ஐக்கிய நாடுகள் சபை செலுத்தவில்லை என்று சர்வதேச மன்னிப்புச் சபை குற்றம் சுமத்தியுள்ளது. இலங்கையில் இடம் பெற்றுள்ள மனித உரிமை மீறல்கள் தொடர்பிலான நடவடிக்கைகள் சட்டத்தின் பிடியிலிருந்து நழுவிச் செல்லும் போக்குக்கு முற்றுப்புள்ளி வைக்க ஐ.நா. இன்னும் தீவிரமாக செயலாற்ற வேண்டும் எனவும் சர்வதேச மன்னிப்புச் சபை கேட்டுக் கொண்டுள்ளது. என்று ஒரு மொட்டையான செய்தி தான் இது.


ஒருவேளை ஜெனிவாவில் நடைபெறும் அயிக்கிய நாடுகளின் சபையின் 25 வது மனித உரிமைகள் பேரவையின் அமர்வுகளின் போது இந்தக் கருத்துக்களை கூறி இருக்கலாம். யார் கண்டது. சரி மொட்டையான செய்தியாகவே இருக்கட்டும் வழக்கம் போல நமது கருத்துக்களையும் பதிவு செய்வோம். கைவிரலும் கீ போர்டும் தானே... வேறு என்ன பெரிய செலவு...?

பாவம் இந்த ஐ.நா.சபையும் மனித உரிமை ஆணைக்குழுவும்..! தங்களுக்கு வானளாவிய அதிகாரம் உள்ளது போலவும் இவர்கள் ஒரு விசயத்தைப் பற்றி கருத்து கூறிவிட்டால் அல்லது போகட்டுமே. சற்றுக் கூடுதலாக சொல்லுவோம், ஒரு நாட்டைப் பற்றி காட்டமாக அறிக்கை விட்டால் எல்லாம் சரியாகப் போய் விடும் என்று சர்கஸ் கோமாளிகள் போல பெரும் வேசங்களை போடுகிறார்கள். வேஷம் மற்றும் அரிதாரங்களை கலைத்து விட்டு, யாரை எதிர்த்து கடும் அறிக்கை விட்டார்களோ அவர்களோடு அவர்களின் பிரதிநிதிகளோடு உட்கார்ந்து மாற்று ஆலோசனையும் விருந்துகளும் உண்டு மகிழ்ந்து அடுத்த சுற்றுக்கு தாவி விடுவார்கள்.

எந்த நாட்டிற்கு எதிராக கோமாளி வேஷம் போட்டார்களோ அந்த நாட்டு சோணகிரி மக்கள் ஒரு மாத காலத்திற்கு பாவம் இவர்களின் கூற்றுக்களை நம்பி, நாம் ஏதோ பெரும் வெற்றி பெற்று விட்டதாக அல்லது தனக்கு நீதி கிடைத்து விட்டதாகவும், குற்றவாளிக்கு தண்டனை கிடைத்து விட்டதாகவும் மகிழ்ச்சியும் நிம்மதியும் அடைந்து விடும். இந்த சோணகிரி மக்களுக்கு இது போதும் என்றே இதுகாறும் இயங்கி செயல்பட்டுக் கொண்டே வருகிறது ஐ.நா.வும் மனித உரிமை ஆணைக்குழுவும். தென்சூடான் முதல் துனியாவில் இருந்து இன்று லிபியாவில் நடைபெறும் மக்கள் எழுச்சியைக் கண்டு மிகவும் அஞ்சி நடுநடுங்கி கொண்டிருக்கிறது இந்த ஐ.நா.வும்., மனித உரிமை ஆணை குழுவும்.

இன்னும் ஏராளமாக இருக்கும் அந்தக் குழு இந்தக் குழு என்று பொம்மலாட்ட கோஷ்டிகள், குளீர் ஊட்டப்பட்ட அறைகளில் உட்கார்ந்து கொண்டும், பல்வேறு நாடுகளில் சுற்றுப் பயணம் செல்வது, இந்த உறுப்பினர்கள் தங்களின் நாடுகளில் பெரிய அளவில் தம்பட்டம் அடித்துக் கொள்வது. நாங்கள் எல்லாம் பெரிய மனிதர்கள் என்று பீற்றிக் கொள்வது, வாய்ப்பு கிடைத்தால் பணத்தை சுருட்டிக் கொள்வது. பல்வேறு நாடுகளின் தலைவர்களுடன் அதாவது மகிந்தா போன்ற தலைவர்களுடன் நெருக்கமாக இருப்பது, தேவைப்படும் எனில் தங்களது அதிகாரங்களை காட்டி அகமகிழ்வது..இன்னும் தேவைப்பட்டால் குடும்ப உறவுகளை உருவாக்கிக் கொள்வது..நாம் ஆதராப் பூர்வமாகவே சொல்லுகிறோம்.. இல்லையென்றால் எப்படி பான் கீ மூனுக்கு இந்திய மாப்பிள்ளை கிடைத்திருப்பார்..? சரியாக விசாரிக்க வேண்டும். ஒருவேளை அந்த மாப்பிள்ளையும் கொலையாளி மலையாளியாக இருக்கப் போகிறார்.

ஐ.நா.மற்றும் இன்ன பிற கோமாளிக் குழுக்களில் அதாவது இந்த பெருந்தீனி கூட்டத்திற்கு எப்பொழுதுமே ஆளாய்ப் பறப்பார்கள், பொதுவில் மனித உரிமைகளை மீறும் நாடுகள். தங்களது நாடுகளின் பிரதிநிதிகளை எப்படியாவது எந்த ஒரு விதத்திலாவது அதில் உறுப்பினராக்கி விடுவதற்கு. மற்றைய மேலைய நாடுகளுக்கு இந்த தேவை கிடையாது. இப்படியாகத் தான் இந்திய அரசு தனது எல்லா ஐ.நா. மற்றும் பிற சர்கஸ் கூடாரங்களுக்கு ஆட்களை ஏற்றுமதியும் இறக்குமதியும் செய்து கொண்டு இருக்கிறது. இந்நிலையில் பார்ப்பனிய பனியா கும்பலின் அரசு, என்ன... சும்மா டம்மி பீசாக இறக்கிக் கொண்டும் ஏற்றிக் கொண்டும்...ஏன் நாமே ஐ.நா. பொதுச் செயலர் ஆக்கி விட்டால் என்ன என்று தேர்ந்து எடுத்தார்கள் சசி தரூரை. அவரும் தங்களிடம் என்னென்ன தகுதிகளை எதிர்ப்பார்க்கிறதோ காங்கிரஸ் பெருச்சாளிகள் அரசு அனைத்தும் பெற்றவராக இருந்தார். என்றாலும் காங்கிரஸ் பெருச்சாளிகளின் விருப்பம் நிறைவேறவில்லை.

எதற்கு இதையெல்லாம் சொல்கிறோம் என்றால், சர்வதேச மன்னிப்புச் சபை தீவிரமாக செயல்பட வேண்டும். போர்க் குற்ற தொடர்பில் என்றும் ஐ.நா.விற்கு கண்டிப்பு என்றும் செய்தி வந்தால் என்ன செய்வது...? அனைவரையும் சோணகிரிகள் ஏமாந்த இளிச்சவாயர்கள் என்று கருதினால் என்ன செய்வது. எனவே இந்த எதிர்வினை. அவ்வளவுதான்.

சங்கிலிக்கருப்பு .
ஈழதேசம்...!

Comments