முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் வாரம் நிகழ்வுகள் இன்று ஆரம்பம்

வரலாற்றுப் பெரும் துயராக உலகத் தமிழர் நெஞ்சங்களில் உறைந்துள்ள முள்ளிவாய்க்கால் பேரவலத்தின் நினைவேந்தல் வார் நிகழ்வுகள் .இன்று ஆரம்பமாகின்றன


http://www.sangathie.com/uploads/images/2011/05/020511%20006.jpg


மே 12 வியாழக்கிழமை முதல் மே 18 வரையிலான காலப்பகுதியை நினைவேந்தல் வாரமாக நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் பிரகடனப்படுத்தியிருந்தது.

சிறிலங்கா அரசினது திட்டமிட்ட இனக்கருவறுப்பு யுத்தத்துக்கு இரையாகிய உறவுகளை நெஞ்சில் இருத்தி சுடர் ஏற்றப்பட்டு மலர் வணக்கம் செய்யப்படும்.

நினைவேந்தல் வாரம் முழுவதும் தமிழ்மக்கள் கறுப்பு பட்டியணிந்து சிறிலங்கா அரசின் தமிழின அழிப்பை குறியீட்டுரீதியாக வெளிப்படுத்துமாறு கோரப்பட்டிருப்பதோடு - தமிழ் வர்த்தக நிலையங்கள் பொது இடங்களில் கறுப்பு கொடியினை கட்டி வாரத்தை கடைப்பிடிக்குமாறும் நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தினால் கோரப்பட்டுள்ளது.

நினைவேந்தல் வார இன்றைய (முதல்நாள்) பிரதான நிகழ்வுகளின் விபரங்கள் :

பிரான்சு:

இடம்: பாரிஸ் லாசப்பல் THEATREக்கு முன்னால் நேரம்: மாலை 18மணிக்கு

ஜேர்மனி:

இடம்: Neu Stadt, Commerce Bankக்கு முன்னால் நேரம் : காலை 10 மணிமுதல் மாலை 18மணி வரை

சுவிஸ்:

இடம்: பேர்ண் தொடருந்து நிலையத்துக்கு முன்பாக

பிரித்தானியா: இடம் : 446 Rayners lane, Harrow நேரம் : மாலை 18மணிக்கு

கனடா:

இடம்: Scarborough: Sangamam Banquet Hall 42 Tuxedo Court Sacrborough.
Markham: Markham Civic Center.
Mississauga: Yarl Coorperative Homes 2584 Rugby Rd, Mississauga, ON L5B 4B4
Brampton: Professors Lake Recreation Centre 1660 North Park Dr, Brampton, ON L6S 4B

நினைவு நிகழ்வுகள் - கவனயீர்ப்பு பரப்புரைகள் - கண்காட்சிகள் - சர்வமத வழிபாடுகள் - கருத்தரங்குகள் - இரத்தானம் - உறுப்புதானம் என பலவகையிலும் நினைவேந்தல் வாரம் கடைப்பிடிக்கப்படவுள்ளது.

மே-18ம் திகதி நியூ யோர்க் மற்றும் ஜெனீவாவில் உள்ள ஐ.நாவுக்கு முன்னால் மாபெரும் ஒன்றுகூடல் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.

முள்ளிவாயக்காலின் பின்னர் இயல்பாக தோற்றம் பெற்ற குழப்பங்கள் - அவநம்பிக்கைகளை கடந்து நம்பிக்கையும் விடுதலையை வென்றெடுக்க அனைவரையும் அணிதிரளுமாறு கேட்கப்பட்டுள்ளது.

Comments