கொலைக்களம்' சனல்-4 காணொளி ஒரு இந்திய கொலை வெறியனின் கண்ணோட்டம்

கொலைவெறியன் பீஈ இராமனின் பார்ப்பன, லங்கா விசுவாசத்தை கொலை வெறியை புதினப்பலகை மொழிபெயர்த்து யாருக்கு காட்டுகின்றது இந்தக் கண்ணோட்டம் காணொளியை விட விஞ்சிய கொலைவெறியாக இருக்கின்றது

இதை மொழிபெயர்த்து எதனைச் சாதிக்க முயலுகின்றார்கள் என்று தெரியவில்லை

பீஈ இராமனின் கொலைவெறியை, இந்தியா- லங்காவைக் காப்பாற்றுவதற்கு கலங்குவதைக் கண்டிக்கவோ ,விவாதிக்கவோ வண்ணமதிக்கு அறிவில்லையா அல்லது உணர்வில்லையா ?

செக்கு மாடு போல் மொழிபெயர்த்துப் போடுவதை விடுத்து சிந்தித்தால் நல்லது

பல ஆய்வாளர்களுடைய ஆய்வுகளை புதினப்பலகை மொழிபெயர்த்து வெளியிடுகின்றது அதில் விவாதிக்கப் படவேண்டியவை விலக்கப்படவேண்டியாவை எது என்று கூடத் தெரியாமலா இருக்கின்றார்கள்

[This predator is Additional Secretary (retd), Cabinet Secretariat, Govt. of India, New Delhi, and, presently, Director, Institute For Topical Studies, Chennai, and Associate of the Chennai Centre For China Studies.]

இனி அந்த கொலைகண்ணோட்டம்


ஸ்ரீலங்கா படைகளுடன் கூட்டிணைந்து இன அழிப்பில் ஈடுபட்ட இந்தியப்படைகள்!

https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjZre-g9S3rrbd2oS2O8RqdSnehnhSdWidgCn7DOTAyuFYot7l0xbezrDUJUn4tgMvgK7IO0cOI7me8Fhx6qBY2qTwVEBwegZkpqx7zqGzI_TAqh86Sjc7cPkdDQ9OKcuTAQvr274WENJrY/s1600/indian+army-vannai.jpg'சிறிலங்காவின் கொலைக்களம்' சனல்-4 காணொலி: ஓர் இந்தியக் கண்ணோட்டம் [ சனிக்கிழமை, 18 யூன் 2011, 11:40 GMT ] [ தி.வண்ணமதி ] விடுதலைப் புலிகளின் தலைமையினை இல்லாதொழித்தல் என்ற அம்சத்திற்கு சரியாகத் சிந்திக்கும், பயங்கரவாத்தினை எதிர்க்கும் எவரும் ஒரு துளி கண்ணீரேனும் சிந்தத் தயாராக இருக்கவில்லை என்பது வேறுகதை.

இவ்வாறு இந்திய ஆய்வாளரான பி.இராமன் 'Sri Lankan Tamils: A Disconcerting Situation for India 'என்னும் தலைப்பில் எழுதிய தனது ஆய்வில் குறிப்பிட்டுள்ளார். அவரது இந்த ஆய்வை 'புதினப்பலகை'க்காக [www.puthinappalakai.com] மொழியாக்கம் செய்தவர் தி.வண்ணமதி.

பிரித்தானியாவின் சனல்-4 தொலைக்காட்சியில் ஒளிபரப்பான 'சிறிலங்காவின் கொலைக்களம்' என்ற குழப்பத்தினைத் தருகின்ற ஆவணப்படம் தொடர்பாக எனது கவனம் திரும்பியிருக்கிறது.

02. ஏப்பிரல் 2009 தொடக்கம் மே 2009 வரையிலான காலப்பகுதியில் சிறிலங்கா அரச படையினர் விடுதலைப் புலிகளமைப்பினை இல்லாதொழிக்கும் நோக்கில் மேற்கொண்ட இறுதிப் போரின் இரத்தம் தோய்ந்த முடிவினை இந்த ஆவணப்படம் கவனத்திற்குக் கொண்டுவந்திருக்கிறது.

விடுதலைப் புலிகளின் தலைமையினை இல்லாதொழிப்பதற்கான இந்த இறுதிப்போரில் படுகொலைகள், பொதுமக்கள் மீதான எறிகணைத் தாக்குதல்கள் மற்றும் மோசமான அட்டூழியங்களை அரசபடையினரும் புரிந்திருக்கிறார்கள் என இந்த ஆவணப்படம் குற்றம் சுமத்துகிறது.

விடுதலைப் புலிகளின் தலைமையினை இல்லாதொழித்தல் என்ற அம்சத்திற்கு சரியாகத் சிந்திக்கும், பயங்கரவாத்தினை எதிர்க்கும் எவரும் ஒரு துளி கண்ணீரேனும் சிந்தத் தயாராக இருக்கவில்லை என்பது வேறுகதை.

http://bit.ly/mDpkez என்ற இணைப்பில் குறிப்பிட்ட இந்த ஆவணப்படத்தினைப் பார்வையிடமுடியும்.

03. போரின் இறுதிக் கட்டத்தில் பிரபாகரனின் தலைமையிலான விடுதலைப் புலிகள் அமைப்பு தன்னைப் பாதுகாக்கும் இறுதி முயற்சியாக பொதுமக்களுக்கு மத்தியில் புகுந்து தஞ்சம் புகுந்து கொண்டமையினால் சிறிலங்காப் படையினர் பெரும் குழப்ப நிலைக்குத் தள்ளப்பட்டார்கள்.

சிறிலங்கா அரச படையினர் மீது அழுத்தத்தினைப் பிரயோகிப்பதற்கு விடுதலைப் புலிகளுக்குக் கிடைத்த சந்தர்ப்பம் இதுவல்ல. விடுதலைப் புலிகளின் தலைமையினைப் பாதுகாக்கும் நோக்கில், பொதுமக்களுக்கு அதிக இழப்புக்கள் ஏற்பட வழிசெய்வதன் ஊடாக அனைத்துலக சமூகம் தலையிடும் நிலைமையினைத் தோற்றுவிப்பதுதான் பிரபாகரன் ஏலவே திட்டமிட்ட இந்த உபாயம்.

04. விடுதலைப் புலிகளின் தலைமை இல்லாதொழிக்கப்பட்டதுடன் அந்த அமைப்பும் நிலைகுலைந்துவிட சிறிலங்கா இராணுவத்தின்படை நடவடிக்கை முடிவுக்கு வந்தது.

இந்த நிலையில் அனைத்துலக மனிதாபிமான நிறுவனங்கள், மனிதாபிமானப் பணியாளர்கள், மேற்கு நாடுகளின் அரசாங்கங்கள், ஐ.நா அமைப்புகள் என்ற சிறிலங்கா மீது குற்றம் சுமத்தினர்.

விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டுப் பகுதிகளில் வசித்துவந்த பொதுமக்களுக்கு எதிராக பெருமெடுப்பிலமைந்த மனித உரிமை மீறல்கள் இடம்பெற்றமைக்கு சிறிலங்கா அரச படையினரும் பொறுப்பு என இவர்கள் குற்றம் சாட்டினார்கள்.

மேற்குறித்த இந்த தரப்புகள் அனைத்தும் சிறிலங்காவிற்கு எதிரான தத்தமது குற்றச்சாட்டுக்களைத் தனித்தனியாக முன்வைத்திருந்தன. இவர்கள் மத்தியில் ஒருங்கிணைந்த செயற்பாடு எதுவும் காணப்படவில்லை.

05. இரண்டு வகையான வன்முறைகள் இடம்பெற்றதாகக் குற்றம் சுமத்தப்படுகிறது. முதலாவதாக, விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரன் உள்ளிட்ட அமைப்பினது மூத்த தலைவர்கள் சரணடைவதற்கு விரும்பியிருக்கிறார்கள். ஆனால் அதற்குப் பொருத்தமான வாய்ப்புகள் ஏதும் வழங்கப்படாது அவர்கள் அனைவரும் இல்லாதொழிக்கப்பட்டிருக்கிறார்கள்.

இரண்டாவதாக, தாங்கள் பயன்படுத்தும் ஆயுதம் பொதுமக்களைக் கொல்லும் என நன்கு அறிந்த நிலையிலும் சிறிலங்கா அரச படையினர் இலகுரக, நடுத்தர மற்றும் கனரக தூரவீச்சுக்கொண்ட ஆயுதங்களை எதுவித கட்டுப்பாடுகளுமின்றிப் பயன்படுத்தியிருக்கிறார்கள். பொதுமக்களைப் பாதுகாப்பதென்பது விடுதலைப் புலிகளதோ அன்றி சிறிலங்கா அரச படையினரதோ நோக்கமாக இருக்கவில்லை.

06. போரின் இறுதி நாட்களில் உண்மையில் இடம்பெற்றது என்ன என்பதைக் கண்டறியும் வகையில் ஐ.நாவின் கண்காணிப்பின் கீழ் சுதந்திரமான விசாரணைகள் முன்னெடுக்கப்படவேண்டும் என்ற கோரிக்கையும் இந்தக் குற்றச்சாட்டுகளுடன் இணைத்து முன்வைக்கப்பட்டன.

குற்றமிழைத்தவர்கள் யாராக இருந்தாலும் அவர்களுக்கு எதிரான சட்ட நடவடிக்கைகள் எடுக்கப்படவேண்டும் என்றும் இந்தச் செயற்பாடுகள் அனைத்தும் அனைத்துலக சமூகத்திற்குத் திருப்தியளிக்கக்கூடியதாக இருக்கவேண்டும் என்றும் வாதிடப்பட்டது. இடம்பெற்றதாகக் கூறுப்படும் குற்றங்களில் சில மனித குலத்திற்கு எதிரான குற்றங்கள் என்றும் போர்க் குற்றங்கள் என்றும் குற்றம் சுமத்தப்படுகிறது.

07. அதிபர் மகிந்த ராஜபக்சவின் தலைமையிலான சிறிலங்கா அரசாங்கம் இந்தக் குற்றச்சாட்டுக்களை தொடர்ந்தும் மறுத்துவருகிறது. சிறிய அளவிலான ஒரு சில குற்றங்கள் இடம்பெற்றிருப்பதற்காக வாய்ப்புகள் இருப்பதாக ஏற்றுக்கொள்ளும் சிறிலங்கா அரசாங்கம் அதனைக் கண்டறியும் வகையில் தாங்கள் விசாரணைகளை முடுக்கிவிட்டிருப்பதாகவும் அனைத்துலக சமூகம் தலையிடவேண்டிய நிலைமையினை தோற்றுவிக்கும் வகையில் பாரதூரமான சம்பவங்கள் எதுவுமே இடம்பெறவில்லை என்றும் இவர்கள் கூறுகிறார்கள்.

08. விடுதலைப் புலிகளுக்கு எதிரான இந்தப் போரில் பங்கெடுத்த பாதுகாப்புப் படையினர் பலர் மனித உரிமை மீறல்கள் ஏதும் இடம்பெறாமல் தவிர்ப்பதற்கு முனைந்தபோதும் இந்தப் போரில் மனித உரிமை மீறல்கள் பரவலாக இடம்பெற்றிருப்பது துரதிஸ்ரவசமானது.

அனைத்துலக சமூகம் தலையீட்டினை மேற்கொள்வதற்கு வழிசெய்யும் வகையில் மனித உரிமைகள் மீறப்படும் ஒரு சூழமைவினை ஏற்படுத்துவதற்கு பயங்கரவாத மற்றும் கிளர்ச்சிசார் அமைப்புகள் தங்களை நன்கு பயிற்றுவித்திருக்கின்றன.

09. தனது மக்களின் உரிமைகள் தொடர்பில் சரியான தெளிவுடன் செயற்படும் நாகரிகமடைந்த, பொறுப்புள்ள ஒரு அரசாங்கத்திற்கும் கிளர்ச்சிகளுகு எதிரான நடவடிக்கைகளின்போது மனித உரிமையின் பரிமாணம் தொடர்பில் எள்ளளவும் கருத்திலெடுக்காது செயற்படும் பிறிதொரு அரசாங்கத்திற்கும் இடையில் பாரிய வேறுபாடு காணப்படும்.

நாகரிகமடைந்த, பொறுப்புள்ளதொரு அரசாங்கத்தினைப் பொறுத்தவரையில் அது தனக்கு எதிராக முன்வைக்கப்படும் மனிதஉரிமைகள்சார் குற்றச்சாட்டுக்களை நிராகரிப்பதை விடுத்து அவற்றை பொறுப்புடன் விசாரிப்பதோடு விசாரணை முடிவுகளுக்கு அமைய தேவையான நடவடிக்கைகளை எடுக்கும்.

10. இதுபோன்ற செயற்பாட்டினைத் தான் முன்னெடுப்பதாக சிறிலங்கா அரசாங்கம் உறுதியளித்திருந்தது. சிறிலங்காவினது தமிழர்களுக்கு இவர்கள் நீதியினைப் பெற்றுக்கொடுப்பார்கள் என நம்பமுடியுமா அல்லது ஐ.நாவின் கண்காணிப்பின் கீழ் முறையான விசாரணைகளை முன்னெடுப்பதற்காக அனைத்துலகக் கட்டமைப்பு ஒன்று உருவாக்கப்படவேண்டுமா?

11. மோசமான குற்றங்கள் இடம்பெற்றிருப்பது வெளிப்படையாகவே தெரிகின்றபோது, தற்போது வரை கிடைக்கப்பெற்றிருக்கும் ஆதாரங்களை நோக்கும் போது அவை அதிபர் ராஜபக்ச அரசாங்கம் போர்க் குற்றங்களிலும் மனித குலத்திற்கு எதிரான குற்றங்களிலும் ஈடுபட்டது என்ற குற்றச்சாட்டுக்களை ஏற்றுக்கொள்வதற்குப் போதுமானதாக இல்லை.

12. சிறிலங்காவினது தமிழர்களுக்குச் நீதியான, நியாயமான உரிமைகள் கிடைக்கப்பெறவேண்டும் என்ற எங்களது மிகையான ஆவல் மற்றும் அனுதாபம் ஆகியவற்றின் விளைவாக நாங்கள் அனைத்துலக விசாரணைகள் மேற்கொள்ளப்படவேண்டும் என்பதற்கு ஆதரவான அல்லது எதிரான வாதங்களை மிகைப்படுத்திவிடக்கூடாது.

சிறிலங்காவில் இடம்பெற்றது எதுவோ அதற்கு எதிரான அனைத்துலக விசாரணைகள் முன்னெடுக்கப்படவேண்டும் என புலம்பெயர் நாடுகளில் வாழும் இலங்கைத் தமிழர்கள் வலியுறுத்திவருகிறார்கள். வெளிநாட்டு அரசாங்கங்கள் மற்றும் இந்தியா உள்ளிட்ட நாடுகளில் வாழும் பத்திரிகையாளர்கள் உட்பட்ட அரச சார்பற்ற தனிநபர்கள் குறித்த இந்த ஆவணப்படத்தினால் திரட்டப்பட்ட ஆதாரங்களுக்கு ஆதரவளிக்கவேண்டும் என்றும் அனைத்துலக விசாரணைகள் இடம்பெறவேண்டும் என்ற வாதத்தினை வலுப்படுத்தவேண்டும் என்றும் இந்த புலம்பெயர் தமிழர்கள் கோருகிறார்கள்.

13. சனல் -4 ஆவணப்படத்தினால் முன்வைக்கப்பட்டிருக்கும் ஆதாரங்கள் தொடர்பில் இந்திய அரசாங்கம் தீவிர கவனம் செலுத்தவேண்டியது கட்டாயம். சிறிலங்காவிற்கும் இந்தியாவிற்கும் இடையிலான உத்தியோகபூர்வ இருதரப்புச் சந்திப்புகளின்போது இந்த ஆவணப்படம் தொடர்பாக ஆராயவேண்டுமா என்பதை அறியும் வகையில் எங்களது சட்ட மற்றும் மனிதாபிமான வல்லுநர்களின் துணையுடன் இந்த ஆவணப்படத்தினை ஆராயவேண்டும். இருதரப்பு மட்டத்திற்கு இந்த விடயம் கொண்டுசெல்லப்படவேண்டுமெனில் எத்தகைய நிலைப்பாட்டினை அல்லது குறிக்கோளினை எடுக்கவேண்டும் என்றும் தீர்மானிக்கப்படவேண்டும்.

14. இந்தச் சம்பவங்களின்போது பாதிக்கப்பட்டவர்களது உறவினர்களுக்கு நீதி கிடைப்பதும் பாதிக்கப்பட்டவர்கள் இறந்துவிட்டாலும் கூட அவர்கள் மதிப்பளிக்கப்படுவதையும் இந்தக் குறிக்கோள் உறுதிப்படுத்தவேண்டும். சிறிலங்கா அரசாங்கத்திற்கு அடிகொடுப்பதற்கானதொரு ஆயுதமாக இந்த ஆவணப்படம் பயன்படுத்தப்படக்கூடாது.

15. மகிந்த ராஜபக்ச அரசாங்கமானது குறித்த இந்த ஆவணப்படத்தினை கரிசனையுடனும் கவனத்துடனும் பார்க்குமெனில், சிறிலங்காவினது தமிழர்களின் உணர்வுகளையும் கோபத்தினையும் கையாழுவதில் அர்த்தமுள்ளதொரு பங்கினை இந்தியா வகிப்பதற்குத் தேவையான ஏற்பாடுகளை சிறிலங்கா அரசாங்கம் செய்துகொடுக்கவேண்டும்.

ஆனால் இதுபோன்ற செயற்பாடுகள் இருதரப்பு உறவு என்ற ஏற்றுக்கொள்ளப்பட்ட வரையறைக்கு உட்பட்டதாக இருப்பது உறுதிப்படுத்தப்படவேண்டும். மாறாக, இந்தியா மிதமிஞ்சிய செயற்பாடுகளை முன்னெடுக்கக்கூடாது.

Comments