முரண்படும் தமிழ் இணையங்கள்

தமிழர்களுக்குப் புதுவருடம் எப்போது? லண்டன், அ.மயூரன்.

சித்திரையில் தமிழ்ப் புத்தாண்டா? அவுஸ்ரேலியா, சபேசன்

தமிழர் புத்தாண்டு தையா? சித்திரையா? கனடா, நக்கீரன்

போன்ற ஆய்வுகள் தமிழரது புத்தாண்டு பற்றி விரபமாக ஆதாரத்துடன் விளக்கப்பட்டிருக்கிறது

விடுதலைப்புலிகளும் இதை அங்கிகரித்திருப்பதாக இக்கட்டுரைகளிலிருந்து அறிய முடிகிறது

ஆனால் தமிழ் நெட் இன்று சித்திரை தமிழ்ப்புத்தாண்டு என்று ஒரு கட்டுரையை வெளியிட்டு தவறான முன்னோட்டத்தை ஆரம்பித்திருக்கிறது

பல ஆய்வாளர்கள் ஓருமித்த கருத்தைக் கொண்டிருக்கும் போது எதிரான ஒரு ஆய்வை தமிழ்நெட் போன்ற ஒரு முன்னனி இணையம் வெளியிட்டு பிரிவிணை காட்டுவது வெட்கட்கேடான விடயம்


அதற்கு வேறு கனடியபிரதமரின் வாழ்த்துசெய்தியையும் அதனுடன் இணைந்த செய்தியாக வெளியிட்டிருப்பது நகைப்புக்குரியதாக இருக்கிறது

அப்படியானால் தமிழ் நெட் தமிழ் நாட்டு அரசையும் தமிழீழ அரசையும் அவமதிக்கிறதா?

லங்காசிறி, முரசம் இணையங்களில் அரசியல்துறைப் பொறுப்பாளர் திரு நடேசன் புத்தாண்டை வரவேற்று செய்தி வெளியிட்டதாக கீழ்க்கண்ட செய்தி பிரசுரித்திருக்கிறார்கள்

ஈழத் தமிழருக்கு நம்பிக்கை தரும் எதிர்காலம் புத்தாண்டுடன் பிறக்கும்
[ சனிக்கிழமை, 12 ஏப்ரல் 2008, 06:57.47 AM GMT +05:30 ]

"ஈழத் தமிழர்களுக்கு மிகுந்த நம்பிக்கையான எதிர்காலம் புத்தாண்டுடன் பிறக்கும்'' இவ்வாறு தமிழீழ விடுதலைப் புலிகளின் அரசியல் பொறுப்பாளர் பா.நடேசன் உறுதி கூறியிருக்கின்றார். புத்தாண்டை வரவேற்கும் முகமாக அவர் வெளியிட்ட செய்தியிலேயே இவ்வாறு தெரிவித்துள்ளார்.

அவர் மேலும் கூறியவை வருமாறு: ஈழத்தமிழர்களுக்கு நல்ல எதிர்காலத்துக்கான நம்பிக்கை வெளிச்சம் புலப்படத் தொடங்கியுள்ளது.

சர்வதேச ரீதியில் இதுவரை இருளை எதிர்கொண்டிருந்த ஈழத் தமிழ் மக்களுக்கு ஒளிக்கீற்றுத் தென்படத் தொடங்கிவிட்டது. சர்வதேச ரீதியில் மாறிவரும் அரசியல், இராணுவ சூழ்நிலை மாற்றங்கள் தமிழர்களுக்கு சாதகமானவையாக உருவெடுத்து வருகின்றன. இதுவரை காலமும் ஈழத் தமிழர் பக்கத்திலிருந்த நியாயங்களை அவர்களது நீதியான அபிலாஷைகளை சர்வதேசம் இப்போது மெல்ல மெல்லப் புரிந்து, உள்வாங்கிக்கொள்ளும் வரவேற்கத் தக்க நிலைமை ஏற்பட்டு வருவது நல்ல சகுனமாகும்.

களத்திலும் தமிழ் மக்களின் விடுதலைப் போராட்டம் மேலும் உறுதி பெற்று, சாதகமான பெறுபேறுகளை வெளிப்படுத்தும் சந்தர்ப்பம் நெருங்கி வருகின்றது. தமிழர் தாயகத்திலும், புலம்பெயர் தேசங்களிலும் வாழும் நம்மக்கள் உவகை கொள்ளும் செய்திகள் புத்தாண்டோடு கிட்டும்.

இப்படி நம்பிக்கை வெளியிட்டார் நடேசன்.


இச்செய்தி வேறு எந்த இணையத்திலும் வெளியிடப்படவில்லை

இச்செய்தியின் உண்மைத்தன்மையை யாராவது அறியத்தரமுடியுமா ?

அல்லது லங்காசிறி, முரசம் கபட நாடகமாடுகிறார்களா ???

Comments