இந்தியாவினால் நேரடியாக இயக்கப்படும் தமிழ் கட்சியாக தமிழ் தேசிய கூட்டமைப்பு மாறியுள்ளது

இந்தியாவினால் நேரடியாக இயக்கப்படும் தமிழ் கட்சியாக தமிழ் தேசிய கூட்டமைப்பு மாறியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனை உறுதி செய்யும் வகையில் கூட்டமைப்பு அலுவலகம் ஒன்று இந்தியாவின் தலைநகர் புதுடெலகியில் திறந்து வைக்கப்படவுள்ளதாக முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சுரேஸ் பிரேமச்சந்திரன் தெரிவித்துள்ளார்.

இந்தியாவின் அறிவுறுத்தல்களுக்கு அமைவாக கூட்டமைப்பின் நடவடிக்கைகளை முன்னெடுப்பதற்கு இந்தியாவில் உள்ள அலுவலகம் துணை புரியும் என்று கூட்டமைப்பினர் நம்பிக்கை கொண்டுள்ளனர்.

தமிழ் மக்களை பிரதிநிதித்துவப்படுத்தும் கூட்டமைப்பு தமிழ் மக்கள் செறிவாக வாழும் வடக்கு கிழக்கில் ஒரு அலுவலக்தை கூட இயங்கு நிலையில் கொண்டிருக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

கூட்டமைப்பில் அங்கம் வகிக்கும் கட்சிகளின் சார்பிலேயே அலுவலகங்கள் வடக்கு கிழக்கில் இயங்கி வருகின்றன.

இந்த நிலையில் கூட்டமைப்பு என்பது தமிழ் மக்களுக்கானதா அல்லது இந்தியாவிற்கானதா என்பது தொடர்பில் தமிழ் மக்களிடம் கேள்வி எழுந்துள்ளது.

Comments