தமிழீழ விடுதலைப் புலிகளை தொடர்ந்து பயங்கரவாதிகளாக சித்தரித்துக் கொண்டிருக்கும் இந்த சாரா சிந்தர் யார்?

- வேறு எந்த வெளிநாட்டு செய்தி நிறுவனங்களை சுயேட்சையாக பாதிக்கபட்ட வன்னி மக்களை பேட்டி காண அனுமதிக்க மறுக்கும் இலங்கை அரசு சாரா சிண்டரை அனுமதித்தது ஏன்?
- தாங்கள் ஒரு சோதனை சாவடிகளிலும் நிறுத்த படவில்லை என்றும் தாங்கள் ஏ9 பாதை ஊடக தொடர்ந்து பயணத்தை மேற்கொண்டு யாழ்ப்பாணத்தை அடைத்தோம் என்று ஏன் குறிபிடுகிறார்?
- வெளிநாட்டு செய்தியாளர்களுடன் தனது போலீசாரை சிவில் உடையில்/ராணுவத்தை/புலனாய்வு பிரிவினரை அனுப்பும் இலங்கை அரசு சாரா சிண்டருடன் அனுப்பாதது ஏன்?
- வன்னியில் இருந்து இடம் பெயர்ந்த மக்கள் யாழ்பணத்தில் எங்கு தங்கியிருக்கிறார் என்று எப்படி இவருக்கு தெரியும் ? எந்த இடம் என்றும் குறிப்பிடவில்லை?
- மொழி பெயர்ப்பாளரை ஒளிபதிவில் காட்டப்படவில்லை?
கடைசி யுத்தத்தில் மக்கள் சிறிலங்கா இராணுவத்திற்கும் புலிகளுக்கும் இடையில் அகப்பட்டு தான் இவ்வாறாக பொது மக்களுக்கு இழப்புகள் ஏற்பட்டது என்றும், சிங்கள ராணுவம் தமிழ் மக்கள் மீது தாக்குதல் நடத்தவில்லை என்ற தோரணையில் கூறுகிறார்.
தமிழ் மக்களுக்கு ஏற்பட்ட இழப்பு யுத்தத்தினால் தான் என்றும் , சிங்கள இராணுவத்தால் தமிழ் மக்கள் கொல்லபடவில்லை என சுட்டிக் காட்ட விரும்புகிறார்.
தமிழ் மக்களுக்கு சார்பாக கதைப்பதுபோல் நாடகமாடிக் கொண்டு, தமிழர்களுக்காக போராடிய தமிழர்களின் தேசிய இராணுவத்தை உலகுக்கு பயங்கரவாதிகளாக சித்தரித்துக் கொண்டிருக்கும் இவர் யார்?
உண்மையை எடுத்துரைப்பதே ஊடக தர்மம், சரி உண்மையை வேண்டாம் பக்கசார்ப்பில்லாமல் ஆவணங்கள் வெளியிட வேண்டும்; இவர் அதையும் செய்யவில்லை.
உண்மையை எடுத்துரைப்பதே ஊடக தர்மம், சரி உண்மையை வேண்டாம் பக்கசார்ப்பில்லாமல் ஆவணங்கள் வெளியிட வேண்டும்; இவர் அதையும் செய்யவில்லை.
தமிழீழ விடுதலைப் புலிகளால் மட்டும்தான் மக்களுக்கு இவ்வளவு அழிவென்று இலங்கை இனவாத அரசு போல தெரிவித்துக் கொண்டிருக்கும் இவர் யார்?? இலங்கை இனவாத அரசின் கைகூலியா??
Comments