அண்ணை எப்ப சாவான் [தலைவர் எப்ப சாவார்] திண்ணை எப்ப காலியாகும் என்று காத்திருந்தவர்கள்

முன்னாலே சென்றோரின் பின்னால் சென்றவரின் வழியினிலே... ஈழப் போர் - 3!
தி.வழுதி
இந்த கருத்துக்களம் 'புதினம்' இணையத்தளத்துக்காக எழுதப்பட்டதாகும்.

தேசியத் தலைவர் இறந்து விட்டார் என்று சிறிலங்காவினால் சொல்லப்பட்ட செய்தியை , ஏன் புலிகளின் சர்வதேச பொறுப்பாளரால் சொல்லப்பட்டதைக் கூட புலம்பெயர் மக்கள் நம்பவில்லை

மாறாக அதை வெளியிட்ட ஊடகங்களின் மேலும் ஒரு சந்தேகக் கண் ஏற்பட்டிருக்கின்ற நிலையில்

அச் செய்தியை கூட வெளியிடாத புதினம் இப்போது தேசியத் தலைவரின் மேல் களங்கம் ஏற்படுத்துவது போல் தனது கூலி ஒருவரை வைத்து எழுதியிருக்கின்றது

அதை இன்னும் சில ---தமிழ்நாதம் , நிதர்சனம், தமிழ்வின், நங்கூரம் போன்ற கூலிகள் வழிமொழிந்திருக்கின்றன

தேசியத் தலைவரைப் பற்றியோ அவரின் செயற்பாடுகளையோ நான் சொல்லி தெரியவேண்டியதில்லை

ஒட்டுக்குழுக்களின் ஊடகங்களை பற்றி சொல்லத் தேவையில்லை அவர்களின் வேலையே அது தானே

ஆனால் இவை தமிழ்த்தேசிய ஊடகங்கள் என்று கூலிக்கு இது வரை மாரடித்திருக்கின்றார்கள் என்பது அப்பட்டமாக தெரிகின்றது

தேசியத் தலைவர் இறந்தாத சொல்லப்பட்டவை எடுபடாமல் போனதால் இப்போது தலைவரின் மேல் களங்கத்தை ஏற்படுத்தி அவரை தமிழர்கள் மனதிலிருந்து அகற்றுவதற்கு விலை போனவர்கள் ஆரம்பித்து விட்டார்கள் என்றே எண்ணத் தோன்றுகின்றது

ஆகவே புலம் பெயர் மக்கள் தெளிவாக இருக்க வேண்டியதும்

கூலிக்கு மாரடிப்பவர்களை இனம் காண்டு அதற்கு ஏற்ப நமது பணியைத் தொடர்வது சிறந்தது

கருத்து மாற்றம் அவசியம் ஆனால் விழிப்புடன் இருங்கள்.

Comments