தனி ஈழம்தான் இலங்கை பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு: ஜெயலலிதா ஆவேசப் பேச்சு

இலங்கை பிரச்சனைக்கு தனி ஈழம்தான் நிரந்தர தீர்வு’’ என்று அதிமுக பொதுச்செயலாளர் செல்வி ஜெயலலிதா சேலத்தில் நடைபெற்ற தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் ஆவேசமாக பேசினார்.

அதிமுக பொதுச்செயலாளர் ஜெயலலிதா சேலத்தில் மக்களவை தேர்தல் வேட்பாளர் செம்மலையை ஆதரித்து பேசினார்.

அவர் தொடர்ந்து பேசியதாவது:-

’இலங்கைக்கு நேரில் சென்று வந்து அங்கே ஈழத்தமிழர்களின் அவலங்களை கண்டு வந்திருக்கிறார் ’வாழும் கலை அமைப்பின் நிறுவனர் ஸ்ரீரவிசங்கர்.

அவர் என்னைச்சந்தித்து ஈழத்தமிழர்களின் அவலங்கள் பற்றிய சி.டி.க்கள். போட்டோக்கள் கொடுத்தார். அதையெல்லாம் பார்த்தபோது நெஞ்சு கொதிக்கிறது.

தமிழர்களின் இந்த நிலை நீங்கவேண்டுமென்றால், இலங்கைத் தமிழர் பிரச்சினை முடிவுக்கு வரவேண்டுமென்றால் தனி ஈழம்தான் ஒரே தீர்வு.

அந்த தனி ஈழத்தை நாங்கள் போராடி பெற்றுத்தருவோம். இது நாள் வரை நான் தனி ஈழம்தான் தீர்வு என்று சொல்லைவில்லை. அரசியல் தீர்வு, அது இது என்று சொல்லிவந்தேன்.

ஆனால், இப்போது ஆணித்தரமாக சொல்கிறேன் தனி ஈழம்தான் இலங்கை பிரச்சனைக்கு நிரந்தர தீர்வு’’ என்று ஆவேசமாக பேசினார்.

Comments