பிரிந்து நின்று கூத்தாடிக் கோஷமிடுவதை விடுத்து மாவீரர்களின் கனவை நனவாக்குங்கள்.

தமிழ் ஊடகங்களின் உதவாத [ ஊடக ] தர்மமும் பிண்ணனியும்


சங்கதி இணைய கையகப்படுத்தல் சொல்லும் செய்தி என்ன ? புலிகளை விற்றுப் பிழைப்பு நடத்த தொடங்கி விட்டனரா ?

இந்த ஊடக பிதாமகன்களும் அவர் தம் ஊடகங்களும் புலம்பெயர் சமூகத்திற்கு சொல்லவருகின்ற செய்தி என்ன ?

--------------
பழைய சங்கதி sankathi.com சங்கதி இணையத்தள முகவரி தனிநபர் ஒருவரால் கையகப்படுத்தப்பட்டுள்ளது

சங்கதி, தமிழ்நெட், ஈழமுரசு, ஈழநாடு போன்றவற்றொடும் எம்மோடும் முட்டி மோதிக் கொண்டிருந்த


கேபி குழுமமான இன்போதமிழ், அதன் புதிய வரவான தாய்நிலம் குழுமத்தினால்


சங்கதி [sankathi.com ] இணையம் கையகப் படுத்தப்பட்டிருப்பதாகவே தெரிகின்றது



------------------
சிறீலங்கா இராணுவத்தில் இணைக்கப்படுகிறார் கே.பி? - பிரிகேடியர் பதவி வழங்க அரசு திட்டம் -
18.08.2010
-----------------

என்ற ஒரு செய்தியைத் ஒப்புக்கு போட்டு விட்டு வேறு எந்த கேபி தொடர்பான செய்திகளையும் இவர்கள் இருட்டடிப்புச் செய்து வருகின்றார்கள்

--------------------------------------
---------------
நாம் அப்போதே எம் மீதான இன்போதமிழ் குழுமத்தின் வன்மம் பகுதி 2 -இப்போது வலைப்பூவில் தொடர்கின்றது

இவர்கள் தான் மறுஆய்வுக்குண்டர்கள் என்று பதிவிட்டிருந்தோம்

-------------------
கோழைத்தனமாக ஆய்வு, பின்பு மறுஆய்வு, இன்று சுவிஸ் ஆய்வு என்று வன்மம் செய்யமாட்டோம்.

அதேவேளை கறுப்பு (மொட்டை கடதாசி) எழுதுவது போல் அநாகரீகமாகவும் எழுதமாட்டோம்.

உயிருள்ளவரை உண்மைக்காய் பாடுபடுவோம்.

முடிந்தால் உண்மையை உரைப்போம் வாருங்கள் மக்கள் மன்றுக்கு.

- இன்போதமிழ் குழுமம்-

------------------------------

--------
இப்படி அறிக்கை விட்டு மறுதலித்தவர்கள் இப்போது தமது இணையத்தில் இன்போதமிழ் குழுமம்
நேரடியாகவே மறுஆய்வை பிரதிபலிக்கத் தொடங்கி விட்டார்கள்


இவர்களுடைய வன்மத்திற்குள் எம்மையும் இழுத்து விடுவது ஏன் ? இவர்களை விமர்சனம்
படங்கள் சொல்லும் செய்தி என்ன ? என்று விமர்சனம் செய்ததால் எம்மையும் எதிரியாக்குகின்றார்கள்.

ஆனால் இது வரையிலும் அதற்கு தகுந்த விளக்கம் கொடுக்கப்படவில்லை தேசியத் தலைவரிலிருந்து அனைத்துத் தளபதிகள் முதல் கேபி வரை முடிவுரை எழுதிவிட்டு இப்போது கேபியைத் தூக்கிப்பிடிப்பதேன் ?

---------------

சரி இப்போது விடையத்திற்கு வருவோம்

இன்போதமிழ் குழுமத்திடம் இயல்பாகவே தோன்றும் சந்தேகங்கள்

கேபி முன்பு துரோகியோ இல்லையோ ஆனால் இப்போது அதைத் தான் விரும்பியோ ,விரும்பாமலோ செய்து வருகின்றார்.

இலங்கையில் தமிழர்கள் எவரும் கைதியாக இருந்து கொண்டு தமிழ்த் தேசிய அரசியல் நிலைப்பாட்டில் இயங்க முடியாது.-உருத்திரகுமாரன்

அதை விமர்சிக்க நீங்கள் முன்வருவதில்லை அது ஏன் ? கேபியைச் சந்தித்து வந்தவர்களை புனிதர்களாக தாய்நிலம் பத்திரிக்கை மூலம் சித்தரித்ததேன் ?

புதிய சங்கதியும் , தமிழ்நெட் சேரமானும் கேபிக்கு மடல் எழுதினால் நீங்கள் பதிலளிப்பது ஏன் ?



அதன் மூலம் நீங்கள் கேபியின் வாரிசுக்கள் அல்லது அருவருடிகள் அல்லது கேபியால் இயக்கப்படுபவர்கள் என்று சொல்வதில் என்ன தவறு ?

யதார்த்தத்தில் கஸ்ரோ குழு ஒன்று இருக்க முடியாது கஸ்ரோவின் கீழ் இயங்கியவர்கள் என்பதால் அதை கஸ்ரோகுழு என்று சொன்னாலும் கஸ்ரோ மாவீராகிவிட்டார் அதனை இன்னும் கஸ்ரோ குழு என்றோ கஸ்ரோவினால் இயக்கப்படுகின்றது என்றும் வன்மம் பாராட்டும்

வெளியிருந்து "கே.பி" காட்டிக்கொடுத்து இயக்கத்தை அழித்தார் என்பது எதிர்வினை வாதமென்றால் உள்ளிருந்தே "காஸ்ரோ" இயக்கத்தைக் காட்டிக்கொடுத்தா?
[ ஞாயிற்றுக்கிழமை, 18 ஏப்ரல் 2010, 09:08.36 பி.ப | இன்போ தமிழ் ]


இன்போதமிழ் குழுமமான கேபி குழுவான உங்களை எப்படி எடுத்துக்கொள்ளுவது அதன் தலைவர் கேபி உயிரோடு , சிங்களத்தோடு இருக்கும் போது ?

உலகத் தமிழினமே உனக்கு ஒரு மடல்..?:"தமிழீழத் தேசியத் தலைவரின்" "இலட்சியத்தை" விலைபேசத் துணிந்துள்ள: “அனைத்துலகத் தொடர்பகம்”.................. ?[ ஞாயிற்றுக்கிழமை, 25 ஏப்ரல் 2010, 10:10.44 பி.ப | இன்போ தமிழ் ]

----------------------

வெளியிருந்து கே.பி காட்டிக்கொடுத்து இயக்கத்தை அழித்தது உன்வாதமென்றால் உள்ளிருந்தே காஸ்ரோ இயக்கத்தைக் காட்டிக்கொடுத்தா முள்ளிவாய்காலில் முழு இயக்கத்தையும் அழிக்கத் துணிந்தார் என்று நாம் திருப்பிக்கேட்டால்?

மன்னிக்கவும் இது உங்களுக்கு கோவம் வரும் என்பதுவும்
உங்கள் மனம் எப்படித்துடிக்கும் என்பதுவும், எங்களுக்கு தெரியும் ஆனால் நாம் அப்படிக் கேட்க மாட்டோம். காரணம் விடுதலை, விடுதலைக்காக வாழ்நாள்முழுவதும் தன்னை அர்ப்பணித்து தன்னுயிரை ஈகம் செய்த அந்தப்புனிதனின் சத்தியத்தைக் களங்கப்படுத்த மாட்டோம் நீங்களும் களங்கப்படுடத்தாதீர் .

இந்தக்குற்றச்சாட்டை உங்களிடம் நேரடியாய் முன்வைப்பதற்குக்காரணம் உருத்திரகுமாரன் உட்பட பலருக்கு எதிரான அபாண்டமான குற்றச்சாட்டுக்களை முன்வைக்கும் கரும்படை வன்மம், அனைத்துலகத் தொடர்பகத்தின் நேரடியான கட்டுப்பாட்டில் இருந்து இயங்கும் அனைத்துலக தொடர்பகத்தின் வெளியீட்டு பிரிவின் மின்னஞ்சல் முகவரியிலிருந்து தான் எல்லோருக்கும் அனுப்பப்படுகிறது இது வேதனை தருவதனால் தான் இதை இங்கு நேரடியாக குறிப்பிடுவதோடு. மாவீரர் புகழ்பாடும் அனைத்துலகத் தொடர்பகத்தின் வெளியீட்டுப்பிரிவு இத்தகைய இழிவான காரியங்களில் ஈடுபடுவது வேதனையான ஒன்றே.

இதுபற்றி நாங்கள் உரியவர்களிடம் முறையிட்டோம் அவர்கள் அதற்கு கூறிய கற்பிதங்கள் விசித்திரமானவை. எங்களுக்கும் பிழையான கருத்தூட்டல்கள் வருகின்றன நாங்கள் அவற்றுக்கு மதிப்பளிப்பதுமில்லை அதை மற்றவர்களுக்கு மறு வினியோகம் செய்வதுமில்லை.

இன்போதமிழ் இணையம் தமிழீழ விடுதலைப் புலிகள் சுவிஸ்கிளையின் பரப்புரைப்பிரிவின் அதிகார பூர்வ செய்தித்தளம்.

நாங்களும் காஸ்ரோ அவர்களின் பொறுப்பின்கீழிருந்து பணிசெய்தவர்கள். எனவே நீங்கள் இவ்வாறான இழிசெயலைச் செய்து, புனிதனான அந்த மாவீரனைக் களங்கப்படுத்துவதை எம்மால் தாங்கிக்கொள்ளமுடியவில்லை.




அனைத்துலக தொடர்பகத்தை யார் கையகப்படுத்துவது , என்பதிலா இப்போது மோதல் ?

இந்த மோதல்களின் பின்னணியில் நிகழும் காட்டிக் கொடுப்புக்கள் கீழே பாருங்கள்

இன்போதமிழின் [http://www.infotamil.ch] சில கேள்விகள் ?


1. அடிக்கடி நீங்கள் கே.பி விவகாரத்தை தூக்கிப்பிடிப்பதன் மர்மம் என்ன??

2. உங்கள் குழுமம் விடுதலையின் பேரால் பதுக்கி வைத்திருக்கும் பணத்தை கடன் கொடுத்தவர்க்களுக்கு கொடுத்துதவாமல் நீங்கள் மட்டும் சுகபோகங்களை அனுபவிப்பதன் மர்மம் என்ன?

3. உங்களை நம்பி எத்தனையோ பணியாளர்கள் விடுதலைக்கு கடன் பெற்று தந்தோமே? அதற்கு இதுவரை என்ன நடவடிக்கை எடுத்தீர்கள்? விடுதலையை நேசித்தோம் என்ற ஒன்றுக்காக நீங்கள் செய்யும் அக்கிரமங்களை பொறுத்துக் கொண்டோம், எத்தனை பணியாளர்களின் குடும்பங்கள் கடன் சுமையால் தவிக்கிறன [நீங்கள் இப்படி தேசிய விடுதல இயக்கத்தை அதுவும் தேசியத் தலைவரை மதிக்கின்றோம் போற்றுகின்றோம் என்று சொல்லிக்கொண்டு]அவர்களின் வாழ்வுக்கு ஓர் ஆறுதலுக்காவது இதுவரை என்ன செய்தீர்கள். ?

4. கே.பி விவராரத்துக்கு முக்கியம் கொடுத்து வாழ்க்கை ஓட்டும் நீங்கள் எமது மக்களினதும் போராளிகளினதும் விடுதலைக்கும் மறுவாழ்வுக்குமாக என்ன நடவடிக்கைகளை எடுத்தீர்கள்?

5. கே.பி யை விமர்சிக்கும் எந்த காட்டுமானோ இல்லை சேரமானோ அதுசரி நீங்கள் மட்டும் அனைத்துலகத் தொடர்பகத்தின் நிர்வாகத்தில் பணி புரிந்த போராளிகளை மட்டும் சிங்களவனுக்கு காசு கொடுத்து வெளியே கொண்டுவருவதன் மர்மம் என்ன? சிறைப்பட்ட மற்றவர்கள் போராளிகள் இல்லையோ?

6. உங்களின் இன்றைய தேசியத் தலைவர் அறிவு மற்றும் கலையழகன் ஆகியோர் எப்படி வெளிநாட்டுக்கு வந்தார்கள்?

7. காஸ்ரோவின் சர்வதேச நிதித்தொடர்பாளர்களில் ஒருவரான மலேசிய இராயன் மகிந்த சமரசிங்காவின் கூட்டாளியாக இருந்து கொண்டு காட்டிக்கொடுக்கிறாரே அதை மட்டும் ஏன் மறைக்கிறீர்கள்?

8. பாலகுமார் உட்பட யோகி வரை சரணடைந்தார்களே சிறையில் என்ன நிலையோ தெரியாது? ஆனால் கடைசி வரை அதாவது 2009 மே 10 காஸ்ரோ வீரச்சாவடையும் வரை அவருடன் நின்ற ஊடக பிதாமகன் நந்தகோபன், மற்றும் திலீபன் எப்படி புலம்பெயர்ந்த தேசத்துக்கு வந்தார்கள் இதன் மர்மங்களை மக்களுக்கு சொல்வீர்களா??

9. கேபி தமிழினத்துரோக்கி அவர் கோட்டபாயவுடன் கட்டித்தழுவுகின்றார் என்றால், கிசோர் மூலம் TRO ரெஜி இன்றும் பசில் ராஜபட்சவுடன் தொடர்பு கொண்டு பின்கதவால் காரியமாற்றி வருகின்றாரே அது எப்படி? அவரை எந்தப்பட்டியலில் இணைக்கப்போகின்றீர்கள்?

10. கே.பி துரோகம் பண்ணுவதாக சொல்லும் கனவான்களே கருணா கும்பலிடம் சுவிசில் காசுவாங்கினீர்களே அது தவறு என்று நாம் தட்டிக்கேட்ட பொழுது. போராட்டத்துக்கு காசு வேணும் அது எங்கையும் பெறுவோம் அது கருனாவாக இருந்தாலென்ன டக்கிளஸ்சாக இருந்தாலென்ன எமக்கு காசு வேண்டும் என்று காஸ்ரோ சொன்னாரே அதன்படி சுவிசிலுள்ள கருணாவின் தொடர்பாளரிடம் ???? ?????????? 2 லட்சம் சுவிஸ் பிராங்குகள் வாங்கினீர்களே? ஆதாரமும் சாட்சியும் உண்டு இதை எப்படிச் சொல்வது. துரோகம் என்பதா?? இல்லை காஸ்ரோ என்னும் குறுநில மன்னனின் தியாகம் என்பதா?

11.மாவீரரின் இரத்தத்தால் எழுதிய தேசியக்கொடியை விளையாட்டு விழாவில் கிழித்தெறிந்து காவல்துறையில் விடுதலைப் புலிகளைக் காட்டிக் கொடுத்தவர்களிடம் , நீதி மன்றத்தில் வழக்குப் பதிவுசெய்தவர்களிடம் 1 லட்சம் சுவிஸ் பிராங்குகள் வாங்கினீர்களே? இது தவறு என்று வாதிட்ட கிளைப் பொறுப்பாளாரை தாக்கும்படி காஸ்ரோ தமிழ் இளையோர் அமைப்பிடம் சொல்லி தூண்டி விட்டாரே இதை எப்படி சொல்வது? இந்த தவறினால் இதே விளையாட்டு விழாவை நடத்தவிடாது காவல்துறை தடை விதித்துள்ளதே?

http://www.infotamil.ch/ta/articles.php



மாறி மாறி யாரின் முதுகில் குத்துகின்றீர்கள் ? ?

இந்த இரு குழு மோதலில் சிக்கி சின்னபின்னாமவதும் , பலியாவதும் தமிழினம் தான்.

பல உணர்வாளர்கள் பிச்சை வேண்டாம் நாயைப்பிடி என்று தூர விலகிச் செல்வதற்கு

இந்த அ.உ.தொ உள்வீட்டு மோதல்கள் வழிவகுத்துக் கொண்டிருக்கின்றன.

இவற்றிற்கு முற்றுப்புள்ளி வைக்கப்போவது யார் ?

பிரிந்து நின்று கூத்தாடிக் கோஷமிடுவதை விடுத்து மாவீரர்களின் கனவை நனவாக்குங்கள்.

மேலும்.............

Comments