எம்மீது இன்போதமிழின் இப்படியும் ஒரு வன்மம்

இன்போதமிழின் கீதா உபதேசம்
------------
விட்டுக்கொடுத்தவர் கெட்டுப் போனதில்லை!

சகிப்புத்தன்மை, விட்டுக்கொடுத்தல், பொறுத்துப்போதல், மதித்தல் போன்ற செயல்களில் வழி நிமிட நேரத்தில் தீர்ந்துவிடும் பகையெல்லாம் ஈகோவின் கட்டுப்பாட்டில் மரணம் வரையில் கூட நீடித்துவிடும். ஈகோவுக்கு அத்தகைய ஆற்றல் உண்டு சகிப்புத்தன்மை, விட்டுக்கொடுத்தல், பொறுத்துப்போதல், மதித்தல் இவை நான்குமே ஒருவர் ஈகோ வசப்படும் போது அப்படி நடந்து கொள்வது கோழைத்தனம் என்றே புரியவைக்கப்பட்டு ஒட்டாமல் ஆயுள் சிறை வைத்துவிடும். சேரத்துடிக்கும் கரங்களை பூட்டி இருக்கும் ஈகோ என்னும் மாய விலங்கு உடை(க்கப்)பட வேண்டும்.

-----------
இப்படி அந்த உபதேசம் தொடருகின்றது,,,,,,,,,,,,,,,,,,,,,, முழுமையாக வாசிக்க
எமக்கு எதிரான இன்போதமிழின் எதிர்வினை

உங்கள் உபதேசத்திற்கு நன்றிகள்

எமக்கு உபதேசம் சொல்லும் நீங்கள் அதை கடைப்பிடிப்பதில்லை என்று தெரிகின்றது அப்படிக் கடைப்பிடிப்பவராக இருந்தால் இதை ஒரு கட்டுரையாக எழுதியிருக்க மாட்டீர்கள்

ஊருக்கு உபதேசம் எனக்கு மட்டும் இல்லை என்ற உங்களின் கொள்கை நன்று நன்று

உங்களிடம் இல்லாதவற்றை மற்றவர்களிடமாவது இருக்கவேண்டும் என்ற உயரிய பண்புக்கும் உபதேசத்திற்கும் எமது நன்றிகள்

சரி உண்மையில் என்ன நடந்தது ,,,,,,,,,,,

கனடிய வட்டுக்கோட்டை வாக்கெடுப்பும் துரோகங்களும் Posted on Jan 01 2010
ஒரு இணையத்திற்கும் இணைப்புக் கொடுக்காத நாடுகடந்த அரசின் இணையத்தில் புதினப் பலகைக்கு http://eelaminexile.com/இணைப்பு கொடுக்கப்பட்டிருக்கின்றது


இது குறித்து http://eelaminexile.com/contact-us.html க்கு அனுப்பியிருந்தோம் ஆனால் அது குறித்து அவர்கள் எதுவும் பதிலளிக்கவில்லை மாறாக

"ஒரு காலத்தின் முடிவு; இன்னொரு காலத்தி்ன் தொடக்கம்" [ ஞாயிற்றுக்கிழமை, 03 சனவரி 2010, 03:46.25 பி.ப | இன்போ தமிழ் ]

"யார் இந்தப் புதினப்பலகைக் குழுமம்"? [ திங்கட்கிழமை, 04 சனவரி 2010, 03:30.19 பி.ப | இன்போ தமிழ் ]

மீண்டும் புதினத்தின் புராணம் பாடியிருந்தார்கள் ஆகவே பொறுப்புணர்வுடன் நடக்கவேண்டியவர்கள் பொறாமைக் குணத்தையும் , தான் தோன்றித்தனத்தையும், தலைக்கனத்தையும் தான் காட்டினார்கள் ஆனால் ஊருக்கு கீதா உபதேசம் வேறு

தமிழ்த்தேசியம் என்ன இவர்களின் தாத்தா வீட்டு சொத்தா ?

நாடு கடந்த அரசின் மின்னஞ்சல்களுக்கு பதிலளிக்கும் விதம் இது தானா ? இவர்களிடம் எப்படி எமது இனத்தின் தலைமையை அளிப்பது ? அல்லது நாடு கடந்த அரசின் குழுவிலுள்ளவர்களால் இவை தவறாக பாவிக்கப்படுகின்றனவா ?

ஊர் இரண்டு பட்டால் கூத்தாடுபவர்களுக்கு கொண்டாட்டம் என்று சொல்லப்படுவதை நிரூபித்தபடி இருப்பவர்கள்தான் இவர்களும்! தமிழ்த் தேசியம் என்ற போர்வையில் பகைமையையும் வெறுப்பையும் தொடர்ந்து பேணுவதன் மூலமே தங்கள் உணர்ச்சிகர அரசியலைச் செய்ய முடியும் என்று கருதுகிறார்கள்.

நாம் தமிழ்த்தேசியவாதிகளுடனான முரண்பாடுகளில் முதலில் அவர்களுக்கு மின்னஞ்சல் மூலம் நமது எதிர்ப்பை தெரிவிப்போம். அவர்கள் அதை அசட்டை செய்தாலோ அல்லது உங்களைப் போல் தான் தோன்றித் தனமாகவோ நடந்தால் மட்டுமே பதிவாக இடுவோம்

அந்த உணர்ச்சியாவேச நெருப்பில் கருகி அழிந்துபடும் நம்மைப் பற்றியும் சமூகத்தின் சிதைவு பற்றியும் இவர்களுக்கு எந்த அக்கறையுமில்லை.

இவர்கள் குழம்பிய குட்டையில் மீன் பிடிப்பதையே தங்கள் அரசியலாக வைத்திருக்கிறார்கள்.


இதை சொல்லும் தகுதி உங்களுக்கு இல்லை முதலில் நாம் ஒன்றும் ஆய்வாளரோ இணையங்களிலும் பத்திரிக்கைகளிலும் ஆய்வு எழுதி வயிறு வளர்க்கும் கூட்டமும் இல்லை. வலைப்பூவில் வயிறும் வளர்க்க முடியாது. குளம்பிய குட்டையில் மீனும் பிடிக்க முடியாது

இவர்கள் முதலில் விடுதலைப்போராட்டத்துக்கு வழிகாட்டியான பாதையை திறக்கடும் விமர்சனம் செய்யட்டும் அது ஆரோக்கியமானதாக அமைவதே காலத்தின் தேவையாகிறது.

நாங்கள் யாருக்கும் வழிகாட்டவும் இல்லை பாதை திறக்கவும் இல்லை ஆனால் உங்களைப் போன்றவர்களின் பிழைப்புவாத வழிகாட்டல்களையும், சுய நல பாதை திறப்புக்களையும் தான் விமர்சிக்கின்றோம், அம்பலப்படுத்துகின்றோம்.

இவைகள் தான் வழிகாட்டியான புதிய பாதைகளா ?

புதினப்பார்வைகள்:

2009: ஒரு காலத்தின் முடிவு; இன்னொரு காலத்தி்ன் தொடக்கம்

'வட்டுக்கோட்டைத் தீர்மானம்' மீதான மீ்ள் வாக்கெடுப்பு: ஒரு வரலாற்று அவமானம்

இந்த படங்கள் மூலம் இன்போதமிழ் சொல்ல வருவது என்ன ?
இப்படியான ஒரு பரப்புரை ஏன் இப்போது செய்யப்பட்டது ?

ஒரு காலத்தின் முடிவாக தேசியத் தலைவர் குடும்பம், தளபதிகள் , வட்டுக்கோட்டை வரை முடிவுரை எழுதி உருத்திரகுமாரில் முடிவின் ஆரம்பம் என்று படத்தின் மூலம் காட்டி எல்லோரையும் அவமதித்திருக்கின்றார்கள்

உருத்திரகுமார் தமிழ்மக்களினால் ஏகமனதாக நியமிக்கப்பட்டவர் இல்லை

தை நாம் சுட்டி காட்டினோம் அது தவறா ? அல்லது இவர்களின் செயலை சுட்டிக்காட்டியது தவறா ?

வழுதி வடிவில் தலைவர் மேல் சேறு பூசிய புதினம் புதினப்பலகையாக மாறியது முகம் இல்லாத அந்த வழுதியின் குழுமம இன்னும் வேறு பெயர்களில் புதினப்பார்வையாகவும் , இன்போதமிழிலும் அந்த முகம் அறியாத வழுதியின் முகத்திற்கு சொந்தக்காரர்கள் வலம் வந்து கொண்டு தான் இருக்கின்றார்கள்

முகமில்லாத பெயர்களில் தூற்றியும் முகம் அறிந்த பெயர்களில் போற்றியும் செய்யும் விபச்சாரம் இது

இது தான் இன்போதமிழ், புதினப்பலகை , நாடு கடந்த அரசு குழுமத்தின் தமிழ்தேசியமோ ????

விட்டுக்கொடுத்தவர் கெட்டுப் போனதில்லை! யாருக்கு விட்டு கொடுக்க வேண்டும்? எதை விட்டு கொடுக்க வேண்டும் ?

தமிழ் மக்களுக்கு சகிப்புத்தன்மை இப்போது மிகவும் தேவை

பிதாமகன் புதினம் -வழுதி , ஜெகதகஸ்பார், நிலாந்தன், யாழிலிருந்து சனிஸ்வரன்
வரை புதிது புதிதாக ஒருவர் உருவாகிக்கொண்டே தான் இருப்பதால்


மொழியாகி எங்கள் மூச்சாகி நாளை முடிசூடும் தமிழ்மீது உறுதி!
வழிகாட்டி எம்மை உருவாக்கும் தலைவன் வரலாறு மீதிலும் உறுதி!
விழிமூடி இங்கே துயில்கின்ற வேங்கை வீரர்கள் மீதிலும் உறுதி!
இழிவாக வாழோம்! எந்தநிலைவரும் போதிலும் நிமிருவோம்

இவற்றை உண்மையிலே பின்பற்றுங்கள் இதையும் ஊருக்கு உபதேசமாக உபதேசம் செய்யாதீர்கள்

நன்றி



Comments