தமிழீழப் போரில் வீரச்சாவடைந்த போராளிகள் ,தளபதிகளுக்கு வீரவணக்கம்

தலைவர் இருக்கின்றாரா ??? இல்லையா ??? என்பதை இப்போது இதனுடன் விட்டு விடுவோம் ,,,

எல்லாவற்றிற்கும் காலம் ஒரு நாள் பதில் சொல்லும் ,,,,,

உலக சரித்திரத்தில் ஒரு போராட்ட அமைக்கு எதிராக உலகமே ஒன்று சேர்ந்து அழித்த வரலாறு ஈழத்தில் அரங்கேறியிருக்கின்றது

விடுதலைப்புலிகளின் அபரீத வளர்ச்சியில் பயந்து விட்ட அல்லது பொறாமைப்பட்ட இந்த 20 பதுக்கும் மேற்பட்ட உலகத்தின் பார்வையில்

இந்த நாடுகள் தமக்குள் எவ்வளவு முரண்பட்டவை என்பது சொல்லித் தெரியவேண்டியதில்லை

அல்கொய்தா அமைப்புக்கு எதிராகக் கூட இவர்கள் இவ்வளவு ஒன்றாக சேராதவர்கள்

தற்போதுள்ள பொருளாதார நெருக்கடிக்களுக்கு முகம் கொடுக்க முடியாமல் வல்லரசுகளே திண்டாடிக்கொண்டிருக்கும் காலத்தில் இவர்கள் எல்லோரும் கூட்டாகச் சேர்ந்து அழித்ததில்

மிகவும் வெளிப்படையாகவே

விடுதலைப்புலிகளின் தலைமையோ அல்லது அவர்களோ இருக்கும் வரை தமிழர்களை வாழவிடப்போவதில்லை காட்டப்பட்டுவிட்டது

இது தலைவருக்கு சமாதான காலத்திலேயே தெரிந்திருக்கின்றது அப்போதே தலைவர் தாம் காட்டுக்கு போவோம் என்று பலரிடம் வெளிப்படையாகவே சொல்லியிருக்கின்றார்

விடுதலைப்புலிகளும் முடிந்த வரை தமது சக்திக்கு அப்பாற்பட்டு முயற்சி செய்திருக்கின்றார்கள்

ஆனால் அவர்கள் அதில் தோல்வி அடையவில்லை பின்னடைந்திருக்கின்றார்கள்

இந்த உலகத்தால் அவர்களை பூண்டோடு அழிக்கமுடியாது என்பதும் நீருபிக்கப்பட்டு விட்டது

இவர்கள் காலம் காலமாக இந்த மேற்குலகம் தமக்கு பிடிக்காதவர்களை அழிப்பதற்கு இன்னுமொருவர்களுக்கு முண்டு கொடுப்பதும் பின்னர் அவர்களையே அழிப்பதும் வரலாறு

ஈரானுக்கு எதிராக ஈராகை வளர்த்ததும் பின்னர் அவர்களாலே ஈராக் அழிக்கப்பட்டதும்

ரஸ்சியாவிற்கு எதிராக தலிபான்கள் வளர்க்கப்பட்டதும் பின்னர் அவர்களின் கதையும் அதே பாணியில் அழிக்கப்படுவதும்

இப்போது இவர்கள் வளர்த்து விட்ட சிங்களமும் ஒரு பெளத்த பேரினவாத பயங்கரவாதிகள் என்பது இவர்களுக்கு காலம் கடந்தாவது தெரியவரும்

ஆனால் அவர்கள் அதை இப்போதே காண்பிக்க ஆரம்பித்து விட்டார்கள்

கனடாவின் அமைச்சர் ஓப்ராய் ஒரு இந்திய வம்சாவழியில் வந்தவர் இவர் கனடிய பாரளுமன்றில் புலிகளுக்கு எதிராக காட்டமாக வசை பாடியவர் ஆனால் அவருக்கே இந்த பயங்கரவாதிகள் வீசா வழங்கவில்லை



கனடிய அமைச்சரின் இந்திய விசுவாசம்

அவரும் வீழ்ந்தாலும் மீசையில் மண் ஒட்டவில்லை என்பது போல் தமிழ் மக்களுக்காக இவர்கள் தொடர்ந்து உறவைப் பேணுவார்களாம் ????

தமிழீழ தேசியத் தலைவர் பிரபாகரன் என்ற சொல்லே தமிழீழ வரலாற்றில் யாராலும் எப்போது மறக்கப்பட முடியாத சரித்திரம் என்பது எதிரிகளாலேயே மறுக்கப்பட முடியாமலிருக்கிறது

இருதரப்பாரும் ஒருவிடயத்தில் உடன்படுகிறார்கள். அதாவது, இலங்கை தமிழர் போராட்ட வரலாற்றில் பிரபாகரனின் ஆளுமை என்பது தவிர்க்க முடியாத ஒன்று என்பதை இருதரப்பாருமே ஒப்புக் கொள்கிறார்கள்.- பிபிசி தமிழோசை

எது நடக்கவேண்டுமோ அது நன்றாக நடக்கின்றது என்பது மட்டும் தெளிவாகத் தெரிகின்றது



போராட்ட வடிவங்கள் மாறலாம் ஆனால் போராட்ட இலட்சியம் மாறாது

தமிழீழ தேசியத் தலைவரின் சிந்தனையிலிருந்து ...

நாடு கடந்த தமிழீழ அரசு என்ற வகையில் மாற்றம் பெற்றிருக்கின்றது

இவை எல்லாம் இந்த காலப்பகுதிகளில் ஏற்பட்டவையாகத் தென்படவில்லை எல்லாம் எப்போதோ தீர்மாணிக்கப்பட்ட வெவ்வேறு உத்திகளாக பார்க்க வேண்டி இருக்கின்றது

ஆகவே சதிகளை தாண்டி தமிழினம் வெற்றி பெறுவது புலம் பெயர் தமிழர்களின் பங்களிப்பிலேயே தங்கியுள்ளது

அதற்கு நமது தெளிந்த பார்வையினூடாகவே சாத்தியமாகும்

அதை அவர்களின் பாணியிலே விட்டு விடுவோம் நாடு கடந்த தமிழீழ அரசு க்கு எம்மால் ஆன முழு ஒத்துழைப்பையும் வழங்குவோம்

இதற்கிடையில் தலைவரது இறப்பு பற்றிய விவாதங்களை இத்துடன் விட்டு விடுவோம்

தலைவரை எமது மனங்களில் நிறுத்துவோம் அவரது இலட்சியத்தை தொடருவோம்

ஈழம் வெல்லும் அதை காலம் சொல்லும் அது வரை எமது போராட்டத்தை தொடர்வோம்

எமது தலைவர் ஒன்றே தான் அது மாண்புமிகு தேசியத் தலைவர் வே.பிரபாகரன் அவர்கள் மட்டுமே .....................

இனி தொடருங்கள் ,,,,,,,,,,,,,,,,,,,,



நாடு கடந்த தமிழீழ அரசின் பின்னால் அணி திரள்வோம்: புலிகளின் புலனாய்வுத்துறை அறிவிப்பு


தமிழீழத் தேசியத் தலைவர் அவர்களுக்கும், அவருடன் வீரச்சாவடைந்த தமிழீழ விடுதலைப் புலிகளின் போராளிகள் மற்றும் தளபதிகளுக்கும் தாம் வீரவணக்கத்தைச் செலுத்துவதாக அறிவித்துள்ள தமிழீழ விடுதலைப் புலிகளின் புலனாய்வுத்துறை, தமிழ் பேசும் மக்களின் அரசியல் அபிலாசைகளை வென்றெடுக்கும் போராட்டத்தின் அடுத்தபடி நிலையாக - தற்போது உருவாக்கப்படவுள்ள 'நாடு கடந்த தமிழீழ அரசு’ அமைவதற்கு தமிழ் பேசும் மக்கள் எல்லோரும் ஒன்றிணைந்து பணியாற்ற வேண்டும் எனவும் வேண்டுகோள் விடுத்துள்ளது.

இது தொடர்பாக தமிழீழ விடுதலைப் புலிகளின் புலனாய்வுத்துறையின் வெளியகப் பணிப் பிரிவின் பொறுப்பாளர் கதிர்காமத்தம்பி அறிவழகன் இன்று வியாழக்கிழமை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளதாவது:

எம் பாசத்துக்குரிய தமிழ் பேசும் மக்களே!

எமது இயக்கத்தின் தலைவரும், பிரதம இராணுவத் தளபதியுமான தமிழீழத் தேசியத் தலைவர் மேதகு வேலுப்பிள்ளை பிரபாகரன் அவர்கள் வீரச்சாவு அடைந்துவிட்டார் என்பதனை விடுதலைப் புலிகளின் புலனாய்வுத்துறை இப்போது உறுதிப்படுத்தியிருக்கின்றது.

தேசியத் தலைவர் அவர்களைப் பாதுகாப்பான இடத்தை நோக்கி நகர்த்தும் முயற்சிகள் தொடர்பான இறுதி நேரச் சம்பவங்கள் பற்றிய தகவல்கள் அறிந்த - தற்போது பாதுகாப்பான இடத்தை அடைந்துள்ள - எமது புலனாய்வுப் போராளிகள், வேறு துறைப் போராளிகள், மற்றும் சிறிலங்கா படைத்துறையின் உயர்பீடத்துடன் தொடர்புடைய எமது தகவலாளர்கள் ஆகியோர் தலைவர் அவர்களது வீரச்சாவினை இப்போது உறுதிப்படுத்துகின்றனர்.

கடந்த மே மாதத்தின் நடுப் பகுதியில் - 15 (வெள்ளிகிழமை) முதல் 19 ஆம் திகதி (செவ்வாய்க்கிழமை) வரையான காலப் பகுதியில் வன்னி - முள்ளிவாய்க்கால் களப் பிரதேசத்திலிருந்து முரண்பட்ட பல தகவல்கள் வெளிவந்தபடி இருந்தன.

சீரான தகவல் பரிமாற்ற வசதிகள் இருக்காமையாலும், அங்கிருந்து வெளியேறிய எமது புலனாய்வுப் பேராளிகள் பாதுகாப்பான இடங்களுக்குச் சென்று சேர முடியாமல் இருந்தமையாலும், அவர்களால் அனுப்பப்பட்ட பல தகவல்கள் சிதைவடைந்த நிலையிலேயே வெளியில் கிடைத்திருந்தன.

அதனால் - அப்போது கிடைத்த தகவல்களைச் சீர்ப்படுத்தி எடுத்ததன் அடிப்படையில் - எமது அன்புக்குரிய தலைவர் அவர்கள் நலமாக இருப்பதாகக் கருதியே அவ்வாறான ஒரு செய்தியை வெளியிட நாம் மே மாதம் 22 ஆம் நாள் தீர்மானித்தோம்.


இதேவேளை - தலைவர் அவர்களது பாதுகாப்பான இருப்பு மற்றும் நகர்வுகள் தொடர்பாக - இறுதிவரை அவருடன் கூட இருந்த தளபதிகளால் பல தகவல்கள் வழங்கப்பட்டு வந்தன. இவற்றின் அடிப்படையிலேயே - எமது இயக்கத்தின் அனைத்துலக உறவுத்துறையின் இயக்குநர் திரு. செல்வராஜா பத்மநாதன் அவர்களும் - ஆரம்பத்தில் - இருவேறு முரண்பட்ட செய்திகளைத் தரும் சூழ்நிலைக்குள் தள்ளப்பட்டிருந்தார் என்பதையும் எம்மால் உணர முடிகின்றது.

தமிழீழத் தேசியத் தலைவர் அவர்களது அந்த மாபெரும் தியாகம் தொடர்பான உறுதிப்படுத்தப்படாத ஒரு செய்தியை 22 ஆம் திகதி வெளியிட்டமைக்காக வருத்தப்படுகின்ற அதேவேளையில், அவ்வாறான ஒரு செய்தியை வெளியிட்டு குழப்பகரமான ஒரு சூழ்நிலையை ஏற்படுத்தியதற்காக எமது அன்புக்குரிய மக்களிடம் தமிழீழ விடுதலைப் புலிகளின் புலனாய்வுத்துறை மன்னிப்புக் கோருகின்றது.

எமது தேசியத் தலைவரின் வீரச்சாவு தொடர்பாக பல்வேறு தரப்பினர் பல்வேறு தகவல்களை வெளியிட்டு வந்தனர். அவர் கைது செய்யப்பட்டதாகவும், சரண் அடைந்ததாகவும், விசாரணைக்கு உட்படுத்தப்பட்ட பின் கொல்லப்பட்டதாகவும் அவர் தற்கொலை செய்துகொண்டார் எனவும் பல்வேறு மாறுபட்ட செய்திகள் வெளியாகிய வண்ணம் உள்ளன.

இந்த நிலையில் - எந்த செய்தியினையும் தகவலையும் முழுமையாக உறுதிப்படுத்தி வெளியிட வேண்டிய கடமை புலனாய்வுத்துறையினர் ஆகிய எமக்கு உண்டு. அதனடிப்படையில் - தேசியத் தலைவர் அவர்கள் சரணடையவோ அல்லது கைது செய்யப்படவோ இல்லை என்பதையும், அவர் சிறிலங்கா படையினருடன் போரிட்டே வீரகாவியம் ஆகினார் என்பதையும் நாம் மிகத் திடமாக உறுதிப்படுத்துகின்றோம்.

இப்போது தோன்றியுள்ள மிக உச்ச நெருக்கடியான கால கட்டத்தில் - எம் பெருந் தலைவர் அவர்கள் உருவாக்கி, வளர்த்தெடுத்து, நமது கைகளில் தந்து விட்டுச் சென்றுள்ள எமது விடுதலைப் போராட்டத்தை - அதே உறுதிப்பாட்டுடனும், அதே கட்டுக்கோப்புடனும், அதே ஒருங்கிணைவுடனும் நாங்கள் முன்னெடுத்துச் செல்ல வேண்டும்.

எமது மக்களின் அரசியல் அபிலாசைகளை வென்றெடுக்கும் எமது இறுதி இலட்சியத்தை நோக்கிய எமது போராட்டத்தின் அடுத்த படிநிலையாக - தற்போது உருவாக்கப்படவுள்ள 'நாடு கடந்த தமிழீழ அரசு' அமைவதற்கு நாம் எல்லோரும் சேர்ந்து பணியாற்றுவதே எம் முன்னால் உள்ள கடமையாகும்.

தமிழீழத் தேசியத் தலைவர் அவர்களுக்கும், அவருடன் வீரச்சாவடைந்த எமது இயக்கத்தின் போராளிகள், தளபதிகளுக்கும் வீரவணக்கத்தைச் செலுத்துவதுடன், இந்தப் போரில் படுகொலை செய்யப்பட்ட எமது பாசத்துக்குரிய மக்களுக்கு விடுதலைப் புலிகளின் புலனாய்வுத்துறை தனது வணக்கத்தையும் தெரிவித்துக்கொள்ளுகின்றது.

"புலிகளின் தாகம் தமிழீழத் தாயகம்"


Comments