இந்தியா இனி நமக்கு நீ மகா பாரதம் அல்ல! மகா பாதகம்
Posted by எல்லாளன் அரசபயங்கரவாதம், இந்தியா, ஈழம் 9:45 AM
மகா பாரதமே! நீ இந்த மகா பாதகத்தைச் செய்தது தான் ஏனோ?
இந்தியா - பெரிய தேசம்; சிறிய இதயம் :

உயர்ந்த கோயிற் கோபுரங்கள், தாழ்ந்த உள்ளங்கள்! காந்தி தேசம், கருணையற்ற இராஜாங்கம்!! அன்னை இந்திரா தேசமே!!! இது தான் உன் தாய்மையா? ஓ! பாரத மாதாவே!!!
உன் மைந்தர்கள் இராஜதந்திரிகளா? இல்லை இராட்சதர்களா? - ஒரு கொலைக் குற்றவாளிக்குக் கூட சிகிச்சை அளிப்பது தான் தர்மம்.
வந்து தங்கிப் போக இது தர்மசாலை இல்லை என்கிறார் சுவாமி.
ஆம், இந்த நாராயண சிவசங்கர் சுவாமிகள் தான் முள்ளிவாய்க்காலில் நர மாமிசத்தை உண்டு, தமிழ் மக்களின் இரத்தத்தையும் குடித்தனரா?
இந்த அன்னை பிரபாகரனைப் பெற்றது தான் குற்றமா? அவரைத்தான் கொன்று விட்டோம் என்கிறீர்களே! அப்படியானால் இன்னுமேன் அச்சம்?
கிறிஸ்தவர்களிற்கு ஜெருசலெம் மீது ஒரு பக்தி! இஸ்லாமியர்களிற்கு மக்கா மீது ஒரு மதிப்பு!! ஈழ இந்துக்களிற்கு இந்தியா மீது ஒரு அபிமானம்!!!
ஏகபத்தினி விரதனின் இராமேஸ்வரமும், சிவசக்தி “பார்வதிக்” கயிலையும், திரிபுரசுந்தரி சீர்காழியும், நான்மறைக் கூடல் மதுரை மீனாட்சியும், ஐங்கரனின் அருள்மிகு ஆலயங்களும், ஆறுமுகத்தானின் ஏழு படை வீடுகளும், அட்ட பாலகரின் அணையாத தீபங்களும், எட்டுத் திக்கும் ஒலிக்கும் ஆலய மணிகளும்,
நவக்கிரகங்களிற்கும் கோவில் கொண்ட மகா பாரதமே! நீ இந்த மகா பாதகத்தைச் செய்ததது தான் ஏனோ?
இப்போது புரிகிறது நீ சிறீலங்கா நமோ நமோ தாயிலும் கொடியவள் என்று. அன்று அவள் விடுவித்தாள் இன்று நீ துரத்துகிறாயா?
ஆம் சிங்களம் பங்காளிப் பகையாளி இந்தியா தான் நிஜமான நிரந்தரப் பகையாளியா?
நிரூபன் சென் சொன்னார் பருத்தித்துறையில் நின்று அன்று இராம கிருஷ்ணரும், விவேகானந்தரும், காந்தியும், நேதாஜியும் பகவத்சிங்கும் பிறந்த மண் பாரத மண் என்று.
எங்கள் நேதாஜி பிரபாகரன் தான். காந்தி தேசத்தால் ஒழிந்த தலைவன் தான் தமிழ்ப் பகவத்சிங்.
சிறீலங்காவில் ஒரு சிங்கள ஒன்லி இந்து சமுத்திரத்தில் இந்தியா ஒன்லிப் பொலிசியா? ராஜீவ் காந்தியைப் பார்த்து ஜே ஆர் சொன்னார் நீ ஆசியாவின் பொலிஸ்காரனாய் இரு என்று.
நீ இராட்சதியாய் மாறியது எப்போது? காஞ்சியும் திருப்பதியும் பழனியும் இன்னுமாக எத்தனையோ திருத்தலங்களும், புண்ணிய நதிகளும் இமயமாய் உயர்ந்த பல்வேறு மலைக் கோயில்களும்
தரிசிக்க மட்டுந் தானா? இவைகள் எல்லாம் வெறும் கல்லும் மண்ணுமாகியது எப்போது? சிறிய ஈழம் வளரந்திருந்த போராட்டம், பெரிய இந்தியா சிறிய இதயம்.
சிறிய பிரதேசம், அதிக பிணங்கள் ஆறு முன்னே அடுத்த காயம்
முடிவாக இந்தியா இனி நமக்கு நீ மகா பாரதம் அல்ல! மகா பாதகம்.
-குகதாசன் , கனடா
இந்தியா - பெரிய தேசம்; சிறிய இதயம் :

உயர்ந்த கோயிற் கோபுரங்கள், தாழ்ந்த உள்ளங்கள்! காந்தி தேசம், கருணையற்ற இராஜாங்கம்!! அன்னை இந்திரா தேசமே!!! இது தான் உன் தாய்மையா? ஓ! பாரத மாதாவே!!!
உன் மைந்தர்கள் இராஜதந்திரிகளா? இல்லை இராட்சதர்களா? - ஒரு கொலைக் குற்றவாளிக்குக் கூட சிகிச்சை அளிப்பது தான் தர்மம்.
வந்து தங்கிப் போக இது தர்மசாலை இல்லை என்கிறார் சுவாமி.
ஆம், இந்த நாராயண சிவசங்கர் சுவாமிகள் தான் முள்ளிவாய்க்காலில் நர மாமிசத்தை உண்டு, தமிழ் மக்களின் இரத்தத்தையும் குடித்தனரா?
இந்த அன்னை பிரபாகரனைப் பெற்றது தான் குற்றமா? அவரைத்தான் கொன்று விட்டோம் என்கிறீர்களே! அப்படியானால் இன்னுமேன் அச்சம்?
கிறிஸ்தவர்களிற்கு ஜெருசலெம் மீது ஒரு பக்தி! இஸ்லாமியர்களிற்கு மக்கா மீது ஒரு மதிப்பு!! ஈழ இந்துக்களிற்கு இந்தியா மீது ஒரு அபிமானம்!!!
ஏகபத்தினி விரதனின் இராமேஸ்வரமும், சிவசக்தி “பார்வதிக்” கயிலையும், திரிபுரசுந்தரி சீர்காழியும், நான்மறைக் கூடல் மதுரை மீனாட்சியும், ஐங்கரனின் அருள்மிகு ஆலயங்களும், ஆறுமுகத்தானின் ஏழு படை வீடுகளும், அட்ட பாலகரின் அணையாத தீபங்களும், எட்டுத் திக்கும் ஒலிக்கும் ஆலய மணிகளும்,
நவக்கிரகங்களிற்கும் கோவில் கொண்ட மகா பாரதமே! நீ இந்த மகா பாதகத்தைச் செய்ததது தான் ஏனோ?
இப்போது புரிகிறது நீ சிறீலங்கா நமோ நமோ தாயிலும் கொடியவள் என்று. அன்று அவள் விடுவித்தாள் இன்று நீ துரத்துகிறாயா?
ஆம் சிங்களம் பங்காளிப் பகையாளி இந்தியா தான் நிஜமான நிரந்தரப் பகையாளியா?
நிரூபன் சென் சொன்னார் பருத்தித்துறையில் நின்று அன்று இராம கிருஷ்ணரும், விவேகானந்தரும், காந்தியும், நேதாஜியும் பகவத்சிங்கும் பிறந்த மண் பாரத மண் என்று.
எங்கள் நேதாஜி பிரபாகரன் தான். காந்தி தேசத்தால் ஒழிந்த தலைவன் தான் தமிழ்ப் பகவத்சிங்.
சிறீலங்காவில் ஒரு சிங்கள ஒன்லி இந்து சமுத்திரத்தில் இந்தியா ஒன்லிப் பொலிசியா? ராஜீவ் காந்தியைப் பார்த்து ஜே ஆர் சொன்னார் நீ ஆசியாவின் பொலிஸ்காரனாய் இரு என்று.
நீ இராட்சதியாய் மாறியது எப்போது? காஞ்சியும் திருப்பதியும் பழனியும் இன்னுமாக எத்தனையோ திருத்தலங்களும், புண்ணிய நதிகளும் இமயமாய் உயர்ந்த பல்வேறு மலைக் கோயில்களும்
தரிசிக்க மட்டுந் தானா? இவைகள் எல்லாம் வெறும் கல்லும் மண்ணுமாகியது எப்போது? சிறிய ஈழம் வளரந்திருந்த போராட்டம், பெரிய இந்தியா சிறிய இதயம்.
சிறிய பிரதேசம், அதிக பிணங்கள் ஆறு முன்னே அடுத்த காயம்
முடிவாக இந்தியா இனி நமக்கு நீ மகா பாரதம் அல்ல! மகா பாதகம்.
-குகதாசன் , கனடா
மூடி மறைக்கப்படும் தொடரும் வன்னிப் பெரும் துயர்
Posted by எல்லாளன் அரசபயங்கரவாதம், ஈழம், வன்னி அவலம் 9:45 AM
தேர்தல் திருவிழாக்களில் அதிகம் பாதிக்கப்பட்டது வன்னி மக்கள்தான். அதுவும் தமிழ் அரசியல்வாதிகளால் தேர்தலுக்காக நன்றாக பயன்படுத்தப்பட்டார்கள் வன்னி மக்கள் அதாவது, வன்னி மக்களின் துயரம் அவலம் சில தமிழ் அரசியல் கட்சிகளின் பிரசாரத்திற்கு நன்றாகப் பயன்பட்டன. முள்ளிவாய்க்கால் எங்கே இருக்கிறது என்றே தெரியாதவர்கள், அது எப்படி இருந்தது என்று அறியாதவர்கள் எல்லாம் வன்னித் துயரத்தை சில்லறை விலைக்கு விற்றார்கள். இதுவும் வன்னி மக்களுக்கு செய்யப்பட்ட ஒரு மிகப்பெரிய துரோகமே.ஆனால், வன்னி மக்களோ வன்னிப் போரின்போது சந்தித்த அவலங்களுக்கு நிகரான அவலங்களையும் துயரங்களையும் தொடர்ந்து அனுபவித்துக் கொண்டே இருக்கிறார்கள். 2006இல் சமாதானப் பேச்சுவார்த்தை முடிவுக்கு வந்ததையடுத்து இந்தத் தொடர் கதை ஆரம்பமாகியது.
முதலில் வன்னிக்குள் போரின் போது சந்தித்த பேரவலம். சொல்லவும் முடியாமல் விழுங்கவும் முடியாமல் தங்களுக்குள்ளேயே நொந்தும் வெந்தும் வாழவேண்டிய நிர்ப்பந்தம். இறுதிப்போரின் அத்தனை வலியும், அத்தனை பெரிய வலிமையான நெருக்கடிகளும் அவர்களின் தலையில் இறங்கியது.
பின்னர் முகாம் வாழ்க்கை அவலம். அதற்குப் பிறகு இப்போது மீளக்குடியமர்வில் தீராத பிரச்சினைகளும் முடியாத அவலங்களும் தாங்கவே முடியாத துயரங்களும். போர்க்களத்திலிருந்து பாதுகாப்பான பகுதி ஒன்றிற்கு வெளியேறுவதற்காக வன்னி மக்கள் பட்டபாடு சாதாரணமானதல்ல.
யுத்தப் பகுதியில் இருந்து வெளியேறினால் போதும் என்ற நிலை அப்போது அவர்களிடம் இருந்தது. ஏனென்றால் அந்த நெருக்கடியில் இருந்து விடுபட்டால் போதும் என்ற உணர்வே அப்போது இருந்தது.
அதைப்போலவே முகாம் வாழ்க்கை அவலத்திலிருந்து விடுபட்டு தங்கள் சொந்த ஊர்களுக்கு திரும்புவதற்காக அவர்கள் பெரும் பாடுபட்டார்கள். பல இழுபறிகளுக்குப் பின்னர் சொந்த ஊருக்கு அவர்கள் அனுப்பப்பட்டபோது உண்மையில் மகிழ்ந்தார்கள். என்னதான் இருந்தாலும் சொந்த இடத்திற்கு திரும்பிவிட்டால் எதையாவது செய்து பிழைத்துக் கொள்ளலாம் என்று அவர்கள் நம்பினார்கள். ஆனால், அவர்களுடைய மகிழ்ச்சிக்கும் நம்பிக்கைக்கும் எதிராகவே அங்கே நிலைமைகள் உள்ளன.
மீள்குடியேற்றம் என்பது அகதி வாழ்க்கையை முடிவுக்குக் கொண்டுவருவதற்குப் பதிலாக அதை அப்படியே தொடர்ந்தும் அவலங்களுடன் பேணுவதாகவே இருக்கிறது. சொந்த ஊரில், சொந்த வீட்டில் அகதிகளாகவே, எதற்கும் வழியற்றவர்களாகவே இந்த மக்கள் இருக்கின்றார்கள்.
போரில் முற்றாக அழிந்தும் சிதைந்தும் போயுள்ள வன்னிப் பகுதியில் மீள்குடியேற்றம் என்பது அடிப்படை வசதிகளை ஏற்படுத்திய பின்னரே மேற்கொள்ளப்பட்டிருக்க வேண்டும். போரில் பாதிக்கப்பட்ட எல்லா நாடுகளிலும் இதுவே நடைறை. இலங்கையிலும் போருக்குப் பின்னரான மீள்குடியேற்றம் அப்படியே மேற்கொள்ளப்படும் எனச் சொல்லப்பட்டது.
முகாமிலிருந்து மக்களை மீள்குடியேற்றத்திற்கு அனுமதிப்பதில் அரசாங்கம் எடுத்துக் கொண்ட காலதாமதம் இந்த அடிப்படை கட்டுமானங்களை சீர்படுத்துவதற்காகவே என்று கூறப்பட்டது. ஆனால், போர் முடிந்து ஏறக்குறைய ஓராண்டு நெருங்குகின்றபோதிலும் அங்கே எந்த அடிப்படை வசதிகளும் செய்யப்படவில்லை. வன்னிப் பகுதியை மூடியே அரசாங்கம் வைத்திருக்கிறது.
மீள்குடியேற்றப் பகுதிகளில் மிதிவெடி இன்னும் முற்றாக அகற்றப்படவில்லை. அனுமதிக்கப்பட்ட வளவுகளில் மிதிவெடி அபாய அறிவிப்பு நாடாக்களும் பெயர் பலகைகளும் அச்சுறுத்திக் கொண்டே இருக்கின்றன. வீதிகள் பற்றை மூடி குச்சொழுங்கைகளாக, ஒற்றையடிப் பாதைகளாக மாறிவிட்டன. இந்தப் பாதைகளில் சனங்களும் பாம்புகளும் ஒன்றாகவே திரிவதை நீங்கள் பார்க்கலாம்.
பகலில் சனங்கள் அதிகம் என்றால் இரவில் பாம்புகள் அதிகம்.
மின்சாரம் இல்லை. குடிநீருக்கு மிகப்பெரிய தட்டுப்பாடு. தண்ணீர் பிரச்சினை ஆகப் பெரும் பிரச்சினையாக இருக்கிறது. பல கிணறுகள் இடிந்து பாழாகிவிட்டன. மிஞ்சிய கிணறுகளை இறைத்துப் பாவிக்க வசதியில்லை. ஒரு நீர் இறைக்கும் இயந்திரத்தைப் பெறுவதற்கே சிரமப்படுகின்றார்கள் மக்கள்.
இராணுவத்தினர் சில பகுதிகளுக்கு குடிநீர் விநியோகம் செய்கின்றார்கள். அரச அதிகாகளின் ஏற்பாட்டில் செய்யப்படும் குடிநீர் விநியோகம் சீரில்லாமலே இருக்கிறது.
காய்ந்து எரிக்கும் கடுமையான வெய்யிலில், புதர்மண்டிய வீதிகளில் தண்ணீருக்காக அலையும் சனங்களைப் பார்க்கலாம். சில கிராமங்களில் இப்போது ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியினர் நீர் இறைக்கும் இயந்திரங்களையும், நீர் கொள்கலன்களையும் வழங்கி வருகின்றார்கள். ஆனாலும் இது போதாது.
வீடுகளுக்குப் பதில் குடிசைகள், கொட்டில்கள், தறப்பாள் கூடாரங்கள்தான் அநேகமாக அங்கே உள்ளன. கொளுத்தும் வெய்யிலில் இந்த சிறிய அமைப்புகளுக்குள் மக்கள் கிடந்து வதைபடுகின்றார்கள்.
எவருக்கும் சீரான தொழில் இல்லை. முறையான வருமானம் இல்லை. கொடுக்கப்படுகின்ற நிவாரணத்திலும் சீரின்மையே நிலவுகிறது. சித்திரைப்புத்தாண்டை முன்னிட்டு வழங்கப்பட்ட நிவாரணத்தின்போது பல கூட்டுறவுக் கடைகளில் அரிசி வழங்கப்படவில்லை.
ஒரு சைக்கிளுக்குக்கூட வழியில்லாமலேயே பல குடும்பங்கள் இருக்கின்றன. பாடசாலைகளில் படிக்கின்ற சில பிள்ளைகளுக்கு மட்டும் சைக்கிள்கள் கொடுக்கப்பட்டுள்ளன. ஒரு குடும்பத்தில் மூன்று அல்லது அதற்கு மேற்பட்ட பிள்ளைகள் இருக்கின்றவர்களுக்கே இந்தச் சைக்கிள்கள் வழங்கப்பட்டுள்ளன.
மற்றவர்கள் எல்லாம் நடந்துதான் திகிறார்கள். பலர் போர் காலத்தில் காயப்பட்டவர்கள். கை, கால்களை இழந்தவர்கள். இவர்களும் தங்களுடைய தேவைகளுக்காக நடந்துதான் செல்கிறார்கள்.
இடிந்துபோன பாடசாலைகளில் சீரில்லாத கூரைகளின் கீழே பிள்ளைகள் படிக்கிறார்கள்.
முன்னர் இருந்ததைவிட மூன்றில் ஒரு பங்கு அல்லது நான்கில் ஒரு பங்கே பிள்ளைகள் படிக்கின்றார்கள். வெளி இடங்களில் இருந்து வருகின்ற ஆசிரியைகள் இரண்டு அல்லது மூன்று மணித்தியாலங்களே கற்பிக்கின்றார்கள். ஏதோ சாட்டுக்குத்தான் பள்ளிக்கூடங்கள் இயங்குவதைப்போல் இருக்கிறது. ஓரளவுக்கு சீராக நடப்பது பஸ் போக்குவரத்து மட்டும்தான்.
பாதிக்கப்பட்ட மக்களின் எந்த விபரங்களும் இதுவரை திரட்டப்பட்டவில்லை. சொத்து இழப்புக்கள், உயிர் இழப்புகள், அங்கவீனம் பற்றிய விபரங்கள் எதுவுமே சேகரிக்கப்படவில்லை.
அதனால், இழப்பீடுகள், உதவிகள் போன்ற எதுவுமே வழங்கப்படவுமில்லை. அதற்கான ஆயத்தங்கள்கூட நடைபெறுவதாகவும் இல்லை.
மீள்குடியேறியவர்களுக்காக ஒதுக்கப்பட்டிருக்கும் 20 ஆயிரம் ரூபாய் கொடுப்பனவை பெறுவதாக இருந்தால் இந்த மக்கள் தங்கள் கிராமங்களில் நாற்பது நாள் வேலை செய்ய வேண்டுமென்று அறிவுறுத்தப்பட்டுள்ளது. தங்கள் வீடுகளைத் துப்பரவு செய்தல், காணிகளைச் சீராக்குதல், வயல்களை பயிர்ச்செய்கைக்கு ஏற்றமாதிரி ஒழுங்குபடுத்தல் போன்ற முக்கியமான வேலைகளையே அவர்களால் ஒழுங்காகச் செய்ய முடியவில்லை. எதற்கும் அடிப்படை வசதிகள் இல்லாமல் இருப்பதே முக்கியமான காரணமாகும். வருமானம் இல்லாத நிலையில் இருக்கும்போது அவர்களால் எதையுமே திட்டமிட முடியவில்லை. அதனால், எதையும் செய்யவும் முடியவில்லை.
பொதுவாக மக்கள் வாழக்கூடிய நிலையில் இந்த மீள்குடியேற்றம் நடைபெறவேயில்லை.
இந்த மீள்குடியேற்ற மக்களின் பிரச்சினைகள், தேவைகள் பற்றி அரச அதிகாரிகள் தொடக்கம் ஊடகங்கள், அரசியல் கட்சிகள், நாடாளுமன்ற உறுப்பினர்கள், அரசாங்கம், சர்வதேச சமூகம், புலம்பெயர் மக்கள் என எந்தத் தரப்பிற்கும் உரிய அக்கறையில்லை என்றுதான் சொல்லவேண்டும்.
அரசாங்கத்தால் மீள்குடியேற்றத்திற்கு தேவையான அத்தனை வசதிகளையும், ஏற்பாடுகளையும் செய்ய முடியாது. அரச இயந்திரம் குறிப்பிட்ட கால எல்லைக்குள் இந்த அடிக்கட்டுமானங்களை நிர்மாணித்துவிடவும் இயலாது. உண்மையில் அரசாங்கம் திறந்த மனதுடன் வெளித் தரப்புகளை இணைத்தே இந்த ஏற்பாடுகளை செய்ய முடியும்.
ஆனால், அதற்கு அரசாங்கம் தயங்குகிறது. அரசாங்கத்தின் இந்தத் தயக்கத்தை அரசியல் கட்சிகளும் அரசியல் தலைவர்களும் ஊடகங்களும் போக்கவேண்டும். அரசுக்கு இந்த மீள்குடியேற்றம் தொடர்பாக அழுத்தத்தையோ அல்லது இணக்கத்தையோ ஏற்படுத்த வேண்டும்.
ஆனால், மக்களுக்கு உதவி செய்வதற்குப் பதிலாக, அவர்களுடைய பிரச்சினைகளைத் தீர்ப்பதற்குப் பதிலாக, இந்த மக்களின் அவலத்தையும் துயரத்தையும் வைத்து அரசியல் நடத்தும் போக்கு சில கட்சிகளிடம் நிலவுகிறது. இது மிக மோசமான கவலைக்குரிய ஒரு விசயம்.
அர்த்தமுள்ள மீள்குடியேற்றம் ஒன்றை ஏற்படுத்துவதே இப்போது முக்கியமானது. இதுதான் வன்னி மக்களின் துயரத்தை டிவுக்குக் கொண்டு வரக்கூடியது. ஓர் இயல்புச் சூழலை உருவாக்குவதாயின் அதற்காக அரசாங்கம் மட்டும் முயற்சித்தல் போதாது. ஊடகங்கள், அரசியல் கட்சிகள், மக்களின் பிரதிநிதிகள் எனச் சகல தரப்பினன் பங்களிப்பும் கடுமையான உழைப்பும் அவசியம். தமிழ் மக்களின் அரசியல் உரிமைப் போராட்டத்திற்காக அதிகம் அதிகம் துயரங்களைச் சுமந்தவர்கள் வன்னி மக்கள். இந்த உரிமைப் போராட்டத்திற்காக தங்கள் வாழ்வில் அதிகூடிய தியாகங்களைச் செய்தவர்கள் இந்தச் சனங்கள்.
ஆனால், இன்று முகாம்களிலும் காடாகிய தங்கள் கிராமங்களிலும் ஒரு நாள் பொழுதைக் கழிப்பதற்கே மிகவும் கஷ்டப்படும் வாழ்க்கையைப் பரிசாகப் பெற்றுள்ளார்கள் இவர்கள். ஒரு மீள்குடியேறிய குடும்பத்தின் நிலை என்பது வன்னி முழுவதின் முடிவுறாத துயரமாகவே நீண்டு கொண்டு இருக்கிறது. சனங்கள் தங்கள் கவலைகளை முறையிடுவதற்கு வழியில்லை.
அவர்கள் தங்களுடைய தேவைகளை நிறைவேற்றுவதற்கு வாய்ப்பில்லை. ஆனால், அரசாங்கம் தொடக்கம் தமிழ் அரசியல் கட்சிகள் வரையில் வன்னி மக்களை வைத்து, அவர்களின் துயரங்களை வைத்து தமது இலாபங்களை தத்தம் பாணியில் நிறைவேற்றிக்கொண்டே இருக்கின்றன.
கிளிநொச்சி மாவட்டத்தின் பூநகரி, கரைச்சி, கண்டாவளை, முல்லைத்தீவு மாவட்டத்தின் துணுக்காய், ஒட்டுசுட்டான், கரைதுறைப்பற்று, பாண்டியன்குளம் மற்றும் வவுனியா மாவட்டத்தின் நெடுங்கேணி, வவுனியா வடக்கு ஆகிய உதவி அரசாங்க அதிபர் பிவுகளில் மீள்குடியேற்றப்பட்டிருக்கும் இந்த அகதிகள் இன்னும் எத்தனை ஆண்டுகளுக்கு அகதிகளாகவே இருக்கப்போகிறார்கள் என்று யாருக்குத் தெரியும். வன்னி துயரக் காடாகவே வளர்ந்து கொண்டிருக்கிறது. இதுதான் தீராத கவலைக்குரிய விடயம்
நாடாளுமன்றத் தேர்தல் முடிவுகளும் சர்வதேச சமூகத்தின் எதிர்பார்ப்புகளும்
Posted by எல்லாளன் ஆய்வுகள், ஈழம் 9:36 AM
முள்ளிவாய்க்கால் சமரின் பின் இரண்டு நாடளாவிய தேர்தல் திருவிழாக்கள்
முடிவடைந்துவிட்டன. இடம்பெயர்ந்தோர் வாழ்வில், மாறுதல்கள் இல்லை.
யாழ்.குடாவை நோக்கிய உல்லாசப் பயணங்களுக்கு மட்டும் குறைவில்லை.
அரசியல் கோட்பாட்டு மோதலிலும் தமிழ் மக்கள் அக்கறை செலுத்தவில்லை.
குடாநாட்டில் தமிழ்த் தேசியத்திற்கு மக்கள் அளித்த வாக்குகள், நான்கில்
ஒன்றாக வீழ்ச்சியடைந்துள்ளது.


புள்ளிவிபரக் குறுக்கெழுத்துப் போட்டியில் முட்டி மோதும் வல்லுநர்கள்,
அரசியலிலிருந்து அந்நியமாகிப் போகும் பெரும்பான்மையான தமிழ் மக்களின்
விரக்தியைப் புரிந்து கொள்ளவில்லை.
இன்னுமொரு பத்தாயிரம் வாக்குகள் கிடைத்தால், தேசியப் பட்டியலில்
இரண்டு இடங்கள் கிடைக்கலாமென்கிற எதிர்பார்ப்போடு சிலர் காத்திருக்கின்றார்கள்.
இலங்கையின் தேசிய அரசியல் கட்டமைப்பில் தமிழ் வாக்காளர்கள்
நம்பிக்கையிழந்து போகிறார்களென்று யாழ். மாவட்டத்திலிருந்து தெரிவான சுரேஸ் பிரேமச்சந்திரன் எச்சரிப்பது மிக முக்கியமாக நோக்கப்பட வேண்டிய விவகாரம்.
2006ஆம் ஆண்டிலிருந்து இனந்தெரியாத ஆயுததாரிகளால் ஜோசப் பரராஜசிங்கம், ரவிராஜ் மற்றும் சிவநேசன் போன்றோர் கொல்லப்பட்ட நிகழ்வின் எதிர்வினைத் தாக்கங்கள், மக்கள் மனதில் இருந்து இன்னமும் அகலவில்லை.
தம்மால் தெரிவு செய்யப்பட்ட நாடாளுமன்றப் பிரதிநிதிகளின் உயிருக்கு, பாதுகாப்பில்லை என்கிற போது ஜனநாயக அரசியலின் மீது மக்கள் நம்பிக்கை
இழப்பதனை தவறென்று கூறமுடியாதுள்ளது.
கண்டி மாவட்டத்தில், ஜனநாயக மக்கள் முன்னணியின் சார்பில் போட்டியிடும் அதன் தலைவர் மனோ கணேசன் மீதும் அவரது ஆதரவாளர்கள் மீதும் தொடர்ச்சியாக வன்முறைகள் பிரயோகிக்கப்படுகிறது.
வன்முறைக் கலாசாரத்தின் கொதிநிலை மையமாக நாவலப்பிட்டி மாறி வருகிறது.
ஜனநாயகத்தை நிலைநாட்ட ஏற்பட்ட மோதலில், கண்டி மாவட்டத்தில்
மறுவாக்கெடுப்பு நடத்த தேர்தல் ஆணையாளர் உத்தரவிட்டுள்ளார். ஆயினும் கட்சிகளுக்கிடையிலான மோதல்கள் குறைந்தபாடில்லை. மலையக மக்களின்
நாடாளுமன்றப் பிரதிநிதித்துவத்தைக் குறைப்பதற்கு பேரினவாதம் விடுக்கும்
அச்சுறுத்தல்களால் தேர்தல் முறைமையின் மீதே தமிழ் மக்கள் நம்பிக்கையிழந்து போகக்கூடும்.
தேர்தல் முடிவுகள் வெளிவந்த பின்னரும் அம்பாறை மாவட்டத்தின் சில பகுதிகளில் பதற்றம் நிலவுவதாக செய்திகள் தெரிவிக்கின்றன. யாழ். குடாநாட்டில் வீடுகளுள் புகும் வன்முறையாளர்கள், பொருட்களைச் சூறையாடுவதோடு, முதியோர்களை கொன்றொழிக்கும் துயரச் சம்பவங்களும் இடம்பெற்றுள்ளன.
196 பிரதிநிதிகளுக்காக 22 மாவட்டங்களில் நடைபெற்ற இலங்கையின் ஏழாவது
நாடாளுமன்றத் தேர்தலில் 36 கட்சிகளும், 301 சுயேட்சைக் குழுக்களும்
போட்டியிட்டன.
தேர்தல் களத்தில் குதித்தவர்களின் எண்ணிக்கை 7620. இழந்த கட்டுப்
பணங்கள் திறைசேரியில் குவிந்திருக்கும். கண்டியில், மனோ கணேசன்
படும்பாட்டைப் பற்றி இந்த ஜனநாயகக் காவலர்களிடம் எடுத்துரைக்க எவருமில்லை போல் தெரிகிறது.
தேர்தல் ஜனநாயகத்தால் பாதிப்படைந்தவர் பட்டியலில் பாலித ரங்கே பண்டாரவும் இணைந்துள்ளார். தாக்குதல் தாரிகளைத் தேடிக் கண்டுபிடிப்பதும் சம்பவம் நடைபெற்று முடிந்தவுடன் விசாரணைக் கமிஷனை நியமித்து நீதியை நிலைநாட்டப்போவதாக கூறிக் கொள்வதும் மக்களுக்கு சலிப்பைத் தரும் விவகாரமாகிவிடும்.
செம்மணிப் படுகொலைகள் விசாரணைக்கு என்ன நடந்தது என்பது குறித்து எவருக்குமே தெரியாது. காலத்தை இழுத்தடித்தால் மக்கள் மறந்து விடுவார்கள் என்கிற ஞாபக சக்தியை பரிசோதிக்கும் வழிமுறையைத் தான் பல ஆட்சியாளர்கள் கடைப்பிடிக்கிறார்கள் போல் தெரிகிறது.
புத்தாண்டு வாழ்த்துக் கூறிய ஹிலாரி கிளின்டனும், ஜனாதிபதிக்கு நல்வாழ்த்துச் சொன்ன றொபர்ட் ஓ பிளேக்கும், இடம்பெயர்ந்து அவலப்படும் இலட்சக் கணக்கான தமிழ் மக்களின் நிலை குறித்துப் பேச மறந்து விட்டார்கள்.
13ஆவது திருத்தச் சட்டம் பற்றியும் அதிகாரப் பரவலாக்கம் குறித்தும் பேசுவதே அமெரிக்க அரசு, இலங்கை மீது செலுத்தும் அதிகபட்ச அழுத்தமாகவிருக்கிறது.
ஐ.நா.வின் மனித உரிமை நிபுணர் குழு அமைக்கும் இராஜதந்திர நகர்வுகளெல்லாம் நாடாளுமன்ற தேர்தல் முடிவுகளோடு மூச்சிழந்து போயுள்ளதை அவதானிக்க வேண்டும்.
இத்தேர்தலில் பேரினவாதச் சக்திகள் தோற்கடிக்கப்பட்டுவிட்டதாக புதிய கண்டுபிடிப்பொன்றையும் றொபர்ட் ஓ பிளேக் வெளியிட்டுள்ளார்.
இழப்பதற்கு ஏதுமற்ற இடம்பெயர்ந்த தமிழர்களும், தாயக மண்ணைத் தினமும் பறிகொடுத்துக் கொண்டிருக்கும் கிழக்கு மக்களும், ""கிடைப்பதைக் கொண்டு சிறப்புடன் வாழப் பழகிக்கொள்ள வேண்டும்''
என ஜாதிக ஹெல உறுமயவின் எல்லாவல மேத்தானந்த தேரர் கூறும் அறிவுரைகள், அமெரிக்க காதுகளுக்கு எட்டவில்லை போல் தெரிகிறது.
பிராந்திய நலன்களுக்கூடாக இலங்கையின் தேசிய இனப் பிரச்சினையை தரிசிக்கும் கழுகுக் கண்களுக்கு ஆட்சியாளர்கள் எல்லோரும் முற்போக்காளர்களாகத் தெரிவதில் வியப்பேதுமில்லை.தென்னாசியப் புவிசார் அரசியலில் கேந்திர முக்கியத்துவமிக்க மையமாக, இலங்கைத் தீவு மாறி வருவதை இந்தியாவும் அமெரிக்காவும் புரிந்து கொண்ட அளவுக்கு நம்மவர்கள் அதன் முக்கியத்துவத்தை உணர்ந்து கொள்ளவில்லை.
இந்திய ஆய்வாளர் பி.இராமன், இந்த வாரம் எழுதிய கட்டுரையொன்றில் இலங்கையில் சீனத் தலையீடு குறித்த நீண்ட புள்ளி விபரப்பட்டியலொன்றை முன்வைத்துள்ளார்.
கை மீறிச் செல்லுமளவிற்கு சீனாவின் செல்வாக்கு இலங்கையில் அதிகரித்திருப்பதாக அவர் எச்சரிக்கிறார்.
இந்திய நிறுவனங்களின் முதலீடுகளை அதிகரிப்பதனூடாக, சந்தைகளை கையகப்படுத்துவதே தற்போதைய நிலையில் இந்தியாவிற்கு இருக்கும் ஒரே தெரிவாக இராமனின் ஆலோசனை அமைகிறது.
அதாவது, சிங்கள தேசத்தின் நீண்டகால நிரந்தர நண்பன் யாரென்பதை
அறுதியிட்டுக் கூறும் காலமாக இருக்கும் இனிவரும் நாட்கள் பல செய்திகளை
உலக வல்லரசாளர்களுக்கு உணர்த்தப் போகிறது.
பிராந்திய நலன் குறித்த ஆதிக்கப் போட்டியில், அமெரிக்காவோடு தற்காலிக
கூட்டிணைவு தந்திரோபாயத்தை இந்தியா மேற்கொண்டாலும் இறுதிப் பிடிமானமும் விரைவில் தகர்ந்து போகும்.(ஙுதச்ண) நாணயத்தின் பெறுமதியை மீள் மதிப்பீடு (கீஞுதிச்டூதஞு ) செய்யுமாறு அமெரிக்க ஜனாதிபதி பராக் ஒபாமா விடுத்த எச்சரிக்கை கலந்து வேண்டுதலையும் சீன ஜனாதிபதி நிராகரித்து விட்ட விவகாரம் இங்கு நோக்கப்படல் வேண்டும்.
அது மீள் மதிப்பீடல்ல, மாறாக நாணய மதிப்பிறக்கம் என்பது சீனாவுக்கு
நன்றாகப் புரியும். நாணயத்தை மதிப்பிறக்கம் செய்தால் திறைசேரியில் இருக்கும் ஏறத்தாழ 2 ட்ரில்லியன் (கூகீஐஃஃஐON) அமெரிக்க டொலர்களின் மொத்த
பெறுமதி வீழ்ச்சியடையும்.
தன் தலையில் மண் அள்ளிப்போடும் யானையாக சீனா இருக்க விரும்பாதென்பதை அமெரிக்காவும் புரிந்து கொள்ளும்.இந்நிலையில் முரண்பாடுகளாக இருந்தாலும் சரி, அல்லது பொருளாதார உறவு நிலையாக இருந்தாலும் சரி, அமெரிக்காவைப் பொறுத்தவரை அதன் அதிகப்படியான புவிசார் இராஜதந்திர நெருக்கம் சீனாவை நோக்கியே நகர்கிறது.
இந்நிலையில், மஹிந்த ராஜபக்ஷவின் அரசாங்கம் பலம்பெறுவதும், சீனாவின் ஊடாக மேற்குலகின் ஆதரவைப் பெறுவதும் இந்தியாவிற்கு பல நெருக்கடிகளை
உருவாக்கலாம்.
தமிழ் மக்களின் தெரிவு செய்யப்பட்ட நாடாளுமன்ற அரசியல் தலைமையான தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு, இந்தியாவின் உதவியை நாடி நிற்கிறது.
அதேவேளை, மேற்குலகில் அதிகமாக வசிக்கும் புலம்பெயர் ஈழத் தமிழ் மக்கள்
ஒன்றிணைந்து மே 2 இல் நாடு கடந்த தமிழீழ அரசாங்கமொன்றினை
உருவாக்கப் போவதாக செய்திகள் வெளியாகியுள்ளன.
இரு துருவ அணிகளை ஒரு புள்ளியில் கையாளும் சிங்கள தேசத்தின்
இராஜதந்திரம் போன்று, தாயக புலம்பெயர் மக்களும் புதிய மூலோபாயத்தை வகுக்கலாம்.அது மேற்குலக மற்றும் இந்திய சமன்பாட்டில் அமைவது தவிர்க்க
முடியாததாக இருக்கும்.
-இதயச்சந்திரன்-
நன்றி -வீரகேசரி வாரவெளியீடு
முடிவடைந்துவிட்டன. இடம்பெயர்ந்தோர் வாழ்வில், மாறுதல்கள் இல்லை.
யாழ்.குடாவை நோக்கிய உல்லாசப் பயணங்களுக்கு மட்டும் குறைவில்லை.
அரசியல் கோட்பாட்டு மோதலிலும் தமிழ் மக்கள் அக்கறை செலுத்தவில்லை.
குடாநாட்டில் தமிழ்த் தேசியத்திற்கு மக்கள் அளித்த வாக்குகள், நான்கில்
ஒன்றாக வீழ்ச்சியடைந்துள்ளது.


புள்ளிவிபரக் குறுக்கெழுத்துப் போட்டியில் முட்டி மோதும் வல்லுநர்கள்,
அரசியலிலிருந்து அந்நியமாகிப் போகும் பெரும்பான்மையான தமிழ் மக்களின்
விரக்தியைப் புரிந்து கொள்ளவில்லை.
இன்னுமொரு பத்தாயிரம் வாக்குகள் கிடைத்தால், தேசியப் பட்டியலில்
இரண்டு இடங்கள் கிடைக்கலாமென்கிற எதிர்பார்ப்போடு சிலர் காத்திருக்கின்றார்கள்.
இலங்கையின் தேசிய அரசியல் கட்டமைப்பில் தமிழ் வாக்காளர்கள்
நம்பிக்கையிழந்து போகிறார்களென்று யாழ். மாவட்டத்திலிருந்து தெரிவான சுரேஸ் பிரேமச்சந்திரன் எச்சரிப்பது மிக முக்கியமாக நோக்கப்பட வேண்டிய விவகாரம்.
2006ஆம் ஆண்டிலிருந்து இனந்தெரியாத ஆயுததாரிகளால் ஜோசப் பரராஜசிங்கம், ரவிராஜ் மற்றும் சிவநேசன் போன்றோர் கொல்லப்பட்ட நிகழ்வின் எதிர்வினைத் தாக்கங்கள், மக்கள் மனதில் இருந்து இன்னமும் அகலவில்லை.
தம்மால் தெரிவு செய்யப்பட்ட நாடாளுமன்றப் பிரதிநிதிகளின் உயிருக்கு, பாதுகாப்பில்லை என்கிற போது ஜனநாயக அரசியலின் மீது மக்கள் நம்பிக்கை
இழப்பதனை தவறென்று கூறமுடியாதுள்ளது.
கண்டி மாவட்டத்தில், ஜனநாயக மக்கள் முன்னணியின் சார்பில் போட்டியிடும் அதன் தலைவர் மனோ கணேசன் மீதும் அவரது ஆதரவாளர்கள் மீதும் தொடர்ச்சியாக வன்முறைகள் பிரயோகிக்கப்படுகிறது.
வன்முறைக் கலாசாரத்தின் கொதிநிலை மையமாக நாவலப்பிட்டி மாறி வருகிறது.
ஜனநாயகத்தை நிலைநாட்ட ஏற்பட்ட மோதலில், கண்டி மாவட்டத்தில்
மறுவாக்கெடுப்பு நடத்த தேர்தல் ஆணையாளர் உத்தரவிட்டுள்ளார். ஆயினும் கட்சிகளுக்கிடையிலான மோதல்கள் குறைந்தபாடில்லை. மலையக மக்களின்
நாடாளுமன்றப் பிரதிநிதித்துவத்தைக் குறைப்பதற்கு பேரினவாதம் விடுக்கும்
அச்சுறுத்தல்களால் தேர்தல் முறைமையின் மீதே தமிழ் மக்கள் நம்பிக்கையிழந்து போகக்கூடும்.
தேர்தல் முடிவுகள் வெளிவந்த பின்னரும் அம்பாறை மாவட்டத்தின் சில பகுதிகளில் பதற்றம் நிலவுவதாக செய்திகள் தெரிவிக்கின்றன. யாழ். குடாநாட்டில் வீடுகளுள் புகும் வன்முறையாளர்கள், பொருட்களைச் சூறையாடுவதோடு, முதியோர்களை கொன்றொழிக்கும் துயரச் சம்பவங்களும் இடம்பெற்றுள்ளன.
196 பிரதிநிதிகளுக்காக 22 மாவட்டங்களில் நடைபெற்ற இலங்கையின் ஏழாவது
நாடாளுமன்றத் தேர்தலில் 36 கட்சிகளும், 301 சுயேட்சைக் குழுக்களும்
போட்டியிட்டன.
தேர்தல் களத்தில் குதித்தவர்களின் எண்ணிக்கை 7620. இழந்த கட்டுப்
பணங்கள் திறைசேரியில் குவிந்திருக்கும். கண்டியில், மனோ கணேசன்
படும்பாட்டைப் பற்றி இந்த ஜனநாயகக் காவலர்களிடம் எடுத்துரைக்க எவருமில்லை போல் தெரிகிறது.
தேர்தல் ஜனநாயகத்தால் பாதிப்படைந்தவர் பட்டியலில் பாலித ரங்கே பண்டாரவும் இணைந்துள்ளார். தாக்குதல் தாரிகளைத் தேடிக் கண்டுபிடிப்பதும் சம்பவம் நடைபெற்று முடிந்தவுடன் விசாரணைக் கமிஷனை நியமித்து நீதியை நிலைநாட்டப்போவதாக கூறிக் கொள்வதும் மக்களுக்கு சலிப்பைத் தரும் விவகாரமாகிவிடும்.
செம்மணிப் படுகொலைகள் விசாரணைக்கு என்ன நடந்தது என்பது குறித்து எவருக்குமே தெரியாது. காலத்தை இழுத்தடித்தால் மக்கள் மறந்து விடுவார்கள் என்கிற ஞாபக சக்தியை பரிசோதிக்கும் வழிமுறையைத் தான் பல ஆட்சியாளர்கள் கடைப்பிடிக்கிறார்கள் போல் தெரிகிறது.
புத்தாண்டு வாழ்த்துக் கூறிய ஹிலாரி கிளின்டனும், ஜனாதிபதிக்கு நல்வாழ்த்துச் சொன்ன றொபர்ட் ஓ பிளேக்கும், இடம்பெயர்ந்து அவலப்படும் இலட்சக் கணக்கான தமிழ் மக்களின் நிலை குறித்துப் பேச மறந்து விட்டார்கள்.
13ஆவது திருத்தச் சட்டம் பற்றியும் அதிகாரப் பரவலாக்கம் குறித்தும் பேசுவதே அமெரிக்க அரசு, இலங்கை மீது செலுத்தும் அதிகபட்ச அழுத்தமாகவிருக்கிறது.
ஐ.நா.வின் மனித உரிமை நிபுணர் குழு அமைக்கும் இராஜதந்திர நகர்வுகளெல்லாம் நாடாளுமன்ற தேர்தல் முடிவுகளோடு மூச்சிழந்து போயுள்ளதை அவதானிக்க வேண்டும்.
இத்தேர்தலில் பேரினவாதச் சக்திகள் தோற்கடிக்கப்பட்டுவிட்டதாக புதிய கண்டுபிடிப்பொன்றையும் றொபர்ட் ஓ பிளேக் வெளியிட்டுள்ளார்.
இழப்பதற்கு ஏதுமற்ற இடம்பெயர்ந்த தமிழர்களும், தாயக மண்ணைத் தினமும் பறிகொடுத்துக் கொண்டிருக்கும் கிழக்கு மக்களும், ""கிடைப்பதைக் கொண்டு சிறப்புடன் வாழப் பழகிக்கொள்ள வேண்டும்''
என ஜாதிக ஹெல உறுமயவின் எல்லாவல மேத்தானந்த தேரர் கூறும் அறிவுரைகள், அமெரிக்க காதுகளுக்கு எட்டவில்லை போல் தெரிகிறது.
பிராந்திய நலன்களுக்கூடாக இலங்கையின் தேசிய இனப் பிரச்சினையை தரிசிக்கும் கழுகுக் கண்களுக்கு ஆட்சியாளர்கள் எல்லோரும் முற்போக்காளர்களாகத் தெரிவதில் வியப்பேதுமில்லை.தென்னாசியப் புவிசார் அரசியலில் கேந்திர முக்கியத்துவமிக்க மையமாக, இலங்கைத் தீவு மாறி வருவதை இந்தியாவும் அமெரிக்காவும் புரிந்து கொண்ட அளவுக்கு நம்மவர்கள் அதன் முக்கியத்துவத்தை உணர்ந்து கொள்ளவில்லை.
இந்திய ஆய்வாளர் பி.இராமன், இந்த வாரம் எழுதிய கட்டுரையொன்றில் இலங்கையில் சீனத் தலையீடு குறித்த நீண்ட புள்ளி விபரப்பட்டியலொன்றை முன்வைத்துள்ளார்.
கை மீறிச் செல்லுமளவிற்கு சீனாவின் செல்வாக்கு இலங்கையில் அதிகரித்திருப்பதாக அவர் எச்சரிக்கிறார்.
இந்திய நிறுவனங்களின் முதலீடுகளை அதிகரிப்பதனூடாக, சந்தைகளை கையகப்படுத்துவதே தற்போதைய நிலையில் இந்தியாவிற்கு இருக்கும் ஒரே தெரிவாக இராமனின் ஆலோசனை அமைகிறது.
அதாவது, சிங்கள தேசத்தின் நீண்டகால நிரந்தர நண்பன் யாரென்பதை
அறுதியிட்டுக் கூறும் காலமாக இருக்கும் இனிவரும் நாட்கள் பல செய்திகளை
உலக வல்லரசாளர்களுக்கு உணர்த்தப் போகிறது.
பிராந்திய நலன் குறித்த ஆதிக்கப் போட்டியில், அமெரிக்காவோடு தற்காலிக
கூட்டிணைவு தந்திரோபாயத்தை இந்தியா மேற்கொண்டாலும் இறுதிப் பிடிமானமும் விரைவில் தகர்ந்து போகும்.(ஙுதச்ண) நாணயத்தின் பெறுமதியை மீள் மதிப்பீடு (கீஞுதிச்டூதஞு ) செய்யுமாறு அமெரிக்க ஜனாதிபதி பராக் ஒபாமா விடுத்த எச்சரிக்கை கலந்து வேண்டுதலையும் சீன ஜனாதிபதி நிராகரித்து விட்ட விவகாரம் இங்கு நோக்கப்படல் வேண்டும்.
அது மீள் மதிப்பீடல்ல, மாறாக நாணய மதிப்பிறக்கம் என்பது சீனாவுக்கு
நன்றாகப் புரியும். நாணயத்தை மதிப்பிறக்கம் செய்தால் திறைசேரியில் இருக்கும் ஏறத்தாழ 2 ட்ரில்லியன் (கூகீஐஃஃஐON) அமெரிக்க டொலர்களின் மொத்த
பெறுமதி வீழ்ச்சியடையும்.
தன் தலையில் மண் அள்ளிப்போடும் யானையாக சீனா இருக்க விரும்பாதென்பதை அமெரிக்காவும் புரிந்து கொள்ளும்.இந்நிலையில் முரண்பாடுகளாக இருந்தாலும் சரி, அல்லது பொருளாதார உறவு நிலையாக இருந்தாலும் சரி, அமெரிக்காவைப் பொறுத்தவரை அதன் அதிகப்படியான புவிசார் இராஜதந்திர நெருக்கம் சீனாவை நோக்கியே நகர்கிறது.
இந்நிலையில், மஹிந்த ராஜபக்ஷவின் அரசாங்கம் பலம்பெறுவதும், சீனாவின் ஊடாக மேற்குலகின் ஆதரவைப் பெறுவதும் இந்தியாவிற்கு பல நெருக்கடிகளை
உருவாக்கலாம்.
தமிழ் மக்களின் தெரிவு செய்யப்பட்ட நாடாளுமன்ற அரசியல் தலைமையான தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு, இந்தியாவின் உதவியை நாடி நிற்கிறது.
அதேவேளை, மேற்குலகில் அதிகமாக வசிக்கும் புலம்பெயர் ஈழத் தமிழ் மக்கள்
ஒன்றிணைந்து மே 2 இல் நாடு கடந்த தமிழீழ அரசாங்கமொன்றினை
உருவாக்கப் போவதாக செய்திகள் வெளியாகியுள்ளன.
இரு துருவ அணிகளை ஒரு புள்ளியில் கையாளும் சிங்கள தேசத்தின்
இராஜதந்திரம் போன்று, தாயக புலம்பெயர் மக்களும் புதிய மூலோபாயத்தை வகுக்கலாம்.அது மேற்குலக மற்றும் இந்திய சமன்பாட்டில் அமைவது தவிர்க்க
முடியாததாக இருக்கும்.
-இதயச்சந்திரன்-
நன்றி -வீரகேசரி வாரவெளியீடு
புலம்பெயர் தமிழ்ச் சமூகத்தின் பலம் பொருந்திய கட்டமைப்பிலேயே தமிழரின் உரிமைப் பயணம் உள்ளது
Posted by எல்லாளன் ஆய்வுகள், ஈழம் 9:35 AM
கடந்த 8 ஆம் திகதி இலங்கையில் நடைபெற்ற பொதுத்தேர்தல் இலங்கை விவகாரங்கள் தொடர்பில் மேற்குலகம் மேற்கொண்டுவந்த நடவடிக்கைகள் அனைத்தையும் சிறிது காலம் கிடப்பில் போடும் நிலையை ஏற்படுத்தியுள்ளது அல்லது ஜனாதிபதித் தேர்தல் மற்றும் பொதுத்தேர்தல் என்பவற்றின் மூலம் அவ்வாறான ஒரு நிலைமை ஏற்படுத்தப்பட்டுள்ளது என்றாலும் அது மிகையாகாது.


ஜனாதிபதித் தேர்தலில் 18 இலட்சம் வாக்குகளால் வெற்றியீட்டிய மஹிந்த ராஜபக்ஷவின் கூட்டணிக்கட்சி தற்போது நடைபெற்ற பொதுத்தேர்தலில் நாடாளுமன்றத்திற்கு தேர்தல் மூலம் தெரிவுசெய்யப்படும் உறுப்பினர்களில் 60 சதவீதமான ஆசனங்களைப் பெற்றுள்ளது. மேலும் முடிவுகள் அறிவிக்கப்படாத இரு மாவட்டங்களின் முடிவுகளும், தேசிய பட்டியல் முடிவுகளும் வெளிவரும் போது அது 63சதவீதத்தை எட்டலாம் என கருதப்படுகின்றது.
பொதுத்தேர்தலைப் பொறுத்தவரையில் இதுவரை கிடைக்கப்பெற்ற முடிவுகளின் அடிப்படையில் ஆளும் தரப்பு 117 ஆசனங்களையும், ஐக்கிய தேசியக் கட்சி 46 ஆசனங்களையும், ஜனநாயக தேசிய முன்னணி 5 ஆசனங்களையும் பெற்றுள்ளன. தமிழத் தேசியக் கூட்டமைப்பு 12 ஆசனங்களைப் பெற்றுள்ளது.
நேரடியாக 196 உறுப்பினர்களை தேர்ந்தெடுக்கும் இலங்கை நாடாளுமன்றத்திற்கு இதுவரையில் 180 உறுப்பினர்களின் விபரங்கள் வெளியிடப்பட்டுள்ளன. மேலும் 16 உறுப்பினர்களின் விபரங்கள் கண்டி மற்றும் திருமலை மாவட்ட தேர்தல் முடிவுகளை தொடர்ந்து வெளியிடப்படும். அதனைத் தொடர்ந்து தேசியப்பட்டியல் உறுப்பினர்களின் விபரங்களும் வெளியிடப்படும்.
எனவே, இறுதிக்கட்ட அறிவித்தல்களை தொடர்ந்து அரச தரப்பு 142 ஆசனங்களைப் பெறலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது. அவ்வாறாயின் மூன்றில் இரண்டு பெரும்பான்மையைப் பெறுவதற்கு அவர்களுக்கு 8 ஆசனங்கள் தேவைப்படலாம் ஆனால், அதனை அரச தரப்பு எதிர்க்கட்சிகளிடம் இருந்து அல்லது தமிழ் கட்சிகளிடமிருந்து கட்சி தாவல் மூலம் பெற்றுக்கொள்ளும் என்றே தெரிவிக்கப்படுகின்றது.
அதற்கான பேச்சுகளை சிறுபான்மை கட்சிகளுடன் அரச தரப்பு ஏற்கெனவே ஆரம்பித்துள்ளது. முதலில் முஸ்லிம் காங்கிரஸுடன் வெளிப்படையாக பேச்சுகளை மேற்கொண்டுவரும் அரச தரப்பு, எதிர்க்கட்சிகளுடனும், தமிழ் கட்சிகளுடனும் திரைமறைவில் பேச்சுகளை மேற்கொண்டு வருவதாகக் கூறப்படுகிறது.
இலங்கை அரசு மூன்றில் இரண்டு பெரும்பான்மையைப் பெறுவதற்கு கடும் முயற்சிகளை மேற்கொண்டுவருகையில், அந்த மூன்றில் இரண்டு பெரும்பான்மையைக் கொண்டு இனப்பிரச்சினைக்கான தீர்வினைக் காண்பதற்கு அரசியல் சட்டங்களில் சில திருத்தங்களை மேற்கொள்ள வேண்டும் என மேற்குலகம் கருத்து தெரிவித்து வருகின்றது.
ஆனால், அவ்வாறான திருத்தங்கள் அவசியம் என்பது தொடர்பில் இந்தியா மௌனமாகவே உள்ளது. இந்த நிலையில் அரசு பெற்றுக்கொள்ளும் மூன்றில் இரண்டு பெரும்பான்மையை சிறுபான்மை இனங்களின் அரசியல் பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கு பயன்படுத்துமா என்பதே முக்கியமான கேள்வி.
இந்தக் கேள்வியை முன்வைத்துள்ள பிரித்தானிய நாளேடான த ரைம்ஸ் நாளேடு, இலங்கையின் அரசியல் யாப்பு விதிகளில் ஜனாதிபதி இரு தடவைகள் மட்டுமே பதவி வகிக்க முடியும் என்ற வரைமுறை உள்ளதாகவும், எனவே மூன்றில் இரண்டு பெரும்பான்மையைப் பெறப்போகும் அரசு அதனை மாற்றி அமைத்து ஒருவர் பல தடவைகள் ஜனாதிபதியாக பதவி வகிக்கலாம் என்ற விதிமுறையை கொண்டுவரலாம் என தெரிவித்துள்ளது.
மேலும் பெரும்பான்மை சமூகத்தின் நலன்களை அதிகரிக்கும் விதிமுறைகளே அதிகம் நிறைவேற்றப்படும் எனவும் அது தெரிவித்துள்ளது. அவர்களின் கூற்றுகளில் உண்மையும் உள்ளது. ஜனாதிபதித் தேர்தலாக இருந்தாலும் சரி பொதுத்தேர்தலாக இருந்தாலும் சரி போரின் வெற்றி என்ற ஒரே கருத்தை முன்வைத்தே இலங்கை அரசு தென்னிலங்கை மக்களிடம் ஆதரவைப் பெற்றுள்ளது.
தென்னிலங்கையில் நடைபெற்ற தேர்தல் பிரசாரக் கூட்டங்களில் போரின் வெற்றி எவ்வாறு ஏற்பட்டது என பேசிய அரசு, இனப்பிரச்சினை தொடர்பில் எதனையும் தெரிவிக்கவில்லை. எனவே இனப்பிரச்சினைக்கான தீர்வுகளை இந்த வருடம் நடைபெற்ற தேர்தல் முடிவுகள் கொண்டுவரப்போவதில்லை.
எனினும் இனப்பிரச்சினைக்கான தீர்வைத் தேடும் குழு அமைக்கப்படும், அது வழமைபோல காலத்தை கடத்தும். தற்போது அந்த குழுவில் இணைந்துகொள்ள வேண்டிய கட்டத்திற்குள் தமிழ்க் கட்சிகளும் வந்துள்ளதால் அரசின் பணிகள் மிகவும் இலகுவாகிப்போய்விட்டன.
இனப்பிரச்சினை தீர்வு தொடர்பில் அனைத்துக்கட்சிக் குழு காலத்தை இழுத்துச் செல்ல வடபகுதியின் அபிவிருத்தி என்ற போர்வையில் படைத்தளங்களும், குடியேற்றங்களும் பலமாக நிறுவப்படும்.
இனப்பரம்பல், இனவிகிதாசாரம் என்பன வடக்கு, கிழக்கில் விரைவாக மாற்றப்படும். அவ்வாறு மாற்றப்படும் இன விகிதாசாரங்களுடன் ஒத்துப்போகும் தீர்வு ஒன்றைத் தேடுவதற்கு மீண்டும் ஒரு குழு அமைக்கப்படும்.
போர் நிறைவுபெற்று ஒரு வருடம் அண்மித்துள்ள நிலையிலும் இடம்பெயர்ந்த மக்களின் மீள்குடியேற்றம் நிறைவடையவில்லை. ஜனாதிபதித் தேர்தலில் 18 இலட்சம் வாக்குகளால் மஹிந்த ராஜபக்ஷ வெற்றிபெற்ற போதும் அவசரகாலச்சட்டம் நீக்கப்படவில்லை. பலஸ்தீனத்தில் இருந்து இஸ்ரேல் வெளியேற வேண்டும் எனக் கூறும் இலங்கை அரசாங்கம், வடக்குகிழக்கில் குவிக்கப்பட்டுள்ள 1,50,000 இராணுவம் தொடர்பில் எதனையும் தெரிவிக்கவில்லை.
எனவே, இதனை எல்லாம் உணர்ந்து கொள்ள மேற்குலகத்திற்கும், அனைத்துலக சமூகத்திற்கும் காலம் தேவை என்றால் அது நகைப்புக்கிடமானது. ஏனெனில் 2002 ஆம் ஆண்டு ஈராக்கிலும் தேர்தல் நடைபெற்றது தான், அப்போது காலம்சென்ற முன்னாள் ஜனாதிபதி சதாம் ஹுசைன் 99சதவீத வாக்குகளைப் பெற்றிருந்தார்.
பர்மாவிலும் தேர்தல் நடைபெறுகின்றது, ஸிம்பாபேயிலும் தேர்தல் நடைபெறுகின்றது. எனவே, தேர்தலின் முடிவுகளை கருத்திற் கொண்டு மேற்குலகம் தமது முடிவுகளை மாற்றி அமைக்கும் சாத்தியங்கள் உண்டா என நாம் கருதினால் அதற்கு மேற்குறிப்பிட்ட நாடுகள் தொடர்பில் மேற்குலகம் கடைப்பிடித்து வந்த அல்லது வரும் கொள்கைகளை சீர்தூக்கிப் பார்ப்பது பொருத்தமானது.
எனினும் ஆசிய பிராந்திய வல்லரசுகளுக்கு சந்தேகங்களை ஏற்படுத்தாது தமது நகர்வை மேற்கொள்வதில் மேற்குலகம் மெதுவான போக்கை கடைப்பிடித்து வருகின்றது. இந்த காலதாமதமும் இலங்கை அரசுக்கு அனுகூலமானதே.
இந்த நிலையில் தான் புலம்பெயர் தமிழ் சமூகத்தின் பங்களிப்புகளை மேற்குலகம் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றது. புலம்பெயர் தமிழ் சமூகத்தின் பலம்பொருந்திய கட்டமைப்பு ஒன்றை உருவாக்குவதன் மூலம் ஆசிய பிராந்திய வல்லரசுகளின் அழுத்தங்கள் இன்றி ஈழத்தமிழ் மக்கள் தமது உரிமைகளை தெளிவாக முன்வைக்க முடியும் என மேற்குலகம் நம்புகின்றது.
ஈழத்தமிழ் இனத்திற்கு தற்போது உள்ள ஒரே வழியும் அதுதான். யாழில் புறக்கணிக்கப்பட்ட தேர்தல் முடிவுகளும், இலங்கை அரசினாலும், அனைத்துலக சமூகத்தினாலும் புறக்கணிக்கப்பட்ட இடம்பெயர்ந்த தமிழ் மக்களும் அதனைத் தான் எமக்கு உணர்த்தி நிற்கின்றன.
அது மட்டுமல்லாது, அவுஸ்திரேலியா முதல் அமெரிக்காவின் மியாமி கடற்கரை வரை ஈழத்தமிழ் மக்கள் மேற்கொள்ளும் கூட்டு அரசியல் தஞ்சமும் அதனைத் தான் இந்த உலகிற்கு கூறி நிற்கின்றது.
-வேல்ஸிலிருந்து அருஷ்
நன்றி -வீரகேசரி வாரவெளியீடு


ஜனாதிபதித் தேர்தலில் 18 இலட்சம் வாக்குகளால் வெற்றியீட்டிய மஹிந்த ராஜபக்ஷவின் கூட்டணிக்கட்சி தற்போது நடைபெற்ற பொதுத்தேர்தலில் நாடாளுமன்றத்திற்கு தேர்தல் மூலம் தெரிவுசெய்யப்படும் உறுப்பினர்களில் 60 சதவீதமான ஆசனங்களைப் பெற்றுள்ளது. மேலும் முடிவுகள் அறிவிக்கப்படாத இரு மாவட்டங்களின் முடிவுகளும், தேசிய பட்டியல் முடிவுகளும் வெளிவரும் போது அது 63சதவீதத்தை எட்டலாம் என கருதப்படுகின்றது.
பொதுத்தேர்தலைப் பொறுத்தவரையில் இதுவரை கிடைக்கப்பெற்ற முடிவுகளின் அடிப்படையில் ஆளும் தரப்பு 117 ஆசனங்களையும், ஐக்கிய தேசியக் கட்சி 46 ஆசனங்களையும், ஜனநாயக தேசிய முன்னணி 5 ஆசனங்களையும் பெற்றுள்ளன. தமிழத் தேசியக் கூட்டமைப்பு 12 ஆசனங்களைப் பெற்றுள்ளது.
நேரடியாக 196 உறுப்பினர்களை தேர்ந்தெடுக்கும் இலங்கை நாடாளுமன்றத்திற்கு இதுவரையில் 180 உறுப்பினர்களின் விபரங்கள் வெளியிடப்பட்டுள்ளன. மேலும் 16 உறுப்பினர்களின் விபரங்கள் கண்டி மற்றும் திருமலை மாவட்ட தேர்தல் முடிவுகளை தொடர்ந்து வெளியிடப்படும். அதனைத் தொடர்ந்து தேசியப்பட்டியல் உறுப்பினர்களின் விபரங்களும் வெளியிடப்படும்.
எனவே, இறுதிக்கட்ட அறிவித்தல்களை தொடர்ந்து அரச தரப்பு 142 ஆசனங்களைப் பெறலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது. அவ்வாறாயின் மூன்றில் இரண்டு பெரும்பான்மையைப் பெறுவதற்கு அவர்களுக்கு 8 ஆசனங்கள் தேவைப்படலாம் ஆனால், அதனை அரச தரப்பு எதிர்க்கட்சிகளிடம் இருந்து அல்லது தமிழ் கட்சிகளிடமிருந்து கட்சி தாவல் மூலம் பெற்றுக்கொள்ளும் என்றே தெரிவிக்கப்படுகின்றது.
அதற்கான பேச்சுகளை சிறுபான்மை கட்சிகளுடன் அரச தரப்பு ஏற்கெனவே ஆரம்பித்துள்ளது. முதலில் முஸ்லிம் காங்கிரஸுடன் வெளிப்படையாக பேச்சுகளை மேற்கொண்டுவரும் அரச தரப்பு, எதிர்க்கட்சிகளுடனும், தமிழ் கட்சிகளுடனும் திரைமறைவில் பேச்சுகளை மேற்கொண்டு வருவதாகக் கூறப்படுகிறது.
இலங்கை அரசு மூன்றில் இரண்டு பெரும்பான்மையைப் பெறுவதற்கு கடும் முயற்சிகளை மேற்கொண்டுவருகையில், அந்த மூன்றில் இரண்டு பெரும்பான்மையைக் கொண்டு இனப்பிரச்சினைக்கான தீர்வினைக் காண்பதற்கு அரசியல் சட்டங்களில் சில திருத்தங்களை மேற்கொள்ள வேண்டும் என மேற்குலகம் கருத்து தெரிவித்து வருகின்றது.
ஆனால், அவ்வாறான திருத்தங்கள் அவசியம் என்பது தொடர்பில் இந்தியா மௌனமாகவே உள்ளது. இந்த நிலையில் அரசு பெற்றுக்கொள்ளும் மூன்றில் இரண்டு பெரும்பான்மையை சிறுபான்மை இனங்களின் அரசியல் பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கு பயன்படுத்துமா என்பதே முக்கியமான கேள்வி.
இந்தக் கேள்வியை முன்வைத்துள்ள பிரித்தானிய நாளேடான த ரைம்ஸ் நாளேடு, இலங்கையின் அரசியல் யாப்பு விதிகளில் ஜனாதிபதி இரு தடவைகள் மட்டுமே பதவி வகிக்க முடியும் என்ற வரைமுறை உள்ளதாகவும், எனவே மூன்றில் இரண்டு பெரும்பான்மையைப் பெறப்போகும் அரசு அதனை மாற்றி அமைத்து ஒருவர் பல தடவைகள் ஜனாதிபதியாக பதவி வகிக்கலாம் என்ற விதிமுறையை கொண்டுவரலாம் என தெரிவித்துள்ளது.
மேலும் பெரும்பான்மை சமூகத்தின் நலன்களை அதிகரிக்கும் விதிமுறைகளே அதிகம் நிறைவேற்றப்படும் எனவும் அது தெரிவித்துள்ளது. அவர்களின் கூற்றுகளில் உண்மையும் உள்ளது. ஜனாதிபதித் தேர்தலாக இருந்தாலும் சரி பொதுத்தேர்தலாக இருந்தாலும் சரி போரின் வெற்றி என்ற ஒரே கருத்தை முன்வைத்தே இலங்கை அரசு தென்னிலங்கை மக்களிடம் ஆதரவைப் பெற்றுள்ளது.
தென்னிலங்கையில் நடைபெற்ற தேர்தல் பிரசாரக் கூட்டங்களில் போரின் வெற்றி எவ்வாறு ஏற்பட்டது என பேசிய அரசு, இனப்பிரச்சினை தொடர்பில் எதனையும் தெரிவிக்கவில்லை. எனவே இனப்பிரச்சினைக்கான தீர்வுகளை இந்த வருடம் நடைபெற்ற தேர்தல் முடிவுகள் கொண்டுவரப்போவதில்லை.
எனினும் இனப்பிரச்சினைக்கான தீர்வைத் தேடும் குழு அமைக்கப்படும், அது வழமைபோல காலத்தை கடத்தும். தற்போது அந்த குழுவில் இணைந்துகொள்ள வேண்டிய கட்டத்திற்குள் தமிழ்க் கட்சிகளும் வந்துள்ளதால் அரசின் பணிகள் மிகவும் இலகுவாகிப்போய்விட்டன.
இனப்பிரச்சினை தீர்வு தொடர்பில் அனைத்துக்கட்சிக் குழு காலத்தை இழுத்துச் செல்ல வடபகுதியின் அபிவிருத்தி என்ற போர்வையில் படைத்தளங்களும், குடியேற்றங்களும் பலமாக நிறுவப்படும்.
இனப்பரம்பல், இனவிகிதாசாரம் என்பன வடக்கு, கிழக்கில் விரைவாக மாற்றப்படும். அவ்வாறு மாற்றப்படும் இன விகிதாசாரங்களுடன் ஒத்துப்போகும் தீர்வு ஒன்றைத் தேடுவதற்கு மீண்டும் ஒரு குழு அமைக்கப்படும்.
போர் நிறைவுபெற்று ஒரு வருடம் அண்மித்துள்ள நிலையிலும் இடம்பெயர்ந்த மக்களின் மீள்குடியேற்றம் நிறைவடையவில்லை. ஜனாதிபதித் தேர்தலில் 18 இலட்சம் வாக்குகளால் மஹிந்த ராஜபக்ஷ வெற்றிபெற்ற போதும் அவசரகாலச்சட்டம் நீக்கப்படவில்லை. பலஸ்தீனத்தில் இருந்து இஸ்ரேல் வெளியேற வேண்டும் எனக் கூறும் இலங்கை அரசாங்கம், வடக்குகிழக்கில் குவிக்கப்பட்டுள்ள 1,50,000 இராணுவம் தொடர்பில் எதனையும் தெரிவிக்கவில்லை.
எனவே, இதனை எல்லாம் உணர்ந்து கொள்ள மேற்குலகத்திற்கும், அனைத்துலக சமூகத்திற்கும் காலம் தேவை என்றால் அது நகைப்புக்கிடமானது. ஏனெனில் 2002 ஆம் ஆண்டு ஈராக்கிலும் தேர்தல் நடைபெற்றது தான், அப்போது காலம்சென்ற முன்னாள் ஜனாதிபதி சதாம் ஹுசைன் 99சதவீத வாக்குகளைப் பெற்றிருந்தார்.
பர்மாவிலும் தேர்தல் நடைபெறுகின்றது, ஸிம்பாபேயிலும் தேர்தல் நடைபெறுகின்றது. எனவே, தேர்தலின் முடிவுகளை கருத்திற் கொண்டு மேற்குலகம் தமது முடிவுகளை மாற்றி அமைக்கும் சாத்தியங்கள் உண்டா என நாம் கருதினால் அதற்கு மேற்குறிப்பிட்ட நாடுகள் தொடர்பில் மேற்குலகம் கடைப்பிடித்து வந்த அல்லது வரும் கொள்கைகளை சீர்தூக்கிப் பார்ப்பது பொருத்தமானது.
எனினும் ஆசிய பிராந்திய வல்லரசுகளுக்கு சந்தேகங்களை ஏற்படுத்தாது தமது நகர்வை மேற்கொள்வதில் மேற்குலகம் மெதுவான போக்கை கடைப்பிடித்து வருகின்றது. இந்த காலதாமதமும் இலங்கை அரசுக்கு அனுகூலமானதே.
இந்த நிலையில் தான் புலம்பெயர் தமிழ் சமூகத்தின் பங்களிப்புகளை மேற்குலகம் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றது. புலம்பெயர் தமிழ் சமூகத்தின் பலம்பொருந்திய கட்டமைப்பு ஒன்றை உருவாக்குவதன் மூலம் ஆசிய பிராந்திய வல்லரசுகளின் அழுத்தங்கள் இன்றி ஈழத்தமிழ் மக்கள் தமது உரிமைகளை தெளிவாக முன்வைக்க முடியும் என மேற்குலகம் நம்புகின்றது.
ஈழத்தமிழ் இனத்திற்கு தற்போது உள்ள ஒரே வழியும் அதுதான். யாழில் புறக்கணிக்கப்பட்ட தேர்தல் முடிவுகளும், இலங்கை அரசினாலும், அனைத்துலக சமூகத்தினாலும் புறக்கணிக்கப்பட்ட இடம்பெயர்ந்த தமிழ் மக்களும் அதனைத் தான் எமக்கு உணர்த்தி நிற்கின்றன.
அது மட்டுமல்லாது, அவுஸ்திரேலியா முதல் அமெரிக்காவின் மியாமி கடற்கரை வரை ஈழத்தமிழ் மக்கள் மேற்கொள்ளும் கூட்டு அரசியல் தஞ்சமும் அதனைத் தான் இந்த உலகிற்கு கூறி நிற்கின்றது.
-வேல்ஸிலிருந்து அருஷ்
நன்றி -வீரகேசரி வாரவெளியீடு
"தமிழர் தாயகம் என்பது ஒன்றுதான். அதனைப்பிரிக்க முடியாது" - தமிழீழ தேசியத் தலைவர்
Posted by எல்லாளன் ஈழம், விடுதலைப் புலிகள் 9:34 AM
"தமிழர் தாயகம் என்பது ஒன்றுதான். அதனைப்பிரிக்க முடியாது"- தமிழீழ தேசியத் தலைவர்மேதகு வே.பிரபாரகன் அவர்கள்
தமிழீழ தாயக பூமியைப் பல்வேறு கூறுகளாகத் துண்டாடி, தமிழீழ தேசிய விடுதலைப் போராட்டத்தின் முதன்மைத் தூணாக விளங்கும் தாயகக் கோட்பாட்டை சிதைப்பது சிங்கள - இந்திய அரசுகளின் நெடுங்கால நிகழ்ச்சித் திட்டமாகத் திகழ்கின்றது.
தமிழீழ தேசிய விடுதலைப் போராட்டம் ஆயுதவடிவத்தை எடுக்கத் தொடங்கியதில் இருந்து காலத்திற்குக் காலம் இதற்கான காய்நகர்த்தல்களில் சிங்கள -இந்திய அரசுகள் ஈடுபடுகின்ற பொழுதும், இவற்றைத் தடுத்து நிறுத்தித் தமிழீழ தேசிய விடுதலைப் போராட்டத்தை சரியான பாதையில் இட்டுச்செல்லும் சக்தியாக தமிழீழ தேசியத் தலைவர் மேதகு வே.பிரபாகரன் அவர்களின் எண்ணங்களும், தீர்க்கதரினமான முடிவுகளும் அமைவதை வரலாறு அடிக்கடி நினைவூட்டிக் கொள்கின்றது.
மிகப்பெரும் அரசியல் - வாழ்வியல் நெருக்கடியை இன்று எமது தமிழீழ தாயக உறவுகள் எதிர்நோக்கியிருக்கும் நிலையில், இவற்றைப் புறந்தள்ளிவிட்டு தமிழீழ தாயகத்தை இருகூறுகளாக துண்டாடும் நிகழ்ச்சித் திட்டத்தை வி.உருத்திரகுமாரன் அவர்களின் தலைமையிலான நாடுகடந்த அரசமைப்புக் குழு நடைமுறைப்படுத்த முற்படுவது புலம்பெயர்வாழ் தமிழீழ மக்களிடையே பல்வேறு கேள்விகளையும்,சஞ்சலங்களையும் தோற்றுவித்துள்ளது.
குறிப்பாக ஈழத்தீவில் தமிழீழ தனியரசை நிறுவும் உரிமை தமிழர்களுக்கு இருப்பது போன்று, தமிழீழத்தில் இருந்து பிரிந்து சென்று முஸ்லிம் அரசை நிறுவும் உரிமை முஸ்லிம் மக்களுக்கு இருப்பதாக அண்மையில் நாடுகடந்த அரசமைப்புக் குழுவினர் விடுத்துள்ள அறிக்கையான, அனைத்துத் தமிழீழ மக்களும் (இஸ்லாமிய ஈழத்தமிழர்கள் உட்பட) மிகுந்த விழிப்புணர்வுடன் செயற்பட வேண்டியை அவசியத்தைக் கோடிட்டுக் காட்டுகின்றது.
தமிழீழ தாயகம் என்பது இந்து, கிறிஸ்துவம், இஸ்லாம் ஆகிய மூன்று மதங்களையும் தழுவிநிற்கும் தமிழ் மக்களுக்கு உரித்தான வரலாற்றுத் தாயகமாகும். மத ரீதியாகப் பார்க்கும் பொழுதும் மூன்று மதங்களும் தமக்கேயுரித்தான தனித்துவமான வழிபாட்டு முறைகளையும், வழக்குகளையும், வாழ்வுமுறைமைகளையும் கொண்டுள்ள பொழுதும், மொழியாலும், வரலாற்றுத் தாயகத்தாலும் ஒன்றுபட்ட தேசிய இனமாக ஈழத்தமிழர்கள் அனைவரும் திகழ்வதை எவரும் மறுக்க முடியாது. மறுதலிக்கவும் முடியாது.
தமிழீழ தேசிய விடுதலைக்காக தமது இன்னுயிர்களை ஈகம்செய்த வீரமறவர்களில் பல இஸ்லாமிய சகோதரர்கள் இருப்பதை நாம் நினைவிற்கொள்ள வேண்டும். இவர்களின் வாழ்வும், வீரமரணமும் தமிழீழம் என்ற ஒரேயொரு உன்னத இலட்சியத்தை அடிப்படையாகக் கொண்டமைந்திருந்ததை நாம் மறந்துவிட முடியாது. இறுதியாக வன்னி மண்ணில் நிகழ்ந்தேறிய யுத்தத்தில் லெப்.கேணல் தரத்தை சேர்ந்த முஸ்லிம் வீரமறவன் ஒருவர்கூட தமிழீழ தாயக விடுதலைக்காகத் தனது இன்னுயிரை ஈகம்செய்திருந்தார்.
இவ்வாறான பின்புலத்தில், தமிழீழ தாயகத்தை மதரீதியாகக் கூறுபோட்டு, எமது இஸ்லாமிய சகோதரர்களை எம்மிடமிருந்து அந்நியப்படுத்தும் திட்டமொன்றை நாடுகடந்த அரசமைப்புக் குழுவினர் முன்வைப்பதன் அர்த்தபரிமாணத்தை, சிங்கள - இந்திய அரசுகளின் கடந்தகால நடவடிக்கைகளை ஆராய்வதன் ஊடாக நாம் தெளிவாகப் புரிந்து கொள்ள முடியும்.
இவ்வாறான சூழ்ச்சித் திட்டங்களை எவ்வாறு தமிழீழதேசியத் தலைவர் அவர்கள் முறியடித்தார் என்பதை அறிந்து கொள்வது, நாடுகடந்த அரசமைப்புக் குழுவின் சூழ்ச்சியை முறியடிப்பதற்குப் போதுமானதாக அமையும்.
காலம்: நவம்பர் 1986. தமிழகத்தைத் தமது தளமாகக் கொண்டு தமிழீழ விடுதலைப் புலிகள் இயங்கிய அந்தக் காலப்பகுதியில், தமிழீழ தாயகத்தை மதரீதியாகத் துண்டாடும் தீர்வு யோசனை ஒன்று ஜே.ஆர்.ஜெயவர்த்தனாவினால் ரஜீவ் காந்திக்கு அனுப்பி வைக்கப்பட்டது.
தமிழீழத்தில் முஸ்லிம் பிராந்தியங்கள் இருப்பதாகவும், தமிழீழத்தில் இருந்து பிரிந்து சென்று தனியரசை அமைக்கும் உரிமையை முஸ்லிம்கள் கொண்டிருப்பதாகவும் தற்போது நாடுகடந்த அரசமைப்புக் குழுவினர் வியாக்கியானம் செய்வதற்கு ஒப்பான தீர்வுத் திட்டம் ஒன்றே அது.
ஜே.ஆர்.ஜெயவர்த்தனாவின் இந்த யோசனையை அங்கீகரித்த இந்திய அரசு, தமிழீழ தேசியத் தலைவர் அவர்களை அதனை ஏற்றுக் கொள்ளுமாறு நிர்ப்பந்திக்க முற்பட்டது. ஆனால் அதனை அடியோடு ஏற்க மறுத்த தமிழீழ தேசியத் தலைவர் அவர்கள், தனது தீர்க்கதரிசமான எண்ணத்தாலும், முடிவாலும் சிங்கள - இந்திய சூழ்ச்சியை முறியடித்தார்.
அதுபற்றி போரும் சமாதானமும் நூலில் தேசத்தின் குரல் கலாநிதி அன்ரன் பாலசிங்கம் அவர்கள் குறிப்பிடுகையில்:
‘‘1986 நவம்பர் மாதம் 17, 18ஆம் நாட்களில் பங்களுரில் சார்க் உச்சி மாநாடு நடைபெறவிருந்தது. இந்த மாநாட்டில் தமிழரின் இனப் பிரச்சினைக்குத் தீர்வுத் திட்டம் ஒன்றை முன்வைக்குமாறு ஜெயவர்த்தனா நிர்ப்பந்திக்கப்பட்டார். இதன்படி, கிழக்கு மாகாணத்தை மூன்று கூறுகளாகப் பிரிக்கும் திட்டம் ஒன்றை அவர் தயாரித்தார். வடகிழக்கைத் தனி மாநிலமாகக் கொண்ட தமிழர் தாயகக் கோரிக்கைக்கு சாவுமணி அடிக்கும் நோக்குடன், இனத்துவ, மத வேறுபாட்டின் அடிப்படையில் கிழக்கு மாகாணத்தை மூன்று கூறுகளாகப் பிரிக்கும் இந்த நாசகாரத் திட்டத்தை ஜெயவர்த்தனாவின் ஆட்சிபீடம் மிகவும் சூழ்ச்சித் திறனுடன் தயாரித்திருந்தது.
இத் திட்டத்தின்படி, தமிழர்கள், சிங்களவர், முஸ்லிம்கள் என்ற மூன்று இனத்தவர்களுக்குமாக, திருகோணமலை, மட்டக்களப்பு, அம்பாறை மாவட்டங்களின் எல்லைகள் மூன்று பிரதேசக் கூறுகளாக மாற்றியமைக்கப்படவிருந்தன. இத் திட்டத்தில் அம்பாறை மாவட்டத்தில் சிங்களவர்கள் வாழும் பகுதிகள் கிழக்கிலிருந்து துண்டாடப்பட்டு ஊவா மாகாணத்துடன் இணைக்கப்படும். திருகோணமலை நகரமும், துறைமுகமும், திருகோணமலை மாவட்டத்தில் சிங்களவர்கள் வாழும் பகுதிகளும் ஒன்றாக இணைக்கப்பட்டு சிங்கள மாநிலமாக மாற்றப்படும்.
இச் சிங்கள மாநிலம் சிங்கள அரச நிர்வாகத்தின் கீழ்ச் செயற்படும். மட்டக்களப்பு மாவட்டத்தின் சில பகுதிகளும், அம்பாறை மாவட்டத்தில் முஸ்லிம்கள் வாழும் பகுதிகளும் இணைந்ததாக முஸ்லிம் பிரதேசம் உருவாக்கப்படும். திருகோணமலையில் தமிழர்கள் வாழும் பகுதிகளும் (திருகோணமலை நகரம், துறைமுகம், சிங்களக் குடியிருப்புகள் தவிர்ந்த பகுதிகள்) மட்டக்களப்பு மாவட்டத்தில் சில பகுதிகளும் இணைந்ததாக தமிழர் மாகாணம் உருவாக்கப்படும்.
மிக நுட்பமாகத் தயாரிக்கப்பட்ட இந்த எல்லைவரையறைத் திட்டம் சிங்களவர்களுக்கே சாதகமாக அமையப் பெற்றது. கேந்திர முக்கியத்துவம் வாய்ந்த திருகோணமலைத் துறைமுகமும், நகரமும் அடங்கியதாக கிழக்கில் பெரியளவு பிரதேசங்களைக் கொண்ட நிலப்பரப்பை சிங்களவருக்கு தாரைவார்த்துக் கொடுக்க இத் திட்டம் வழிசெய்தது. கிழக்கில் தமிழருக்காக ஒதுக்கப்பட்ட குறுகிய நிலப்பரப்பை வடக்கு மாநிலத்துடன் இணைத்து, தமிழரின் தாயகக் கோரிக்கையை நிறைவு செய்யலாம் எனவும் ஜெயவர்த்தனா சிந்தித்தார்.
மூன்று கூறுகளைக் கொண்ட தனது எல்லை வரையறைத் திட்டத்தின் விபரங்களை இந்தியத் தூதுவர் டிக்சிட்டுக்கு விளக்கிய ஜெயவர்த்தனா, கிழக்கு மாகாணத்தில் வதியும் முஸ்லிம்கள், சிங்களவரின் நலன்கள் பாதுகாக்கப்பட வேண்டும் என இந்திய அமைச்சர்களான சிதம்பரமும் நட்வார் சிங்கும் ஆலோசனை கூறியதன் அடிப்படையிலேயே இப் ‘புதிய யோசனைகள்' வகுக்கப்பட்டதாகக் கூறினார்
......ஈழத் தேசிய விடுதலை முன்னணியைப் பிளவுபடுத்தி, அம் முன்னணியில் அங்கம் வகித்த விடுதலை அமைப்புகளை ஒன்றோடு ஒன்று மோதவிட்டு, விடுதலைப் புலிகள் இயக்கத்தைப் பலவீனப்படுத்த றோ புலனாய்வுத் துறையினர் தீட்டிய சதித் திட்டம் படுதோல்வியில் முடிந்தது. முன்பைவிடப் பல மடங்கு பலம்பெற்ற சக்தியாக புலிகள் இயக்கம் பூதாகர வளர்ச்சிபெற்றமை ரஜீவ் அரசுக்கு ஏமாற்றத்தையும்கடுப்பையும் ஏற்படுத்தியது.
அதுமட்டுமன்றி, இலங்கையின் இனப் பிரச்சினையில் விடுதலைப் புலிகளின் தலைமையை அனுசரித்துப் போகவேண்டிய கட்டாயமும் இந்திய அரசுக்கு ஏற்பட்டது. ஆனால் விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரன் ஒரு வித்தியாசமான ஆளுமையுடைய மனிதர். கொள்கையில் உருக்கை ஒத்த உறுதி உடையவர். நெருக்குவாரத்திற்கு நெகிழ்ந்து கொடுக்கமாட்டார். அதிகாரக்கெடுபிடிகளுக்கு அடிபணியமாட்டார். இப்படியான போக்குடைய ஒரு தலைவனை எப்படியாவது தனது வழிக்கு கொண்டுவரவேண்டும் என இந்திய அரசு கருதியது.
1986 நவம்பர் நடுப்பகுதியில் நிகழவிருக்கும் பங்களுர் பேச்சுகளுக்கு முன்னராக பிரபாகரனைப் படிமானப்படுத்த இந்திய அதிகார பீடம் எண்ணியது.
.....1986 நவம்பர் 8ஆம் நாள் அதிகாலை தமிழ்நாடு காவல்துறையின் அதிரடிப் படையினர் விடுதலைப் புலிகளதும் ஏனைய தமிழ் அமைப்புகளதும் இரகசியத் தங்குமிடங்கள், வீடுகள், முகாம்கள், பயிற்சிப் பாசறைகள் ஆகியவற்றைச் சூறையாடி ஆயுத தளபாடங்களைக் கைப்பற்றியதுடன், அமைப்புகளின் தலைவர்களையும் கைதுசெய்தனர்.
பிரபாகரனும் நானும் அன்றைய நாள் அதிகாலை எமது வீடுகளில் வைத்து கைது செய்யப்பட்டு வௌவேறு காவல் நிலையங்களுக்கு கொண்டு சொல்லப்பட்டோம். அங்கு பல மணிநேரம் தடுத்துவைக்கப்பட்டு குற்றவாளிகள் போல விசாரணைக்கு உட்படுத்தப்பட்டோம். எங்கள் இருவரையும் பல கோணத்தில் நிறுத்தி படம் எடுத்தார்கள். கைரேகையைப் பதிவு செய்தார்கள். பண்பற்ற வார்த்தைகளால்அவமானப்படுத்தினார்கள். இவை எல்லாம் திட்டமிட்டு நடத்தப்பட்ட இம்சைபோலத் தோன்றியது.
இழிவுபடுத்தி, சிறுமைப்படுத்தி பணியவைக்கலாம் என்ற கபட நோக்கத்துடன் மேற்கொள்ளப்பட்ட இந் நடவடிக்கையானது பிரபாகரனைப் பொறுத்தவரை எதிர்மாறான விளைவையே ஏற்படுத்தியது. பிரபாகரன் கொதிப்படைந்தார். ஒரு குற்றவாளிபோல இழிவுபடுத்தப்பட்டதை அவரால் ஜீரணிக்க முடியவில்லை. தனது சுய-கௌரவத்திற்கு மட்டுமன்றி தமிழீழ சுதந்திர இயக்கத்திற்கு ஏற்பட்ட அவமதிப்பாகவும் அந்நிகழ்வை அவர் கருதினார். எந்த வகையிலும் இந்திய அழுத்தத்திற்கு நெகிழ்ந்து கொடுப்பதில்லை என உறுதிபூண்டார்.
....விடுதலைப் புலிகளின் தலைமையை மிரட்டிப் பணியவைத்து இந்திய சமரச முயற்சிக்கு விட்டுக்கொடுத்து இணங்க வைக்கும் தந்திரோபாயத்துடன் மத்திய, மாநில அரசுகளால் கூட்டாகத்திட்டமிடப்பட்ட சதியின் அடிப்படையிலேயே இப் ‘புலி நடவடிக்கை' எடுக்கப்பட்டது என்பது எமக்கு நன்கு புலனாகியது.
ஒன்பது நாட்கள் எமது வீடுகளில் தடுப்புக் காவலில் வைக்கப்பட்ட பின்பு, பிரபாகரனும் நானும் பேச்சுக்களுக்காக பங்களுர் அழைத்துச் செல்லப்பட்டபோதே இந்தியாவின் சூத்திரதார நோக்கு எமக்குப் புலப்பட்டது. 1986 நவம்பர் 17ஆம் நாள். சென்னை நகரப் புறத்திலுள்ள தாம்பரம் விமானத் தளத்திலிருந்து இந்திய வான்படை விமானம் மூலம் பிரபாகரனும் நானும் பங்களுர் கொண்டு செல்லப்பட்டோம்.
அங்கு ராஜ்பவன் விடுதியில் எம்மைத் தங்க வைத்தார்கள். அந்த விடுதிக்கு சென்றடைய இரவு 10 மணி ஆகிவிட்டது. ஒருபுறம் பசி வயிற்றைப் பிடுங்க, களைத்துச் சோர்ந்து போய் விடுதிக்கு சென்ற எம்முடன் இரவிரவாகப்பேச்சுக்களை நடத்தும் நோக்குடன் இந்திய அரச பிரதிநிதிகள் குழு ஒன்று அங்கு காத்து நின்றது. இந்திய வெளிவிவகார ராஜாங்க அமைச்சர் திரு.நட்வார் சிங், இந்திய வெளியுறவுச் செயலர் திரு.வெங்கடேஸ்வரன், வெளியுறவு அமைச்சின் இணைச் செயலர் குல்திப் சதேவ், இலங்கைக்கான இந்திய தூதுவர் திரு.டிக்சிட் ஆகியோர் எமக்கு அறிமுகம் செய்து வைக்கப்பட்டனர்.
கிழக்கு மாகாணத்தை மூன்றுகூறுகளாகப் பிரிக்கும் ஜெயவர்த்தனாவின் எல்லை வரையறைத் திட்டத்தை உடனடியாகவே இந்திய பிரதிநிதிகள் எமக்கு எடுத்து விளக்கினார்கள்.
.....கிழக்கு மாகாணத்தின் விபரமான வரைபடம் ஒன்றை எமக்கு முன்பாக விரித்து, கிழக்கு மாகாணத்தை முக்கூறுபோடும் ஜெயவர்த்தனாவின் ‘புதிய திட்டம்' பற்றி எமக்கு விபரமாக விளக்கிக் கொண்டிருந்தார் திரு.டிக்சிட். இத் திட்டமானது வடக்கிலும் கிழக்கிலும் வாழும் தமிழர்களை இறுதியாக ஒன்றிணைக்க வழிவகுக்கும் என்று கூறிய அவர் இதுவொரு தற்காலிக ஒழுங்கு என்றும் இத் திட்டம் பற்றிதொடர்ந்தது பேச்சுக்களை நடத்தி முன்னேற்றம் காணலாம் என்றும் நம்பிக்கை தெரிவித்தார்.
நள்ளிரவு பூராகவும் ஜெயவர்த்தனாவின் திட்டத்தை அக்குவேறு ஆணிவேறாக விளங்கப்படுத்தி, எமது பொறுமையைக் கொலை செய்துவிட்டு, களைத்துப் போய்க் கடுப்புடனிருந்த பிரபாகரனைப் பார்த்து அத் திட்டம் பற்றி அவரது கருத்துக் கேட்டார் டிக்சிட். நான் எதிர்பார்த்ததுபோலவே வெடுக்கென்றுஇசுருக்கமாகப் பதிலளித்தார் பிரபாகரன். அவரது தொனியில் ஆத்திரம் தெறித்தது. ‘‘தமிழர் தாயகம் என்பது ஒன்றுதான். அதனைப் பிரிக்க முடியாது. ஜெயவர்த்தனா அதைப் பிரித்துக் கூறுபோட நாம் அனுமதிக்கப் போவதில்லை.'' என்று உறுதிபடச் சொன்னார்.
பிரபாகரனின் அந்த வசனத்தை நான் ஆங்கிலத்தில் மொழிபெயர்த்துக் கூறியபொழுது டிக்சிட்டின் முகம் சுருங்கியது. ஜெயவர்த்தனாவின் திட்டத்திலுள்ள குறைபாடுகளையும் ஆபத்துகளையும் நான் டிக்சிட்டுக்கு விளக்கிக் கூறினேன். விடுதலைப் புலிகளின் தலைமையோ அன்றித் தமிழீழ மக்களோ இத் திட்டத்தை ஒருபொழுதும் ஏற்றுக் கொள்ளப் போவதில்லை என்பதை தெட்டத் தெளிவாக அவரிடம் எடுத்துரைத்தேன்.
தனது நிலைப்பாட்டிலிருந்து பிரபாகரன் சிறிதளவும் விட்டுக் கொடுக்க மாட்டார் என்பதை நன்குணர்ந்த இந்திய தூதுவர் தனதுமுயற்சியைக் கைவிட்டு, வெளியுறவுச் செயலர் வெங்கடேஸ்வரனை எம்முடன் பேசுமாறு அழைத்தார்
....ஜெயவர்த்தனா அரசு முன்வைத்துள்ள திட்டம் தமிழ்மொழி வாரியான தாயகப் பிரதேசக் கோரிக்கையை ஒரு மட்டத்திற்கு நிறைவுசெய்ய முனைவதாகக் கூறிய வெங்கடேஸ்வரன், இதனை ஒரு இடைக்காலத் தீர்வாக நாம் கருதவேண்டுமெனக் கேட்டுக் கொண்டார். இந்த இடைக்காலத் தீர்வை நாம் ஏற்றுக் கொண்டால், ரஜீவ் காந்திக்கு அது பெரும் ராஜதந்திர சாதனையாக அமையும் என்றும் சொன்னார்.
இந்த சார்க் உச்சிமாநாடு இந்தியப் பிரதமருக்கு ஒரு வெற்றிகரமான அரங்காக மாறுவதற்கு நாம் ஒத்துழைக்க வேண்டுமென்றும் கேட்டுக் கொண்டார். முடிவில்இ நாம் எமது நிலைப்பாட்டை மறுபரிசீலனை செய்து ஆக்கபூர்வமான முடிவை எடுக்கும்படியும் வேண்டினார். பிரபாகரனால் சினத்தை அடக்க முடியவில்லை. அது சொற்களாகச் சீறியது. ‘‘ரஜீவ் காந்தியைத் திருப்திப்படுத்தி அவரது புகழை ஓங்கச் செய்வதற்காக எமது மக்களின் அரசியல் இலட்சியத்தை கைவிடச் சொல்கிறீர்களா?'' பிரபாகரனின் சீற்றத்தால் வெங்கடேஸ்வரன் ஆடிப்போனார்.
எமது உணர்ச்சியை தம்மால் புரிந்து கொள்ள முடிகிறது எனச் சமாதானம் கூறிச் சமாளித்தார். அங்கிருந்து வெங்கடேஸ்வரன் நழுவிச் சென்றதை அடுத்து, நட்வர் சிங் எம்மை அணுகினார். அவர் பேச்சைத் தொடங்குவதற்கு முன்னரே நான் குறுக்கிட்டு, சிறீலங்கா அரசின் திட்டத்திலுள்ள குறைபாடுகளை எடுத்து விளக்கி, அந்த யோசனையை எமது இயக்கமும் எமது மக்களும் ஒருபொழுதும் ஏற்றுக் கொள்ளப் போவதில்லை என உறுதிபடக் கூறினேன்.
''தமிழீழ தாயகத்தை மத ரீதியில் துண்டாடி, எமது முஸ்லிம் சகோதரர்களை அந்நியப்படுத்துவதற்கு ஏறத்தாள 24 ஆண்டுகளுக்கு முன்னர் சிங்கள - இந்திய அரசுகள் எடுத்த முயற்சியை தனது உறுதியான - தீர்க்கதரிசமான எண்ணங்களாலும், முடிவுகளாலும் தமிழீழ தேசியத் தலைவர் முறியடித்ததை நாம் இதிலிருந்து புரிந்து கொள்ள முடியும்.
முள்ளிவாய்க்காலில் வழிந்தோடிய தமிழ்க் குருதி காய்வதற்குள் தமிழீழ தேசியத் தலைவரின் இருப்பை மறுதலித்து, மாற்று அரசியல் பாதையில் தமிழீழ தேசத்தை இட்டுச் செல்ல முற்பட்ட கே.பி குழுவினர், தற்பொழுது நாடுகடந்த அரசமைப்புக் குழுவினராகப் பரிணமித்து, தமிழீழ தாயகத்தை, தமிழ், முஸ்லிம் அரசுகளாகத் துண்டாடும் திட்டத்தை முன்வைத்திருப்பதன் சூத்திரத்தைப் புரிந்துகொள்வதற்கு நாம் எல்லோரும் விண்வெளி விஞ்ஞானிகளாக மாறவேண்டியதில்லை.
எமது தேசிய விடுதலைப் போராட்டத்தின் இயங்கு சக்தியாக விளங்கும் தமிழீழ தேசியத் தலைவரின் எண்ணங்களுக்கு செயல்வடிவம் கொடுத்து, மாவீரர்களின் சத்திய வரலாற்றின் வழியில் எமது விடுதலையை வென்றெடுப்பதே எம்முன்னுள்ள ஒரேயொரு தெரிவு என்பதைப் புரிந்து கொண்டு, மாவீரர்களின் கனவை நனவாக்குவதே நாம் அனைவரும் எடுக்கக்கூடிய சரியான முடிவாக அமையும்.
நன்றி: ஈழமுரசு (16.04.2010)
மே 10 2009 தொடக்கம் நாளை வரை - ஒரு பார்வை
Posted by எல்லாளன் ஆய்வுகள், ஈழம் 9:32 AM
கடந்த வருடம் மே மாதம் 10 ஆம் திகதி நோர்வேயில் ஆரம்பிக்கப்பட்ட வட்டுக்கோட்டை தீர்மானத்தின் மீதான மீளுறுதி வாக்கெடுப்பின் தொடர்ச்சியாக, எதிர்வரும் 17 ஆம் மற்றும் 18 ஆம் திகதிகளில் அவுஸ்திரேலியாவிலும் வட்டுக்கோட்டை தீர்மானத்தின் வலுவுடமையை இன்றைய காலகட்டத்தில் பரிசோதிப்பதற்கான தேர்தல் நடைபெறவுள்ளது.இலங்கைத்தீவின் அனைத்து தமிழ் கட்சிகளாலும் 1976 ஆம் ஆண்டில் ஏகமனதாக ஏற்றுக்கொள்ளப்பட்ட வட்டுக்கோட்டைத் தீர்மானத்தினை 1977 ஆம் ஆண்டில் நடத்தப்பட்ட பொதுத்தேர்தலில் பெரும்பான்மையான தமிழ் மக்களால் ஏற்றுக்கொள்ளப்பட்டு அத்தீர்மானத்தினை முன்னெடுப்பதற்கான ஆணை அன்றைய இளம் தமிழ் சமுதாயத்திடம் கையளிக்கப்பட்டது.
அதனை தொடர்ந்து தமிழ் மக்களின் ஆணையை ஏற்று முப்பதாண்டுகளுக்கு மேலாக தொடர்ந்த ஆயுதப் போராட்டத்தில் நடைமுறை தமிழீழ அரசை நிறுவி சிறிலங்கா அரசுக்கு சமாந்தரமான நிழல் அரசை தமிழ் மக்களின் விடுதலைப் போராட்டம் நிலைநிறுத்தியது.
எனினும் 2009 ஆம் ஆண்டில் பல்வேறு நாடுகளின் நேரடி மற்றும் மறைமுக ஆயுத உதவிகளை பயன்படுத்தியும் உலகளாவிய ரீதியில் ஏற்பட்ட விடுதலைப் போராட்டங்கள் தொடர்பான நிலைப்பாடுகளை சாதகமாக்கியும் கொண்ட சிறிலங்கா அரசு, பல்லாயிரக்கணக்கான தமிழ் மக்களை ஈவிரக்கமின்றி கொன்றும் அங்கவீனப்படுத்தியும் கொடிய இனஅழிப்பு போரை செய்தது.
இக்கொடிய போர் தொடர்ந்தபோது, ஆயுத விடுதலைப் போராட்டத்தின் மூலம் கட்டியமைக்கப்பட்ட தமிழீழ நடைமுறை அரசின் இறைமைக்கான அச்சுறுத்தல் நிலை உணரப்பட்டது. இந்நிலையில் விடுதலைப் போராட்டத்தை நெறிப்படுத்திக்கொண்டிருந்த தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைமையால் புலம்பெயர்ந்து வாழும் தமிழ் மக்களின் அரசியல் பலத்தை முன்வைத்து, அரசியல் ரீதியான போராட்டங்களை கூர்மைப்படுத்துமாறு கோரப்பட்டது.

தமிழ் மக்களின் விடுதலைப் போராட்டத்தின் நியாயத்தை உலக சமூகத்திற்கு கொண்டுசெல்லும் நோக்கிலும் பயங்கரவாத முலாம் பூசப்ப்பட்ட ஈழவிடுதலைப் போராட்டத்தின் நியாயத்தை வெளிப்படுத்தவும் அனைத்து புலம்பெயர்ந்த நாடுகளிலும் வட்டுக்கோட்டை தீர்மானத்தை முன்வைத்து தமிழ் மக்களின் ஆணையை பெற்றுக்கொள்ளுதல் பொருத்தமானதாக இருக்குமென புலம்பெயர்ந்த தமிழ் மக்கள் கருதினர். அதனையே பொருத்தமான வழியென விடுதலைப் போராட்டத்தை தலைமைதாங்கிய தமிழீழ தேசிய தலைவரும் வெளிப்படுத்தினார்.
தாயகத்தில் நடைபெற்றுக்கொண்டிருந்த விடுதலைப் போராட்டம் ஒரு பயங்கரவாத போராட்டமல்ல என்பதையும் மாறாக அது ஒட்டுமொத்த தமிழ் மக்களின் அரசியல் அபிலாசைக்கான போராட்டமே என்பதையும் சனநாயக ரீதியில் சர்வதேச சட்டங்களுக்கு அமைவாக வெளிப்படுத்துவதற்காக வட்டுக்கோட்டை தீர்மானத்தை மீளுறுதிப்படுத்தும் தேர்தல் நோர்வேயில் முதன்முதலாக மே மாதம் 10 ஆம் திகதி நடத்தப்பட்டது.
நோர்வே வாழ் ஈழத்தமிழர்கள் 99 விழுக்காட்டுக்கும் மேற்பட்ட ஆதரவை வழங்கி வட்டுக்கோட்டை தீர்மானத்தை மீளுறுதிப்படுத்தினார்கள். ஏனைய நாடுகளிலும் இதற்கான ஏற்பாடுகளை செய்வதற்கு முன்பதாகவே தமிழீழ நடைமுறை அரசு செயலிழக்கம் செய்யப்பட்டுவிட்டது.
ஆனாலும் தாயகத்தில் வாழும் மக்களின் குரலாக தொடர்ந்தும் ஏனைய நாடுகளிலும் வட்டுக்கோட்டை தீர்மானத்தின் மீதான வாக்கெடுப்பை செய்வதற்கு புலம் பெயர்ந்த தமிழர்கள் உறுதியெடுத்துக்கொண்டனர்.
தாயகத்தில் ஏற்பட்ட பேரழிவை தொடர்ந்தும் அனைத்து தமிழ் மக்களிலும் இயல்பாகவே ஏற்படக்கூடிய வேதனையும் விரக்தியும் உடனடியாக ஏற்பட்டாலும் தொடர்ந்தும் தமிழீழ தேசிய விடுதலைப் போராட்டத்தை முன்னெடுக்கப்படவேண்டியதன் அவசியத்தை உணர்ந்துகொண்டனர்.
அதன் தொடர்ச்சியாக 2009 ஆம் ஆண்டில் டிசம்பர் மாதம் 12 மற்றும் 13 ஆம் திகதிகளில் பிரான்சிலும், அதே ஆண்டு டிசம்பர் 19 ஆம் திகதி கனடாவிலும் இவ்வாண்டு ஜனவரி மாதம் 23 ஆம் திகதி சுவிஸ்லாந்திலும், ஜனவரி மாதம் 24 ஆம் திகதி ஜேர்மனியிலும் நெதர்லாந்திலும், ஜனவரி மாதம் 30 மற்றும் 31 ஆம் திகதி பிரித்தானியாவிலும், பெப்ரவரி மாதம் 25 ஆம் திகதி டென்மார்க்கிலும், மார்ச் மாதம் 21 ஆம் திகதி இத்தாலியிலும் இவ்வாக்கெடுப்புகள் வெற்றிகரமாக புலம்பெயர்ந்த தமிழ் மக்களால் நடத்தப்பட்டுள்ளது.
எதிர்வரும் 17 ஆம் மற்றும் 18 ஆம் திகதிகளில் அவுஸ்திரேலியாவில் நடைபெறுவதற்கான வேலைகளில் அவுஸ்திரேலிய தமிழர் கருத்துக்கணிப்பு குழுவினர் ஈடுபட்டுள்ளனர். புலம் பெயர்ந்து வாழும் ஒரு மில்லியனுக்கு மேற்பட்ட ஈழத்து தமிழ் சமூகத்துடன் இணைந்து – தாயகத்தில் அடக்குமுறைக்குள் வாழும் இரண்டு மில்லியன் தமிழர்களின் குரலாக ஒலித்து - தமது வரலாற்றுக்கடமையை செய்வதற்கு அவுஸ்திரேலிய தமிழர்களும் இணைந்துகொள்ளுகின்றனர்.
சனநாயக ரீதியாக சர்வதேசத்தின் ஏற்றுக்கொள்ளப்பட்ட நியமங்களுக்கு அமைவாக தற்போது முன்னெடுக்கப்பட்டுவருகின்ற ஈழவிடுதலை போராட்டத்தின் புதுமையான வடிவமாகவுள்ள வட்டுக்கோட்டை தீர்மானத்திற்கான புலம் பெயர்ந்த தமிழர்கள் மத்தியிலான வாக்குப்பதிவானது வரலாற்றின் பக்கங்களில் நிச்சயம் தனக்கான இடத்தை தக்கவைத்துக்கொள்ளும் என்பதில் எவ்வித சந்தேகமுமில்லை.
- ஈழநேசன்-











