........சமாதான முயற்சியின் பாதுகாவலர் என உரிமை கோரி இலங்கையின் இனப்பிரச்சனையில் ஆர்வமும் அக்கறையும் காட்டிய உலக வல்லாதிக்க நாடுகள் ஒரு தரப்பினரான எமது விடுதலை இயக்கத்தைப் பயங்கரவாதிகள் என ஓரங்கட்டி ஒதுக்கிவிட்டு மறுதரப்பினரான சிறிலங்கா அரசின் நலன்களுக்குச் சார்பாக நிலைப்பாடு எடுத்தன.
இது பேச்சுக்களிற் பங்கு கொண்டோரது சமநிலை உறவை வெகுவாகப் பாதித்தது. அத்தோடு எமது எமது அரசியல் தகைமையை நாமே தீர்மானிக்கும் சுதந்திரத்தையும் பாதித்தது.
இந்நாடுகளின் ஒரு தலைப்பட்சமான நிலைப்பாடும் குறுக்கீடும் சமாதானப் பேச்சுக்கள் முறிந்துபோவதற்கும் ஒரு காரணமாக அமைந்தன....."
தேசியத்தலைவர் வே.பிரபாகரன் 2005 மாவீர்நாள் உரை
"சர்வதேச சமூகம் தமிழ்மக்களின் பாதுகாப்பு கவசமான ஆயுதத்தை களைவதற்கு எடுத்த முயற்சிகள் தோல்வியில் முடிந்தபின்னர், தமிழ் மக்களின் விடுதலை என்ற இலட்சியத்திற்கு மாறாக பயங்கரவாதம் என்ற கருத்துருவாக்கத்தை முன்வைத்தனர்... நீதியான எமது போராட்டத்தை பயங்கரவாத முத்திரை குத்தி நசுக்கிவிட எடுக்கும் முயற்சிகள் எவரது நோக்கத்தையும் அடைவதற்கு எதிர்வினையாக முடியும். தமிழ் மக்களும் சிங்கள மக்களும் தம்மை தாமே ஆளும் போதே நீதியான சமாதானம் நிலவும். "
ஒரு விடுதலைப் போராட்டத்தின் அத்திவாரம் அது வரித்துக்கொண்டுள்ள இலட்சியமாகும். அந்தப் போராட்டத்தின் மையம், இலக்கு யாவுமே இந்த இலட்சியமே. இந்த இலட்சியத்தை அடைவதற்கான போராட்ட வடிவங்களில் அது தரித்துக்கொண்டுள்ள ஆயுதங்களும், அஸ்திரங்களும் அடங்கும்.
தமிழ் மக்களின் போராட்டம் அன்னிய சிங்கள ஆட்சியில் இருந்து விடுபடுவதற்கான ஒரு போராட்டம். தமிழர் தமது தாயகத்தில் தம்மைத் தாமே ஆள்வற்கான போராட்டம்.
சிங்களதேசத்தின் சட்டங்களும் இயாப்புக்களும் இந்த விடுதலைப் போராட்டத்தை தொட்டு நிற்க முடியாது. இதனை தொடுவதற்காக சிங்களதேசம் அரசபயங்கரவாதத்தை ஏவிவிட்டது. இதனால் தமிழ்மக்கள் ஆயுதம் ஏந்தவேண்டி நிற்பந்திக்கப்பட்டனர்.
சர்வதேச சமூகம் தமிழ்மக்களின் பாதுகாப்பு கவசமான ஆயுதத்தை களைவதற்கு எடுத்த முயற்சிகள் தோல்வியில் முடிந்தபின்னர், தமிழ் மக்களின் விடுதலை என்ற இலட்சியத்திற்கு மாறாக பயங்கரவாதம் என்ற கருத்துருவாக்கத்தை முன்வைத்தனர். இதன் விளைவு ...
இதன் மூலம் பேச்சு வார்த்தையில் சமமாகப் பங்கு கொண்ட தமிழ் மக்களை சமனற்ற நிலைக்குத்தள்ளி அழுத்தங்கள் போடப்பெற்றன. இதனது நேரடி விளைவாக பேச்சு வார்த்தைகள் முறிவுற்றதும், தமிழ் மக்கள் மீதான சிங்கள அரச பயங்கரவாதம் ஒட்டுப்படைகள் என்ற வடிவத்தில் இடம்பெற்று வருவதும் அதன் விளைவால் இன்று தமிழ் தேசியத்தின் ஆயுதபலம் ஓய்வு நிலைபெற்று உலக ஒழுங்குக்கு அமைய மே 19 தொடக்கம் போராட்ட வடிவத்தை மாற்றிய இலட்சியப்பயணத்தில் நடக்க தொடங்கியிருப்பது நாம் அறிந்ததே.
சிங்கள அரசபயங்கரவாதத்தின் எதிர் வினையே தமிழ் மக்களின் ஆயுதப் போராட்டம். 1983 ஜூலை இன அழிப்பு யாழ்பாணத்தில் 13 சிங்கள இராணுவத்தினர் கொல்லப்பட்டதற்கான சிங்களமக்களின் எதிர்வினை என நிறுவ முற்பட்ட முயற்சிகளை நாம் அறிவோம். 13 இராணுவத்தினர் கொல்லப்படுவதற்கு ஆறு நாட்ககளுக்கு முன்னர் லண்டனில் இருந்து வெளிவரும் டெயிலி ரெலிகிறாப் பத்திரிகைக்கு
*1993மறைந்த அரச அதிபர் ஜெயவர்தனா அளித்த பேட்டி ஒன்றில்
" தான் இப்போது யாழ்ப்பாண மக்களின் அபிப்பிராயத்தை பொருட்படுத்தவில்லை என்றும் அவர்களைப்பற்றியோ அவர்களது உயிர்களைப் பற்றியோ அவர்கள் எங்களைப்பற்றி என்ன நினைப்பார்கள் என்பதைப் பற்றியோ தன்னால் சிந்திக்க முடியாது "
என்று கூறியிருந்தார்.
சிங்கள ஜனாதிபதிகள் பலர் வந்து போயினர். தமிழ்மக்கள் தொடர்பான அவர்கள் சிந்தனைகள் இருந்தபடியே இருக்கின்றன. ஆனால் ஒன்று மட்டும் மாறிவிட்டது அது என்னவென்றால் சிங்களமக்கள் எங்களைப்பற்றி என்ன நினைப்பார்கள் என்று நாம் இப்போது அலட்டிக்கொள்வதில்லை.
அறம் எங்கள் பக்கம். தர்மம் எங்கள் பக்கம். ஒரு தனி மனிதனுக்கு அரசு இழைத்த தவறிற்காக ஒரு நகரத்திற்கே நெருப்பூட்டி, மன்னனும் அவனது துணைவியான மகாராணியும் இறப்பதற்கு காரணமாக இருந்தாள் கண்ணகி. அது காப்பியகால கலாச்சாரம். இன்று அது பொருந்தாது என்பது எமக்கு தெரியும்.
" காலத்திற்கு ஏற்ற வகைகள், அவ்வக் காலத்திற்கு ஏற்ற ஒழுக்கமும் நூலும் ஞால முழுமைக்கும் ஒன்றாய் எந்த நாளும் நிலைத்திடும் நூல் ஒன்றும் இல்லை "
பாரதி
ஆனாலும் நீதியான எமது போராட்டத்தை பயங்கரவாத முத்திரை குத்தி நசுக்கிவிட எடுக்கும் முயற்சிகள் எவரது நோக்கத்தையும் அடைவதற்கு எதிர்வினையாக முடியும். தமிழ் மக்களும் சிங்கள மக்களும் தம்மை தாமே ஆளும் போதே நீதியான சமாதானம் நிலவும். அதனால் பிராந்தியவல்லரசிற்கும் பெரும் வல்லரசிற்கும் பிறர்கும் நன்மையுண்டாம் என இந்த உலகத்துக்கு மீண்டும் எடுத்துச் சொல்வோம்.
வீரர்கள் வாழும் திராவிட நாட்டை வென்றவர் கிடையாது வேலும் வாளும் தாங்கிய மறவர் வீழ்ந்ததும் கிடையாது
உண்மையை உணரமறுக்கும் சிங்களமும்,உண்மைக்காய் உழைக்க மறுக்கும் தமிழனும்
போர் முனையில் பலரிடமும் ‘கமரா” மற்றும் ‘கமராபோன்” இருந்தமைக்கு பாதுகாப்பு அமைச்சே ஆதாரம். சனல்-4 இல் ஒளிபரப்பாகி உலகத்தின் கவணத்தை ஈர்த்த அந்தக் கொலைக் காட்சி யாவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியது. இலங்கையில் நடந்து முடிந்தாக கூறப்படும் யுத்தத்தின் இறுதி மாதங்களில் பதிவு செய்யப்பட்ட அந்த ஒளிநாடா பல்வேறு சர்ச்சைகளை கிளப்பியுள்ளது.
தமிழ் மக்கள் நாள்தோறும் கண்ணால் கண்டும்,அனுபவித்தும் வரும் இத் துன்பங்கள் ஊடக நிறுவனங்களின் செய்தி பஞ்சத்தை பொறுத்து தான் வெளிவரும். இதனால் பல சம்பவங்கள் பாதிக்கப்பட்ட நபருடன் முடிவடைந்ததுண்டு. இவ் உண்மைச் சம்பவங்கள் பலவும் அப்படியாம்?! இப்படியாம்?! மெய்யே? என்று அச்சமூட்டும் ஒரு வதந்தி போல அது திரிபடைந்ததும் உண்டு.
கடந்த 30 வருட கால யுத்தத்தில் தமிழ் மக்கள் விலங்கினத்தை விட கேடுகெட்ட இனமாக கருதப்பட்து போலவே இருந்தது.
இறுதி சமாதான நடவடிக்கை காலத்தில் நாளுக்கு இரண்டு மூன்று என மாத்திரை விழுங்கிய கணக்கில் கொலையாளிகள் தமது மனநோயை தீர்த்துக் கொண்டிருந்தனர். ‘நாயைச் சுடுகின்ற மாதிரி மனுஷனைச் சுடுகின்றான்” என்ற வழக்க சொல் ‘ மனுஷனைச் சுடுகிற மாதிரி நாயைச் சுடுகின்றான் என இரண்டு நாய்கள் தமக்குள் பேசின” என்று நகைக்குமளவுக்கு கொலைகள் இடம்பெற்றது.
கடந்த 30வருட யுத்த காலத்தில் அனுபவித்த துன்பங்கள் பலரின் மனக் கண்களில் இன்றும் இருக்கின்றன. இந்திய இராணுவத்தின் பல படுகொலைகள் பாலியல் வல்லுறவுகள், என்பனவும் இதில் அடங்கும். இந்திய இராணுவத்தின் ஒரு சுற்றி வளைப்பின் போது இளைஞன் ஒருவன் தாக்கப்பட்டான் அவன் அன்று அம்மா என்று கதறிய கூக்குரல் இன்று வரை என் காதில் கேட்டுக் கொண்டிருக்கின்றது. ஏனெனில் நான் அப்போது சிறுவனாயிருந்தேன் என் மனது பாதிப்புக்குள்ளானது.
அடக்கு முறையின் ஒவ்வெரு உதாரணங்களையும் ஒவ்வொரு தமிழனிடமும் கேட்டு அறிந்து கொள்ளலாம். இப்படியாக மறைக்க முற்பட்ட சாட்சிகளில் ஒன்றாக இருந்த அந்த படுகொலை காட்சியாக்கப்ட்டு உலகின் கண்களுக்கு முன்வைக்கப்பட்டுள்ளது.
இச் சாட்சியை கண்டு அஞ்சியது மகிந்த அரசு.
உண்மையில் குறிப்பிட்ட காட்சி திட்டமிட்ட பரப்புரைக்காக காட்சிபடுத்தப்பட்டதல்ல.
கொலைவெறி இன்பத்தை பகிர்வதற்காக பதிவு செய்ப்பட்ட குறிப்பிட்ட காட்சியானது ஜனநாயகத்தை விரும்பும் உண்மையான நபர் ஒருவரின் கைக்கு கிட்டியது தான் இதன் வெற்றி. இப்படி வம்புக்காக எடுத்த படங்கள் சில இணையத் தளங்களில் பதிவு செய்யப்பட்டுள்ளதை அவதானிக்கலாம். போர் முனையில் இருந்த இராணுவத்தினர் பலரிடமும் ‘கமரா” மற்றும் ‘கமராபோன்” இருந்தன இதற்கு பாதுகாப்பு அமைச்சு பல தடைவைகளில் வெளியிட்ட போர் தொடர்பான படங்களே ஆதாரம்.
சிங்கள தாய்மார்களே உங்கள் பிள்ளைகள் தமிழனை வெற்றி கொண்டதாக கூறப்படும் இக் காட்சியை பார்த்து பாற்சோறு பொங்கி, புத்தனுக்கும் கொடுத்து புதல்வருக்கும் கொடுங்கள்.
சிங்கள தாய்மார்களே உங்கள் பிள்ளைகள் தமிழனை வெற்றி கொண்டதாக கூறப்படும் இக் காட்சியை பார்த்து பாற்சோறு பொங்கி, புத்தனுக்கும் கொடுத்து புதல்வருக்கும் கொடுங்கள்.
பெண் புலி உறுப்பினர் ஒருவர் களத்தில் தாம் கண்ட தகவல் என்று கூறுகின்றார்
ஆண் பெண் யாவரையும் நிர்வாணப்படுத்தி சோதனை செய்வதையும், குறிப்பிட்ட வயது தரத்தினரை தனியான அழைத்து சென்று சுட்டுக் கொள்வதையும் தாம் தொலைநோக்கி ஊடாக அவதானித்ததை கூறியிருந்தார்.
சனல்-4இல் ஒளிபரப்பப்பட்ட அந்த காட்சி உண்மைக்கு புறம்பானது எனவும் இது போன்ற செயல்களில் தம் படையினர் ஈடுபடவில்லை என்றும் இலங்கை அரசு ஆணித்தரமாக மறுக்கின்றது. (இலங்கையில் மனிதர்கள் எப்பொழுது மனிதாபிமானத்துடன் செயற்படுகின்றார்கள், மனிதனின் மரணப் படுக்கையான வேளையில், கடவுளின் இல்லமாக தெரியும் வைத்தியசாலையில் கூட அது இல்லை.)
இதை விட இராணுவத்தின் புலனாய்வுத் துறையின் பின்னனியுடன் இயங்கும் இலத்திரனியல் ஊடகங்கள் பலவும் அந்தக் கொலையில் ஈடுப்பட்டிருப்பவர்கள் புலிகள் எனவும் அதில் கொல்லப்படும் நபர் ஒருவர் புளொட்டின் வவுனியா உறுப்பினர் பாருக் எனவும் தெரிவித்திருந்தன. தெளிவாயிருந்த பலர் அவ் ஊடகங்களின் அச் செய்திகளுக்கு தமது விமர்சனங்களை தெரிவித்துள்ளதுடன் பாருக் என்பவர் தற்போது திரிகோணமலையில் வசித்து வருவதாவும் தெரிவித்துள்ளனர்.
ஏற்கனவே பல தமிழ் ஊடகங்கள் இனப் படுகொலையை கூறிவந்த போதும் அத் தகவல்களை உறுதிப்படுத்த முடியவில்லை என்று கூறிவந்த பிறமொழி ஊடகங்களுக்கும் சர்வதேசத்திற்கும் இன்னொரு சாட்சியை ”இலங்கையின் ஜனநாயக ஊடகத்திற்கான அமைப்பு” உலகிற்கு உலகிற்கு முன்வைத்துள்ளது.
இங்கு கவணிக்க வேண்டிய விடயம் என்ன வென்றால். வெளிநாட்டில் வாழும் தமிழர்களை இலக்கு வைத்து அரசு மேற்கொண்டு வரும் சதி முயற்சிகளில் தமிழ் மக்கள் தம்மை பாதுகாக்க வேண்டும் என்பதே.
1.ஏற்கனவே போரில் ஈடுபட்ட இராணுவத் தளபதிகள் சிலர் வெளிநாடுகளில் தங்கியுள்ளனர்,மற்றும் வெளிநாட்டு வீதிகளில் போராடவும் தொடங்கியுள்ளனர்,
2.தவிரவும் விடுதலைப் புலிகளுக்கு புனர்வாழ்வு என்ற பேரில் புலனாய்வாளர்கள் வெளிநாடகளுக்கு குறிப்பாக மலேசியா மற்றும் அரபு நாடுகளுக்கு அனுப்பட்டுள்ளனர்,
3.வடக்கு கிழக்கு அபிவிருத்தி என்ற மாயயை தேற்றுவித்து புலம் பெயர் தமிழர்களின் மன நிலையை கவருதல் போன்ற பல கோணங்களில் வலைவீசப்பட்டுள்ளது.
இந்த அடிப்படையிலேயே குறிப்பிட்ட சில ஊடகங்கள் அரசிலும் அதிக அக்கறையாக இவ்விடயத்தை மறுத்து செய்திகளை வெளியிடுவதுடன் நாட்டில் புலிகள் இல்லை என்று அரசு கூறுவதற்கு முரணாக புலிகளுக்கு எதிரான தமது வெறுப்புனர்வை காட்டுகின்றனர்.
தவிர குறிப்பிட்ட ஒளிநாடா தொடர்பான பத்து நாள் விசாரனைகள் முடிவடைந்து அது தொடர்பான அறிக்கையும் வெளியிடப்பட்டதுடன், ‘சனல்-4 நிறுவனத்திற்கு எதிராக சட்ட நடவடிக்கையும் எடுப்பதற்கு சட்மா அதிபருடன் ஆலோசனை நடத்தப்பட்டு வருவதாகவும். இது சனல்-4 நிறுவனத்திற்கு சாவலாக அமைவதுடன் ஏனையோருக்கு படிப்பினையாகவும் இருப்பதே எமது நோக்கம் என அமைச்சர் சமரசிங்க கூறியுள்ளார்.
‘தொடுகை வடிவ உலகில்” வாழுந்து கொண்டிருக்கின்றோம் என்பதை மறந்து குறிப்பிட்ட விசாரனையாளர்கள் அறிக்கை மற்றும் விளக்கங்களை வெளியிட்டிருப்பது நகைப்புக்கிடமானது. கைத்தொலைபேசி கமராக்களின் தரத்தை குறைத்து மதிப்பிட முடியாது என்பதை குறிப்பிட்ட விசாரனைக் குழு முதலில் ஏற்க வேண்டும்.
மேலும் காட்சி எதில் பதிவு செய்யப்பட்டுள்ளது என்பதை விட சம்பவமே முக்கியமானது. குறிப்பிட்ட விசாரனையாளர்கள் காட்சிப்படுத்தப்பட்ட கருவி எது என்பதற்கான விளக்கத்தை முன்வைக்கின்றனரே தவிர அக்காட்சி பொய்யானது என்று கூறமுடியவில்லை.
பதிவுசெய்யப்பட்ட கருவியை எது என்பதை நிருபிப்பதன் மூலம் அச்சம்பவத்தை மறைக்க முடியாது. அச் சம்பவத்தை மூடிமறைத்தாலும் இது போன்ற அதிர்ச்சி தரும் ஏனைய விடயங்கள் எதிர் காலத்தில் அம்பலத்துக்கு வருவதை தவிர்ப்பதற்காண நடவடிக்கையை அரசு மேற்கொண்டுள்ளது. இதன் முதற் கட்டமாக களநிலை படப்பிடிப்புக்களில் ஈடுபட்டவர்களிடம் இருந்து ஆவணங்களை பாதுகாப்பு அமைச்சு தனது கட்டுப்பாட்டின் கீழ் கொண்டுவர நடவடிக்கையை எடுத்துள்ளது. இதன் முதற் கட்டமாக களநிலை படப்பிடிப்புக்களில் ஈடுபட்டவர்களிடம் இருந்து ஆவணங்களை படைநடைவடிக்கையில் ஈடுபட்டிருந்த படையினரிடம் இரகசிய உள்ளக புலனாய்வு விசாரனைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதுடன், ஒலி,ஒளிப்பதிவு சாதனங்கள் வைத்திருந்த படையினர் இனம் காணப்பட்டு வருவதாகவும் அறிய முடிகின்றது.
மேலும் அண்மையில் வீதி விபத்தில் இறந்ததாகக் கூறப்படும் ஜ.ரி.ன் ஊடகவியலாளரின் மரணத்தில் சந்தேகம் எழுந்துள்ளதாகவும் கதைகள் கசிகின்றன.
கைத்தொலைபேசியில் பதிவு செய்யப்படும் படங்களின் தரம் கிடைக்கப்படும் ஒளியைப் பொறுத்தும் குறித்த காட்சியை நோக்கிய வில்லையின் சுருக்கமும் படத்தின் தரத்தை நிர்ணயிக்கும். ஒளிநாடாவாக இருந்தால் கமராவின் அசைவின் வேகமும் காட்சியின் தரத்தை நிர்ணயிக்கும், கைத்தொலைபேசியில் எடுக்கும் படங்கள் ஒளிநாடாவாக இருந்தாலும் சரி, ஒளிப்படமாக இருந்தாலும் சரி வில்லையை சுருக்காது நிலையான தூரத்தை பயன்படுத்தினால் மாத்திரமே சிறந்த காட்சியை பெற முடியும். காட்சிக்கு அருகில் சென்று பதிவு செய்தல் சிறந்த தரமான காட்சியை பதிவுசெய்யலாம்.
கைத்தொலைபேசியில் மாத்திரம் படப்பிடிப்பு செய்யும் இந்த பதிவை பார்வையிடுங்கள்.
சனல்-4 இல் காண்பிக்கபட்டுள்ள காட்சியானது. வில்லை சுருக்கத்துக்கு உட்பட்டு காட்சிப்படுத்தப்பட்டுள்ளது என்பது தொளிவாக உணரப்படுகின்றது.
குறிப்பிட்ட காட்சி தொடர்பான விசாரனையின் இறுதியில் இலங்கை அரசு அறிவித்திருக்கும் எச்சரிக்கையானது நாடுகடந்த வன்முறையை முன்னெடுக்கும் நோக்கத்தின் வெளிப்பாடாக பொருள்கொள்ள வேண்டும். இது சனல்-4 நிறுவனத்திற்கு சாவலாக அமைவதுடன் ஏனையோருக்கு படிப்பினையாகவும் இருப்பதே எமது நோக்கம் என அமைச்சர் சமரசிங்க கூறியுள்ளார்.
விடுதலைப் புலிகளின் புதிய தலைவர் செ.பத்மநாதன் கைது செய்யப்பட்டுள்ள விவகாரத்துடன் இதனையும் ஒன்றித்து கவணிக்க வேண்டும்.
சனல்-4இல் வெளியாகிய குறிப்பிட்ட ஒளிநாடா உற்பட, இறுதிப் போரின் சில கோரக் காட்சிகளை சீனா மற்றும் ஜரோப்பிய நபர்களுடன் பகிர்ந்து கொண்ட போது இது எங்கு இடம்பெற்றது என்று கேட்டதுடன், அக்காடசிகளை காண்பித்ததற்காக தரக்குறைவாகவும் என்னை மதிப்பிட்டார்கள். அதாவது இதுபோன்ற காட்சிகளை காண்பிக்க வேண்டாம் என்று கூறுகின்றார்கள்.
மேற்கு உலகமும் மோக உலகமும் இது போன்ற வன்முறைகளை கற்பனை கதைகளாகவும், திகிலூட்டும் திரைப்படமாகவும் தான் பார்க்க விரும்புகின்றதே தவிர உண்மையாக நிகழும் சம்பவத்தை பகிர்ந்து கொள்ள விரும்பவில்லை.
இது போன்ற வன்முறை காட்சிகளைப் பார்த்து மக்கள் மனச்சுமையுடன் இருப்பதை அந்த நாட்டு அரசுகளும் ஊடகங்களும் விரும்பாமல் இருப்பதற்கு காரணமும் உண்டு, ஏனெனில் இரண்டாம் உலகப்போரின் வடுக்களில் இருந்து மக்களை மீட்டெடுத்து நாட்டின் அபிவிருத்தியை பற்றி சிந்திக்கின்றார்கள்.
பார்ப்பதற்கே விருப்பமில்லாத இக் காட்சிகளை எம்மக்கள் அனுபவித்து வருவதற்கு வழி அமைத்தவர்கள் யார்? ‘பயங்கரவாத்தை ஒழிக்க தமது முழு ஆதரவும் உண்டு” என கூறிய சர்வதேசம் தான் இதற்கு பொறுப்பு கூறவேண்டும்.
இதற்கு தமிழ் மக்களாகிய நாம் என்ன செய்யப்போகின்றோம்.
தொடர்ந்தும் காலம் தப்பிய அறிக்கைகளை வெளியிடுவதையும் கருத்துக் கூறுவதையும் தவிர்த்து, எதிர் அறிக்கைகளையும் எதிர் நகர்வுகளையும் செய்வதற்கு சுறுசுறுப்பாய் இருக்க வேண்டும். இவ் நடவடிக்கையை கடந்த காலங்களை விட தற்போதே முழுவேகத்துடன் செய்யவேண்டும்
கஞ்சி குடிப்பதற்குக் கூட வழியற்றவர்களாக எம்மக்களை ஆளாக்கிய அடுக்குமுறைகளுக்கு துணைபோகும் சர்வதேச சமூகம் அதற்கான காரணங்களை அறியும் ஆற்றல் அற்றவர்களாக எம்மக்களை ஆளாக்குவதற்கும் துணைபோவது ஏன் என்பதை நாம் விழங்காதுவிடின் அவர்களது நிகழ்ச்சி நிரலின்கீழ் நாமும் ஒரு நிகழ்வாக இடம்பெறுவோம்.
"...அமெரிக்கா தலைமையிலான இணைத்தலைமை நாடுகள் ஒருபுறம் இந்தியா ஒருபுறும், சீனா ஒருபுறம், பாகிஸ்தான் ஒருபுறம், இவர்கழுக்கிடையிலான ஒட்டுறவுகள் முரண்பாடுகள் என்னும் கலப்புக்கள் ஒருபுறம் என சமகாலம் விரிகின்றது.
இவற்றின் சூட்சுமங்களை, இவர்களால் அவ்வப்போது வெளிப்படுத்தப்படும் நடவடிக்கைகள், கருத்துக்கள் என்பவற்றின் பின்னால் வெளிப்படுத்தப்படாதவற்றை, சொல்ல நினைத்ததை சொல்லாமல் விட்டதை நாம் புரிந்துகொள்ள வேண்டுமாயின் எமக்கு இவைபற்றிய வாசிப்புக்களும் கருத்துப்பரிமாற்றங்களும் அவசியமாகும். .."
வாழ்வுக்கான காரணம் என்னும் (The Life of Reason) நூலில் அதன் ஆசிரியர் ஜோர்ஜ் சன்ரயானா (George Santayana ) என்னும் தத்துவஞானி " தங்கள் கடந்த காலத்தை ஞாபகத்தில் கொள்ளாதோர் அதனை மீண்டும் அனுபவிக்குமாறு சபிக்கப்படுவர் " - "Those who cannot remember the past are condemned to repeat it ” எனக் கூறுகின்றார்.
பொதுஅறிவில், சமூகத்தில், சமயத்தில், கலையில், விஞ்ஞானத்தில் வாழ்வுக்கான காரணங்களைத் தேடும் இந்நூலில் பலராலும் எடுத்தாளப்படும் மேற்குறிப்பிட்ட வாசகம் பொது அறிவின் கீழ் இடம் பெற்றுள்ளது. தனிமனிதர்களுக்கும், சமூகத்திற்கும், நாடுகளுக்கும் இது பொருந்தும்.
எமது வசதிக்காக வரலாற்று ஞானம் எனக் கூறிக்கொள்வோம். அறிவு வேறு , ஞானம் வேறு. முன்னது புறம் சார்ந்தது பின்னது அகம் சார்ந்தது. ஞானம் பட்டுத்தெளிவதால், அழுந்தி அறிவதால் பெறப்படுவதெனின் சாதாரண மக்களிடம் அதனை நிறையக் காண்கின்றோம். இது அடக்கப்பட்ட ஒடுக்கப்பட்ட மக்களுக்கும் பொருந்தும்.
ஆயின் கடந்தகாலம் பற்றிய அறிவு ,ஞானம் என்பன எம்மைச்சுற்றி அவிழ்ந்து கொண்டிருக்கும் (unfolding ) சமகால நிகழ்வுகளை உரிய முறையில் புரிந்து கொள்ள உதவாதுவிடின் அந்த அறிவு வெறும் உபதேசமாகவே முடியும் . எமது கவனக் குவிப்பு எம்மைச் சுற்றி நிகழும் நிகழ்வுகளின் மீது குவிக்கப்படும்போது அவற்றை நாம் வாசிக்கும் விதத்தில் தெளிவு ஏற்படுவதை அவதானிக்கின்றோம்.
இப்படியான வாசிப்பை வசப்படுத்தியவர்களில் ஒருவரான மாமனிதர் தராக்கி எனப்படும் சிவராம் "States that want to oppress a people do so by breaking their political will to resist injustice---It is easier to enslave a people who have lost their ability to understand the nature of their oppression " எனக் கூறியதை எத்தனை தரம் அழுத்திச் சொன்னாலும் தகும்.
கஞ்சி குடிப்பதற்குக் கூட வழியற்றவர்களாக எம்மக்களை ஆளாக்கிய அடுக்குமுறைகளுக்கு துணைபோகும் சர்வதேச சமூகம் அதற்கான காரணங்களை அறியும் ஆற்றல் அற்றவர்களாக எம்மக்களை ஆளாக்குவதற்கும் துணைபோவது ஏன் என்பதை நாம் விழங்காதுவிடின் அவர்களது நிகழ்ச்சி நிரலின்கீழ் நாமும் ஒரு நிகழ்வாக இடம்பெறுவோம்.
அமெரிக்கா தலைமையிலான இணைத்தலைமை நாடுகள் ஒருபுறம் இந்தியா ஒருபுறும், சீனா ஒருபுறம், பாகிஸ்தான் ஒருபுறம், இவர்கழுக்கிடையிலான ஒட்டுறவுகள் முரண்பாடுகள் என்னும் கலப்புக்கள் ஒருபுறம் என சமகாலம் விரிகின்றது. இவற்றின் சூட்சுமங்களை, இவர்களால் அவ்வப்போது வெளிப்படுத்தப்படும் நடவடிக்கைகள், கருத்துக்கள் என்பவற்றின் பின்னால் வெளிப்படுத்தப்படாதவற்றை, சொல்ல நினைத்ததை சொல்லாமல் விட்டதை நாம் புரிந்துகொள்ள வேண்டுமாயின் எமக்கு இவைபற்றிய வாசிப்புக்களும் கருத்துப்பரிமாற்றங்களும் அவசியமாகும்.
தமிழ் மக்களின் தேசிய விடுதலைப் போராட்டத்தை பயங்கரவாதம் , பிரிவினைவாதம், ஆயுதக்குழு, இனக்குழுமம், தமிழ் சமூகம், சிறுபான்மையினத்தவர் என்ற பதங்களால் இவர்கள் அழைப்பதன் காரணங்கள் என்ன என்பவற்றை நாம் விளங்கிக்கொள்வதன் மூலமே மாற்றங்களைக் கொண்டுவர முடியும்.
தேசியம் என்றால் அரசாகும் தகுதியுண்டு. சிறுபான்மையினருக்கு., இனக்குழுமத்திற்கு அவை இல்லை. மக்கள் என்றால் அவர்களுக்கு தம் அரசியல் தலைவிதியை, தமது தற்பாதுகாப்பை தாமே தேடிக்கொள்ளும் உரிமை உண்டு. சிறுபான்மையினர்க்கு, இனக்குழுவிற்கு இது இல்லை. இதனால் தானா எம்மீது இவ்வார்த்தைப் பிரயோகங்கள்?. அதிஸ்டவசமாக tamilnation.org இணையத்தளம் சலிக்காது இதற்கான வாசிப்பிலும் தேடலிலும் எமக்கு வழிகாட்டியாக உள்ளது.
உதாரணத்திற்கு இறைமை (sovereignty) ஆட்புல ஓருமைப்பாடு (Territorial integrity) இவற்றால் சிறிலங்கா ஒரு நாடு என வாய்ப்பாடாக சர்வதேச சமூகம் கூறுவது ஏன்? இதில் எமக்கொரு ஞாயம் கொசொவாவற்கு ஒரு ஞாயம் ஏன்? உண்மை என்ன .
1619 ஆம் ஆண்டில் யாழ்ப்பாண இராச்சியத்தின் கடைசி மன்னன் சங்கிலி குமாரனை போர்த்துக்கேய தளபதி பிலிப் டீ. ஒலிவேரா தரைப்படை கடல்படை கொண்டு தோற்கடிக்கின்றான். பின்னர் கோவாவில் தூக்கில் இடப்படுகின்றான். எதிர்மனசிங்கனின் மூன்று புதல்விகளும் கோவாவிலும் லிஸ்பனிலும் மதமாற்றம் செய்யப்பட்டு அவர்கள் ஆவணம் ஒன்றின் மூலம் யாழ்பாண இராச்சியத்திற்கான உரிமையை போர்த்துக்கேயருக்கு கையளிப்பு .
பின்னர் டச்சுக்காரர் பிரித்தானியர் சிங்களவர். ஆகியோரிடம் இழந்த இந்த இறைமையை மீட்டு எடுக்கும் மகத்தான மக்கள் பிரகடனமே 1977 வட்டுக்கோட்டைப் பிரகடனம். அதைத்தொடர்ந்து வந்த விடுதலைப் புலிகளின் தன்னாட்சி உரிமைக்கான விடுதலைப்போராட்டம். யாரின் இறைமை. யாரின் ஆட்புலம். எங்கே பிரிவினைவாதம். இதனை நவீன கற்கையில் Reversion of Sovereignty என்பர். இதனை இவர்கள் ஏன் மறுக்கின்றார்கள்?
இவைபற்றிய தெளிவின் மூலமே சமகால நிகழ்வுகளை எம்வசப்படுத்தி சர்வதேச சமூகத்துடன் நாம் உறவாடமுடியும்.
(பின்னிணைப்பு) மக்கள் துன்பத்தை அனுபவிக்கிறார்கள் அவர்களைக் காக்க வேண்டும் என்கின்ற ஆதங்கமும் உணர்ச்சியும் உணர்வும் நியாயமானதே. அந்த நியாயத்தை கடந்த கால அனுபவப் பகிர்வினூடான தெளிவினூடாகவே முன்னெடுத்தல் இன்று முக்கியமானது
சமகாலம் பற்றிய விழிப்புணர்ச்சி என்பது ,இருட்டிலும் விழிப்புடன் இருத்தலாகும்.
இந்தச் சமயத்தில் தாந்தே (Dante) என்னும் புகழ்பெற்ற 13 ஆம் நூற்றாண்டை சார்ந்த கவிஞனின் " தெய்வீக நகச்சுவை இன்பியல் " ( Divine comedy) என்னும் காவியத்தை ஒருமுறை நோட்டம் விடுவோம். இதில் மூன்று உலகங்கள் சித்திரிக்கப்படுகின்றன. நரகம் (Inferno) பாவம் போக்கும் இடம் (Purgatory ) சுவர்க்கம் (Paradise) என்பவையே அவை.
கவிஞனே இந்த மூன்று உலகத்திலும் பிரவேசம் செய்கின்றான். எங்கள் பாரதியின் ஞானரதம் போல. அங்கு நரகலோகத்தின் வாசலில் ஒரு பலகை தொங்குகின்றது. இங்கு நுழைவதற்கு முன்னர் எல்லா நம்பிக்கைகளையும் துறப்பீராக (Abandon all hope before enter ) என்பதே அந்த வாசகம். நரகத்துள் வீழ்வதற்கு முன்பும் மனிதனுக்கு ஒரு சந்தர்பம். அவனது சுயமுயற்சியால் (Free will ) தன்னைக் கட்டிய தளைகளை அறுக்கும் வாய்ப்பு. இதற்கு சமகாலம் பற்றிய அறிவு அவசியம். நரகத்தில் வீழ்ந்தவர்களுக்கு கடந்தகாலம் பற்றிய அறிவும் எதிர்காலம் பற்றிய அறிவும் உண்டாம்.
ஆனால் சமகாலம் பற்றிய அறிவு அவர்களுக்கு இல்லை. இது அவர்கள்மேல் தாந்தேயின் கேலி. ஏனெனில் இறுதித் தீர்ப்பின் பின்னர் காலம் முடிகின்றது. அதனால் நரகத்தில் உள்ளோர்க்கு ஒரு அறிவும் இல்லை என்கிறார். அவர்கள் மீளா அடிமைக்குள் ஆளாவர். சிவராமின் வார்த்தையில் " ...It is easier to enslave a people who have lost their ability to understand the nature of their oppression "
ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் பபிலோன் ஆற்றம் கரையில் அழுது பாடமறுத்த யூத மக்களைப்போல் நாமும் எம் இலட்சியத்தை சுமக்கும் அதேசமயம் சமகால நிகழ்வுகள் பற்றிய தெளிவிற்கான வாசிப்புக்களிலும் கருத்துப்பரிமாற்றலிலும் ஈடுபடுவோமாகாக.
இந்த 21ஆம் நூற்றாண்டின் நாகரீக முகத்தை எமக்குக் காட்டிய உலகத்தை, தமிழர்கள் என்றென்றும் நினைவில் வைத்திருப்பாரென்று, வன்னியிலிருந்து வெளியேறிய மருத்துவப் பணியாளர் ஒருவர் கூறியிருக்கிறார்.
வன்னிக்கள அனுபவப் பகிர்வில் மக்கள் சேவையாளர் தெரிவித்த கருத்து இது. ஆயுதம் ஏந்திப் போராடிய புலி உறுப்பினர் அல்ல இவர். சிங்களத்தின் பேரினவாத கோர முகத்தினை அம்பலமாக்கும் செய்தி இது.
35 வருடங்களிற்கு முன்னர், கிழக்குத் தீமோரில் படுகொலையான ஊடகவியலாளர் குறித்து, விசாரணை மேற்கொள்ள வேண்டுமென அடம் பிடிக்கும் மனித உரிமைக் காவலர்களின் நிகழ்ச்சி நிரலில், வன்னிப் படுகொலைகள், 2046 ஆம் ஆண்டளவில் பதியப்படலாம். விசாரணைகளின்றி காலத்தை இழுத்தடிப்பதற்கு, பல அரசியல் நலன் சார்ந்த காரணிகள் உண்டு.
ஆனாலும் அதனைத் துரிதப்படுத்துவதற்குரிய தேவை, பாதிக்கப்பட்ட மக்களுக்கு மட்டுமே உரித்தானது. அரசியல் உரிமைக்காக மட்டுமல்ல, இன அழிப்பிற்கெதிராகவும் போராட வேண்டிய அவசியம் இருக்கிறது. நடந்து முடிந்துவிட்டதாகக் கருதப்படும் ஆயுதப் போராட்டத்தில், சர்வதேசப் பார்வை, பிராந்திய நாடொன்றின் நலன் புறக்கணிக்கப்பட்டிருப்பதாக கூறுவோர், அடுத்த போராட்ட நகர்வில் முன்னெடுக்கப்படவேண்டிய வேலைத் திட்டங்களைத் தெளிவாக முன்வைக்கக் கடமைப்பட்டுள்ளார்கள்.
தேசியத் தலைவர், விடுதலைப் புலிகளின் முக்கிய உறுப்பினர் தோழர்.க.வே பாலகுமாரன் உட்பட பல தமிழ்நாட்டுத் தலைவர்களும், இந்தியாவை நோக்கி நட்புக்கரம் நீட்டினார்கள். ஆனாலும் நடந்தது என்ன?
இராணுவத்தால் சுற்றிவளைக்கப்பட்ட மக்களுக்கு உணவையும் மருந்தையும் அனுப்ப ஆவன செய்யுமாறு இந்திய அரசினை நோக்கி, பல திசைகளிலும் இருந்து வேண்டுகோள் விடுக்கப்பட்டன. செவிடன் போன்று நடித்தவர்களின் காதுகளில் ஊதிய சங்கொலி போன்று எல்லாமே அமைந்து விட்டது.
பொது மக்களின் அடிப்படை வாழ்வாதார உரிமைகளுக்குக் குரல் கொடுக்க மறுத்தவர்களின் நலன் குறித்து எவரால் கவலைப்பட முடியும்? பச்சையான கச்சை தீவையும், முழு இலங்கையையும் இழந்ததுதான், இந்திய நலன் விரும்பும் மத்திய கொள்கை வகுப்பாளர்கள் சாதித்த விடயங்கள். கொச்சினிலிருந்து கொழும்புத் துறைமுகத்திற்கு, கப்பல் சேவையை ஆரம்பித்தால், சிங்களத் தீவினிற்கோர் பாலம் அமைத்தாகிவிட்டதென்று இவர்கள் ஆனந்தமடையலாம்.
இதனால் சனிப்பெயர்ச்சி மாற்றத்திலிருந்து தப்பித்துக்கொள்ள, மலையாள மாந்திரீகர்களையும், அண்டசராசரங்களை அளந்தெடுக்கும் சோதிடர்களையும் கொச்சினிலிருந்து கொண்டு வரலாம். இந்தச் சனி விடயந்தான் தென்னிலங்கை அரசியல்வாதிகள் பலரை அச்சுறுத்துவதாகச் சொல்லப்படுகிறது. ஆயினும், போர்க்குற்றங்களிலிருந்து தப்பித்துக்கொள்ள, சோதிடர்களைவிட மந்திரவாதிகளே பெரும் பங்கினை வகிப்பார்கள். ஆகவே அலரி மாளிகையில், மகிந்த ஆட்சி நீடிப்பதற்காக பல யாகங்களையும் இவர்கள் நடாத்தலாம்.
நேர்வழியைக் காட்டிலும், குறுக்கு வழி நீளமானது என்கிற அறிவியல் உண்மையை இனித்தான் இந்தியா புரியப்போகிறது. தனது உள்நாட்டு, வெளிநாட்டு புலனாய்வுப் பேரவைகளை அழைத்து, பாகிஸ்தான், சிறீலங்காவிலிருந்து வரவிருக்கும் தேசிய பாதுகாப்பு அச்சுறுத்தல் குறித்து, விவாதிக்கவிருப்பதாக இந்தியச் செய்திகள் கூறுகின்றன.
இந்தக் கொள்கை வகுக்கும் கூட்டத்தில், சட்ட ஆலோசகர் உருத்திர குமாரன் தலைமையில் உருவாகும் நாடு கடந்த அரசின் செயற்பாடுகள் மற்றும் உலகத் தமிழர் பேரவையின் வளர்ச்சி குறித்து நிச்சயம் பேசப்படுமென்று நம்பலாம். இறுதிக்கட்டப் போர்வரை, இந்திய, மேற்குலக நலன்கள், தமிழ் மக்களின் அரசியல் அபிலாசைகளுக்கு எதிராக இருந்தது உண்மை. அதனை எமக்குச் சாதகமாக மாற்ற வேண்டுமாயின், தாயக புலம்பெயர் மக்களிடையே ஒரு பலமான ஒருங்கிணைந்த அரசியல் சக்தி தேவை.
அவ்வகையான இறுக்கமான, மக்கள் சக்தியின் அடித்தளத்திலிருந்து கட்டப்படும் அரசியல் தலைமையே, பிராந்திய சர்வதேச நலன்களோடு பேச முடியும். தமிழ்த் தேசியக் கூட்டமைப்போ அல்லது இந்திய அரசோ, புலம்பெயர் தமிழ் மக்களால் உருவாக்கப்படும், ஆரம்பப்படிநிலையிலுள்ள நாடு கடந்த தமிழீழ அரசுடனோ அல்லது அதன் செயற்பாட்டாளர்களுடனோ உறவாட முன்வரமாட்டார்கள்.
பொதுக்கருத்தினை உருவாக்க முனைபவர்கள், முரண் நிலையினை தூண்டிவிடும் கைங்கரியத்தில் ஈடுபடமாட்டார்கள். ஆகவே காத்திரமான விமர்சனங்களை உள்வாங்கும் மனோநிலையினை நாம் வளர்த்தெடுக்க வேண்டும். இந்திய மக்கள் மீது எந்தவிதமான தனிப்பட்ட பகையும் தமிழர்களுக்கு இருந்ததில்லை. அதேவேளை அகதிகளாக தமிழ் நாட்டில் தஞ்சம் புகுந்ததால், தமிழ் மக்களின் அரசியல் அபிலாசைகளை நிர்ணயிக்கும் சக்தியை இந்தியாவிடம் எவரும் வழங்கவுமில்லை.
இந்தியாவை அனுசரித்துச் சென்றிருந்தால் என்ன நடந்திருக்கும்?
தற்காலிக இணைப்பில் வட கிழக்கு மாகாணசபை நீடித்திருக்கும். வரதராஜபெருமாள் தொடக்கம் பிள்ளையான் வரையான முதலமைச்சர்கள், காவல்துறைக்காகவும் காணி உரிமைக்காகவும் போராடிக்கொண்டிருப்பார்கள். அதுதான் இன்னமும் நீடித்துக் கொண்டிருக்கிறது. திட்டமிட்ட சிங்களக் குடியேற்றங்கள் நிறுத்தப்படாமலும், உயர் பாதுகாப்பு வலயங்கள் அகற்றப்படாமலும், தமிழர்களின் பூர்வீக நிலங்கள் ஆக்கிரமிக்கப்பட்டிருக்கும்.
இந்நிகழ்வுகளில் இன்னமும் மாற்றங்கள் தோன்றவில்லை.மாறாதவைகளே மாறிக்கொண்டிருக்குமென்கிற புதிய தத்துவமும் நிலை நாட்டப்பட்டிருக்கும். கொடுப்பவற்றை எடுத்துக்கொள்ளுங்கள் என்பவர்களிடம் எதை யாசித்துப் பெற முடியும்?
ஆகவே "நாடு கடந்த அரசு' ஒரு புதிய போராட்ட வடிவமென்று கூறுபவர்கள், அது குறித்தான உரையாடல்களை மக்கள் முன்கொண்டு செல்ல வேண்டும்.
மக்களின் நேரடியான பங்களிப்போடு உருவாக்கப்படும் போராட்ட வடிவங்கள், அசைக்க முடியாத சக்தியாக உருவாகுமென்பது வரலாற்று உண்மை. கருத்து மக்களைப் பற்றிக் கொண்டால், அது சக்தியாக உருவெடுக்குமென்கிற யதார்த்தம் இனியாவது உணரப்படவேண்டும்.
விடுதலைப்புலிகளையும், தமிழ் மக்களின் விடுதலைப்போரையும் முற்றாக அழிக்கும் வரையிலும் ஓயப்போவதில்லை என்ற தனது கொள்கையை இந்தியா மீண்டும் ஒரு தடவை வலுவாக உலகிற்கும், தமிழ் சமூகத்திற்கும் எடுத்துக்கூறியுள்ளது.
ஈழ விடுதலை போராட்டத்தில் புலம்பெயர் தமிழ் மக்களின் பங்களிப்புக்கள் கணிசமாக உள்ளதாகவும், விடுதலைப்புலிகளின் வெளியுலக நிதி முகாமைத்துவம் மாற்றங்கள் எதுவுமின்றி இயங்கி வருவதாகவும் இந்தியாவின் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் எம் கே நாராயணன் இந்த வாரம் தெரிவித்துள்ளார். அதனை தாம் உன்னிப்பாக அவதானிக்கப்போவதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
அதாவது இந்தியா தமிழ் மக்களுக்கு எதிரான தனது போரை அனைத்துலகத்திற்கு நகர்த்த தயாராகி விட்டது. நாராணனின் இந்த கூற்றானது புலம்பெயர் நாடுகளில் வாழும் தமிழ் சமூகத்தின் மீதான இந்தியாவின் போர் பிரகடனமாகவே தமிழ் மக்கள் நோக்குகின்றனர். இந்தியாவின் இந்த சவாலை சந்திப்பதற்கு தமிழ் மக்கள் தம்மை தயார்ப்படுத்தி வருகின்றனர்.
விடுதலைப்புலிகளின் அனைத்துலக இராஜதந்திர நடவடிக்கைகளுக்கு பொறுப்பான திரு செல்வராஜா பத்மநாதனின் கடத்தலுடன் ஆசிய கண்டத்திற்குள் உள்நுளைந்துள்ள இந்திய - சிறீலங்கா அரசுகளின் கூட்டு நடவடிக்கை தற்போது மேற்குலகத்தின் வாசல்களையும், ஆபிரிக்க நாடுகளின் வாசல்களையும் அண்மித்துள்ளன. ஆனால் ஆசியக்கண்டத்தில் மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகளை போல மேற்குலகத்தில் அவர்களால் இலகுவான நகர்வுகளை மேற்கொள்ள முடியாது என்பது நாம் அறிந்தவையே.
எனினும் புலம்பெயர் தமிழ் மக்களுக்குள் ஊடுருவி எமக்குள் எம்மை மோதவிட அவர்கள் முனையலாம். அனைத்துலகத்திலும் இயங்கிவரும் ஊடகங்களையும், அமைப்புக்களையும் கையகப்படுத்துவதற்கும் இந்தியா பலமான முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றது. அதன் மூலம் புலம்பெயர் நாடுகளில் வசிக்கும் மக்களிடம் ஒரு கருத்து மாற்றத்தை உருவாக்க முடியும் என இந்தியா நம்புகின்றது. சிறீலங்காவிலும் தமிழ் ஊடகங்களினூடாக தன்னை வலுப்படுத்த அது முற்பட்டு வருகின்றது.
அண்மையில் பிரபல ஊடக நிறுவனம் ஒன்றிற்கு பல தடவைகள் விஜயம் செய்ய இந்திய பிரஜை ஒருவர் பல நாட்கள் பல மணிநேரம் காத்திருந்து குறிப்பிட்ட ஒரு ஊடகவியலாளரை சந்திப்பதற்கு முனைந்துள்ளார். இறுதியில் அவர் தனது முயற்சியில் வெற்றிபெற்ற போதும் அவர் ஏன் வந்தார், அவரின் நோக்கம் என்ன? என்பது தொடர்பான தெளிவான விளங்கங்களை அவர் கொடுக்கத்தவறியுள்ளார். ஆனால் அவர் சென்று விட்டார், மீண்டும் நாளை வருவார், நாளை மறுதினமும் வருவார் என அந்த ஊடகவியலாளர் மிகுந்த அச்சத்துடன் தெரிவித்துள்ளார்.
அதாவது தமிழ் மக்களிடம் பிரபலம் பெற்றுள்ள ஊடகங்கள் ஊடாக ஒரு கருத்து மாற்றத்தை கொண்டுவர இந்தியா வலுவாக முயன்று வருகின்றது என்பது தற்போது வெளிப்படையான ஒன்று. தமிழ் மக்களின் உரிமைக்கான போராட்டத்தை முற்றாக நசுக்கிவிடவும், அவர்களின் அரசியல் அபிலாசைகளை உலகின் கண்களில் இருந்து மறைத்துவிடவும் இந்தியா முற்பட்டு வருகையில் சிறீலங்காவுக்கும் மேற்குலகத்திற்கும் இடையிலான இரஜதந்திர மோதல்கள் உக்கிரமடைந்துள்ளன.
கடந்த வாரம் சிறீலங்கா அரசு ஐ.நாவின் சிறுவர் நிதியத்தின் (UNICEF) கொழும்புக்கான பிரதம பேச்சாளர் ஜேம்ஸ் எல்டன் என்பவரின் நுளைவு அனுமதியை இரத்து செய்து அவரை நாட்டை விட்டு வெளியேற்றியதை தொடர்ந்து மேற்குலகம் தனது அழுத்தங்களை அதிகரித்துள்ளது. சிறீலங்கா அரசின் நடவடிக்கைகளுக்கு பதில் நடவடிக்கையாக ஐக்கிய நாடுகள் சபையின் பிரதம அரசியல் தலைவர் லைன் பெஸ்கோ கடந்த புதன்கிழமை (16) சிறீலங்காவுக்கு அவசர விஜயம் ஒன்றை மேற்கொண்டுள்ளார்.
கடந்த மே மாதம் சிறீலங்காவுக்கு ஐ.நாவின் செயலாளர் நாயகம் பான் கீ மூன் விஜயம் மேற்கொண்ட போது சிறீலங்கா அரசினால் வழங்கப்பட்ட உறுதி மொழிகளில் இருந்து சிறீலங்கா விலகியுள்ளதாகவும், அதனை சிறீலங்கா உடனடியாக நிறைவேற்ற வேண்டும் எனவும் ஐ.நா பகிரங்கமாக அறிவித்துள்ளதுடன், பெஸ்கொவின் விஜயமும் அதனை ஒட்டியதாகவே அமைந்துள்ளது. சிறீலங்கா தொடர்பாக ஐ.நாவின் செயலளர் நாயகத்தின் நடவடிக்கைகள் கடும் விமர்சனைங்களை எதிர்கொண்ட நிலையில் ஐ.நா தனது நடவடிக்கைகளை தீவிரப்படுத்தியுள்ளதாக வேறு சில தகவல்கள் தெரிவித்துள்ளன.
எதுவாயினும் சிறீலங்கா மீதான ஐ.நாவின் அழுத்தங்கள் அதிகரித்துள்ளது என்பது தெளிவானது. இதனிடையே ஜெனிவாவில் நடைபெற்றுவரும் ஐ.நாவின் மனித உரிமைகள் ஆணைக்குழுவின் கூட்டத்தொடரிலும் சிறீலங்கா தொடர்பான விவகாரம் அதிக முக்கியத்துவம் வாய்ந்ததாக இருக்கும் என்ற அச்சங்கள் சிறீலங்கா அரச தரப்பை ஆட்கொண்டுள்ளது. மனித உரிமைகள் ஆணைக்குழுவில் முதல் முதலாக அமெரிக்கா பங்கு கொள்வதும் ஆசிய நாடுகளுக்கும், ஆபிரிக்க நாடுகளுக்கும் புதிய நெருக்கடிகளை ஏற்படுத்தியுள்ளது.
இஸ்ரேல் தொடர்பான சில நடவடிக்கைகளுக்கு அமெரிக்கா ஆதரவுகளை வழங்கினால் ஆசியா ஆபிரிக்க நாடுகள் மிகப்பெரும் நெருக்கடியை எதிர்கொள்ள நேரிடலாம் எனவும் தெரிவிக்கப்படுகின்றது. மேலும் சிறீலங்காவில் நடைபெற்ற போர் அதில் மேற்கொள்ளப்பட்ட போரியல் குற்றங்கள் தொடர்பான அறிக்கை எதிர்வரும் திங்கட்கிழமை (21) அமெரிக்காவின் காங்கிரஸ் சபையில் முன்வைக்கப்படவுள்ளதாக போரியல் குற்றங்கள் தொடர்பான அமெரிக்காவின் தூதுவர் ஸ்ரீபன் ராஃப் தெரிவித்துள்ளார்.
அமெரிக்க அரச தலைவர் நீதியை நிலைநாட்டுவது தொடர்பாக தனது நகர்வினை மேற்கொள்வார் என தெரிவித்துள்ள ஸ்ரீபன் நாம் மிக முக்கியமான நடவடிக்கைகளை எடுக்க தயாராகி வருகின்றோம் என்பதனை சிறீலங்கா உணர்ந்து கொள்ள வேண்டும் என கடுமையான தொனியில் தெரிவித்துள்ளார். அமெரிக்காவை தளமாக கொண்ட பாதுகாப்பு அமைப்பே காங்கிரஸின் கூட்டத்தை ஒழுங்கு செய்துள்ளது. இந்த அமைப்பு அமெரிக்க காங்கிரஸ் சபையினால் நடத்தப்படுவதுடன், அமெரிக்க அரசின் நிதி உதவிகளும் கணிசமான அளவில் அதற்குண்டு.மேற்குலக ஊடகங்களும் தமிழ் மக்களுக்கு ஆதரவாக தமது கருத்துக்களை மெல்ல மெல்ல மாற்றி வருகின்றன.
இந்த நகர்வின் மத்தியில் மேகுலகத்தின் நடவடிக்கைகளும் தீவிரம் பெற்று வருகின்றன. இந்த நிலையில் கடந்த ஏப்பிரல் மற்றும் மே மாதங்களில் வன்னியில் மோதல்கள் உக்கிரமடைந்த போது தனது பசுபிக்பிராந்திய கட்டளை பீடத்தை வன்னியில் தரையிறக்க முனைந்த அமெரிக்க தற்போது மருத்துவ உதவிகள் என்ற போர்வையில் கால்பதித்துள்ளது. ஹவாய் தீவை தளமாக கொண்ட அமெரிக்க படையின் பசுபிக் பிராந்திய கட்டளை பீடத்தை சேர்ந்த மருத்துவக்குழுவினர் சிறீலங்காவுக்கு வருகை தந்துள்ளதாக கொழும்பு தகவல்கள் தெரிவித்துள்ளன.
இந்த மருத்துவக்குழுவில் அமெரிக்க வான்படை, கடற்படை, தரைப்படையினரை சேர்ந்த நான்கு சிரேஸ்ட்ட மருத்துவ அதிகாரிகளும், ஆறு ஏனைய மருத்துவ அதிகாரிகளும், ஒரு தொகுதி தாதிகளும் அடங்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இந்தியாவின் தலையீடு காரணமாக அன்று தமது தரையிறக்கத்தை நிறுத்திக்கொண்ட அமெரிக்காவின் பசுபிக்கிராந்திய கட்டளை மையம் இந்திய மருத்துவக்குழுவினர் புல்மோட்டையில் இருந்து வெளியேறிய நிலையில் சிறீலங்காவை வந்தடைந்துள்ளது.
மேலும் ஜிஎஸ்பி பிளஸ் வரிச்சலுகை தொடர்பான தீர்மானங்களில் ஐரோப்பிய ஒன்றியம் கடுமையான போக்கை கடைப்பிடிக்கலாம் என்ற அச்சங்களும் சிறீலங்காவை ஆட்கொண்டுள்ளது. ஜிஎஸ்பி பிளஸ் வரிச்சலுகை நிறுத்தப்பட்டால் நேரடியாகவும் நேரடியற்ற விதமாகவும் பத்து இலட்சத்திற்கும் அதிகமான தொழிலாளர்கள் தமது வேலைவாய்ப்புக்களை இழக்க நேரிடலாம் என தென்னிலங்கை அஞ்சுகின்றது. எனவே அதனை கையாழுவதற்கு அரச தலைவர் மகிந்த ரஜபக்சா தனது நேரடிக்கண்காணிப்பில் ஒரு குழுவை உருவாக்கியுள்ளதுடன், புலம்பெயர் நாடுகளில் உள்ள சிங்கள மக்களையும், அரசுக்கு சார்பான அமைப்புக்களையும் சிங்கள மக்கள் எதிர்நோக்க போகும் மனிதாபிமான நெருக்கடிகள் என்ற போர்வையில் களமிறக்கியுள்ளது.
ஆனால் புலம்பெயர் நாடுகளில் வாழும் தமிழ் அமைப்புக்களும், மக்களும் சிங்கள மக்களின் இந்த போராட்டங்களை முறியடித்து எமக்கு ஆதரவான மேற்குலகத்தின் நகர்வுகளை தக்கவைக்கவேண்டிய கட்டத்தில் உள்ளனர். மேற்குலகத்தை பொறுத்தவரையில் அவர்கள் சிறீலங்காவில் ஒரு ஆட்சி மாற்றத்தை விரும்புகின்றனர். தற்போதைய அரசு நீக்கப்பட்டு முற்போக்குள்ள அரசு ஒன்று உருவாக்கப்பட வேண்டும் என விரும்புகின்றனர். அவர்களின் தற்போதைய நடவடிக்கைகள் காத்திரமான பங்களிப்பை வழங்குமாக இருந்தால் தற்போதைய அரசுக்கு பல நெருக்கடிகள் ஏற்படலாம்.
தென்னிலங்கையில் ஏற்படும் பொருளாதார மற்றும் அதிகார நெருக்கடிக்கள் அரசின் தற்போதைய செல்வாக்கை சரித்து விடலாம் என நம்பப்படுகின்றது. தென்னிலங்கை தகவல்களின் பிரகாரம் அரச தலைவர் மகிந்த ராஜபக்சாவின் செல்வாக்கு கடந்த மே மாதம் 85 விகிதமாக இருந்ததாகவும் தற்போது அது 65 விகிதமாக குறைவடைந்து விட்டதாகவும் தெரிவிக்கின்றன.
ஆனால் சிறீலங்காவின் இந்த வீழச்சியையும், மேற்குலகத்தின் தமிழ் மக்களுக்கு ஆதரவான நிலைப்பாட்டையும் சரியாக பயன்படுத்தும் வலுவான பொறுப்பு ஒன்று புலம்பெயர் தமிழ் மக்களின் தோள்களில் வீழ்ந்துள்ளது. அதனை வெற்றிகரமாக முன்னெடுக்க நாம் ஒன்றுபடும் அதே சமயம் இந்தியாவின் புலம்பெயர் தமிழ் மக்கள் மீதான போரையும் வெற்றிகரமாக முறியடிக்கும் சவாலும் எம்முன்னால் உள்ளது.
நமது நாட்டின் பாதுகாப்பு ஆலோசகரான எம்.கே. நாராயணன், சமீபத்தில் டெல்லியில் நடந்த காவல் துறை இயக்குனர்கள், தலைமை ஆய்வாளர்கள் மாநாட்டில் பேசிய பேச்சின் ஒரு பகுதி தமிழர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது.
FILE
“தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்திற்கு நிதி உதவி செய்துவந்த புலம் பெயர்ந்த தமிழர்கள் உலகளாவிய அளவில் பரவியுள்ளதால், அந்த இயக்கம் மீண்டும் தலைத்தூக்கும் அச்சுறுத்தல் உள்ளது. புலம் பெயர்ந்த தமிழர்களிடையே உள்ள அதிருப்தியுற்ற சக்திகள் ஒன்றிணைந்து அந்த பயங்கரவாத அமைப்பிற்கு ஆயுதம் வழங்கி மீண்டும் உயிரூட்டும் சாத்தியம் உள்ளது” என்று எம்.கே. நாராயணன் கூறியுள்ளார்.
அதுமட்டுமின்றி, “அவர்களை உன்னிப்பாக கவனிக்க வேண்டும், அப்படி நிகழ்ந்தால் அதனை எதிர்கொள்ள தயாராக வேண்டும்” என்றும் கூறியுள்ளார்.
இந்தியாவின் தேசப் பாதுகாப்பு ஆலோசகராக இருந்துகொண்டு நாராயணனும், அயலுறவுச் செயலராக இருந்த சிவ் சங்கர் மேனனும், சிறிலங்க அதிபர் மகிந்த ராஜபக்ச சகோதரர்களான கோத்தபய ராஜபக்ச, பசில் ராஜபக்ச ஆகியோருடன் இணைந்து, ஒவ்வொரு நாளும் பேசி, திட்டமிட்டு ஈழத் தமிழர்கள் இனப் படுகொலையை கச்சிதமாக நிறைவேற்றியவர்கள் என்பதை தமிழ்நாட்டுத் தமிழர்களும், ஈழத் தமிழர்களும், புலம் பெயர்ந்த தமிழர்களும் நன்கு அறிந்துள்ளனர்.
FILE
தங்களை இன ரீதியாக ஒடுக்கும் சிங்கள பெளத்த இனவாத அரசிடமிருந்து விடுதலைப் பெற ஈழத் தமிழர்கள் முன்னெடுத்த விடுதலைப் போராளிகளை - தமிழீழ விடுதலைப் புலிகளை -பயங்கரவாத இயக்கம் என்று முத்திரை குத்தி, அதனை ஒடுக்குவதாகக் கூறி, இந்திய மக்களையும், உலக நாடுகள் பலவற்றையும் ஏமாற்றி, இரண்டரை ஆண்டுகளில் ஒன்றரை இலட்சம் தமிழர்களை அழித்தொழித்த மாபெரும் இனப் படுகொலையின் காரணக் கர்த்தாக்களில் ஒருவரான எம்.கே. நாராயணன் இவ்வாறு பேசியிருப்பது தமிழ்நாட்டுத் தமிழர்கள் மட்டுமின்றி, உலகில் வாழும் எந்தத் தமிழருக்கும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியிருக்காது.
ஆனால், “அந்த இயக்கம் மீண்டும் தலையெடுத்து விடக்கூடாது, உன்னிப்பாக கவனியுங்கள், எதையும் எதிர்கொள்ள தயாராகுங்கள்” என்று அவர் கூறியிருப்பது, உலகத் தமிழர்கள் அனைவரையும் கோபம் கொள்ளச் செய்துள்ளது.
தன்னை மறந்து ஒப்புக் கொண்ட உண்மை!
நாராயணின் பேச்சில் அவர் தன்னை அறியாமலேயே ஒரு உண்மையை ஒப்புக் கொண்டுள்ளார். ‘உலகெங்கிலும் வாழும் தமிழர்களை மிரட்டி நிதிச் சேர்த்தே விடுதலைப் புலிகள் ஆயுதங்களை வாங்கி வைத்துள்ளனர்’ என்று கூறிவந்த இவர், இப்பொழுது, “அவர்களுக்கு முக்கிய நிதி ஆதாரமாக உள்ள புலம் பெயர்ந்த தமிழர்கள்” என்று கூறியுள்ளார்! இதன் மூலம் விடுதலைப் புலிகள் மிரட்டிப் பணப் பறித்து ஆயுதம் வாங்குகிறார்கள் என்ற பொய்யுரைப்பை தனது வாயாலேயே உடைத்து உண்மையைக் கூறியுள்ளார்.
நாராயணனின் வார்த்தைகள் புதியதல்ல, இவை யாவும் வேறொரு நாளில் கோத்தபய ராஜபக்ச பேசியதுதான்! விடுதலைப் புலிகளின் மூல பலம் அவர்கள் எந்த மக்களின் விடுதலைக்காக போராடுகிறார்களோ அவர்கள்தான் என்பதை முழுமையாக உணர்ந்துள்ள காரணத்தினால்தான், புலம் பெயர்ந்த தமிழர்கள் ஒற்றுமையை உடைக்க எல்லாவிதமான பகீரத முயற்சியிலும் கோத்தபய ராஜபக்ச ஈடுபட்டு வருகிறார்.
FILE
மலேசியாவில் இருந்து கடத்தி வரப்பட்ட விடுதலைப் புலிகளின் பன்னாட்டு விவகாரங்களுக்கான பொறுப்பாளர் செல்வராசா பத்மநாதனை இன்றுவரை சித்ரவதை செய்து, அவரிடம் இருந்து அவர்கள் பெறத் துடிக்கும் தகவல், புலம் பெயர்ந்த தமிழர்களின் நிதி மூலத்தை கண்டறிவதுதான்.
ஈழத் தமிழரின் விடுதலைப் போராட்டத்தை ஒடுக்க பெரும்பாடுபடும் சிறிலங்க அரசு மேற்கொண்டிருக்கும் அந்த முயற்சிக்கு நீங்களும் உதவுங்கள் என்றுதான் டெல்லியில் இருந்து நாராயணனனும் காவல் துறைத் தலைவர்களுக்கு அறிவாலோசனை வழங்கியுள்ளார்.
விடுதலையின் வேர் நிதியில் இல்லை!
ஓர் இனத்தின் நிதி மூலத்தை அழித்துவிட்டால், அதன் விடுதலைப் போராட்டம் செத்துவிடும் என்று இந்த இனப் படுகொலை கர்த்தாக்கள் கணக்கு போடுகின்றனர்!
தங்களுக்கு எதிராக இழைக்கப்பட்ட அநீதிக்கு சாத்வீக வழிகளில் நீதி பெற முடியாத நிலையிலேயே, அநீதிக்கு எதிரான நீதியாக விடுதலை வேட்கை பிறக்கிறது. அந்த வேட்கையே விடுதலை உணர்வின் வேர். அது துளிர்விட்டு, கிளைவிட்டு தழைக்கும்போது போராட்ட வடிவத்தை பெறுகிறது. அதற்குப் பிறகுதான் நிதி, பன்னாட்டு ஆதரவு என்பதெல்லாம். இது மக்களுக்காக வாழ்பவர்களுக்குப் புரியும், நாட்டின் பாதுகாப்பை அன்னிய நாட்டிற்கு அடிமைப்படுத்துபவர்களுக்கு எப்படித் தெரியும்?
FILE
அதனால்தான் கோத்தபயவலிருந்து நாராயணன் வரை குழம்புகிறார்கள். வன்னியின் மீது இரத்தக் களரியை கட்டவிழ்த்து மக்களையும் அவர்களுக்காக நின்ற புலிகளையும் துடைத்தெறிந்த பின்னரும் விடுதலைச் சிறகுகள் விரிகிறதே என்ற ஆச்சரியம் அவர்களுக்கு! முன்னெப்பொழுதையும் விட, தமிழீழத்தின் விடுதலைக்கான வேர் இப்போதுதான் வலிமையாக படர்கிறது.
இந்தியா, சீனா, பாகிஸ்தான் உள்ளிட்ட தெற்காசிய இராணுவ வல்லமைகளின் பேராதரவோடு மே இரண்டாம் வாரம் வரை நடத்திய இனப் படுகொலை வன்னியில் போராட்டத்தை முடிவிற்கு கொண்டு வந்திருக்கலாம், ஆனால் உலக நாடுகளின் கண்களை அது திறந்துவிட்டது. இப்போது எல்லா நாடுகளும் ஈழத் தமிழர்களின் விடுதலைப் போராட்டத்தின் நியாயத்தை உணரத் தொடங்கிவிட்டன. அதுவே இவர்களை இப்படித் தறிகெட்டுப் பேசச் செய்கிறது.
இப்பேச்சுகளை தமிழினம் சட்டை செய்யத் தேவையில்லை.
சீன ஊடுறுவலிற்கு பதிலென்ன?
இந்தியாவின் உள்நாட்டுப் பாதுகாப்பை உறுதிசெய்ய கூட்டப்பட்ட காவல் துறை மாநாட்டில் இப்படி சம்மந்தமில்லாமல் பேசிய இந்திய தேச ஆலோசகர் நாராயணன், ஜம்மு- காஷ்மீர் மாநிலத்தின் லே பகுதியில் சீனப் படைகள் ஒன்றரை கி.மீ. தூரம் ஊடுறுவி வந்தது மட்டுமின்றி, அது தங்களுக்குச் சொந்தமான பகுதி என்று சிகப்பில் குறியிட்டுவிட்டுச் சென்றது எப்படி? என்று இன்று அனைவரும் எழுப்பும் கேள்விக்கு பதில் கூறியிருந்தால் நன்றாக இருந்திருக்கும்.
ஈழத் தமிழர்களின் பாதுகாப்பு அரணாகத் திகழும் தமிழீழ விடுதலைப் புலிகளை இந்தியாவின் அச்சுறுத்தலாகக் காட்டும் இந்த பாதுகாப்பு ஆலோசகருக்கு சீனா என்ன நட்பு நாடா? அப்படி ஒரு ஊடுறுவலே நடக்கவில்லை என்று இவர் கூறி, அதனை அயலுறவு அமைச்சகம் கூற, நாடே சிரித்தது. எல்லையைக் காக்கும் இராணுவத்திற்கல்லவா தெரியும் எவ்வளவு தூரம் உள்ளே வந்த சீனன் கோடு போட்டுவிட்டு போயுள்ளான் என்று. இலங்கைப் பிரச்சனையில் அடுக்கடுக்காக பொய் கூறி, ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசையும், இந்திய மக்களையும் ஏமாற்றியது போல, சீனா ஊடுறுவலையும் ‘நடக்கவே இல்லை’ என்று கூறி பூசி மொழிகிடப் பார்த்தார், நடக்கவில்லை.
எல்லைப் பிரச்சனைக்குத் தீர்வு காண சீனாவுடன் 13 சுற்றுகள் பேச்சுவார்த்தை நடத்தி கண்ட பலன் இது. எல்லைப் பிரச்சனைக்குத் தீர்வு காண சீனா துணை அமைச்சர் தாய் பிங்குவாவுடன் இந்தியப் பிரதிநிதியாகப் பேச்சுவார்த்தை நடத்தியது இந்த நாராயணன்தான். “13வது சுற்றுப் பேச்சு சுமூகமாக நடந்து முடிந்துள்ளது. நாங்கள் பல வரைபடங்களை கையளித்துள்ளோம். அடுத்த கட்ட பேச்சுவார்த்தையில் அவர்கள் (சீனா) இறுதித் தீர்வுக்கான திட்டத்தை அளிப்பார்கள், அதன் மீது பேச்சுவார்த்தை நடக்கும்” என்று கூறினார்.
ஆனால் பேச்சுவார்த்தை முடிந்து ஒரு வாரம் கூட ஆகவில்லை, இந்தியாவை துண்டு துண்டாக சிதறடிக்க வேண்டு்ம் என்று சீன அரசு ஆதரவு இணையத்தளத்தில் கட்டுரை வந்தது.
இதுநாள்வரை, அருணாசலப் பிரதேசத்தின் ஒரு மாவட்டத்தை (தவாங்) மட்டும் கேட்டுக் கொண்டிருந்த சீன அரசு, இப்போது அருணாசல பிரதேச மாநிலமே எங்களுடையது என்று கேட்கிறது! அங்குள்ள மக்கள் தேர்தலில் வாக்களித்து தேர்வு செய்ய முதலமைச்சர் அதற்கு மறுப்புத் தெரிவிக்கிறார். அந்த மாநிலத்தில் நிறைவேற்றப்படும் திட்டத்திற்கு ஆசிய மேம்பாட்டு வங்கி கடன் அளிப்பதற்கு எதிர்ப்பு தெரிவிக்கிறது சீன அரசு. 13 சுற்றுப் பேச்சுவார்த்தை நடத்தி எட்டிய ‘சுமூக நிலை’ இவ்வளவுதான்!
இதுதான் 5 ஆண்டிற்கு மேலாக நமது நாட்டின் தேச பாதுகாப்பு ஆலோசகராக இருக்கும் எம்.கே.நாராயணின் ‘சாதனை’.
FILE
இந்திய நாட்டிற்கு ஆதரவாக என்றென்றும் திகழ்ந்த ஈழத் தமிழ் மக்களைக் கொன்று குவிக்க ராஜபக்சவிற்கு உதவி, அந்நாடு இன்று சீனத்தின் வலிமையாக கூட்டாளியாகிவிட்டது! இந்துமகா சமுத்திரத்தில் தனது வல்லாண்மையை நிலைநாட்ட அம்பாந்தோட்டாவில் துறைமுகம் நிறுவி்க்கொள்ள சீனாவிற்கு இடமளித்துள்ளது சிறிலங்க அரசு! இதன் மூலம் இந்தியாவின் தென் முனை கடல் வழியில் தனது மேலாதிக்கத்தை வலிமையாக நிறுவப்போகிறது சீனா. இதனால் அச்சமுற்ற இந்தியா மாலத் தீவில் தனது கடற்படை தளத்தை நிறுவும் முயற்சியில் அவசர அவசரமாக ஈடுபட்டு வருகிறது. இந்த இராஜ தந்திரப் பிலிகளின் சாமர்த்தியத்தால் சீனா வலிமையாக கால் பதித்துவிட்டது. விடுதலைப் புலிகளையும், ஈழத் தமிழ் மக்களை கொன்றொழித்து இந்தியா கண்ட பலம் இதுதான்.
இந்திய நிறுவனங்கள் சிலவற்றிற்கு வணிக வாய்ப்புகள் கிடைத்ததைத் தவிர, இலங்கைக்கான அயலுறவுக் கொள்கையில் இந்தியாவிற்கு வேறென்ன கிடைத்தது? தமிழர்களை விரோதித்துக் கொண்டதுதான் மிச்சம்!
தங்களுடைய இரகசியத் திட்டங்களை மறைத்துக் கொள்ள இவர்கள் எப்போதும் ஊதிவிடும் புகைதான் விடுதலைப் புலிகளால் அச்சுறுத்தல் என்பது. இதுநாள் வரை இவர்கள் மேற்கொண்ட இராஜ தந்திரக் கூத்துக்களின் ‘பலன்களை’ இந்தியா அனுபவிக்கும் காலம் நெருங்குகிறது அப்போது தெரியும் இவர்கள் எந்த நாட்டின் பாதுகாப்பு ஆலோசகர்கள் என்று.